Jump to content

நெஞ்சத்தைக் கிள்ளாதே...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் தம்பி, ஏனப்பு , உன்ர நினைவெல்லாம் இப்பிடிப் போகுது?

 

உனக்குத் தலையிடி எண்ட உடனே, சாப்பாட்டைத் தீத்திவிட நினைச்ச அம்மாவை நினைச்சுப்பாத்தியா?

 

நாளைக்கு நீ போனப்பிறகு, அந்தப் பெத்தமனம் எவ்வளவு துடிச்சுப் போகும் எண்டு ஒருக்கா நினைச்சு பாத்தியா?

 

கதை நல்லாயிருக்கு, ஜீவா! :lol:

 

ஆனாலும் மயூரன் ஒரு 'கோழை'. :o

 

ஆனால், தேர்த்திருவிழா அந்த மாதிரி! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எப்ப நெஞ்சத்தை கிள்ள போறியள் தம்பி ??  இப்பிடி இழுக்கிறியளே கெதியிலை . அடுத்ததை போடுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துநாள் நீண்ட விடுமுறை காணும் ஜீவா. கதையை எழுதுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும்..

Link to comment
Share on other sites

இக்கதையில் வாற பல கதாபாத்திரங்களை நான் நன்கு அறிவேன் என்றபடியால்,  இந்தக் கதை இன்னும் சுவாரஷ்யமாக இருக்கு எனக்கு. :)

தொடர்ந்து எழுதுங்கோ ஜீவா....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ...... பகுதி - 5

Hegedus_Bertalan-Kozmikus_Szerelem_Cosmi

 

 

சப்பிப் போட்ட எச்சிற் பருக்கைகளாய் இந்த இரவு அவனைக் குதறித் தின்று விட்டிருந்தது, எண்ணங்களின் அலை மோதல்கள் கிழிஞ்சல்களாய் அவன் மனதில் கோலங்களைப் போட்டிருந்தது. தாய் தன் சேயைப் பத்து மாதங்கள் தான் சுமக்கிறாள் ஆனால் மயூரனோ ஐந்து வருடங்களாய்ச் சுமந்த காதல் கருக்கொள்ளாமலே கலைந்து போனது விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டிருந்தது.

 

ஆழ்ந்து தூங்கியவனை அம்மாவின் குரல் தான் எழுப்பியது.

"அப்பு .. எழும்பு ஐயா .. நேரம் போட்டுது கெதியா வெளிக்கிடு, சைக்கிள் ஒட்ட விடவேணும் எண்டனி, பஸ் ஸ்ரான்டுக்கு நடந்தெல்லே போக வேணும்."

 

அரக்கப் பரக்க எழுந்தவன் குளிச்சிட்டு அம்மா செய்து வச்ச நூடில்ஸ்சை சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்ரான்டை நோக்கி நடக்கிறான். எப்போதும் அவள் வீட்டைத் தாண்டும் போது அவள் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்குபவனுக்கு இன்று அவள் வீட்டைக் கடக்கும் போது அவள் பொமேரியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளைத் தேடிய கண்கள் இன்று தானாகவே தரை தேடியது. அவளை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் இனி ஒரு போதும் வாய்த்திடக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

 

 வகுப்பில் இருந்தவனுக்கு அன்று பாடங்களும் ஏறவில்லை, எதையோ பறிகொடுத்த ஏக்கம் நெஞ்சை முட்ட , கடைசிப் பாடம் பொறின்சிக் மெடிசின் என்பதால் மிஸ்ஸிடம் தலையிடிக்குது, நான் அடுத்த கிளாஸுக்கு வாறேன் என்று சொல்லி விட்டு வந்திட்டான்.

 

பின்னேரம் பொடியளோடை கிறிக்கற் விளையாடினவன், ஏழுமணிக்கு ஊரடங்குச் சட்டம் என்பதால் அப்படியே பிள்ளையார் கோவிலிலேயே கை,கால்,முகம் கழுவி கும்பிட்டிட்டு வீட்டை வரும் போது  சுமதி அக்கா கூப்பிட்டா.

 

"மயூரன் இஞ்சை வாங்கோ, உங்களட்டை ஒன்று சொல்ல வேண்டும்."

 

என்ன அக்கா? ஏதும் விஷேசமோ??

 

"நீ அபியை லவ் பண்ணுறியோ?"

 

என்ன அக்கா திடீரென்று குண்டைப் போடுறியள்? உங்களுக்கு என்ன விசரோ? நான் ஒருத்தரையும் லவ் பண்ணலை அக்கா. உங்களுக்கு தான் தெரியுமே கிளாஸ், முடிய உங்கண்டை பெரியப்பா கூடத் தானே டிஸ்பென்சரியிலை நிக்கிறன், முடிய இதிலை பொடியளோடை இந்தப் பாலத்திலை தானே அக்கா நிக்கிறேன்.

 

"பொய் சொல்லாதையடா, எனக்கு ஜோதி தான் சொன்னவள், அபி நீ குடுத்த கடிதத்தை அவளோடை அம்மாட்டை காட்டினவளாம், ஜோதியின்ரை தாய்  உன்ரை அப்பாட்டை சொல்லச் சொன்னவாவாம், ஆனால் அபியின்ரை அம்மா   தான் வேண்டாம் என்று சொன்னவாவாம்.

சொன்னால் பேந்து உன்ரை அப்பா உன்னை அடிச்சே சாக்காட்டிப் போடுவர், பாவம் படிக்கிற பொடியன் சொல்ல வேண்டாம், இனி அவன் வரமாட்டான் என்று. அதை விட அபி சொன்னவளாம் ஏ.எல் ரிசல்ட் வருது பாஸ் பண்ணினாலும் அவன் படிக்கிறது தான் படிக்க மாட்டேன் என்று."

 

நீ முதலே எனக்குச் சொல்லி இருந்தால் நான் உனக்காகக் கேட்டுப் பார்த்திருப்பேன், ஆனால் இனி உனக்கு அவள் வேண்டாம் மயூரன். முதல் நீ நல்லாப் படி. பெரியப்பாக்கும் வயசு போட்டுது நீ இஞ்சை ஒரு டிஸ்பென்சரியாவது போட வேணும் பிறகு எல்லாம் நல்லது நடக்குமடா."

 

"இப்ப ஏன் மயூரன் சிரிக்கிறாய்? நான் உனக்கு கவலையான விசயத்தைச் சொல்லுறேன், நீ என்னடா என்றால் சிரிக்கிறாய்?"

 

ஒன்டும் இல்லை அக்கா.

"உண்மைய நினைச்சேன் சிரிப்பு தானாக வந்துவிட்டது அக்கா."

 

 நீங்கள் அவளட்டை இல்லாட்டி ஆரட்டையும் சொல்லுங்கோ இனி நான் அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று.

 

000000000000000000000000000000000000000000000000000000000

 

காலங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன..

எந்த "அபி" என்ற பெயரை மறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே "அபி" என்ற பெயரில் இன்னொருத்தி அவன் வாழ்வில் புயலாக வீசப் போகின்றாள் என்பதை அன்று அவன் அறியவில்லை.

 
தொடரும்...
 
(தலைப்பு போடப்படாததால் பகுதி-5 என திருத்தம் செய்துள்ளேன்.)
Link to comment
Share on other sites

கதைகளுடன் வாழ்பவர்கள் கதைசொல்லும்பொழுது அதில் உயிர்ப்புகள் சிறிது தூக்கலாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . தொடருங்கோ :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைகளுடன் வாழ்பவர்கள் கதைசொல்லும்பொழுது அதில் உயிர்ப்புகள் சிறிது தூக்கலாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . தொடருங்கோ :) :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா, வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும்.

நாளை மிகுதி தொடரும்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைக்கப்பட்ட படம் அருமை, ஜீவா!

 

சின்னனிலை, செய்யாத சேட்டையள், கொஞ்ச நஞ்சம் இல்லைப்போல கிடக்கு! :D

 

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைக்கப்பட்ட படம் அருமை, ஜீவா!

 

சின்னனிலை, செய்யாத சேட்டையள், கொஞ்ச நஞ்சம் இல்லைப்போல கிடக்கு! :D

 

தொடருங்கள்!

 

பட உபயம் எல்லாம் கூகிள் ஆண்டவரின் புண்ணியம் தான் அண்ணா. :rolleyes:

 

நான் அச்சாப்பிள்ளை என்று சொன்னாலும் நம்பவா போறிங்கள்??? :icon_mrgreen:

 

ஆனால் நட்புக்கள், வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பங்களை கற்பனையோடு சேர்த்து எழுதுகிறேன் அண்ணா.

 

நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.

இனி முடியும் வரைக்கும் தினமும் தொடரும். தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கு ஜீவா...எனக்கென்னவோ உங்கள் சொந்தக் கதை போல தான் படுது :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி கூட விடாதிங்கோ ஜீவா. கிழமைக்கு ஒருக்கா எழுதலாம் தானே.

 

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு ஜீவா.. அது இருக்கட்டும்.. இணையவன் என்னத்தை எடிட் பண்ணினார்?? :unsure: எதையாவது மிஸ் பண்ணிட்டனா?? :o

Link to comment
Share on other sites

ஜுவா உங்கள் இந்த கதையை நான் உண்மையில் இன்னமும் படிக்கவேயில்லை படித்த பின்னர் கருத்தை  வைக்கிறேன். ஆனால் இந்த கதையை முடக்கியதற்காக  யாழ் கள நிருவாகத்துடன்  கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டிருந்தது  அதற்காக  அவர்கள் மனசங்கட பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.   அதே நேரம்  ஜுவா என்றில்லை  எவருடைய சுய  ஆக்கங்களையும்  தடை செய்வதென்பது  படைப்பாளிகளின்  மனதை உடைக்கும் செயல் திருத்தங்கள் செய்யசொல்லி படைப்பாளிக்கு அறிவுத்தல் விடலாம். அதை செய்யாது  முடக்குவதென்பது  மேசமானது  அதனை  ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு படைப்பிற்கு  மறு கருத்தை வைக்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் படைப்பையே  முடக்குவது பொது கருத்துகளத்திற்க  ஆரோக்கியமானதல்ல.

அதனை யாழ் நிருவாகம் இனி செய்யாது என நம்பலாம்.

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு ஜீவா.. அது இருக்கட்டும்.. இணையவன் என்னத்தை எடிட் பண்ணினார்?? :unsure: எதையாவது மிஸ் பண்ணிட்டனா?? :o

 

இசை,

 

நிர்வாகத்தில் இருந்து எவரும் எவரது படைப்புகளையும் திருத்தி அமைப்பதில்லை. ஏதாவது ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்றால் அல்லது திருத்த வேண்டும் என்றால் அந்த படைப்பை முற்றாக மறைத்து விட்டு  அதனை எழுதியரிடம் தான் திருத்தும் விடயத்தை ஒப்படைப்பது வழக்கம். அல்லது அவரையே திரியில் வந்து Edit பண்ணச் சொல்லி கேட்பது வழக்கம். இங்கும் இதுதான் நடந்தது.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

 

நிர்வாகத்தில் இருந்து எவரும் எவரது படைப்புகளையும் திருத்தி அமைப்பதில்லை. ஏதாவது ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்றால் அல்லது திருத்த வேண்டும் என்றால் அந்த படைப்பை முற்றாக மறைத்து விட்டு  அதனை எழுதியரிடம் தான் திருத்தும் விடயத்தை ஒப்படைப்பது வழக்கம். அல்லது அவரையே திரியில் வந்து Edit பண்ணச் சொல்லி கேட்பது வழக்கம். இங்கும் இதுதான் நடந்தது.

 

நன்றி

 

 

அப்படி என்டால் எடிட் பண்ணியது ஜீவா என்று தானே வர வேண்டும் ஆனால் இங்கு இணையவன் என்டல்லவா வருகிறது...அதைப் பார்த்து விட்டுத் தானே இசை கேட்டார்

 

Hegedus_Bertalan-Kozmikus_Szerelem_Cosmi

சப்பிப் போட்ட எச்சிற் பருக்கைகளாய் இந்த இரவு அவனைக் குதறித் தின்று விட்டிருந்தது, எண்ணங்களின் அலை மோதல்கள் கிழிஞ்சல்களாய் அவன் மனதில் கோலங்களைப் போட்டிருந்தது. தாய் தன் சேயைப் பத்து மாதங்கள் தான் சுமக்கிறாள் ஆனால் மயூரனோ ஐந்து வருடங்களாய்ச் சுமந்த காதல் கருக்கொள்ளாமலே கலைந்து போனது விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டிருந்தது.

 

ஆழ்ந்து தூங்கியவனை அம்மாவின் குரல் தான் எழுப்பியது.

"அப்பு .. எழும்பு ஐயா .. நேரம் போட்டுது கெதியா வெளிக்கிடு, சைக்கிள் ஒட்ட விடவேணும் எண்டனி, பஸ் ஸ்ரான்டுக்கு நடந்தெல்லே போக வேணும்."

 

அரக்கப் பரக்க எழுந்தவன் குளிச்சிட்டு அம்மா செய்து வச்ச நூடில்ஸ்சை சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்ரான்டை நோக்கி நடக்கிறான். எப்போதும் அவள் வீட்டைத் தாண்டும் போது அவள் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்குபவனுக்கு இன்று அவள் வீட்டைக் கடக்கும் போது அவள் பொமேரியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளைத் தேடிய கண்கள் இன்று தானாகவே தரை தேடியது. அவளை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் இனி ஒரு போதும் வாய்த்திடக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

 

 வகுப்பில் இருந்தவனுக்கு அன்று பாடங்களும் ஏறவில்லை, எதையோ பறிகொடுத்த ஏக்கம் நெஞ்சை முட்ட , கடைசிப் பாடம் பொறின்சிக் மெடிசின் என்பதால் மிஸ்ஸிடம் தலையிடிக்குது, நான் அடுத்த கிளாஸுக்கு வாறேன் என்று சொல்லி விட்டு வந்திட்டான்.

 

பின்னேரம் பொடியளோடை கிறிக்கற் விளையாடினவன், ஏழுமணிக்கு ஊரடங்குச் சட்டம் என்பதால் அப்படியே பிள்ளையார் கோவிலிலேயே கை,கால்,முகம் கழுவி கும்பிட்டிட்டு வீட்டை வரும் போது  சுமதி அக்கா கூப்பிட்டா.

 

"மயூரன் இஞ்சை வாங்கோ, உங்களட்டை ஒன்று சொல்ல வேண்டும்."

 

என்ன அக்கா? ஏதும் விஷேசமோ??

 

"நீ அபியை லவ் பண்ணுறியோ?"

 

என்ன அக்கா திடீரென்று குண்டைப் போடுறியள்? உங்களுக்கு என்ன விசரோ? நான் ஒருத்தரையும் லவ் பண்ணலை அக்கா. உங்களுக்கு தான் தெரியுமே கிளாஸ், முடிய உங்கண்டை பெரியப்பா கூடத் தானே டிஸ்பென்சரியிலை நிக்கிறன், முடிய இதிலை பொடியளோடை இந்தப் பாலத்திலை தானே அக்கா நிக்கிறேன்.

 

"பொய் சொல்லாதையடா, எனக்கு ஜோதி தான் சொன்னவள், அபி நீ குடுத்த கடிதத்தை அவளோடை அம்மாட்டை காட்டினவளாம், ஜோதியின்ரை தாய்  உன்ரை அப்பாட்டை சொல்லச் சொன்னவாவாம், ஆனால் அபியின்ரை அம்மா   தான் வேண்டாம் என்று சொன்னவாவாம்.

சொன்னால் பேந்து உன்ரை அப்பா உன்னை அடிச்சே சாக்காட்டிப் போடுவர், பாவம் படிக்கிற பொடியன் சொல்ல வேண்டாம், இனி அவன் வரமாட்டான் என்று. அதை விட அபி சொன்னவளாம் ஏ.எல் ரிசல்ட் வருது பாஸ் பண்ணினாலும் அவன் படிக்கிறது தான் படிக்க மாட்டேன் என்று."

 

நீ முதலே எனக்குச் சொல்லி இருந்தால் நான் உனக்காகக் கேட்டுப் பார்த்திருப்பேன், ஆனால் இனி உனக்கு அவள் வேண்டாம் மயூரன். முதல் நீ நல்லாப் படி. பெரியப்பாக்கும் வயசு போட்டுது நீ இஞ்சை ஒரு டிஸ்பென்சரியாவது போட வேணும் பிறகு எல்லாம் நல்லது நடக்குமடா."

 

"இப்ப ஏன் மயூரன் சிரிக்கிறாய்? நான் உனக்கு கவலையான விசயத்தைச் சொல்லுறேன், நீ என்னடா என்றால் சிரிக்கிறாய்?"

 

ஒன்டும் இல்லை அக்கா.

"உண்மைய நினைச்சேன் சிரிப்பு தானாக வந்துவிட்டது அக்கா."

 

 நீங்கள் அவளட்டை இல்லாட்டி ஆரட்டையும் சொல்லுங்கோ இனி நான் அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று.

 

000000000000000000000000000000000000000000000000000000000

 

காலங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன..

எந்த "அபி" என்ற பெயரை மறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே "அபி" என்ற பெயரில் இன்னொருத்தி அவன் வாழ்வில் புயலாக வீசப் போகின்றாள் என்பதை அன்று அவன் அறியவில்லை.

 
தொடரும்...

 

 

Link to comment
Share on other sites

அப்படி என்டால் எடிட் பண்ணியது ஜீவா என்று தானே வர வேண்டும் ஆனால் இங்கு இணையவன் என்டல்லவா வருகிறது...அதைப் பார்த்து விட்டுத் தானே இசை கேட்டார்

 

தலைப்பு மறைக்கப்பட்டிருந்தபடியால் ஜீவா தனிமடலில் அனுப்பியதுதான் குறிப்பிட்ட பகுதியில் இடப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து தலைப்புடனான கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு மறைக்கப்பட்டிருந்தபடியால் ஜீவா தனிமடலில் அனுப்பியதுதான் குறிப்பிட்ட பகுதியில் இடப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து தலைப்புடனான கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். நன்றி.

 

 

:o அப்படியா இணையவன் மிக்க நன்றி விளக்கத்திற்கு...இனி மேல் தலைப்போடு ஒட்டி கருத்தெழுதுவோம்
 
ஆனாலும் இவ்வளவு கோபம் ஆகாது உங்களுக்கு
Link to comment
Share on other sites

இன்று தான் வாசித்தேன். ஜீவா அண்ணாக்கு சிறந்த எழுத்தாற்றல் உள்ளது என்பதை மீளவும் நிரூபிக்கும் எழுத்துகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ..... பகுதி - 6

32-typography-love-art.jpg

 

ஹலோ..!

ஹலோ..!!

நான் அபி2 பேசுறேன்.

ஹாய் அபி2 சொல்லுங்கோ, எப்படி இருக்கிறிங்கள்? சாப்பிட்டாச்சா? என்ன நடக்குது???

"இப்பத்தானேப்பா" பின்னேரம் ஏழு மணி அதுக்குள்ளையா??

சா..சா.. அது தெரியும் அபி2 நான் மத்தியானம் என்ன சாப்பிட்டிங்கள் என்று கேட்டேன்? ஆமா, அதென்ன இண்டைக்கு "வாய்ஸ்" சூப்பரா இருக்கு? ஒரு மாதிரியாப் பேசுறிங்கள், ஏதோ ஒன்று தூக்கலா இருக்கு??

"அக்கறை உள்ளவங்க கிட்ட அப்படித்தான் பேச வரும்".

 என்ன????

இல்லை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?

 புட்டு,நூடில்ஸ்,அப்பம் .... அது சரி ஏன் திடீரென்று இதைக் கேட்கிறிங்கள்?

இல்லை எனக்கும் நூடில்ஸ் பிடிக்கும் அதான் கேட்டேன்.

"ஆமா உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? எந்த சுவாமி பிடிக்கும்? நீங்கள் என்ன நம்பர்?? எந்த சினிமா நடிகர் பிடிக்கும்? எந்த சிங்கர் பிடிக்கும் ? எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?? எந்த? எந்த??எந்த..................................... எந்த????? "

முடிஞ்சுதா? இல்லை இன்னும் ஏதும் இருக்கா???????

என்ன நேர்முகத் தேர்வுக்கா இத்தனை கேள்வியள் எல்லாம் கேட்கிறியள்?

"நக்கலடிக்காதையுங்கோ .. சொல்லுங்கோ ப்ளீஸ்?"

கறுப்பு, கிருஷ்ணர், ஐந்து, இளையராஜா,SPB, ...............

"எனக்கும் கறுப்பும்,மரூனும் தான் பிடிக்கும், இளையராஜாவும்,ரகுமானும் பிடிக்கும், உன்னிக்கிருஷ்ணன் பாட்டு பிடிக்கும், முருகனும்,கிருஷ்ணரும் பிடிக்கும். நான் ஏழாம் நம்பர் "லக்கி செவிண்" ........

என்ன ஒற்றுமை பாருங்கோ நமக்குள்ளை."!!

"ஆமா என்னைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் மயூரன்."?

யாரோ ஒரு லூசு போல என்று மனசுக்குள்  நினைத்தாலும், "உங்களுக்கு என்ன? நல்ல வடிவா இருக்கிறிங்கள், உங்க குரலுக்கு நான் அடிமை அபி".

....எதிர்முனையில் சிரிப்பு.....

ஓ...... அப்ப இப்ப என்ன நினைக்கிறிங்கள்?

"உங்களை லவ் பண்ணலாமோ என்று நினைக்கிறன்."

என்ன விளையாடுறிங்களா?

"விளையாடுறதுக்குத் தான் கேட்டேன்".. என்று குரலை தாழ்த்திச் சொன்னான் மயூரன்.

என்னது?????? அவள் குரலில் ஒரு கடுந்தொனி.

"விளையாடுற விசயமா இது? ஐ லவ் யூ அபி2"

நல்லா யோசிச்சுத் தான் சொல்லுறிங்களோ??

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதிலை யோசிக்க என்ன இருக்கு"?

நான ஃபோனை வைக்கிறேன்.. பை.

"எந்தப் பதிலும் சொல்லாமல் போறாளே, ஏதும் பிரச்சனை வருமோ? உனக்கு தேவை இல்லாத வேலையடா மயூரா ..!  விடுடா போனால் போகட்டும், சும்மா தானே சொன்னாய் இதெல்லாம் சர்வதேசப் பிரச்சனையா..!! என்று தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டான் மயூரன், இருந்தும் குட் நைட் என்று எஸ் எம் எஸ் அனுப்பி விட்டு அதுக்காவது பதில் வருமா என்று காத்துக் கொண்டு இருந்தான்."

....... எந்தப் பதிலுமே இல்லை......

பொங்கு சனியோ, மங்கு சனியோ ஒரு சனி துலைஞ்சுது என்று நித்திரைக்குப் போனவன். அலாரம் அடித்து எழும்புவதற்காய் ஃபோனைப் பார்க்கும் போது தான் ஆறு எஸ் எம் எஸ் வந்திருந்தது அபி2 யிடம் இருந்து.

"டியர் மயூரன்,

நீங்கள் சிம்பிளாகச் சொல்லிவிட்டீர்கள் நான் தான் தரையில் விழுந்த மீனாகத் தவிக்கிறேன் இங்கு. உங்களுக்குத் தெரியும் எனக்கு ஆண் சகோதரர்கள் யாரும் இல்லை,அக்காவும் தான் விரும்பயவரையே அப்பா வேண்டாம் என்று சொல்லியும் எங்களை எதிர்த்து அவள் விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டாள், எனக்கு கீழே இரண்டு தங்கச்சி வேறை அவர்களைப் பார்க்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் இப்ப என்ரை தலையிலை தான் வந்து விழுந்திருக்குது. எனக்கு என்ரை குடும்பம் தான் முக்கியம். நான் இரண்டாம் தரம் சோதினை எடுத்திருக்கலாம் இல்லாட்டி வேறை ஏதாவது படித்திருக்கலாம் ஆனால் ஆன்டி பிரான்ஸ்சுக்கு வரச் சொல்லி நிக்கிறா அங்கை போய் படிச்சுக் கொண்டு வேலை செய்தால் தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

அதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால் நான் கமலைக் காதலித்தது உங்களுக்கும் தெரியும், அவனோடு கதைச்சதெல்லாம் என் வாழ்வின் கொடுமையான தருணங்கள், எத்தனை நாள் தான் மனக்காயங்களைத் தாங்குவேன்? "காயம் பட்டு வாற வலியை விடக் காதலினால் இதயத்துக்கு வாற வலி தான் அதிகம்", அதனால் தான் அவனை வேண்டாம் என்று சொன்னேன்.சந்தேகப்பிராணியோடு வாழ்நாள் முழுக்க வடுக்களைத் தாங்க நான் என்ன சுமை தாங்கியா? அது என்னாலை முடியாது, ஆனால் எனக்கு வருபவன் எப்படியோ யாருக்குத் தெரியும்? "தெரியாத பேயை நம்புவதை விட தெரிஞ்ச குட்டிச்சாத்தானை நம்புவதே மேல்". அதைவிட பழகிய வரைக்கும் உங்களைப் பிடிக்கும், அதனால் தான் உங்களுடன் கதைப்பதே. நீங்கள் என்னைக் கைவிட்டிட மாட்டீர்கள், ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சரி சொல்கிறேன்."

"வெண்மேகக் கூட்டங்களைக் கிழித்து விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவிலவள் தாழ் சேர்ந்து தாலாட்டுப் பாட சொப்பனம் வராததில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை, சனி தோஷம்  கூட சிலகாலம் தான், அதுவும் பரிகாரம் செய்தால் போய்விடும் என்பது ஐதீகம் ஆனால் இது?!

இனி அவன் வாழ்நாள் முழுக்கச் சிப்பிலி ஆட்டம் தான் போல நினைத்துக் கொண்டான்."

காலதேவன் தன் கடமைகளைக் கனகச்சிதமாகவே செய்து கொண்டிருந்தான்

யாழின் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளால் அவள் கொழும்பிலும், அவன் யாழிலும் இருந்ததால் முகம்பாராமலே தொடர்ந்தன அவர்கள் காதல். பார்த்து விடத் துடிக்கும் மனதிருந்தும் பாதை மூடியதால் பார்க்காமலே தொலைந்து விடப்போகிறார்கள் என்பதை யார் தான் அறிவர்..????

தொடரும்..

பி.கு: ஆள்மாறாட்டம், பெயர்க்குளப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக அபி2என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

ஜீவா உங்கள் எழுத்துக்கள் ஆன்மாவில் இருந்து வருகின்றன.எழுதி வைத்து பதிவதில்லை உணரும்போதே எழுதுகிறீர்கள்.எழுதுவதற்கு என்றே பிறந்திருக்கிறீர்கள். 

எத்தனையோ கதைகள் உயர்மட்ட வாசகர்களுக்காகவே எழுதபடுகின்றன. அவர்களாலேயே வாசித்தும் உணரபடுகினறன. அப்படி எழுதுபவர்களையிலே எழுத்தாளர்கள் என்று புகழ்கின்றனர். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அவற்றை எல்லாம் தாண்டி எல்லாராலும் வாசித்து உணர கூடிய படைப்பை தருவதால் , நீங்கள் ஒரு உன்னதமான எழுத்தாளர் என்று சொல்வதில் நான் பின்னிற்பதில்லை.

 

 

 


 

Link to comment
Share on other sites

அபி இப்ப ஃபிரான்சுக்கு போய்ட்டாவா? செய்திகளை இணைக்கிறாவா? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.