Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

ஹைதராபத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தின் சுவொரொட்டி

 

72351_463067827100509_1397535433_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

- மன்னிக்கவும், ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது. :D -

Link to comment
Share on other sites

எமது விடுதலைக்கான புதியபாதை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வழிபோராடும் எமது தமிழக உறவுகளுக்கு முற்றுமுழுதான ஆதரவை தெரிவித்துகொள்கிறேன்.
 
    அந்த போராட்டங்களின் உண்மை நிலையை உடனுக்குடன் தெரிவிக்கும் யாழ்  உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Link to comment
Share on other sites

தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் கையெழுத்திட வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice

 

Loyolahungerstrike

-முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

 

தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சோம் பிரகாஷ் MLA சென்னை வருகிறார்.


மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சென்னை வருகிறார்.

Link to comment
Share on other sites

ஜெனிவாவில்..
இலங்கையில் தனி ஈழத்திற்க்கான கோரிக்கையை இந்தியா வைக்கவில்லை எனில் இனி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பணியில் தொடர கூடாது. மாணவர் மத்தியில் குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம்.

இதை தவிர அவர்கள் எதையும் செய்து புடுங்க வேண்டாம். தனி ஈழ கோரிக்கை கேட்டு போராடுங்கள் இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமை படுத்தப்படுவீர்கள்
.

 

-முகநூல் -



இன்றைய தினம் குறிப்பிடும் படியாக வலிமை பெற்ற களங்கள் :


பாளை போராட்டம்.
கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி போராட்டம்.
கோவை மற்றும் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் போராட்டம்.
நெய்வேலி முன்னாள் மாணவர்கள் போராட்டம்.
சென்னை சட்ட கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் போராட்டம்.
விருத்தாசலம் போராட்டம்.
மதுரை போராட்டம்.
ரயில் மறியல்.
தஞ்சை பெரியகோவில் போராட்டம்.
ப சிதம்பரத்துக்கு கருப்பு கொடி போராட்டம்.
பெப்சி ஆதரவு.
பொறியியல் கல்லூரிகள் போராட்டத்தில் குதிப்பு.
வழக்கறிஞர்கள் களத்தில் குதிப்பு.
கோயம்பேடு சந்தை ஊழியர்கள் ஆதரவு.
பெங்களூரு போராட்டம் முயற்சி.

 

-முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

விற்கு மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் திருப்பிகடும் எத்ரிப்பை திர்ப்பை தெரிவித்த அனுப்பிய பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார்.

பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம் பிரகாஷ் சிங்(38), முன்னாள் காவல்துறை அதிகாரியான இவரது முக்கிய குறிக்கோளே லஞ்ச ஒழிப்பு தான். ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமையை அறிந்த அவர், ராஜபக்ச வருகையை கண்டித்தார் 

சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை.

தமிழர்களின் உரிமை களை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக் கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ பக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்த கயா. சாம்ராட் அசோகர் தனது ஆயு தத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதற்கு இந்த இடத்திலிருந்து தான் பிரசாரம் தொடங்கினார்.

இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. என்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்

Link to comment
Share on other sites

அகிம்சை வழி அரசுக்கு பிடிக்கவில்லை போலும். ஒடுக்க நினைக்கிறார்கள். நாளை மட்டுமே அவகாசம். போராட்ட உத்தி மாறப்போகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தினம் கோவை மாணவர்கள் செய்த மாற்றத்தை தான் தமிழகம் எதிர்பாக்கிறது ! வெறும் உண்ணா நிலை போராட்டம் நமக்கு வலிமை சேர்க்காது ! கூடுவோம் ஒன்றாய் ! காட்டுவோம் நம் வலிமையை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காரைக்குடியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் நால்வர் சற்று முன்பு கைது - போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவனத்திற்கு!!! பெங்களூரில் போராட்டம்.

"தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்.

Place: Bangalore Town Hall
Time: 9 AM

தொடர்புக்கு,

பாலாஜி முருகன்: + 91-9986840809
தோழர் ஜகன்மணி : - +91-9035216094
தோழர் அருண் : +91-9620225885

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

அன்று வெறும் 8 கைகள் தானே அடக்கி விடுவோம் என்று நினைத்தாய்.
இன்று 8 ஆயிரம் கைகள்.
நாளை பல லட்சம் கைகள்.
மாணவர்கள் மனது வைத்தால் பல கோடி கைகள் துணை நிற்கும்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!!

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54142224.jpg
 
 

 

தோழர்களே !!! அடுத்த தலைமுறை வந்துவிட்டது நமோடு போராட... வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்று நம்புவோம்... ஓசூரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மாணவர்கள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில்... நமது "தன்மானம் கலைகளத்தின்" மாணவனான கிட்டு என்கிற தமிழ்மாறன், 7 வகுப்பு மாணவன் வந்து உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து உள்ளன்... தொடர்ந்து உன்னநிலையில் இருபதாக கூரிக்கொண்டிருக்கிறான் நாங்கள் அவனை அவன் நலம் கருதி அவன் உண்ணாநிலையில் இருக்க கூடாது என்று கேட்டுகொண்டோம் அவன் நானும் தமிழன் நான் இருப்பேன் என்று கூறி அமர்ந்திருந்தான்...பின் நங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொண்டதால் அவன் போரட்ட கூடத்தில் ஆதரவு மட்டும் தெரிவித்து சென்றான்... போராட களத்துக்கு வர பயப்படும் அணைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிலடி கொடுத்து நம்பிக்கை வரவைதுல்லான்...!!! உதவாது இனி ஒரு தாமதம் உடனே எழு தமிழா !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே எல்லா யாழ் உறவுகளுக்கும் முக புத்தகம் இருக்கும் என்று தெரிய வில்லை...முக புத்தகம் இல்லாத ஆக்கல்...யாழில் வந்து பார்க்க சுகமாய் இருக்கும் எல்லோ..நான் அந்த லிங்சில like பண்ணிட்டன் மூன்று நாளுக்கு முதல் நண்பர்களுக்கு அறிய குடுத்து இருந்தேன்

நன்றி

இந்த திரியில் ஆரம்பத்தில் இருந்து கருத்து எழுதின ஆக்களின் கருத்தை வாசிச்ச தெரியும்....!

Link to comment
Share on other sites

தவறாக கேட்டு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
fghgfhfhgfh.jpg
Link to comment
Share on other sites

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

 

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்ளி என்னவோ நான் அளித்த பதில் வேர...சரி அடுத்த‌ முறை போடுறன்.... :unsure:

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி துளசி அக்கா

Link to comment
Share on other sites

சென்னை-புதுகோட்டை-திருச்சி -திருநெல்வேலி-செங்கல்பட்டு-மதுரை-கோவை-திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாணவர் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர இயலாத மற்ற மாவட்ட தோழர்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டது..

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் போராட்டம் முனை மழுங்காது நடக்கும்!!

 

480457_447393375336565_1009279116_n.jpg

 

530491_447394602003109_363233687_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

பழனி சுப்ரமணியா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனித்தமிழீழம் வேண்டியும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியும், தமிழர் பகுதியிலிருந்து சிங்கள படைகளை விலக்க கோரியும், பூந்தமல்லி செங்கல்பட்டு அகதிமுகாமை மூட கோரியும் பழனியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் அதன் பின் தபால் தந்தி நிலையத்தை முற்றுகையிட்டும் உள்நுழைந்து பூட்டியும் ராஜபக்ஸ, சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தங்கள் போராட்டத்தை பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்லும் அவர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவிப்போம்.

தொடர்புகளுக்கு: தமிழ்ச்செல்வன்- 8940254065

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

நாமக்கலில் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் 9688818828

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம்: மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இந்தியாவை தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி எண்ணூர் அசோக்லேலண்டு வாயிலில் நாளை-(மார்ச்-17) தொழிலாளர் உண்ணாவிரதம்.

இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா.மாநாட்டில் இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், சர்வதேச சுதந்திர விசாரணைக்கு வழிவகுக்கக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் - அசோக் லேலண்டு தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அசோக் லேலண்டு தமிழின உணர்வாளர்கள் இயக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

எண்ணூர் அசோக்லேலண்டு பிரதான வாயிலில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை காலையில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தொடங்கிவைக்கிறார்.

முற்பகல் 11.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வாயில் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரா.வந்தியத்தேவன் தலைமை வகிக்கிறார்.

தொழில் நகரமான வடசென்னையில் அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மற்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி... வணக்கம்!

ஒருங்கிணைப்புக் குழுவுக்காக,
இரா.பழனி (எ) வந்தியத்தேவன்.
அலைபேசி: 98400 53710, 98408 35458.

- முகநூல் -

Link to comment
Share on other sites

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

 

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்காக இப்போராட்டம் நடத்தபடுவதாகவும் இப்போராட்டத்தின் ஒருங்கினைப்பாளர் வெற்றிவேல் கூறினார்.


இது தொடர்பாக மத்திய,மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் அரசின் அலச்சியபோக்கு நீடித்தால் எங்கள் போராட்டம் தொடர் உண்ணாவிரதம் போராட்டமாக மாறிவிடும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கே சித்தரவதை செய்யப்பட்டு தினமும் கொல்லபடுகின்றனர். அவர்களை மீட்க நாங்கள் உயிர் உள்ளவரை போராடுவோம் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் இவ்வாறு வெற்றிசெல்வன் கூறினார்.

 

இப்போராட்டத்தில் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.  இதனால் போக்குவரத்துக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரி கேட்டனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.


 முகநூல் -

Link to comment
Share on other sites

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமான்.

 

http://www.youtube.com/watch?v=LNuJlU1jMdk

Link to comment
Share on other sites

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

Link to comment
Share on other sites

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

உண்மையில் அவர்கள் கோருவது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்று இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் மற்றும் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரும்படி...

 

அவர்கள் கோரிக்கைகளில் சில இந்த இணைப்பில் உள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=875618

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி.

734438_272021656265916_1489426465_n.jpg

 

 - முகநூல் -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.