Jump to content

நெஞ்சத்தைக் கிள்ளாதே...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜீவா உங்கள் எழுத்துக்கள் ஆன்மாவில் இருந்து வருகின்றன.எழுதி வைத்து பதிவதில்லை உணரும்போதே எழுதுகிறீர்கள்.எழுதுவதற்கு என்றே பிறந்திருக்கிறீர்கள். 

எத்தனையோ கதைகள் உயர்மட்ட வாசகர்களுக்காகவே எழுதபடுகின்றன. அவர்களாலேயே வாசித்தும் உணரபடுகினறன. அப்படி எழுதுபவர்களையிலே எழுத்தாளர்கள் என்று புகழ்கின்றனர். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அவற்றை எல்லாம் தாண்டி எல்லாராலும் வாசித்து உணர கூடிய படைப்பை தருவதால் , நீங்கள் ஒரு உன்னதமான எழுத்தாளர் என்று சொல்வதில் நான் பின்னிற்பதில்லை.

 

 

 

 

ஆத்மாவில் இருந்து எழுத்து மட்டும் வரவில்லை!

 

இந்த மாதிரிப் பொறுத்த இடங்களில, வாசகர்களைத் தவிக்க விட்டுப் போட்டுப் போற பழக்கமும், ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்குத் தான் வரும்! :icon_idea:

 

கதை, இரண்டு காதலர்களின், அவசரங்களையும், ஏக்கங்களையும் தெளிவாகச் சொல்லிச் செல்லுகின்றது!

 

தொடருங்கள், ஜீவா!

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகலவன் அண்ணா, மற்றும் புங்கை அண்ணா, :)

 

உண்மையாக உங்கள் பாராட்டுக்களுக்கு ஒரு சிறுகடுகளவேனும் எனக்குத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை,

பாராட்டுக்கள் மூலம் இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்று உற்சாகத்தையே எனதாக்கிக் கொள்கிறேன்.

எழுதக்கூடாது என்று நினைக்கும் போதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் தான் எம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன,

அந்த வகையில் எம் கிறுக்கல்களை ரசிக்கும், தட்டிக்கொடுக்கும் நீங்கள் இருக்கும் வரைக்கும் தொடர்வேன்.

 

நன்றி உங்கள் வருகைக்க்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தான் வாசித்தேன். ஜீவா அண்ணாக்கு சிறந்த எழுத்தாற்றல் உள்ளது என்பதை மீளவும் நிரூபிக்கும் எழுத்துகள்.

 

நன்றி துளசி சிஸ்டர் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாய் எழுதியதில் எதோ அவசரம் தெரிகிறது ஜீவா. பார்த்தது எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ...... பகுதி - 7

screw_love_art-1920x1200.jpg

 

மூன்றாமாண்டுப் பரீட்சை நெருங்கியதால் காதலுக்குச் சிறிது விடுமுறை விட்டிருந்தான், முதலாமாண்டைப் போலவே இந்த ஆண்டும் அதி திறமைச் சித்தி எடுத்து உதயன் பேப்பரில் போட்டோ வரவேண்டும் என்பதே நிரோசனுக்கும் அவனுக்குமான போட்டியாக இருந்தது.

"என்ன இண்டைக்கு அப்பர் இரண்டு,மூன்று தரம் இதாலை போட்டுப் போறார்? நான் சொல்லிப் போட்டு வந்து தானே இதிலை விளையாடுறேன்என்று..! காட்ஸ் அடிக்கிறதும் தெரியும், ஏன்  வடிவா பார்த்திட்டு போறார்? யாராச்சும் ஏதும் போட்டுக்குடுத்திருப்பங்களோ?

என்றைக்குமில்லாதவாறு தந்தையின் இந்த நடிவடிக்கைகள் அவனுள் சந்தேகத்தை விதைத்திருந்தது."

ஏழுமணிக்கே ஊரடங்குச் சட்டம் என்பதால் "மாலைச் சூரியன் மங்கல நாணிட்டு இரவின் மடியில் ஒழிந்து கொள்ள முன்னரே இரை தேடி முடித்துக் கூடு திரும்பும் பறைவைக் கூட்டமாய் ஒவ்வொருவரும் கலையத் தொடங்கிவிட்டார்கள்". 

வீடு திரும்பிய மயூரனுக்கோ ஆச்சரியம் என்றுமில்லாதவாறு வாசலிலேயே அம்மா,அக்கா,அத்தான்,தங்கச்சி என்று எல்லோரும் காத்திருந்தார்கள். என்றைக்கும் விட அவர்கள் கண்களில் ஒரு மாற்றம். ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறார்கள் என்று தெரிந்தவனுக்கு என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை, மௌனமே வீடெங்கும் பரவியிருந்தது. பதட்டத்தின் ரேகைகள் படர்ந்து கிடக்க, காத்தவராயன் கூத்தில் நடிப்பவர்களைப் போல தலையைக் குனிந்தவாறே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் மயூரனின் தந்தை.

அவனையே பின் தொடர்ந்து வந்த மற்றவர்களும் ஒவ்வொரு இடத்தில் "கவர்" எடுத்து நின்றனர்."

என்னப்பா? ஏன் எல்லாரும் என்றைக்குமே இல்லாமல் இன்றைக்கு இப்படி அமைதியாக இருக்கிறிங்கள்? யாரும் செத்துக் கித்துப் போட்டினமோ??

யாரிடத்திலிருந்தும் பதில் வரவில்லை. உடுப்பை மாற்றிச் சாரத்தைக் கட்டியவன் போய் முகம் கழுவி சுவாமிப் படத்துக்கு விளக்கேற்றிக் கும்பிட்டுவிட்டு வந்து இடைக்காலப் பாடல்களைச் சுழலவிட்டான் இனிய இசையில்.

நொறுக்குத்தீனி ஏதும் இருக்குதா என்று குசினிக்குப் போனவனுக்கு பிடிக்கொழுக்கட்டை செய்து வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு வந்து தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு சாப்பிடும் போது "தாயின் கண்ணீர் முத்து ஒன்று அவன் நெற்றியில் திலகமிட்டது."

கண்ணீரின் சூடு அவனைக் கலங்கவே செய்தது.  "ஏனணை இப்ப அழுகிறாய்? என்னம்மா ஆச்சு??

எல்லாரும் இன்றைக்கு ஒரு மாதிரி இருக்கிறிங்கள், அக்காள்,அத்தான் கூட வீட்டை விட்டு வந்திருக்கினம் கேட்டால் பதிலே சொல்லுறிங்கள் இல்லை, இப்ப என்னென்று சொல்லேல்லையோ பிறகு உங்கண்டை கையாலை சாப்பிட மாட்டன் சொல்லிப்போட்டன்."

தந்தையின் முகத்தைப் பார்த்தார் மயூரனின் தாய், சரி என்ற மாதிரியே அவரது முகபாவனையும் இருந்தது.

"உன்னைத் தேடி டொக்டர் மாமா வீட்டடிக்கு  வெள்ளை வான் நேற்றிரவு வந்ததாம், கொக்காள் முத்தப்பா வீட்டை நல்ல தண்ணி அள்ளப்போகேக்குள்ளை "ராசி"  சொன்னவளாம், மயூரன் எங்கை என்று வந்து கேட்டிட்டுப் போனவங்களாம்."

பேசி முடிக்க முன்னரே ........ "உங்களுக்கு என்ன விசரேம்மா? யாரும் மருந்தெடுக்க வந்தவங்களா இருக்கும். என்னை எதுக்கணை கடத்த வேணும்? கடத்துறவன் எனக்குச் சாப்பாடு போடவே தனியா உழைக்க வேணும். சும்மா போணை இதுக்குப் போயா இவ்வளவு எடுப்பு?"

"சொல்லுறதைக் கேளப்பு, இனி நீ கண்டபடி வெளிய ஒன்றும் போக வேண்டாம் வீட்டையே இரு, உனக்கு என்ன வேணுமோ கேட்கிற எல்லாமே வாங்கித் தாறன். வீட்டை வச்சு விளையாடிக் கொண்டிரு.."!

நான் என்னணை பால்குடியே வீட்டை இருந்து விளையாடிக்கொண்டிருக்க?

வாற திங்கள் சோதினை வேறை தொடங்குது, இப்ப போய் அவள் சொன்னாள்,இவள் சொன்னாள் என்று ஆற்றையும் கதையைக் கேட்டிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறிங்கள். என்ன வேணுமென்றாலும் சொல்லணை கேட்கிறன். ஆனால் திங்கள் கிழமை நான் சோதினைக்குப் போவேன், ஏற்கனவே பொடியளுக்குச் சொல்லி வச்சிருக்கிறன் இருபத்தைந்து வயதிலை படிச்சு முடிச்சு என்ரை சொந்தக் காலிலை நிப்பேன் என்று, பிறகு மரியாதைக் கேடு எனக்கு.

"நான் சொல்லுறதை நீ கேட்கேல்லை என்றால் இஞ்சை ஐந்து பிணம் விழும், அதுக்குப் பிறகு நீ உன்ரை இஷ்ரம் போலை படி."

இப்படி எத்தனை நாளைக்கணை பொத்திப் பொத்தி வச்சிருப்பிங்கள்? கடத்துறவன் என்றால் வீட்டை வந்து கடத்தமாட்டானோ?

"அப்படி  ஒன்று நடக்கிறதென்றாலும் எங்கண்டை உயிர் போனாப் போலை தான் நடக்கும், நீ ஒன்றுக்கும் கவலைப்படாதையப்பு பெத்த எங்களுக்கு வளர்க்கத் தெரியாதோ? உனக்கு என்ன தேவை என்று எங்களுக்குத் தெரியும் பாட்டை நிப்பாட்டிப்போட்டு போய்ப் படு."

போங்கோம்மா .... எரிச்சலா இருக்கு, இதுக்குப் பேசாமல் செத்தே போயிடலாம்.!!

........மறுநாள்........

"அப்பாவும், அத்தானும் போய் கதைச்சிட்டு வந்திட்டினம், உன் பிரச்சனையைச் சொல்லி சோதினைக்கு வரமாட்டான் என்று. மீள்பரீட்சை ஆறுமாதத்திற்குப் பிறகு நடக்கும் அதிலை வந்து எழுதட்டும் நாங்கள் பார்க்கிறம் என்று சொல்லிட்டினம், நீ வீட்டை இருந்து படி"...!

வாற கோவத்துக்கு...

உண்மையா நீங்கள் ஏதும் தெரிஞ்சு தான் பேசுறிங்களோம்மா??

..............................

மௌனமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் மயூரனின் தாய்.

"அவர்களின் பயத்தில் நியாயம் இருப்பதை அவன் மட்டுமே அறிவான்."

தொடரும் ....

 

 

Link to comment
Share on other sites

உங்கள் கதை சொல்லும்பாணி பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

நெஞ்சத்தைக் கிள்ளாதே ..... பகுதி - 6

32-typography-love-art.jpg

 

ஹலோ..!

ஹலோ..!!

நான் அபி2 பேசுறேன்.

ஹாய் அபி2 சொல்லுங்கோ, எப்படி இருக்கிறிங்கள்? சாப்பிட்டாச்சா? என்ன நடக்குது???

"இப்பத்தானேப்பா" பின்னேரம் ஏழு மணி அதுக்குள்ளையா??

சா..சா.. அது தெரியும் அபி2 நான் மத்தியானம் என்ன சாப்பிட்டிங்கள் என்று கேட்டேன்? ஆமா, அதென்ன இண்டைக்கு "வாய்ஸ்" சூப்பரா இருக்கு? ஒரு மாதிரியாப் பேசுறிங்கள், ஏதோ ஒன்று தூக்கலா இருக்கு??

"அக்கறை உள்ளவங்க கிட்ட அப்படித்தான் பேச வரும்".

 என்ன????

இல்லை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?

 புட்டு,நூடில்ஸ்,அப்பம் .... அது சரி ஏன் திடீரென்று இதைக் கேட்கிறிங்கள்?

இல்லை எனக்கும் நூடில்ஸ் பிடிக்கும் அதான் கேட்டேன்.

"ஆமா உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? எந்த சுவாமி பிடிக்கும்? நீங்கள் என்ன நம்பர்?? எந்த சினிமா நடிகர் பிடிக்கும்? எந்த சிங்கர் பிடிக்கும் ? எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?? எந்த? எந்த??எந்த..................................... எந்த????? "

முடிஞ்சுதா? இல்லை இன்னும் ஏதும் இருக்கா???????

என்ன நேர்முகத் தேர்வுக்கா இத்தனை கேள்வியள் எல்லாம் கேட்கிறியள்?

"நக்கலடிக்காதையுங்கோ .. சொல்லுங்கோ ப்ளீஸ்?"

கறுப்பு, கிருஷ்ணர், ஐந்து, இளையராஜா,SPB, ...............

"எனக்கும் கறுப்பும்,மரூனும் தான் பிடிக்கும், இளையராஜாவும்,ரகுமானும் பிடிக்கும், உன்னிக்கிருஷ்ணன் பாட்டு பிடிக்கும், முருகனும்,கிருஷ்ணரும் பிடிக்கும். நான் ஏழாம் நம்பர் "லக்கி செவிண்" ........

என்ன ஒற்றுமை பாருங்கோ நமக்குள்ளை."!!

"ஆமா என்னைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் மயூரன்."?

யாரோ ஒரு லூசு போல என்று மனசுக்குள்  நினைத்தாலும், "உங்களுக்கு என்ன? நல்ல வடிவா இருக்கிறிங்கள், உங்க குரலுக்கு நான் அடிமை அபி".

....எதிர்முனையில் சிரிப்பு.....

ஓ...... அப்ப இப்ப என்ன நினைக்கிறிங்கள்?

"உங்களை லவ் பண்ணலாமோ என்று நினைக்கிறன்."

என்ன விளையாடுறிங்களா?

"விளையாடுறதுக்குத் தான் கேட்டேன்".. என்று குரலை தாழ்த்திச் சொன்னான் மயூரன்.

என்னது?????? அவள் குரலில் ஒரு கடுந்தொனி.

"விளையாடுற விசயமா இது? ஐ லவ் யூ அபி2"

நல்லா யோசிச்சுத் தான் சொல்லுறிங்களோ??

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதிலை யோசிக்க என்ன இருக்கு"?

நான ஃபோனை வைக்கிறேன்.. பை.

"எந்தப் பதிலும் சொல்லாமல் போறாளே, ஏதும் பிரச்சனை வருமோ? உனக்கு தேவை இல்லாத வேலையடா மயூரா ..!  விடுடா போனால் போகட்டும், சும்மா தானே சொன்னாய் இதெல்லாம் சர்வதேசப் பிரச்சனையா..!! என்று தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டான் மயூரன், இருந்தும் குட் நைட் என்று எஸ் எம் எஸ் அனுப்பி விட்டு அதுக்காவது பதில் வருமா என்று காத்துக் கொண்டு இருந்தான்."

....... எந்தப் பதிலுமே இல்லை......

பொங்கு சனியோ, மங்கு சனியோ ஒரு சனி துலைஞ்சுது என்று நித்திரைக்குப் போனவன். அலாரம் அடித்து எழும்புவதற்காய் ஃபோனைப் பார்க்கும் போது தான் ஆறு எஸ் எம் எஸ் வந்திருந்தது அபி2 யிடம் இருந்து.

"டியர் மயூரன்,

நீங்கள் சிம்பிளாகச் சொல்லிவிட்டீர்கள் நான் தான் தரையில் விழுந்த மீனாகத் தவிக்கிறேன் இங்கு. உங்களுக்குத் தெரியும் எனக்கு ஆண் சகோதரர்கள் யாரும் இல்லை,அக்காவும் தான் விரும்பயவரையே அப்பா வேண்டாம் என்று சொல்லியும் எங்களை எதிர்த்து அவள் விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டாள், எனக்கு கீழே இரண்டு தங்கச்சி வேறை அவர்களைப் பார்க்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் இப்ப என்ரை தலையிலை தான் வந்து விழுந்திருக்குது. எனக்கு என்ரை குடும்பம் தான் முக்கியம். நான் இரண்டாம் தரம் சோதினை எடுத்திருக்கலாம் இல்லாட்டி வேறை ஏதாவது படித்திருக்கலாம் ஆனால் ஆன்டி பிரான்ஸ்சுக்கு வரச் சொல்லி நிக்கிறா அங்கை போய் படிச்சுக் கொண்டு வேலை செய்தால் தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

அதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால் நான் கமலைக் காதலித்தது உங்களுக்கும் தெரியும், அவனோடு கதைச்சதெல்லாம் என் வாழ்வின் கொடுமையான தருணங்கள், எத்தனை நாள் தான் மனக்காயங்களைத் தாங்குவேன்? "காயம் பட்டு வாற வலியை விடக் காதலினால் இதயத்துக்கு வாற வலி தான் அதிகம்", அதனால் தான் அவனை வேண்டாம் என்று சொன்னேன்.சந்தேகப்பிராணியோடு வாழ்நாள் முழுக்க வடுக்களைத் தாங்க நான் என்ன சுமை தாங்கியா? அது என்னாலை முடியாது, ஆனால் எனக்கு வருபவன் எப்படியோ யாருக்குத் தெரியும்? "தெரியாத பேயை நம்புவதை விட தெரிஞ்ச குட்டிச்சாத்தானை நம்புவதே மேல்". அதைவிட பழகிய வரைக்கும் உங்களைப் பிடிக்கும், அதனால் தான் உங்களுடன் கதைப்பதே. நீங்கள் என்னைக் கைவிட்டிட மாட்டீர்கள், ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சரி சொல்கிறேன்."

"வெண்மேகக் கூட்டங்களைக் கிழித்து விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவிலவள் தாழ் சேர்ந்து தாலாட்டுப் பாட சொப்பனம் வராததில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை, சனி தோஷம்  கூட சிலகாலம் தான், அதுவும் பரிகாரம் செய்தால் போய்விடும் என்பது ஐதீகம் ஆனால் இது?!

இனி அவன் வாழ்நாள் முழுக்கச் சிப்பிலி ஆட்டம் தான் போல நினைத்துக் கொண்டான்."

காலதேவன் தன் கடமைகளைக் கனகச்சிதமாகவே செய்து கொண்டிருந்தான்

யாழின் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளால் அவள் கொழும்பிலும், அவன் யாழிலும் இருந்ததால் முகம்பாராமலே தொடர்ந்தன அவர்கள் காதல். பார்த்து விடத் துடிக்கும் மனதிருந்தும் பாதை மூடியதால் பார்க்காமலே தொலைந்து விடப்போகிறார்கள் என்பதை யார் தான் அறிவர்..????

தொடரும்..

பி.கு: ஆள்மாறாட்டம், பெயர்க்குளப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக அபி2என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

முகம் பாராத காதல்கள் அனேகமாக முகம்பார்க்கும்பொழுது முற்றிலும் கோணலாகிப் போவதைப் பார்த்திருக்கின்றேன் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கதையின் கதாநாயகி ஓர் எதிர்பார்ப்புடனேயே தனக்கான துணையைத் தேடுகின்றாள் . முதலில் கமலைத் தெரிவு செய்தவள் இப்பொழுது மயூரனை நேசிப்பவளின் செயற்பாடுகளை " காதல் " என்கின்ற வரையறைக்குள் சேர்க்க முடியாது . வேண்டுமானால் அதை ஹோர்மோன்களின் குளறுபடிகள் என்றே சொல்ல முடியும் . வாழ்துக்கள் ஜீவா !!! இந்தக்கதையே உங்கள் எழுத்துப் பயணத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கப் போகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதை சொல்லும்பாணி பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்....

 

நன்றி மணிவாசகன் அண்ணா. :)

 

தொடர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல் மீண்டும் வருவாரா? மயூரனையும் அபியையும் சந்திப்பாரா?

தொடருங்கள் ஜீவா  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமல் மீண்டும் வருவாரா? மயூரனையும் அபியையும் சந்திப்பாரா?

தொடருங்கள் ஜீவா  

 

அதை இப்பவே சொன்னால் கிளைமாக்ஸ்சில் த்ரில் இருக்காதே வாத்தியார் அண்ணா..

(இதெல்லாம் ஓவர் பில்டப்புனு நினைக்கிற உங்க மைன்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது.. :lol: )

 

நன்றி வாத்தியார் அண்ணா, தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே .... பகுதி - 8

366594_15571358_lz.jpg

 

சீராளன்,

தானாய் வந்து ஒட்டிக் கொண்டவனாகிலும் தலையெழுத்தை மாற்றப் போகிறவன் என்பதை மயூரன் எப்படித் தான் அறிவான்?

எப்போதும் மூன்று மணிக்கு ரியூசனுக்குப் போற பொடியளுக்குப் பின்னால் போவான் திரும்ப ஆறுமணிக்கு அதே பொடியளுக்குப் பின்னால் வருவான்.

"என்னடா மச்சான் ஏரியாக்கு புதுசா ஒரு பொடியன் வந்திருக்கிறான் போலை. ஆளை இதுக்கு முதல் கண்டசிலமன் இல்லை, ஒருவேளை இடம்பெயர்ந்து வந்திருப்பானோ? அதுக்கும் இஞ்சை வாற அளவுக்கு ஆருக்கடா ஆக்கள் இருக்கு?? ஒரு வேளை முகாமிலை இருப்பானோ??"

தன் சந்தேகக் கணைகளைக் கேட்டான் ராஜன்.

"நான் அவனை மறிச்சுக் கேட்கவா மச்சி?"

அவர்கள் சம்பாஷனையை ஞானதிருஸ்டியில் அறிந்திருப்பானோ என்னவோ அவனே அவர்கள் அருகில் வந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், நானும் உங்களுடன் விளையாட வரட்டா? எனக்குப் பெருசா விளையாடத் தெரியாது பீல்டிங் பண்ணுறேன்.

சரி என்று சொல்லி அவனையும் சேர்த்து விளையாடினார்கள்.

அது தான் அவனுக்கும்,மயூரனுக்குமான முதல் சந்திப்பு பின்னர் மயூரன் செல்லும் இடமெல்லாம் அவனும் இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

விளையாடப் போகும் போது, பொது நூலகத்தில், வாசகர்சாலையில் என்று வழமையாக செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் இருப்பான்.

என்ன எனக்குப் பின்னாலையே வாறான்? நான் போற இடமெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்?? யாரும் என்னைப் பற்றி ஏதும் சொல்லி இருப்பார்களோ??? விடைதெரியாக் கேள்விகள் அவனை அரித்துத் தின்றது.

அவனைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு புன்முறுவலோடு நழுவிப் போனான் ஆனால் ஒரு நாள் வாசகர்சாலையில் வைத்து மாட்டி விட்டான்.

"உங்கண்டை பேர் மயூரன் தானே, இன்ன படிக்கிறியள், வீட்டிலை இத்தனை பேர், இத்தனை பேர் வெளிநாட்டிலை, இத்தனை பேர் இஞ்சை, அக்கா,அண்ணா எல்லாரும் கலியாணம் கட்டிட்டினம், நல்லா பாடுவிங்கள், திலீபன் நினைவுநாட்களில் எல்லாம் சின்னனில் பாடி இருக்கிறீர்கள் என்ன சரியோ!?"

திகைத்துப் போய்விட்டான் மயூரன்..!!!

ஆமா இதை எல்லாம் எதுக்கு இப்ப என்னட்டை சொல்லுறிங்கள்?

எங்கையாச்சும் எனக்கு பொண்ணு பார்க்கிறிங்களா?

இல்லை மயூரன் எனக்கு உங்களோடை உதவி வேணும். பயப்படவேண்டாம்.

நான் இயக்க புலனாய்வுப் பிரிவிலை இருக்கிறன். எங்களுக்கு வேலை செய்ய நம்பிக்கையான ஆக்கள் வேணும். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத முழுதும் எங்களுக்குத் தெரியும்.

"என்ன படம் காட்டுறியோ?" கோபத்தில் மரியாதை இல்லாத வார்த்தைகளால் திட்டினான் அவனை.

"நம்பமாட்டிங்கள் என்று தெரியும் இஞ்சை பாருங்கோ இயக்க அடையாள அட்டை, த.வி.பு **** தகடு, சயனைட் குப்பியைக் கையில் திணித்தான்."

அதை தொடும்போதே ஏதோ புது இரத்தம் பாய்ச்சிய உணர்வு.

பின்னர் அவர்களுக்கிடையிலான நட்பு, அவர்கள் தேவை குறித்தெல்லாம் செயற்படத் தொடங்கி இருந்தான். வெளியில் சந்தித்தால் பிரச்சனை வரும் என்பதற்காக தன்னுடன் படிக்கும் பொடியன் என்று சொல்லி வீட்டில் அறிமுகப்படுத்திய பின்னர். சேர்ந்து படிக்கிறோம் என்று சொல்லி அவன் புலனாய்வு சம்பந்தமான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தான். நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது அவர்கள் நட்பு, வன்னிக்கு வரச்சொல்லி மேலிடத்து உத்தரவு வந்திருக்குது நாளைக்கு நான் போறேன். உன்னை இனி வேறு ஒருவர் சந்திப்பார் என்று சொல்லி பச்சை பத்து ரூபாய் நாணயத்தாளில் "சிக்சாக்" வடிவில் வெட்டியிருந்த பாதியைக் குடுத்து "வாறவர் இதோடை மற்ற பாதியைக் கொண்டுவருவார் பொருத்திப் பார்த்து அவருடனே இனி தொடர்பில் இரு, மிச்சம் எல்லாம் அவர் சொல்லித் தருவார் என்று கட்டியணைத்துவிட்டு, நல்லாப் படி. எப்ப இனி  திரும்ப வருவேனோ இல்லையோ தெரியாது வந்தால் உன்னைப் பார்க்க வருவேன், என்னை மறந்திடாதை என்று சொல்லிவிட்டு பிரிந்தவர் தான், இன்று வரை அவர் குறித்த சேதி இல்லை.

ஹலோ..!

ஹாய் அபி2 எப்படி இருக்கிறாய்?

"உங்களுக்கு மானர்ஸ் தெரியாதா?"

இப்ப ஏன்டி என்னை திட்டுறாய்??

"ரெலிபோன் எடுத்தால் முதல் யார் என்று சொல்லி, நீங்கள் யார் என்று கேட்டு அதற்குப் பின் தான் மற்றையவற்றைக் கதைக்க வேணும். இப்படி எடுத்த உடனை எதிரிலை பேசுபவரின் பெயர் சொல்லக் கூடாது புரியுதா, நல்ல பழக்கவழக்கங்களைத் தெரிஞ்சுகொள்ளுங்கோ சரியா?"

"உன்ரை போன் நம்பர் என்று தெரியும் இதிலை இருந்து நீ தான் எடுப்பாய் என்றும் தெரியும் பேந்து ஏன்டி இப்படி பிலிம் காட்டுறாய்?"

"சரி விடுங்கோ.. ஒரு குட்நியூஸ் எனக்கு சீமா கிடைச்சிட்டுது நான் படிச்சுக்கொண்டிருக்கிறன், பாஸ்போட் அனுப்பிவிடச் சொல்லி ஏஜென்சியட்டை அதுவும் அனுப்பிவிட்டேன். பார்ப்போம் எது சீக்கிரம் நடக்குது என்று."

ஹலோ..ஹலோ..ஹலோ... என்ன சத்தத்தையே காணேல்லை?

பொறுங்கோ..பொறுங்கோ ஆன்டி வாறா நான் அப்புறம் எடுக்கிறன். பை...!!

கனநாட்கள் கூட இல்லை ஒரு நாள் ரியூசன் முடித்து வந்தவனைப் பின் தொடர்ந்த ஒருவர், மயூரன் ****அந்த வைரவர் கோயிலடிக்கு வாங்கோ உங்களோடை கதைக்க வேணும்.

என்ரை பேர் கவியரசன். சீராளன் உங்களைப் பற்றி எல்லாம் சொன்னவன் இனி நீங்கள் என்னுடன் தொடர்பில் இருங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன் என்று சொல்லி பத்து ரூபாய்த் தாளின் மற்றைய பகுதியைக்குடுத்தார் மயூரனிடம்.

"மயூரன் வாற "சனி" உங்களைச் சந்திக்க முக்கியபொறுபாளர்மார் வருவினம் நீங்கள் வீட்டை ஏதாவது சொல்லிப்போட்டு கனநேரம் நிக்கக் கூடியதாக வாங்கோ, சாப்பாடெல்லாம் நாங்களே தருவம். நான் சொல்லுற இடத்திலை வந்து நில்லுங்கோ நான் வந்து கூட்டிக் கொண்டு போறேன்."

யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலிட அந்த இரவு தூக்கமே இன்றித் தொலைத்தான்.

அம்மா..! இன்றைக்கு ரியூசனிலை சோதினை இருக்கு எப்படியும் வர நேரஞ் செல்லும் தேடாதையணை என்று சொல்லிவிட்டு குறித்த இடத்திற்குச் சென்றிருந்தான். சொன்னது போலவே வந்த அவர் சந்திக்க வேண்டிய இடம் வந்ததும், மயூரன் நீங்கள் இதிலை இறங்கி நில்லுங்கோ, உங்கண்டை சைக்கிளையும் தாங்கோ நான் வேறை இடத்திலை விட்டிட்டு வாறன்.

இருவரும் ஒரு அறைக்குப் போனதும் மயூரனின் கொப்பி எல்லாவற்றையும் வாங்கி விட்டு உடுப்பை எல்லாம் மாற்றச் சொல்லி "நீலப்பெட்டி போட்ட சாரம், மெல்லிய பச்சை நிறத்தில் இருபக்கமும் பொக்கற் வைத்துத் தைத்த சேட் குடுத்து போட்டதும் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்து விட்டு கையில் இருந்த மோதிரம்,கோயில் நூல் எல்லாவற்றையும் கழற்றச்சொல்லி வாங்கி விட்டு முகத்திற்கு மண்ணிற சீத்தைத்துணியால் செய்த,கண்ணுக்கு மட்டும் கறுத்த துணி வைத்துத் தைத்த முகமூடி அணிவித்து சந்திப்பு நடக்க வேண்டிய அறைக்குக் கூட்டிக்கொண்டு போகும் போது அதே கோலத்தில் பதினைந்து, இருபது பொடியள் இருந்ததைக் கண்டு தான் மட்டுமல்ல, இன்னும் பொடியள் வந்திருக்கிறாங்கள் என்று நினைத்துக் கொண்டான் மயூரன்.

உள்ளே போன சில கணங்களிலேயே நாலைந்து பேர் வந்து எல்லாருக்கும் கை கொடுத்து விட்டு நியூட்டன் அண்ணா, பிரதீப் மாஸ்டர்,தியாகராஜா அண்ணை என்று ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பெடுத்தனர். மதியச்சாப்பாடு மீன்கறியுடன் கவியரசன் அண்ணாவே பரிமாறியிருந்தார். மயூரன் மீன் சாப்பிடததால் சாப்பாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனை களங்களைப் பார்த்திருப்பம், இப்பதையான் பொடியள் நல்ல சாப்பாடு  இருந்தும் சாப்பிடுறாங்கள் இல்லை என்று கவலைப்பட்ட படி நூறுரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தார்". போகும் போது உனக்குப் பிடிச்சதை வாங்கிச் சாப்பிடு என்று, வேண்டாம் என்றவன் வெறும் சோற்றை மட்டும் சாப்பிட்டான்.

எல்லாம் முடிந்ததும் ஒவ்வொருவராகக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

அறைக்குப் போனதும் முகமூடியைக் கழற்றி விட்டு. என்ன எல்லாம் விளங்கிச்சுதா? இனி உன்ரை இயக்கப் பெயர் ******* அல்லது ******

இனி நீ இந்தப் பெயரிலை தான் உன்ரை அறிக்கையளைக் குடுக்க வேணும்.

பெயர்***********

முகவரி **********

**********************

விசுவமடு.

இந்த விலாசத்துக்கு அனுப்பினால் சரி. கை குலுக்கி விடைபெற்றார்கள்.

என்ன தான் அபி2யும் மயூரனும் கதைத்தாலும், சண்டைகளுக்கு மட்டும் குறைவில்லை. அப்படித்தான் இந்த முறை நல்லூர்த் திருவிழாவுக்கும் வாறேன் உங்களையும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தாள் ஆனால் அவனோ சோதினைக்கே போக முடியாமல் இருக்கும் போது அவளை மட்டும் எப்படிச் சந்திக்க? பொய் சொல்லிவிட்டுப் போகும் விடையமா இது? பிறகு ஏதும் நடந்தால்? ஆனால் அவன் தன்னுடைய பிரச்சனைகள் எவற்றையும் அவளிடம் சொல்லவில்லை. சொறி அபி2 எனக்கு நிறைய வேலையள் இருக்கு, நீ வந்திட்டுப் போ நாங்கள் இன்னொரு நாள் சந்திப்பம்.

"போடா உனக்கு என்னை விட மற்றதெல்லாம் தான் முக்கியம். நீயே வரமாட்டாய் பிறகேன் நான் வரவேணும். நானே லீவு கேட்டிட்டுத் தான் வரலாம் என்று இருந்தேன். உனக்குத் தான் நான் முக்கியம் இல்லையே போ.. என்னோடை கதைக்காதை." கோவித்துக் கொண்டு போனை வைத்துவிட்டாள்.

"இவளுக்கு இதுவே வேலையாப் போச்சு படுத்துறாள்" தன்னையே கடிந்து கொண்டான் மயூரன்.

ஏ9 பாதை மூடியவுடன் பல தொடர்புகள் விட்டுப்போயிருந்தன  ஆனால் கவியரசன் அண்ணையும், தியாகராஜா அண்ணையும் உள்ளுக்குள் இருந்ததால் சற்று நிம்மதியுடனேயே இருந்தான். ஆனால் அது நீடிக்கவில்லை ஓராங்கட்டைச் சந்தியில் ஆமிக் காம்புக்கு கிரனைட் அடிச்ச பொடியள் அடையாள அட்டையை விழுத்திப் போட்டுப் போக அதை எடுத்த ஆமி குறிப்பிட்ட பொடியனைப் பிடிக்க அதன் பின் சங்கிலித் தொடராக கவியரசன் அண்ணாவும் பிடிபட்டதாக உறுதிப்படுத்தப் படாத தகவல் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் கொஞ்சக் காலம் கழித்தே கரவெட்டியில் வைத்து தியாகராஜா அண்ணையும் வீட்டில் வைத்துச் சாப்பாடு குடுத்தவனே ஆமிகுக் காட்டிக் கொடுத்து சுற்றி வளைக்கப் பண்ணி விட்டு காலமை முகம் கழுவ கிணத்தடிக்கு வரும் போது ஆமி பிடிக்க முனைய தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

ஒரு வேளை யாரும் காட்டிக் கொடுத்துத் தான் தன்னையும் கடத்த வந்தார்களோ என்று நினைத்தவன் இதை எல்லாம் சொன்னால் தன் குடும்பத்தார் பயந்திடுவார்களோ என்று தான் மறைத்திருந்தான்.

வீட்டில் இருந்தாலும் பக்கத்துக் கோயிலடியில் போய் பொடியளுடன் கொஞ்சம் விளையாடிப் போட்டு வருவதால் ஆறு மாதம் என்பது விரைவாகவே கடந்துவிட்டது.

நாளை மீள் பரீட்சையில் தோற்றுவதற்காய் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

என்ன தான் நடக்குமோ யார் தான் அறிவர்...????

தொடரும்......

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா....இன்றுதான் தொடரை வாசித்தேன்..இன்றும் எம் இளைஞர்கள் இந்த காதல் சுகத்தை அனுபவிக்கிறார்கள்...

அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோயில்லை பாடத்தொடங்கி விட்டுது.
இந்த சுகத்தை 30 வருடங்களின் பின்பு எனது ஊர்கோவில் திருவிழாவிலும் அனுபவித்தேன்..
Link to comment
Share on other sites

 

கிராமக் கோட்டில கிரனேட் எறிஞ்சது சலூன் வைத்திருந்த ஜெகன் அல்லது ஓட்டோ குட்டி என நினைக்கிறேன். பின்னர் ஜெகனின் தம்பி கண்ணனை பிடித்து டம்ப் பண்ணியிருந்தார்கள். அதன் தொடராகவே ஓட்டோக் குட்டியும் வீட்டு வாசலில் வைத்து சுடப்பட்டான். ஆதி, அமுதாப் அண்ணா, பாப்பா, அன்பழகன் என பலர் வந்து கதைத்தும் எப்பிடியோ எரிமலைக்குப் போகாமல் சுழித்து விட்டார்கள். வதிரி பேசில கட்டைக் கண்ணன் எண்டு ஒராள் இருந்தவர் தெரியுமோ மச்சி?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தான் முழுக்க வாசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிலை இருந்து கதை கொஞ்சம் சீரியசாகப் போகுது போல கிடக்கு! :D

 

தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்கமுழுக்க காதல் கதையைத்தான் எதிர்பார்த்தன். நீங்களும் பெரிய ஆள்போல கிடக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராம்கட்டை சந்தி காம்பாலை பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும் . தொடந்து எழுதுங்கோ தம்பி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ....... பகுதி -9

 

560038_497395060326743_1400053877_n.jpg

 

அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தவன் முக்கியமான குறிப்பிட்ட நோட்ஸ்சை மட்டும் mp3 யில் தன் குரலில் பதிவு செய்தான், பஸ்ஸில் போகும் ஒரு மணிநேரமும் அதையே திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம் பாடமாக்கி விடலாம் என்று.

குளித்து விட்டு வரும் போது அவனுக்கு முன்னரே எல்லாரும் வெளிக்கிட்டு நின்றிருந்தார்கள். மயூரனுக்கோ ஆச்சரியம்? என்ன இண்டைக்கு ஏதும் விசேஷமோ எனக்குத் தெரியாமல்..!

அம்மா..! என்னணை இண்டைக்கு எங்கையும் கலியாணவீடோ இல்லாட்டி சாமத்திய வீடோணை? ஏன் எல்லாரும் வெளிக்கிட்டு நிக்கிறியள்??

"நாங்கள் ஆற்றையும் வீட்டை போறனாங்களோடா? பிறகேன் புதுசாக் கேட்கிறாய்?"

அப்ப ஏனணை?

"எல்லாம் உன்னைக் கூட்டிக் கொண்டுவந்து விடத்தான்."

கையை உச்சந்தலையில் அடித்துக் கொண்டவன், சுவரில் தலையால் ஆஆஆஆ... நாலு முட்டு முட்டிக்கொண்டான். எனக்கு வாற கோவத்துக்கு,

உண்மையா உங்களுக்கே இது நல்லா இருக்காணை? நீங்களே ஊருலகத்துக்கு காட்டிக்குடுத்துடுவிங்கள் போல .. பேசாமல் இருங்கோணை.

"அதற்கு மயூரனின் தாய் பதில் கூற முயலவே வாயைப் பொத்தியவன். பேசாதையணை, எனக்கு என்ரை வேலை தெரியும் பேசாமல் உங்கண்டை வேலையைப் பாருங்கோ. காசு குடணை."

கோவத்தில் சாப்பிடக் கூட இல்லை, காசை மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்."

என்றுமில்லாதாவாறு இன்றைக்கு அவனுக்கு எல்லாமே தடங்களற்ற தெருக்களில் ஏலியன்களின் நடமாட்டம் போல் உணர்ந்தான், வெள்ளை வாகனங்கள் எல்லாம் வெள்ளைவான்களாகவே தெரிந்தது ஒவ்வொரு ஆமிக்காம்பையும் கடக்கும் போதும் ஒவ்வொரு துவக்கும் தன்னை நோக்கி நீட்டப்படுவதாயே உணர்ந்தான் சைக்கிள் ரயர் வெடித்திருந்தால் கூட குண்டுவெடித்தது போலக் குலை நடுங்கினான். கருடபுராணக்கதைகள் கேட்டவனுக்கு  உயிரோடு இருக்கும் போதே நரகத்தின் வேதனைகளை அனுபவித்தான் அந்தக் கணங்கள்."

சோதினை முடிந்து முடிவுக்காய் காத்திருந்த நாட்கள் அவை,

நாய்களின் ஊளையிடுதலும்  இராணுவ வாகங்களின் இரைச்சலும் விடிந்ததும் ஏதோ சுற்றிவளைப்பு நடக்கப் போவதை உணர்த்தின. எப்படியாவது அடுத்த பக்கம் போய்விட வேண்டும், யாராவது தலையாட்டியைக் கூட்டிக்கொண்டு வந்தால் தான் பிடிபடுவனோ என்று நினைத்தவன் வாசலுக்கு வந்து நிலமையைப் பார்த்தான் அப்போது தான் அம்மன் கோவிலுக்கு பூசையாக்கப் போன ஐயர் திரும்பி வந்தார்.

"என்ன ஐயா? ஏன் திரும்பிவாறிங்கள்??"

கோயிலைச் சுத்தி ஆமி நிக்கிறான் , இந்த ஏரியா இண்டைக்கு "ரவுன்டப்"பாம்கோயிலுக்கு போகேலாது வீட்டை போகச்சொல்லிட்டான்.

நீ ஏன் வெளியிலை நிக்கிறாய் உள்ளை போ".

அப்பா.. இண்டைக்கு இஞ்சாலை ரவுண்டப்பாம். நீங்கள் அக்காளையும், தங்கச்சியையும் பாருங்கோ, விடிஞ்சு அவன் இஞ்சாலை வாறதுக்குள்ளை நான் அம்மாவோடை மெசினைக் கொண்டு தோட்டத்துக்குப் போறன்.

ஏன் எதுக்கு என்று கூட யோசித்தாரோ தெரியாது சரியப்பு, சேட் ஒண்டும் போடாதை, தலை ஒன்றும் இழுக்க வேண்டாம் சும்மா தட்டிப்போட்டுப் போ.

தாயிடம் கிணற்று வயரைக் குடுத்து விட்டு மண்வெட்டியைத் தோளில் எடுத்து வைத்தவன் மறுகையில் வில்லியர்ஸ் மெசினையும் இழுத்துக்கொண்டு தோட்டத்திற்குக் கிழம்பினான்.

போகும் போதே சில ஆமி கண்டிருந்தாலும் எதுவும் கேட்காமல் விட்டிருந்தார்கள். தனது ப்ளான் வேலை செய்யுது போல என்று நினைத்து சந்தோசப்பட்டவனது எண்ணம் அடுத்த கணமே கலைந்தது.

"அடே .. ஹொய்த யன்னுவ?"

தோட்ட யனுவா

 ஆமிக்காரன் மேலும் கீழும் பார்க்க, தப்பா சொல்லிட்டமோ !!!

தெரிஞ்சால் தானே சொல்ல சிங்களத்தில் ஒரு வார்த்தையே தெரியாது ஏதோ குத்துமதிப்பாச் சொல்லிட்டனோ, வெழுக்கப்போறான் போலை என்று நினைச்சவன், சேர்..சேர் தோட்டம், தோட்டம் மெசின் டுட்டுடுடு.. வோட்டர் சேர் வோட்டர். போதாக்குறைக்கு தார் ரோட்டிலேயே வாய்க்கால் இழுத்து, மெசினில் கயிற்றைச் சுற்றி இயக்கப் பண்ணிக்காட்டினான். சத்தம் கேட்டு நாலைந்து ஆமிக்காரங்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஏதோ சொல்லிக் கதைத்தார்கள், ஆனால் இடிவிழுந்த ஒருத்தன் போகேலாது வீட்டை போ என்று துரத்தி விட்டான் அவர்களை.

என்ன செய்ய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மயூரனின் அப்பாக்கு நல்ல ஐடியா வந்தது காய்ச்சல் என்று படுக்கச் சொல்லி விட்டு தான் ஆஸ்மாக்கு பாவிக்கும் மருந்துகளை எடுத்து மயூரனின் தலைமாட்டில் வைத்து , தாயாரிடம் சொல்லி விசிறிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு வாழைக்கன்றுக்கு தண்ணி இறைச்சுக் கொண்டிருந்தார். சொன்னது போலவே

எல்லாவீடுகளுக்குள்ளும் ஆமி வந்துவிட்டான். மயூரன் படுக்கையில் இருந்து கஸ்டப்பட்டு எழுவது போல நடிக்க அவனை படுக்கச் சொன்னான். எல்லாரது அடையாளஅட்டையையும், குடும்ப அட்டையையும் வாங்கிப் பார்த்து ஆக்களையும் சரிபார்த்துவிட்டு வரச் சொல்ல

பிள்ளைக்கு ஃபீவர் சேர், மருந்து சேர் என்று மயூரனின் தந்தை சொல்ல நல்லவன் போல மயூரனின் தாயை அவனைப் பார்க்கச் சொல்லி விட்டிட்டு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோயிருந்தான். நல்ல காலம் எல்லாரையும் தலையாட்டிக்கு முன் நிறுத்தினாலும் யாரையும் தலையாட்டவில்லை என்று ரவுண்டப் முடிச்சு வந்து மயூரனின் தந்தை சொல்லியிருந்தார்.

இவனை இனியும் இப்படி வச்சிருக்க முடியாது, தினம் தினம் செத்துப் பிழைக்கிறதை விட எங்கையாவது அனுப்பிவிடுவது என்று முடிவெடுத்த மயூரனின் பெற்றோர் லண்டனில் உள்ள அவன் அண்ணாவுடன் கதைத்து அவனை லண்டனுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டனர். பாதை வேறு பூட்டியதால் யாழ்-கொழும்பு விமானத்தில் தான் போகவேணும், அதை விட ஆமியட்டைப் பாஸ் எடுக்க வேண்டும் எத்தனை கண்டங்களைத் தாண்ட வேண்டும். ஆனால் அவனுக்கோ இதில் துளிகூட விருப்பமில்லை அவனது படிப்பு, அந்த ஊர், நட்பு,காதல் இவற்றையெல்லாம் விட்டு எங்கோ கண்காணாத தூரத்திற்குப் போவது என்பதை அவன் கனவிலும் நினைத்ததில்லை. போவதில்லை என்று நினைத்தவனுக்கு நாளைய சம்பவம்

எங்கையாவது "போ" என்று சொல்லும் என்பதை அறிய அவன் என்ன முக்காலமும் உணர்ந்த ஞானியா??

தொடரும்....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீவா....இன்றுதான் தொடரை வாசித்தேன்..இன்றும் எம் இளைஞர்கள் இந்த காதல் சுகத்தை அனுபவிக்கிறார்கள்...

 

இந்த சுகத்தை 30 வருடங்களின் பின்பு எனது ஊர்கோவில் திருவிழாவிலும் அனுபவித்தேன்..

 

 

நன்றி புத்தன் அண்ணா,

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

அசத்தலப்பா கதை.. சும்மா கை கால் எல்லாம் வேர்க்குது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிராமக் கோட்டில கிரனேட் எறிஞ்சது சலூன் வைத்திருந்த ஜெகன் அல்லது ஓட்டோ குட்டி என நினைக்கிறேன். பின்னர் ஜெகனின் தம்பி கண்ணனை பிடித்து டம்ப் பண்ணியிருந்தார்கள். அதன் தொடராகவே ஓட்டோக் குட்டியும் வீட்டு வாசலில் வைத்து சுடப்பட்டான். ஆதி, அமுதாப் அண்ணா, பாப்பா, அன்பழகன் என பலர் வந்து கதைத்தும் எப்பிடியோ எரிமலைக்குப் போகாமல் சுழித்து விட்டார்கள். வதிரி பேசில கட்டைக் கண்ணன் எண்டு ஒராள் இருந்தவர் தெரியுமோ மச்சி?

 

 

நீ சொல்வது சரி தான் மச்சி. உனக்கு இது தெரிந்திருக்கும் என்று ஊகித்தேன் அப்படியே எழுதிவிட்டாய். உன்னுடைய கதையில் எழுதிய சிலருக்கும், இவர்களுடன் தொடர்பு இருந்தது. ஸ்கைப்பில் வா மச்சி. :)

நேற்று தான் முழுக்க வாசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கோ.

 

நன்றி அண்ணா, தொடர்ந்தும் படித்துக் கருத்தெழுதும் ஒருவர் அண்ணா நீங்கள்.

உங்கள் ஊக்குவிப்புத் தான் தொடர்ந்து எழுதவைக்கிறது.

நன்றி அண்ணா, வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு முன்னால கிடந்து, சீரழியாமல், கண்காணாத இடத்தில போய், நீயாவது நல்லாயிருக்க வேணும்!

 

அநேகமான பெற்றோர்களின், ஆரம்பகால ஆதங்கம், இப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்!

 

தொடருங்கள், ஜீவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தம்பி

காலங்கள் காத்திராது

நாம் அந்தந்த வேளையில் அவற்றை  பதிவாக்கணும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.