Jump to content

நெஞ்சத்தைக் கிள்ளாதே...


Recommended Posts

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையைப் போட்டுவிட்டுச் சொன்னாலும் பரவாயில்லை. போட்டி முடிஞ்சு 4 நாட்களாச்சு :D

 

உங்களை எல்லாம் தாமதிக்க வைக்கக் கூடாது என்று தான் போட்டது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, ஜீவா!

 

மீண்டும் கதை, களைகட்டத் தொடங்குகின்றது!

 

தொடருங்கள்! :D

 

நான் நினைச்சன், கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் தான் என்று! :o

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை, ஜீவா!

 

மீண்டும் கதை, களைகட்டத் தொடங்குகின்றது!

 

தொடருங்கள்! :D

 

நான் நினைச்சன், கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் தான் என்று! :o

 

நீண்ட இடைவெளி ஆகிவிட்டது மன்னிக்கவும், விரைந்து முடிக்கிறேன். நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ... பகுதி - 12

 

நெஞ்சத்தைக் கிள்ளாதே ... பகுதி - 12
 
beautiful_waterfall-1920x1200.jpg

பக்கத்தில் இருந்த அங்கிளிடம், அங்கிள் வீட்டை போக நேரம் செல்லுமோ? என்னும் ஒரு மணித்தியாலமாவது செல்லும் என்று விட்டு அவர்பாட்டுக்கு தூங்குவதற்காய் கண்ணைச் சொருகிக்கொண்டிருந்தார். போனை எடுத்தவன்

அபி2க்கு

 "ஹாய் அபி2, ஹவ் ஆர் யூ பேபி?"  என்று எஸ் எம் எஸ் சை தட்டிவிட்டான்.

அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை., அவள் நல்லூருக்கு சந்திக்க வரச்சொல்லியும் போகாத வருத்தம்,கோபம்  இருக்கும் என்பதை மயூரன் நன்கே அறிவான். "சொறிடா செல்லம், என்னாலை வர முடியாத சூழ்நிலை, நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன், பிளீஸ் பேசுடா தங்கம்" என்று இன்னொரு மடலைத் தட்டி விட்டான். அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை. என்ன கொடுமை டா இது? கெஞ்சினால் மிஞ்சுறாள் மிஞ்சினால் கெஞ்சுறாளே  என்று நினைத்துக் கொண்டவனுக்கு, எண்ண அலைகள் கிழிஞ்சல்களாய் மனதில் படம் வரைந்து கொண்டிருந்தது.

"பேசா மடந்தையே என் ஆசைக் குழந்தையே

உன் நோகாமனம் நொந்ததேனடி

என் வாடாமனம் வேகுதடி உன் வெறுப்பெனும்- வெந்தணலில்

பேசாய் ஒரு மொழி உன் பிள்ளைக்குரலினில்

தவமாய்க் கிடக்கிறேன் உன் தரிசனம் வேண்டியே ..."

மனதில் தோன்றியதைத் தட்டச்சு செய்து அனுப்பி விட்டான் அவளுக்கு.

சிலநொடித்தாமதங்களுக்குப் பிறகு "போடா" என்ற பதில் மட்டும்.

அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்த பிரகாசம்.

"சொறி டா செல்லக் குட்டி"

"உனக்கு இதுவே  வேலையாப்போச்சுடா, என்னை எப்படிக் கவுக்கணும் என்று நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறாய் படுவா"

பலநாள் பேசாதவர்கள் பேசிக்கொண்டால் சொல்லவும் வேண்டுமா? மயூரனது கைகள் ஓயாமல் விசைப்பலகையையே அமத்திக் கொண்டது.

மயூரன் பாக்கை எல்லாம் எடுங்கோ அடுத்த நிறுத்தத்திலை இறங்க வேணும் என்றார் அங்கிள்.

"ஓ.கே அபி2, பாய்.. சீ யூ டுமாரோ.." என்று எஸ் எம் எஸ்  அனுப்பிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி  நடக்கிறான் வீடுநோக்கி.

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருமாதிரி எழுத நேரமும் மனமும் வந்திட்டுதுபோல. தொடருங்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

மனதில் தோன்றியதைத் தட்டச்சு செய்து அனுப்பி விட்டான் அவளுக்கு.

சிலநொடித்தாமதங்களுக்குப் பிறகு "போடா" என்ற பதில் மட்டும்.

அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்த பிரகாசம்.

"சொறி டா செல்லக் குட்டி"

"உனக்கு இதுவே  வேலையாப்போச்சுடா, என்னை எப்படிக் கவுக்கணும் என்று நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறாய் படுவா"

 

 

 

அடப்பாவிப்பயலே இப்படியா கவிழ்த்தான் ? :lol:  பாவம் அபி 2. 

 

இனி எத்தினை மாதத்துக்கு பிறகு ஜீவா நெஞ்சத்தை கிள்ளாதே தொடரும் ? :unsure:

இனிமேல் இழுத்தடிச்சா ஒரு 300கிலோமீற்றர் தூரம் தான் நேரடியாக வந்து கதையை வாங்கீடுவன் மகனே கெதியில எழுதி முடி ராசா. :wub:

 

தொடருங்கள் ஜீவா.

 

வாறன் பொறுங்கோ. அங்காலை காதல் கடிதம் பாதியில நிக்குது போய் அத முதல் முடியுங்கோ. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ஒருமாதிரி எழுத நேரமும் மனமும் வந்திட்டுதுபோல. தொடருங்கள் ஜீவா.

 

இது வாழ்க்கையின் ஒரு காலத்தையே தின்ற,தொலைத்த நாட்களின் நினைவுப்பதிவு. முற்றும் எழுத வேண்டும் என்றால் ஒரு வருடம் வரைக்கும் தொடரலாம் இயன்றளவு சுருக்கமாக முடித்துவிடுகிறேன் அக்கா. :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஆட்டத்திலை இருக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.