Jump to content

"தமிழகம் முழுவதும் உணர்வை ஏற்படுத்தி உள்ளோம்" தோல்வி இல்லை - தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Student%20tamilnadu_CI.jpg

 

உண்ணா விரதப் போலாட்டத்தை கைவிடவில்லை, கைவிடுவதற்காக நிர்பந்திக்கப்பட்னர் என்று தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் சுகிர் லஷ்மன் தெரிவித்தார். 

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில்  தங்கள் போராட்டம் எப்படி நிறுத்தப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்க இன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு  ஒன்றை நடத்தினர்.

 

சுகிர் லஷ்மன் மேலும் குறிப்பிடுகையில்:

ஒரு சில தீயசக்திகளும் பங்கரவாதச் சக்திகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி மாணவர்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர். இதைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் இயக்கத்தை நிறுத்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டனர். 

 

நாங்கள் உண்ணா விரதத்தைதான் கைவிடுகின்றோம். எங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இது எங்கள் போராட்டத்தின் முதற்படி.  இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் உணர்வை நாங்கள் ஒருமகப்படுத்தி உள்ளோம்.  இப்பொழுது அது ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவி வருகிறது. 

 

எங்களது தமிழீ மாணவர் கூட்டமைப்பு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும். அடுத்த போராட்டம் குறித்து கூட்டமைப்பில் உள்ள கல்லூரிகளுடன் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் அது தொடர்பில் அறிவிப்போம் 

 

டேசோவுக்கு ஆதரவு உண்டா என்று கேட்ட பொழுது:

 

டெசோ அமைப்பு அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கின்றது. அமெரிக்கத் தீரடமானம் ஒன்றினைந்த இலங்கையை ஆதரிக்கின்றது. ஒன்றினைந்த இலங்கை தமிழீழ விடுதலைக்கு மாறானது. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றோம். 

 

தனி ஈழ விடுதலையே எங்கள் நோக்கம். யார் எல்லாம் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் தமிழீழத்தை எதிர்கின்றார்கள். தமிழீழத்தின் துரோகிகள். டெசோவுக்கும் ஆதரவில்லை. அரசியலுக்கும் ஆதரவில்லை என்று  தெரிவித்தார். 

 

உண்ணா விரத மேடைக்கு வந்த டெசோ அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையே மாணவரகளின் போராட்டத்தினை ஒடுக்கியமைக்கு பின்னணி என்றும் கூறப்படுகிறது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89528/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

தெ ளிவான கருத்துக்கள்.. நன்றி தம்பிகளே..

Link to comment
Share on other sites

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

Link to comment
Share on other sites

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

 

குண்டுக்கட்டா தூக்கிக்கொண்டுபோய் சேலைன் ஏற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள்..! இது தெரியாதா?

Link to comment
Share on other sites

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

 

உண்ணா விரத மேடைக்கு வந்த டெசோ அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு

எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையே

மாணவரகளின் போராட்டத்தினை ஒடுக்கியமைக்கு பின்னணி என்றும் கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

இந்த மாணவர்களின் உணர்வு போற்றுதலுக்கு உரியது. இவர்கள் செய்வதில் நூறில் ஒரு பங்கு கூட ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்வது இல்லை. இதன் பின்னணியில் நிறைய விடயங்களை பேசுவதற்கு நான் தயங்குகிறேன். ஆயினும் ஈழத் தமிழர்கள் இந்திய, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிக எதிர்பார்ப்புகள் கூடாது என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

எனது அருமை மாணவர்களுக்காக,

 

40 வருடம் கழித்து நசுக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம் துளிர்க்கிறது.. மாணவர்களின் தியாகத்தில் அதிகாரம் வளர்த்து , பின்பு மாணவர் இயக்கங்களை உடைத்து சிதைத்த கூட்டத்தின் முகத்தில் கறியை பூசிய நிகழ்வு நம் கண் முன் நடக்கிறது... எனது மாணவர் பருவத்தில் முயற்சி செய்து முடியாது போனதை, இப்போது செய்யப்படுவதைக் காணும் போது மகிழ்ச்சியால் மனம் நிறைகிறது... இந்தப் பாடல் உங்களுக்காக...

 

போராட்டம் ஒரு விழாவினைப் போன்றது....
 

போராட்டத்தினை ஆடிப்பாடி, கொண்டாடி,
வென்றிடுவோம் விடுதலையினை.

Revolution is an historical event. Participate it. Celebrate it.
----------------------------------------------------------------------
Get Up, Stand Up, stand up for your right

Get Up, Stand Up, don't give up the fight ....(Repeat)

 



முகநூல் - திருமுருகன் காந்தி

Link to comment
Share on other sites

நன்றிகள்



இந்த மாணவர்களின் உணர்வு போற்றுதலுக்கு உரியது. இவர்கள் செய்வதில் நூறில் ஒரு பங்கு கூட ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்வது இல்லை. இதன் பின்னணியில் நிறைய விடயங்களை பேசுவதற்கு நான் தயங்குகிறேன். ஆயினும் ஈழத் தமிழர்கள் இந்திய, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிக எதிர்பார்ப்புகள் கூடாது என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.

 

பல ஆய்வுகள் செய்து களைத்துவிட்டீர்கள், கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கலாம்தானே

Link to comment
Share on other sites

தமிழின தமிழக தலைவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்த/வரும்  காரணத்தால் தான் பல இலட்சம் ஈழ மக்களை டெல்லி அழிக்க முடிந்தது.

 

பல நூறு தமிழர்கள் கடலில் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.

 

எட்டு கோடி மக்கள் இருந்தும் ஏன் இப்படி நடக்கின்றது?

 

 

மக்கள் வரிப்பணத்தில் இருந்து வரும் பலத்தை வைத்தே ஊடகங்கள், மது, இலவசங்கள் என அடிமைகளாயும்;

அதே வரிப்பணத்தில் உள்ள காவல்துறை, புலனாய்வு துறையை வைத்து மக்களை அடக்கவும் பாவிக்கின்றது இந்த அரசியல்வாதிகள்.

 

இந்த நிலைமையை மாற்றகூடியவர்கள் மாணவர்களே.

Link to comment
Share on other sites

அன்றைக்கு ஆய்வுகள் செய்து சொன்ன பொழுதும் யாரும் கேட்கவில்லை. பதிலாக யாரோ எழுதியதை என் மீது சுமத்தினார்கள். அல்லது மேலும் கீழும் வாசிக்காது நடுவால் எடுத்து வந்து வியாக்கியானம் செய்தார்கள். அன்றைக்கு நேரடியாக எழுத முடியாமல், சுற்றி வளைத்து சொன்னதனால் புரியாமல் போயிருக்குமோ என்பதனால், இன்றைக்கு சற்று வெளிப்படையாக பேச முயற்சிக்கிறேன்.

ஆனால் ஓய்வெடு என்கிறீர்கள். நான் ஓய்வெடுத்தால் உங்களுக்கு யார் உண்மைகளை சொல்வார்கள்? மன்னிக்கவும்! என்னால் ஓய்வெடுக்க முடியாது! நீங்கள் நம்பிக் கெடுவதையும் காலத்திற்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது! அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் எதிரிகளை அதிகரிக்கும் முட்டாள்தனத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது!

Link to comment
Share on other sites

மாணவர்கள் போராட்டம் குறித்து எழுத்தாளர் ஞானி...

 

Link to comment
Share on other sites

60களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக, திக சார்பு ஊடகங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. இன்றைக்கு புதிய தலைமுறை மட்டுமே இதைப் பேசுகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் ஒப்புக்கு சப்பாணியாகவே இதைப் பற்றி கதைக்கின்றன. நல்ல வேளையாக தகவற் தொடர்பு வளர்ந்தது. முகநூல் போன்றவைகளின் பாவனைக்கு வந்தன. இல்லையென்றால் இது யாரும் கவனிக்காமல் செய்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றைக்கு ஆய்வுகள் செய்து சொன்ன பொழுதும் யாரும் கேட்கவில்லை. பதிலாக யாரோ எழுதியதை என் மீது சுமத்தினார்கள். அல்லது மேலும் கீழும் வாசிக்காது நடுவால் எடுத்து வந்து வியாக்கியானம் செய்தார்கள். அன்றைக்கு நேரடியாக எழுத முடியாமல், சுற்றி வளைத்து சொன்னதனால் புரியாமல் போயிருக்குமோ என்பதனால், இன்றைக்கு சற்று வெளிப்படையாக பேச முயற்சிக்கிறேன்.

ஆனால் ஓய்வெடு என்கிறீர்கள். நான் ஓய்வெடுத்தால் உங்களுக்கு யார் உண்மைகளை சொல்வார்கள்? மன்னிக்கவும்! என்னால் ஓய்வெடுக்க முடியாது! நீங்கள் நம்பிக் கெடுவதையும் காலத்திற்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது! அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் எதிரிகளை அதிகரிக்கும் முட்டாள்தனத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது!

எது அண்ண உள்ளவிட்டு அடிக்கிரது பற்றி சொல்லுறியளோ, இல்லாட்டீ தேள்வடிவ தாக்குதல் பற்றிய ஆராச்சிய  சொல்லுறியளோ, எதையும் தெளிவா சொன்னாதானே எங்களுக்கு வசதியா இருக்கும்.

Link to comment
Share on other sites

எது அண்ண உள்ளவிட்டு அடிக்கிரது பற்றி சொல்லுறியளோ, இல்லாட்டீ தேள்வடிவ தாக்குதல் பற்றிய ஆராச்சிய  சொல்லுறியளோ, எதையும் தெளிவா சொன்னாதானே எங்களுக்கு வசதியா இருக்கும்.

 

கிழக்கில  'ட' வடிவுலும் வன்னியில் 'ப' வடிவிலும் கொழும்பில் ' பு' வடிவிலும்  அடிப்பார்கள் என நினைத்து எழுதப்பட்டது.

ஆனால் சர்வதேசம் 'பா'யங்கரவாதம் வடிவில்  அடித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

அகுத பதிந்த ஒரு ஒளிப்பதிவு கருணாநிதி தனது, ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களை மாணவர் மீது திணிக்க முற்பட்டதால் ஏற்பட்ட போட்டிதான் மாணவர் போராட்டம் குழப்பட்டத்தற்கான காரணமாக புதிய தலைமுறை கூறுகிறது. இது ஜெயா டிவி அல்ல என்பது கவனிக்கப் படவேண்டும். இந்த ஒரே ஒரு டிவியின் ஒளிப்பேழைகளைத்தாம் நாம் இதுவரை மாணவர் போராட்டத்தைபற்றி அறிவதற்கு பார்க்ககூடியத்தாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

உங்களுக்கு யார், யார், என்ன, என்ன எழுதினார்கள் என்பதே தெரியவில்லை. நான் பெயரைப் பார்க்காமல் ஒரு கட்டுரையை படித்து, அது யார் எழுதியது என்று பெரும்பாலும் சரியாக சொல்லிவிடுவேன். மனிதர்களுக்கு வண்ணங்களின் வித்தியாசம் நிச்சயம் தெரிந்திருக்கும். பகுத்தறிவு என்பது மனிதர்களுக்கு இருக்கிறது அல்லவா?

Link to comment
Share on other sites

"மௌனம் கலைகிறது! மாணவர்களின் போராட்டத்தால் தினறும் தமிழ் நாடு"
====================


இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

 

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.


தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

 

அந்த வேளையில், இந்திய – இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.


* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

 

* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.


* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

 

* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.


* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

 

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

 

காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது.


அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

 

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.


ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

 

ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.


இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.

 

வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.


இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

 

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.

 

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

 

முகநூல்



"மௌனம் கலைகிறது! மாணவர்களின் போராட்டத்தால் தினறும் தமிழ் நாடு"
====================


இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

 

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.


தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

 

அந்த வேளையில், இந்திய – இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.


* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

 

* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.


* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

 

* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.


* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

 

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

 

காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது.


அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

 

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.


ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

 

ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.


இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.

 

வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.


இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

 

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.

 

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

 

முகநூல்

Link to comment
Share on other sites

600171_321373124631731_1991584938_n.jpg

தமிழ் நாடு மாணவர்களின் போரட்டதற்கு அதரவு தேடி மும்பையிலுள்ள முக்கிய கல்லூரி மாணவர்களிடம் நமது கோரிக்கையான "பொது வாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு" என்பதை முன் வைத்து பேசி வருகிறோம்...

 

 

 

429706_578885182135820_251864171_n.jpg

480831_506653532705696_912679004_n.jpg

Link to comment
Share on other sites

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் , ராஜபக்சே , சு.சாமி கொடும்பாவி எரித்து போராட்டம் !

 

554938_10200691273982511_1938477573_n.jp

Link to comment
Share on other sites

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

 

11dstud.jpg

 

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக கோயம்பேட்டில் 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரின் உண்ணாவிரதம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

 

இலங்கைத் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

 

திருக்குறள் திலீபன் (18), பிரிட்டோ (20), அந்தோனி ஜாஜி (20), பார்வைதாசன் (20), பால் கென்னத் (20), மணி (19), சண்முக பிரியன் (19), லியோ ஸ்டாலின் (20) ஆகிய 8 பேர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டடத்தில் மார்ச் 8-ம் தேதி இரவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு போராட்டம் நடத்திய மாணவர்களையும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாணவர்களும் தங்கள் உண்ணாவிரதத்தை  தொடர்ந்தனர். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்ப்பட்டது. வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டனர்.

 

லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் மாணவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் கூறும்போது, உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு வேறு வழிகளில் போராடுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

 

உண்ணாவிரதம் வாபஸ்: இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களைச் சந்தித்தனர்.

 

உங்கள் போராட்டம் நியாயமானது என்றாலும் அதற்கு உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல எனவும், வேறு வகையான அறப்போர் நடத்துங்கள் என கூறியதாகத் தெரிகிறது.

 

இதையடுத்து உண்ணாவிரதத்தை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

உண்ணாவிரதத்தை கைவிட்டாலும் தங்களது போராட்டம் வேறு வழியில் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

 

http://dinamani.com/tamilnadu/article1497802.ece



Link to comment
Share on other sites

போராட்டத்தை தொடங்கியிருக்கும் ராமநாதபுரம் மாணவர்கள்...

 

581910_10151821013249128_1479306301_n.jp

Link to comment
Share on other sites

‘Police forcibly took away the fasting students’



There were about 120 of us at the venue, where eight Loyola College students had been fasting since last three days in support of their 9-point charter of demands that includes demand for an international inquiry into the war crimes of Sri Lanka and a UN referendum on Eelam.



Most protesters were students from Loyola. I am a former student of Loyola from the 2008 batch and I had gone to express my solidarity with the fasting students.

 

Few students from other colleges were also present at the venue. We were sitting in small groups and discussing on taking the struggle forward.


At about 2 am, there was some commotion near the main gate. Students started running towards the gate. We found some policemen were trying to forcibly enter the premises. Soon, about 70 policemen entered the venue and resorted to a mild lathicharge against those standing near the gate.

 

When the policemen moved towards the fasting students, the other protesters formed a protective ring around them. But police managed to break the cordon and forcibly took them away.

 

http://www.theweekendleader.com/Causes/1543/student-power.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.   வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

Link to comment
Share on other sites

போராட்டத்தில் குதித்த திருச்சியில் ஜோசப் கல்லூரி மாணவர்கள் "

 

480632_349943881776197_1717493652_n.jpg



313801_349943811776204_1731763565_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.