Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

அமெரிக்க வெளியுறவுத் தூதர் எலீன் சாம்பர்ளின் டொனஹொ, ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. போர்க்குற்ற விசாரணை தேஷ்வை. இலங்கையில் விசாரணை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

திரு நல்லக்கண்ணு அவர்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் ! மாணவர் போராட்டம் அதற்கு எதிரானது ! திசை திருப்ப வேண்டாம் தோழரே !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் -
8883170213, கருணாநிதி - 9176785058

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயங்கொண்டம் , கமுதியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் ! சென்று ஆதரவு தாருங்கள் ! மாணவர் போராட்டம் விரிவடைகிறது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர் !

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட்,எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.


இந்த போராட்டம் அனைத்து அமைப்பினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை முன்னின்று ம.தி.மு.க தோழர் சுப்பு (பஜாஜ்) ஒருங்கிணைத்து வருகிறார்.மேலதிக தகவல்களுக்கு தோழர் சுப்பு : 9786699060 அல்லது முகவைத்தமிழன் : 9047507665

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
இராமநாதபுரம் மாவட்டம்


- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் !

விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும் !  

- முகநூல் -

Link to comment
Share on other sites

இலங்கைப் பிரச்னையை முன் வைத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

ராமேஸ்வரம் வேர்க்கோடுப் பகுதியில் அமைந்துள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

 

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் புகைப்படத்தை முகமூடியாக அணிந்திருந்தனர்.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு எமது போராட்டத்தை நசுக்கிவிட முடியாது! கல்லூரிகளுக்கு வெளியில் ..எமது போராட்டம் முன்பைவிட தீவிரமாகும்..இருந்து பாருங்கள்! மாணவர் தலைவர்கள் சூளுரை.


"எமது போராட்டத்தில் நியாயம் உள்ளது , நீதி உள்ளது. நாம் எமது உறவுகளுக்காக உரத்து நீதி கேட்கிறோம். நாம் எம் இனத்தின் அழிவுக்காக உலகத்திடம் நீதி கேட்கிறோம். நாம் பாலச் சந்திரன் போன்ற ஆயிரக் கணக்கான குழந்தைகளை சுட்டு கொன்ற ராஜபக்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உரத்து கேட்கிறோம். இது தவறு என்றால்அந்த தவறை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். தமிழ் நாட்டு மக்கள் எம்மை புரிந்தகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாம் சிறிலங்காவின் இனப்படுகொலைக்காக நீதி கேட்கிறோம். நாம் தமிழ் நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அகிம்சை வழியில் போராடுகிறோம். அப்படி இருக்கும்போது எமது போராட்டத்தை யாராவது நசுக்க முயன்றால், அதை நிச்சயம் நாம் அனுமதிக்க மாட்டோம். மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை சம்பந்தப் பட்டவர்களுக்கு புரியவைப்போம். தற்போது சகல கல்லூரிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதே வேளை எதிர்வரும் திங்கள் முதல் எமது போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்பதையும் கூறிக் கொள்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்"

 

இப்படி உணர்வு பொங்க கூறினார்கள் பொறுப்பு வாய்ந்த சில மாணவர்களும் அவர்களின் தலைவர்களும். அவர்களின் பணி தொய்வின்றி தொடர நாமும் வாழ்த்துகிறோம்.!


மாணவர்களின் போராட்டம் எரிமலையை விட உறுதியானது. அதன் வெக்கையில் அத்தனையும் பொசுங்கிவிடும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thiiiiiiiiiiiiiii.jpg
 
 

 

லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். 

ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில், லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் வாபஸ் வாங்கப்பட்டாலும், அவர்கள் ஆரம்பித்துவைத்த தூண்டுதல் தமிழக மாணவர்கள் அனைவரையும் வீறுகொண்டு வீதிக்கு வரவைக்கக் காரணமாகிவிட்டது.

இதோ... தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்!

சென்னை: அப்புறப்படுத்த நினைத்த போலீஸ்!

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 11-ம் தேதி தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், இன்னும் நீடிக்கிறது. மற்ற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைவிட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அதிக ஆபத்து மிகுந்தது என்று காவல் துறை கருதியதோ என்னவோ... 'நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வெடிகுண்டு இருக்கிறது. அதனால், சோதனை நடத்த வேண்டும்’ என்று, நீதிமன்ற வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்ற மட்டும்தான் காவல் துறையால் முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்கிறது. சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர்.

உண்ணாவிரத்தை நிறுத்தினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள், கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி என்று சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களும் உணர்வுப்பூர்வமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

செங்கல்பட்டு: 'இதயத்துடிப்பு குறைந்தது’

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரி வாசலில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும், மாணவர்கள் மசியவில்லை. 13-ம் தேதி... மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை மோசமானதை அறிந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மருத்துவக் குழு ஒன்றை அழைத்துவந்தார். மாணவர்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழு, 'மாணவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் போலீஸார் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மூவரை மட்டும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள். மற்றவர்கள் தொடர்கின்றனர். 

கோவை: விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்

கடந்த 11-ம் தேதி முதல் கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், ம.தி.மு.க. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர்.

13-ம் தேதி மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி, கடலூர் அரசுக் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.

தமிழக மாணவர்களின் போராட்டங்களாவது மத்திய அரசை உலுக்குமா?

- ஜூ.வி. டீம்

மாணவர் போராட்டக்குழு அமைப்பு

இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ''ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்'’ என்று கொந்தளித்தனர்.

வேலூர்: 'டி.சியைக் கொடுத்திடுவோம்!’

வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 11-ம் தேதி காலை 10 மணிக்கே 50 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை. வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்விதான்.

'போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் டி.சி. தரப்படும்’ என்று மிரட்டியும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், 3 மணி அளவில் கலைந்தனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களும் அன்றைய தினம் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 14-ம் தேதியில் இருந்து வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

திருச்சி: தாக்கப்பட்ட போலீஸ் வாகனம்!

திருச்சியில் கடந்த 12-ம் தேதி முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய உண்ணாவிரதத்தில், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.

13-ம் தேதி புரட்சிகர மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ராஜபக்ஷே, மன்மோகன் சிங் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களில் எட்டு பேரை கைது செய்தனர். அதனைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓங்கி அடித்தார். இதனால் கோபம் அடைந்த காவலர் ஒருவர் அந்த மாணவரை அடிக்க... மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், திருச்சியில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டக் கல்லூரி முதல்வர், ம.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் சீனியர் வழக்கறிஞர்கள், 'பொதுமக்களுக்கு இடையூறாக மாற்றிவிடாதீர்கள்’ என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன பிறகே, அவர்கள் அமைதியானார்கள். இந்தப் போராட்டத்தால் மூன்று மணி நேரத்துக்கும் மேல் திருச்சி ஸ்தம்பித்தது.

மதுரை: பூட்டப்பட்ட தபால் நிலையம்!

மதுரையில் பெரும்பாலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11-ம் தேதி ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் தபால் நிலையத்தைப் பூட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட... காவல் துறையினர் 17 மாணவர்களை கைதுசெய்தது. 13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மூவர் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்!

நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின் பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எட்டி உள்ளது. காவல் துறையினால் மாணவர்கள் எப்போதும் கைது செய்யப்படலாம்.

விகடன்

Link to comment
Share on other sites

விடுதியில் இருந்தும் மாணவர்களை வெளியேற்ற அரசு கூறியதாக கல்லூரிகள் அறிவிப்பு.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலூர் : சட்ட கல்லூரி மாணவர் போராட்டம் தொடர்கிறது ! முடங்காது மாணவர் போராட்டம் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தர்மபுரி : அரசு கலைகல்லூரி விடுதி மாணவர் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது ! கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரியலூரிலும் அரசு கலைக் கல்லூரியில் தொடர்கிறது போராட்டம் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெய்வேலியில் முன்னாள் மாணவர்களின் உண்ணாவிரதம் காவல் துறை அனுமதியுடன் தொடங்கியது !

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

சென்னை 18 அன்று முற்றுகை !
அடையாறு சட்ட பல்கலைகழக போராட்ட குழு அறிவிப்பு !
மாறுகின்றது போராட்ட உத்தி
.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

முன்பு ஈழம் என்று சொன்னாலே உள்ளே தூக்கிப் போட்டார்கள்..! இன்று ஈழம் என்கிற சொல்தான் தமிழ்நாடு முழுமைக்குமாக நிறைந்துள்ளது. அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடிக்கும்போது விளைவுகள் கனதியாகத்தான் இருக்கும்.

 

மாணவரின் அறப்போர் தேவையான விளைவுகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

மாற்றுவோம் போராட்ட உத்தியை !

 

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நம்மை நாமே வருத்திக்கொள்வதைப் பார்த்து இந்த மானங்கெட்ட அரசுகள் திருந்தப்போவதில்லை என்பதற்கு சாட்சியாய் இருக்கிறார் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா.

இந்த உண்ணாவிரதம்.. மனு கொடுப்பது. உள்ளிட்ட அடையாளப்போராட்டமெல்லாம் வேலைக்காகாது. நம்மை துளியும் மதிக்க மாட்டார்கள். நாம் உண்ணாவிரதம் இருந்து செத்துப்போனால் அப்பாடா. ஒரு விக்கெட் காலி என்று தான் நினைப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நடந்தது. ரயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தார்கள். ஆடியது மத்திய அரசு. எதிரிக்கு வலிக்க வேண்டும். அதுதான் போராட்டம்.

அடையாளப்போராட்டங்களுக்கு முடிவு கட்டுவோம். நீங்கள் இருக்கும் உண்ணாவிரதத்தை விட காஷ்மீரில் சிறுவன் ஒருவன் ராணுவத்தை நோக்கி எறியும் ஒரு கல்லுக்கு அதிக வீரியம் உண்டு..

தமிழகத்திலிருக்கும் இலங்கைத்துதரகக் கண்ணாடியில் தமிழனின் `ஒரு கற்கள் கூட இன்னும் ஓவியம் தீட்டாமல்’ இருப்பதே தமிழர்கள் எவ்வளவு அமைதியானவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு..

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஈழம் என்று சொன்னாலே உள்ளே தூக்கிப் போட்டார்கள்..! இன்று ஈழம் என்கிற சொல்தான் தமிழ்நாடு முழுமைக்குமாக நிறைந்துள்ளது. அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடிக்கும்போது விளைவுகள் கனதியாகத்தான் இருக்கும்.

 

மாணவரின் அறப்போர் தேவையான விளைவுகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்..!

இனி அவர்களின் இறையான்மை கீச்சு மாச்சு பூச்சாண்டி விளையாடு எல்லாம் எடுபடாது..மாணவர்கள் தெளிவாய் தான் இருக்கினம் டங்கு...உங்களால் முடிந்தால் ஒரு சில மாணவர்களை தொடர்வு கொண்டு கதையுங்கோ 

Link to comment
Share on other sites

போராட்டம் நடத்தும் அன்பு தம்பிகளுக்கு தயவு செய்து உங்களது போரட்டத்தில் எந்த ஒரு கட்சிகளையும் அனுமதித்து விட வேண்டாம்.ஒரே நாளில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர வைத்து போரட்டத்தை முடித்து விடுவார்கள் !

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

தமிழகத்தின் முதல் மருத்துவக்கல்லூரி களத்தில்

ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் 8489769794

வாழ்த்துங்கள் உறவுகளே !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
manamreporddam.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
saddddddddddddn.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thinathanthiiiiiiiiii.jpg
 
 

 

இப்போராட்ட செய்தியினை பரப்புவது ,பகிர்வது நமது கடமை! ............................................................................................................................."போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான....

1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை...

2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு...

3) இலங்கைமீது பொருளாதாரத்தடை...

உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்..

மேலதிக தகவலுக்கு :9791162911

— ஒரு கோடி மாணர்கள் எழுக போராட்டம் (3 photos)

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை...

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான.... 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை... உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்.. மேலதிக தகவலுக்கு :9791162911

Link to comment
Share on other sites

பாளை :

வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி !
மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது !
வெல்லட்டும் மாணவர் எழுச்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஓசூரில் போராட்டம் தொடங்கியாச்சு...!!! திரண்டு வாருங்கள் தோழர்களே.

தோழர்களே, நம் அனைவரின் போராட்டங்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று சட்ட கல்லூரி மாணவர் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஓசூர் தாலுக்க அலுவலகம் அருகில் இறங்கியுள்ளனர்.

இங்கு மாணவர்கள் அனைவரின் ஆதரவை நாடியும் அவர்களுக்கு ஊக்கம் குடுக்கும் வகையில் அவர்கள் போட்ட விதையை விதைத்துள்ளனர். அவர்களுக்கு உங்கள் அனைவரின் ஆதரவை தாருங்கள்.

அவர்களோடு நாங்களும் அமர்ந்து ஆதரவளித்து வருகிறோம். நீங்கள் அனைவரும் அவர்களுக்கு தொலைபேசி மூலமாவது வாழ்த்துக்கள் தெரிவியுங்கள். சிலம்பரசன் -7639757374 வழக்கறிஞர் சண்முகம் - 9791271949 - 9443913770

இப்படிக்கு, என்றும், தோழமையுடன்,
தன்மானம் சக்ரவர்த்தி.

 

5392_445853225494956_1918086368_n.jpg

- முகநூல் -

Link to comment
Share on other sites

மக்களே மிக அவசரம்.

நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் உண்ணா விரதம் இருக்கும் நமது உறவுகளை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குவதாக தகவல் வந்துள்ளது. மாணவர்களின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் உண்ணா விரதத்தில் சுமார் 15 முன்னாள் இந்நாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர். உறவுகளே நமக்கான தனி தமிழ் ஈழத்தை பெற நடத்தம் படும் போரட்டங்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு விடாமல் இருக்க உடனே தொடர்பு கொண்டு பேசுங்கள்

04142-262258-rammamoorththy
நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர்
நாகரிகமாக பேசவும்

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
tamilgirlsssss.jpg
 
 

கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள்

அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரள மாணவர்களும் போராட்டட்தில் குதிக்க வேண்டும் என சட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.


சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்

இந்நிலையில் சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திபுரம் பகுதியில் தீடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை நிறுவனம் முற்றுகை

இந்நிலையில் கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள 'டம்ரோ' என்ற இலங்கையை சேர்ந்த பர்னிச்சர் நிறுவனத்துக்குள் நுழைந்து அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக பர்னிச்சர் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.இதனையடுத்து போராடத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

களமிறங்கிய பள்ளி மாணவர்களும் கைது

இதே போன்று ஓண்டிபுதூர் பகுதியில் திருச்சி சலையில் இலங்கையில் தனி ஈழத்துக்கு பொது வாக்ககெடுப்பு நடத்த கோரி மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதே போன்று கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பலகலை கழக மாணவர்கள் 25 பேர் ஐந்தாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று கோவை சக்தி சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களும்,இன்போ டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களும் சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோவையில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites



தமிழ்நாட்டில் நடக்கும் போராட்ட செய்திகளை உடனுக்குடன்
லோயலோ கல்லுரி மாணவர்கள் வழங்கி கொண்டு உள்ளனர்

.https://www.facebook.com/tamilnaduhungerstrike

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயல்வதா? மக்கள் புரட்சி வெடிக்கும்! தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

 

ramadoss.jpg

 
 

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குகாலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரிநிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து  பன்னாட்டு போர்க்குற்றவிசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம்அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம்பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி  வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தைநடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன. 

இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்தநடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது. 

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம்புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த  ஐக்கிய நாடுகள் சபையைஇந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். 

இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்குதமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும். 

மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின்  போராட்டத்தால் சிறுவன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்கநினைப்பது  கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்தசிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும்இழந்துவிட்டனர்.

இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்றஉன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தைஉணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்குஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம்மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களைகாட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம்

மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள்புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ப.சிதம்பரத்துக்கு கறுப்புக் கொடி
28721187.jpg
Link to comment
Share on other sites

மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் என்ன செய்யலாம் என்றும் தமிழக உறவுகள் ஆலோசனை கூறிக்கொண்டு செல்கிறார்கள். அதில் ஒன்று இது.

1) ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பத்து மாணவர்களை தயார் செய்து அந்தந்த கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரியை திறக்க சொல்லி e-mail அனுப்புங்கள், Cc இல் அதன் பல்கலைகழகத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.

2) குறைந்தது 10 தந்தி கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்புங்கள்.

3) மேற்கூறிய இரண்டின் நகலையும் வைத்து கல்லூரியை திறக்க சொல்லி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை முறையிடுங்கள்.

4) உங்களின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் எங்கோ பதிவு செய்யப்படலாம் கவனம். உங்களுக்கு வரும் எந்த தொலைபேசி அழைப்பையும் பதிவு செய்து வைப்பது நலம்.

4) நீங்கள் போராடும் ஒவ்வொரு இடத்திலும் ரகசிய camera இருக்கலாம். உங்கள் camera வை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருங்கள், முடிந்தால் பதிவு செய்துகொண்டே இருங்கள்.

வழக்கறிஞர்களுடன் கலந்து ஆவன செய்யுங்கள்.
 

- முகநூல் -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.