Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் 'போர்குற்றமல்ல இனப்படுகொலையே.. இலங்கை அல்ல தனி தமிழீழமே ' என்ற மாபெரும் புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்..

இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

இவன்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..

 

(முகநூல்: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

தமிழ் ஈழத்திற்காக மதுரை தானி (ஆட்டோ) ஓட்டுனர்கள் போராட்டம்

இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் இந்த பிரச்சினையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர். மதுரையில் இன்று ஆட்டோ டிரைவர்களும் இதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

529611_438683729551547_2138317559_n.jpg

 

306067_438683726218214_78939212_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

இலங்கை வீரர்களின் படத்தை கூட விட்டு வைக்கவில்லை எங்கள் தமிழக உறவுகள். தமிழக உறவுகளே நன்றி... :)

 

575661_430887990335277_1391959571_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

புலம்பெயர் உறவுகளே கவனம். ஒருசிலர் தம்மை தமிழக உறவுகளாக கூறிக்கொண்டு பொது முகநூல் தளங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கெதிராக படு கேவலமாக கருத்தெழுதி வருகிறார்கள். அதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தமிழக உறவுகளுக்கெதிராக கருத்து வைத்து விடாதீர்கள். இது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களை பிரிக்க சிலர் மேற்கொள்ளும் முயற்சி. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

551302_601838023161560_1504226421_n.jpg



'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை ..

Date: 04.04.2013
Place: Murasoli Maran Towers
73, MRC Nagar Main Road,
MRC Nagar,
Chennai - 600 028

 

~~~~~~~~~~~

 

Loyolahungerstrike-முகநூல்-

Link to comment
Share on other sites

இணையதள நண்பர்கள் இங்கே சென்று தமிழின விரோதி சன் குழுமத்தை கண்டிக்கலாம்

facebook
https://www.facebook.com/sunrisershyderabad

twitter
https://twitter.com/SunRisers

(முகநூல்)

Link to comment
Share on other sites

தமிழக மாணவர் போராட்டம் மற்றும் ஐநா மனித உரிமைச்ச்சபை தீர்மானம் குறித்து உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வழங்கிய நேர்காணல்.

 

Link to comment
Share on other sites

மார்ச் 30 ம் நாள், ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டியும் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உலகசமூகத்தை வலியுறுத்தியும் வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்திய உண்ணாநிலை போராட்டம் பற்றிய தகவல்களையும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் திருநங்கை ஐஸ்வர்யா.

 

Link to comment
Share on other sites

தமிழக மாணவர் எழுச்சி பற்றி தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் பிரதிநிதி ஒருவருடனான செவ்வி.

 

Link to comment
Share on other sites

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்காகப் போராடும் என் இரத்தச் சொந்தங்களான மாணவச் செல்வங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

சினிமா, மட்டை விளையாட்டு, பேருந்து நாள் கொண்டாட்டம், முகநூல் இவற்றில் தொலைந்து போனவர்கள் தமிழக மாணவர்கள் என்கிற தப்பிதமான கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டது உங்கள் உணர்வுப் போராட்டம்.

அந்த எழுச்சி எப்படி சாத்தியப்பட்டது என்பது தெரியுமா..? நான் சொல்லவா?

 

ஈழம் குறித்த சரியான புரிதல் உலகில் யாருக்கும் இல்லை என்பேன் நான்.


ஈழப் பிரச்னையில் உலகத்துக்கான பார்வைகள் மாற வேண்டும்.

 

உதாரணத்துக்கு, அங்கு நடந்த விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது மாற வேண்டும்.

இன்னும் பல விடயங்களில் உலகின் பார்வை ஆரோக்கியமானதாக எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

இங்கு தமிழ்நாடு என்று வாய் நிறையச் சொல்கிறீர்கள். ஆனால், அங்கு மட்டும் 'தமிழ் ஈழம்’ என்று மனமுவந்து சொல்ல என்ன தயக்கம்?


இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? சொல்கிறேன், கேளுங்கள்.

 

பலர் காஷ்மீர் பிரச்னையுடன் ஈழப் பிரச்னையை ஒப்பிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா அது?


காஷ்மீரில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஆக முடியும். ஆனால், தமிழர் ஒருவர் இலங்கை அதிபர் ஆக முடியுமா?

காஷ்மீரிலும் பிரச்சினைகள் இருக்கின்றன... மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... நான் இல்லை என்று சொல்லவில்லை.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தவில்லை.

 

ஆனால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா?


நண்பனின் நண்பன் நமக்கு நண்பனே. ஆனால், எதிரியின் நண்பன்? நட்பு நாடு என்று நீங்கள் அழைக்கும் இலங்கை உங்கள் எதிரிகளுடன் எப்படியெல்லாம் இறுக்கமாகக் கைகோத்துள்ளது தெரியுமா?

 

ஆனால், என்றைக்குமே இந்தியாவை எதிரியாகப் பார்க்காத... உளமார்ந்த நண்பனாக மட்டுமே பார்த்துப் பழகிப்போன நாங்கள் என்றேனும் பாகிஸ்தான் போன்ற இந்திய விரோத சக்திகளோடு கைகோத்து இருக்கிறோமா?


இன்னும் விவரமாகச் சொல்கிறேன். உண்மையை உணருங்கள்!

 

ஒரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடக் கூடாது’ என்கிறார்கள். இறையாண்மையின் உண்மையான பொருள் என்னவென்று தெரியுமா?


உயிரைத் தவிர, அனைத்தையும் இழந்து நிற்கும் பாவப்பட்ட எம் ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்களை ஒதுக்குவீர்கள்தானே... எம் சனங்களின் நிதர்சனம் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்தானே...

4.4.2013 முதல் 10.4.2013 வரை 044 - 66802911*எண்ணில் என்னை அழையுங்கள். உண்மை பேசுவோம்.


அன்புடன்
காசி ஆனந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை வணங்குகிறேன் உங்களை பார்த்து....சகோதரர்களே 

இன்னும் தொலைவில் இல்லை எனது தமிழீழம் 

 

Link to comment
Share on other sites

பெல்ஜியத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ...

 

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

526910_602194139792615_1165616149_n.jpg

 

Loyolahungerstrike-முகநூல்-

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக பெல்ஜியமில் நடந்த ஆர்ப்பாட்டம்.

 

03-Apr-2004 புதன் அன்று மதியம் Antwerp Central Station முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து அதற்கான அனுமதியை பெற்று கொடுத்தவர் என் அருமை பெல்ஜியம் நண்பர் Geert. இதற்கு முன்னால் ஒருமுறை கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்பாட்டத்தில் இவருடன் கலந்துகொண்டேன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல நேரங்களில் உதவியாக இருப்பவர்.

தனி தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்ற லட்சியத்துடன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பலர் கூடியிருந்தனர். என்னுடன் தமிழ் நாட்டை சேர்ந்த கார்த்திக் ராமன் கலந்து கொண்டார்.
We want - தமிழ் ஈழம், Our leader - பிரபாகரன், War Criminal - Srilanka President Rajabaksha, We Support - தமிழ் students போன்ற வாசகங்களை விண்ணை முட்டும் அளவிற்கு உரைத்து கொண்டிருதோம். நிச்சியமாக அங்கே கூடியிருந்த பெல்ஜியம் மக்கள் ஒரு நொடியாவது தமிழ் ஈழ மக்களின் வலியை புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களாகவே முன்வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.

புலன்பெயர்ந்த தமிழ் ஈழ மக்கள் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தங்கள் நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக சொன்னார்கள். ஒரு பெரியவர் எங்கள் கையை பிடித்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு என் நன்றி என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். பல நாட்களாக வறண்டு போயிருந்த என் கண்களிலும் கண்ணீர். மாணவர்கள் மட்டும் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்று கூறினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று சொன்னார். ஈழம் கிடைப்பதில் என் சுயநலம் அடங்கிருப்பதாக சொன்னேன். என்னவென்று கேட்டார். ஈழம் கிடைத்தவுடன் முதல் ஆளாக நான் immigration apply செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அவர், தமிழ் நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை என்று சொன்னார்.

சில நாட்கள் முன் புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னது "புலன்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கே நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள். இனிமேல் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள்". இது முற்றிலும் பொய். நான் பேசிகொண்டிருந்த ஒவ்வொருவருடைய பேச்சிலும் மூச்சிலும் தமிழ் ஈழம் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் ஈழம் மலராதா என்று ஏங்குவதாக சொன்னார்கள். என் இனிய நண்பர் முருகதாஸ், 20 வருடங்களுக்கு மேலாக பெல்ஜியமில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவரிடம் proper document இல்லை என்று சொல்லி அவரை arrest செய்து ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்த முயற்சி செய்தது பெல்ஜியம் ஆரசு. Geert அட்வைஸ் படி அவர் document submit செய்துள்ளார். இதனால் இன்னும் சில மாதங்களில் அவர்க்கு Citizenship கிடைக்கும். 20 வருடங்களாக இருந்த இவர் இதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அவருடைய ஆசை என்றாவது ஒரு நாள் ஈழம் அமையும் என்று ஏங்கி கொண்டிருக்கிறது.

ஆர்பாட்டம் முடிந்தவுடன் எங்களில் ஒரு சிலர் முருகதாசன் வீட்டிற்கு சென்று அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு சரியான மனிதர்களோடு அரசியல் பேச முடிந்தது. அவர்களுடைய பேச்சில் இருந்து கலைஞர்(TESO ) மேல் அவர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று புரிந்தது. தமிழ் ஈழ மக்களோடு பெசிகொண்டிருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை, train miss செய்துட்டேன் . மணி என்ற நண்பர் என்னை Leuven வரை வந்து ட்ரோப் செய்தார். ஒரு மணி நேர பயணத்தில், பல போராட்ட கதைகளை என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். முன்பு திரு.வை.கோ பெல்ஜியம் வரும் பொது இவருடைய காரில், நான் அமர்ந்துள்ள இருகையில் தான் பயணித்தாராம். சீமான் மீது மிகுந்த மரியாதையை வைத்துள்ளார். சொந்தங்களை இழந்த மக்களிடமிருந்து எனக்கு புது சொந்தம் கிடைத்ததாக நினைகிறேன்.

 

Shenthilkumar Subburam


(முகநூல்)

Link to comment
Share on other sites

ஆந்திரா ஜோதி என்ற தெலுங்கு பத்திரிகையில் 02.04.2013 அன்று வந்துள்ள செய்தி..

 

 

Tamil Nadu students's Uprising!! - ANDRA JYOTHY

 

531860_455016854578233_979321607_n.jpg

 

 

 

 

Evils of Lanka!! - ANDHRA JYOTHY

 

64468_455016007911651_619737275_n.jpg

 

 

733910_455016234578295_1812493799_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

வியாழன், 4 ஏப்ரல் 2013

 

சங்கக்காராவை நீக்கு: சன் டிவி அலுவலகம் முற்றுகை! மாணவர்கள் கைது!

 

img1130404047_1_1.jpg



சென்னை சன் டிவி முன்பு இன்று காலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் ரைசர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சன் டிவி குழுமம் அதில் சங்கக்காரா என்ற சிங்களவரை கேப்டனாக நியமித்துள்ளது உடனே அவரை நீக்குக என்று மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்காரா தவிர திசரா பிரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் இடம்பெற்றுள்ளார்.

இருவரையும் அணியிலிருந்து நீக்கக்கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் என்ற மாணவர் தலைமையில் சன் டிவி அலுவலகம் முன்பு திரண்டனர்.

இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு அஞ்சி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சன் டிவி அலுவலகத்திற்குள் மாணவர்கள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றனர்.

இந்த போராட்டம் குறித்து மாணவர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:

சன் டிவிக்கு எதிராக திடீரென இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏற்கனவெ கலாநிதிமாறனுக்கு சங்கக்காராவை நீக்கக்கோரி கடிதம் எழுதினோம், மின்னஞ்சலும் அனுப்பினோம். பத்திரிக்கையாளர்கள் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் கலாநிதிமாறனிடமிருந்து எந்த வித பதிலுமில்லை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார் கருணாநிதி ஆனால் பேரனின் அணியில், சன்ரைசர்ஸ் அணியில் சிங்கள வீரர்கள் இடம்பெற்றிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் உணர்வைக் காட்டிலும் கருணாநிதிக்கு வியாபார நோக்கம்தான் பெரிதாகிவிட்டது. என்று கூறியுள்ளார் மாணவர் பிரபாகர்ன்.

இந்த ஆர்பாட்டம் காரணமாக சன் டிவி நிறுவனம் அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/04/1130404047_1.htm

Link to comment
Share on other sites

தமிழீழ

விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக வருகின்ற

08.04.2013, திங்கள் கிழமை மாலை 5.00 அளவில் விருத்தாசலம் வானொலி திடலில்

மாணவர்கள் பங்கேற்கும்

------ "மாபெரும் பொதுக்கூட்டம் " , --------

வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான் ,

நமது ஈழ உறவுகளை காப்பாற்ற அணி திரள்வீர்!

தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி .

தொடர்பிற்கு

மாறன் : 99522 24112

பிரவின் : 95000 78349

533848_602604036418292_1325055476_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

லண்டனில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

 

644176_557048851002034_460089614_n.jpg

 

557865_557048857668700_1044956916_n.jpg

 

483860_557053417668244_1031480783_n.jpg

 

529649_557083917665194_406867361_n.jpg

 

533428_557048827668703_86400922_n.jpg

 

155770_557083814331871_1983164489_n.jpg

 

72624_557083827665203_269291093_n.jpg

 

480786_557048871002032_1064693081_n.jpg

 

 

7573_557083834331869_1048290938_n.jpg

 

64806_557083880998531_1029482505_n.jpg

 

164628_557083890998530_1334611060_n.jpg

 

561303_557083904331862_480797711_n.jpg

 

32608_557083934331859_2015290866_n.jpg

 

546104_557083940998525_1516478645_n.jpg

 

(முகநூல்)



இலங்கையில் நடந்தது மிகப் பெரிய திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்த பாதகனை உலக நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும். நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப் போராட வேண்டும் என லண்டனில் பாரதிராஜா முழக்கம்.

(முகநூல்)

Link to comment
Share on other sites

மேலும் சில லண்டன் போராட்ட படங்கள்.

 

IMG_1106.jpg

 

IMG_1023.jpg

 

IMG_1042.jpg

 

Untitled.jpg

 

IMG_1087.jpg

 

IMG_1073.JPG

 

IMG_1098.JPG

 

IMG_1105.JPG

 

http://www.vivasaayi.com/2013/04/video-photo.html


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
நோர்வே மக்கள் அவை , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாகவும் , தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்திய அரசு மதித்து அதை நடைமுறைப்படுத்த கோரியும் இன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இந்திய தூதரகத்தின் முன்னர் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வழக்கம் போல இந்திய தூதரக ஜனநாயகப் பண்பின்படி இந்தியத் தூதரகம் தமிழர்களின் கோரிக்கையை நேரடியாக வாங்க மறுத்த பின்னர் தமிழர்களின் கோரிக்கைகள் தூதரகத்தின் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டன.

நீதி கிடைக்கும் வரை தூங்க மாட்டோம்.
 

374423_602661953079167_1090594924_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

Kollywood gathers at T Nagar

 

Apr 02, 2013

 

vikram-photos-pictures-stills.jpg

As planned, the K-Town actors staged a hunger strike today, 2nd April, against the Sri Lankan Government, at the Nadigar Sangam office, T Nagar. The protest was attended by industry biggies including, Rajinikanth, Kamal Haasan, Ajith, Suriya, Karthi, Dhanush, Simbu, Vikram, Arjun, Arya, Vishal, Jiiva, Bharath, Jayam Ravi, Srikanth, Ameer, Sathyaraj, Sarath Kumar, Vijay Kumar, Arun Vijay, Sibi Raj, Nasser, Siva Kumar, Udhayanidhi Stalin, Vijay Sethupathy, Premgi, Powerstar Srinivasan, Siva Karthikeyan, Vijay Vasanth, Ashwin K and many others.

Among the ladies were Radhikaa Sarath Kumar, Trisha, Lakshmi Rai, Oorvasi, Radha, Dhansikaa, Monica, Namitha, Ramya Krishnan, Lakshmy Ramakrishnan, Sonia Agarwal and Kasthuri.

Kamal Haasan arrived only in the evening, supposedly due to his unnavoidable commitments. Vijay on the other hand couldnt attend the protest due to his Australian schedule for Thalaivaa. However, he expressed his support for the protest through a letter, which Sarath Kumar read out in public during the demonstration.
 

http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/kollywood-gathers-at-t-nagar-ajith-rajinikanth-02-04-13.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.
    • ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.