Jump to content

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

 

 

நவஜோதி ஜோகரட்னம் ,லண்டன்

 

navajothy_baylon_4.jpg

 

“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.


1923 இல் மங்களம்மாள் ஆரம்பித்த ‘தமிழ் மகள்’ என்ற பத்திரிகையில் இருந்து பெண்களின் அரசியல் குறித்த எழுத்துக்கள் அரும்பத் தொடங்கின. இதே போன்று மலையகத்திலும் மீனாட்சியம்மாள், கோகிலம் சுப்பையா ஆகியோர் மலையக மக்களின் அரசியல் குறித்துப் போராடிய பெண்மணிகளாவார். எனினும் எண்பதுகளுக்குப்; பிறகு ஈழத்துப் பெண்களின் எழுத்துக்கள் புதிய உத்வேகத்தோடு  இலக்கியப் பரப்பில் தடம் பதிக்கத் தொடங்கின.


இந்த ஆய்வு இங்கிலாந்தில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களைப் பற்றியதாகும். சில பெண் எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்வது சிரமமாக இருந்திருக்கிறது. மிகச் சில பெண் எழுத்தாளர்களே நான் தொடர்பு கொண்டபோது உற்சாகத்தோடு தமது விபரங்களைத் தந்துதவினார்கள். இதில் பெருமளவில் அனைத்துப் பெண் எழுத்தாளர்களையும் இக்கட்டுரையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய கவனிப்புக்குள் வராத எழுத்தாளர்கள் ஓரிருவர் தவற விடப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். பவானி ஆழ்வாப்பிள்ளை முதல் மைத்ரேயி ராஜேஸ்குமார் வரை 31 பெண்மணிகள் இவ்வாய்வில்அடங்குகின்றனர்.


பவானி ஆழ்வாப்பிள்ளை


‘பவானியின் சிறுகதைகளைத் தொகுத்துக் கணித்தால் அவற்றில் இழையோடும் முக்கியமான கருத்தோட்டம் சமுதாய அவலங்களும், அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகளும் எப்படி ஆணையும் பெண்ணையும் அலைக்கழிக்கின்றன, அவர்கள் எப்படி அவற்றில் பாரிய தாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்பதே! அவர் கதைகூறும் பாணியும், கதை முடிக்கும் பாணியும் கதாபாத்திரங்களை பரிதாபத்திற்கு ஆளாக்கவில்லை. அவர்கள் பண்பாட்டில் இருந்து இறங்கிய நிலையிலும் தங்கள் உரிமைகளைப் பேசுவதுபோலவே அக்கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. முடிவுகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன’ என்று கலாநிதி செல்வி திருச்சந்திரன் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற நூலின் இரண்டாவது பதிப்புரையின் முன்னுரையில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
      
பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி அழ்வாப்பிள்ளை 1960 களிலேயே ஈழத்து வரலாற்றில் பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். கற்பு. ஒழுக்கம் போன்ற கருத்தியல்களை புரட்சிகரமாக அணுகிய பவானி ஆழ்வாப்பிள்ளையின் சிறுகதைகள் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான பவானி ஆழ்வாப்பிள்ளை, தனது எழுத்துக்களை தன்னை அறிதலான சுயநிர்ணயம் என்று கூறுகின்றார். கலைச்செல்வியில் அவர் எழுதிய ‘மன்னிப்பாரா ; என்ற சிறுகதை சர்ச்சைக்குள்ளான பெண்ணியல்வாதக் கதையாகும்.
     
‘மன்னிப்பாரா’ என்ற சிறுகதையில் மூர்த்தி, சுசீலா ஆகியோருக்கிடையிலான காதல் சாதிய ஏற்றத்தாழ்வினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. பேற்றோரின் ஆதங்கத்தை மீற முடியாதவராகின்றார் மூர்த்தி. இதற்கிடையில் சுசீலாவிற்கு வேறொரு இடத்தில் திருமணம் முற்றாகிவிடுகிறது. தனது திருமணத்திற்கு முதல்நாள் சுசீலா மூர்த்தியைத் தேடி அவரது வீட்டிற்குச் செல்கிறார். ‘காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில் இந்த என் முடிவு என் கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானது அல்ல. உங்கள் உரிமையை இப்பொழுதே எற்றுக் கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம்’ என்கிறாள் சுசீலா. பழைமைவாதம் வேருன்றிய அக்கால கட்டத்தில் சுசீலாவின் இந்த முடிவு ஈழத்து இலக்கிய உலகில் பெரும் கண்டனத்துக்கு இலக்காகியது. இந்தக் கதாநாயகியின் முடிவை எதிர்த்து கதையை வேறு விதமாக மாற்றி கவிஞர் எஸ்.எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு செந்தாரகை எழுதிய கதையும் ‘மன்னிப்பாரா’ என்ற அதே தலைப்பிலேயே கலைச்செல்வியின் அடுத்த இதழ்களில் வெளியாகின என்று கலாநிதி குணராசா ‘ஈழத்துச் சிறுகதை வரலாறு’ என்ற நூலிலே குறிப்பிடுகின்றார்.


திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்


ஏழாலையைச் சேர்ந்த தனபாக்கியம் குணபாலசிங்கம் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்று, வடமொழியில் பி.ஏ சிறப்புப் பட்டத்தையும், தொல்லியல் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையில் விரிவுரையாளராளராகப் பணியாற்றியவராவார். ஈழத்தின் தொல்லியல் வரலாறு பற்றி குறிப்பிடத்தக்க பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
   
‘பழையகால மனிதன் வாழ்ந்திருந்த களங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்ந்து உண்மைகளைத் துணைகொண்டு வரலாற்றுக்கு முற்பட்டகால மனித வரலாறுகளை மீளவும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுபவர்களே தொல்லியலாளர்கள்’ என்று கூறும் தனபாக்கியம் குணபாலசிங்கம் ஈழத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதிய ‘ இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்’ என்னும் நூல் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நூலாகும். 
   
இதனைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்’ என்ற நூலில் கடற்கோள்களினால்; மூழ்கிப்போன தமிழக வரலாறுகளை தொல்லியல் அகழாய்வுகள், பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழகத்தின் ப10ர்வீக வரலாற்றினை வெளிக்கொண்டு வந்துள்ளார்.  இதனையடுத்து ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றை பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
  
அடுத்ததாக இவர் எழுதி வெளியிட்ட  ‘வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையில் சிங்கள் இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும்’ என்ற நூல் ‘இப்பண்கடுவ’ என்னும் இடத்தில் அகழ்வு செய்யப்பட்ட பெருங்கற்பண்பாட்டுத் தொல்லியல் களங்களிலிருந்து கிடைத்த தடையங்களை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சிறந்த ஆய்வு நூலாகும்.
   
சைவசமய வரலாறுகளையும், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் எளிமைப்படுத்திய வகையில் இவர் எழுதிய ‘சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்’ என்ற நூலும் ‘பின்பற்றப்பட வேண்டிய சைவ தத்துவங்கள்’ என்ற நூலும் ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றைத் தொகுக்கும் சிறந்த முயற்சிகளாகும்
   
அடுத்ததாக ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய இனங்களின் ‘மானிட வரலாறு’ என்ற நூல் தனித்துவமானது. இந்த நூல்; இரண்டு தொகுதிகளாக அமைந்து மூன்று கண்டங்களின் மனிதகுல வரலாற்றை எடுத்து விளக்குகிறது. ‘குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு’ என்ற அவரது மற்றுமொரு நூல் விவிலிய வேதத்தோடு தமிழர்களைத் தொடர்புபடுத்தி ஆராயும் நூலாக முகிழ்த்;துள்ளது. இதைவிட தமிழரின் சமயத் தத்துவக் கோட்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்’ என்னும் நூலும் ‘The stories of Moral Teachings’  என்ற நூலும் முக்கிய நூல்களாகும்.
 
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்


rajeswary_balasubramaniyam.jpg


மட்டக்களப்பில் கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் யாழ்ப்பாணத்தில் தாதிப்படிப்பை மேற்கொண்டிருந்தபோது உடற்கூற்றியல் விரிவுரையாளராக இருந்த எழுத்தாளர் நந்தியின் மீதுள்ள அபிமானத்தால் ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் ஆரம்பத்தில் எழுதிக்கொண்டிருந்தார். செ.யோகநாதன் நடத்திய ‘வசந்தம'  என்ற பத்திரிகையில் வெளியான ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற இவரது சிறுகதை முற்போக்கு வட்டாரத்தில் பாராட்டுப் பெற்ற கதையாகும் .
   
1970 ஆம் ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த ராஜேஸ்பாலாவின் எழுத்துலகப் பயணம் நீண்டதாகும். அலை வெளியீடாக வந்த ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல் அது வெளியான காலத்தில் அரசியல் கவனத்தை ஈர்த்த நாவலாகும். அதன்பின் தேம்ஸ் நதிக்கரையில், தில்லை ஆற்றங்கரை, உலகமெல்லாம் வியாபாரிகள், அவனும் சில வருடங்களும், பனி பெய்யும் இரவுகள், வசந்தம் வந்து போய்விட்டது, நாளைய மனிதர்கள் ஆகிய எட்டு நாவல்களைப் படைத்ததின் மூலம் லண்டனில் மிகப் பெரும் நாவல் ஆசிரியராக அவர் பரிணமித்துள்ளார்.
    
மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறை, லண்டன் மத்தியதர வாழ்க்கை முறையிலும், பிரித்தானிய வாழ்க்கை முறையிலும் தோய்ந்து எழுந்த கதா பாத்திரங்கள் இவரது நாவல்களுக்கு மெருகூட்டுகிறார்கள். லண்டனில் வெளியான லண்டன் முரசு பத்திரிகை இவரது நாவலுக்கு விரிவான களம் அமைத்துக் கொடுத்தது.
   
ஈழத்து ஏடுகளிலும் புலம்பெயர்ந்த சஞ்சிகைகளிலும் நிறையவே எழுதியுள்ள ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் சிறுகதைகள்;  இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம், அரைகுறையடிமைகள், ஏக்கம், நாளைக்கு இன்னொருத்தன், அம்மா என்றொரு பெண் ஆகிய  சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
   
லண்டனில் தொழில்ரீதியான தாதியாக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்ட ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திரைப்படத் துறையிலும் பி. ஏ சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.  ‘Escape of Genocide’ (இன அழிப்பிலிருந்து தப்பி) என்ற இலங்கை இன வன்முறை பற்றிய இவரது விவரணப் திரைப்படம்; குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆனால் திரைப்படத்துறையில் துரதிஷ்டவசமாக காலூன்ற முடியாது போய்விட்டது என்கிறார் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.
   
இதைவிட மருத்துவ மானிடவியல் துறையில் எம்.ஏ பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். லண்டனில் நீண்டகாலமாக குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  ‘உங்கள் உடல் உள பாலியல் நலம்’, ‘தாயும் சேயும்’ என்ற இரு மருத்துவ நூல்களைச் சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த மருத்துவ நூல்களில் இந்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனைவிட ‘தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்’ என்ற இவரது ஆய்வு நூலும் தமிழகத்தில் பாராட்டைப் பெற்ற நூலாகும்.
     
‘சாதிக் கொடுமைகளை எதிர்த்து எழுதுகிறேன், இறக்கும்வரை எழுதுவேன், சுயநலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பிராமணியத்தின் தத்துவங்களை உடைத்து எறியாதவரை எந்த சமூகமும் முன்னேறாது’ என்று துணிச்சலோடு கூறுபவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். அரசியல் அபிப்பிராய பேதங்களால் நடக்கும் உயிர்ப் பலிகள் அநியாயமானவை. இவைகளைக் கண்டிப்பது மனித உரிமைக்காகப் போராடும் பலரின் கடமையாகும் என்று துணிவோடு செயற்படும் எழுத்தாளராக ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திகழ்கிறார். 


திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்


thamilarasii5.jpg


திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஈழத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். ‘சாலினி’ என்ற பெயரில் சிறுவயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் தனது பதினைந்தாவது வயதில் ‘திருவாசகத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஈழத்து அறிஞர்களால் அன்று பாராட்டப்பட்டது. உலகநாடுகளில் வெளிவரும் இதழ்களில் பல புனைபெயர்களில் எழுதிவரும் தமிழரசி சங்கத்தமிழ், ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாயகப் பற்றும், மொழிப்பற்றுமிக்க தமிழ்ப்பண்டிதையான இவர் 2007 இல் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர். கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், பக்திப்பாடல்கள், நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.


சந்திரா இரவீந்திரன்


chandra_ravindran.jpg


இலங்கையின் வடமராட்சி – பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா இரவீந்திரன் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ 1981இல் வெளியான இவரது முதற் சிறுகதையாகும். 1988இல் பருத்தித்துறை –யதார்த்த இலக்கிய வட்டத்தினால் ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெயிட்டவர். இலண்டனில் 2007 ஆம் ஆண்டுவரை ஏழு வருடங்கள் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தவர்.


மாதவி சிவலீலன்


madhavi_sivaleelan5.jpg


யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான மாதவி சிவலீலன் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். முதுகலைமாணிப் பட்டதிற்காகக் ‘கம்பராமாயணக் கதையமைப்பும் கட்டமைப்பும்’ என்னும் ஆய்வேட்டை  யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த பிரபல நாட்டுக்கூத்துக் கலைஞரான பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவரது காலத்து அரசியல் பொருளாதாரம் சமூகம், சமயம் போன்ற அனைத்து விடயங்களையும் கொண்டப hடல்களை ஆக்கியவர். இவர் கூறும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் பொருந்துவதாக உள்ளதே அவரது பாடல்களின் சிறப்பு எனக் கூறும் மாதவி சிவலீலன் ஈழத்தில் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களால் வெளிக்கொணரப்படாது மறைந்திருக்கின்றனர் என்று கூறுகின்றார். அந்நாட்களில்; கிராமங்களில்; இடம்பெறும் நாடக இடைவேளைகளின் போது சமூகச்சுற்றாடலின் பனை போன்ற இயற்கை வளங்களின் நன்மைகள் குறித்தும், சமூகத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வெளிப்படுத்தி சமூகத்தை சிந்திக்க வைத்து நெறிப்படுத்தியவர்களில் முக்கியமாத் திகழ்ந்தவர் பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவர்கள்;. இத்தகைய சமூக அக்கறையோடு; சிறந்த நாடகக் கலைஞராகவும் செயற்பட்டவரை வெளிக்கொண்டுவரும் நோக்கில்தான் அத்தகைய ஒரு ஆய்வு நூலை மேற்கொண்டதாகக் கூறுகின்றார் மாதவி;. 


1957 ஆம் ஆண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் 12 ஆம் திருவிழா பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் குடும்பத்தினரால் பரம்பரையாக இடம்பெறும் திருவிழா. அன்றைய தினம் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை மேடையேற்றினா.;; இவரது மகன் சகடாசுரனாக நடித்தபோது இறக்கும் காட்சியில் உண்மையாகவே இறந்துபோய்விட்டார். இந்த துன்பகரமான நிகழ்வின் பின்னர் கோயில்களில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதை நிறுத்தினார் என்று அவரது மருமகனான சங்கீத பூஷணம் சு.கணபதிப்பிள்ளை கூறியதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார் மாதவி சிவலீலன்.


தற்போது லண்டன் தமிழ் நிலையத்தில்; தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்பவற்றிலும் ஆர்வமுடையவர்.


அங்கயற்கண்ணி


காங்கேசன்துறையைச் சேர்ந்த அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட பெண்மணியாகத் திகழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் நன்கு அறியப்பட்ட  அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலைஞர் மு.கருணாநிதியின் முன்னுரையுடன் வெளியான கவிதைத் தொகுப்பு ஈழத்தின் விடுதலைப் போராட்ட கவிதைகளாக மலர்ந்திருந்தன. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாகச் செயற்பட்டு வந்துள்ளார். 


திருமதி றீற்றா பற்றிமாகரன்   


எழுத்தாளராகவும், ஆசிரியையாகவும், நூலாசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் திருமதி றீற்றா பற்றிமாகரன் 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டவர்.
   
இளங்கலைமாணி(B.A)பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை (BSC> PC Dip (social policy), PG Dip (Housing) பட்டங்களை  ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர்.
   
சன்றைஸ் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக திகழ்ந்த றீற்றா பற்றிமாகரன் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார். ‘நவீன காதல்’ (2011)இ ‘நாடொன்று மீளப்பிறந்தது’ (2012)  போன்ற சிறுகதைகள்  தமிழகத்தின் தினமணியில் வெளியாகின.
 
   1. புதியமுறையில் தமிழ் எழுதுதல் (1992)
   2. சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள் கதைகள் ஒலிநாடா (1996).
   3. பம்பி சிறுவர் வாசிப்பு நூல் (1996)
   4. தமிழ் செய்முறைப் பயிற்சி (1998)
   5. தமிழ் பயிற்சி நூல்  (1999)
   6. இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம்(2005)
   7. இலக்கணத் தொகுப்பு (2008)
   8. சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும் (2011)


   போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர்.


2009இல் இடம்பெற்ற முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாட்டில் ‘தமிழைச் செம்மொழியாக்கலில் தொல்காப்பியத்தின் பங்களிப்பின் சிறப்பு’ பற்றிய ஆய்வு, 2010 இல் இடம்பெற்ற உலகச் செம்மொழி மாநாட்டில் ‘தேச உருவாக்கத்தில் சங்ககாலப் பெண்களின் பங்களிப்பு’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2011இல் செம்மொழி மத்திய ஆய்வு இந்தியத் திணைக்கள சங்கமகளிர் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் ‘சங்க காலச் சமூகத்தில் பெண் மாந்தர்கள் நிலை: தலைவி தோழி செவிலித்தாய்  நற்றாய் பரத்தையர்’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2012இல் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் ‘சங்க இலக்கியங்களில் நேரம் மற்றம் மனஅழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற’ கருத்தரங்கில் ‘சங்க இலக்கியத்தில் மனஅழுத்த முகாமைத்துவம்’ என்னும் ஆய்வுக்கட்டுரை, சிதம்பரத்தில் இடம்பெற்ற 12 ஆவது உலக சைவ மகாநாட்டில் ‘திருமந்திரத்தில் பதிபசுபாசம்’ என்ற ஆய்வுக் கட்டுரை, 2011 இல் 13வது இலண்டன் சைவ மாநாட்டில் ‘பெண்கள் விளையாட்டுக்களில் சைவநெறியும் உலக அமைதியும்’ என்ற ஆய்வும், 2012 இல் பிரித்தானிய திருக்கோயில்கள் ஒன்றிய 14வது மகாநாட்டில் ‘தமிழ் படிப்பித்தலில் சைவஅறிவின் அவசியம்’  போன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
    
யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் பழைய மாணவியான றீற்றா பற்றிமாகரன் விளையாட்டு, நாடகக்கலை, சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் ஆர்வம் உள்ளவர். மாட்டின் டி பொரஸ் ஹொரணை, சென் யோசப் கல்லூரி கொழும்பு போன்றவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய றீற்றா பற்றிமாகரன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகத் தமிழ் உயர்தரத் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பாளராகப் பணியாற்றிய  அனுபவம் கொண்டவர்;.


நிர்மலா ராஜசிங்கம்


nirmala_rajasingam5.jpg


அமெரிக்காவின் 'பொஸ்ரன் வீட்டன்' கல்லூரியில் அரசியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் யாழ் பல்கலைக கழகத்தில்  ஆங்கில போதனாசிரியராகவும் பின்னர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றியவராவார். யாழ்ப்பாணத்திலிந்து வெளியான Saturday Review என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.ராஜசிங்கம் Tennessee Williams எழுதிய The Glass  Menagerie என்ற நாடகத்தை ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற பெயரிலும், ரஷ்ய நாடக ஆசிரியர் Aleksei Arbuzov எழுதிய  Old World என்ற நாடகத்தை ‘பழைய உலகம் புதிய இருவர்’ என்ற தலைப்பிலும், Federico Garcia Lorca எழுதிய The House of Bernarda Alba என்ற நாடகத்தை ‘ஒரு பாலை வீடு’ என்ற பெயரிலும்,Bertolt Brecht எழுதிய The  Exception and the Rule  என்ற நாடகத்தை ‘யுகதர்மம்’  என்ற பெயரிலும் சிறந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்தவராவார்.
    
சிறந்த நடிகையாகவும் திகழ்ந்த இவர் மேற்கத்தைய இசையிலும் தேர்ச்சி மிக்கவர் ஆவார். தமிழகத்திலிருந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய ஹிட்லரும் றிச்சேட் வாக்னரும் (Hitler Richard  Wagner) என்ற கட்டுரைக்கு எதிராக மேற்கத்தைய இசை குறித்து மிக விரிவாக இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை தமிழில் மேற்கத்தைய இசை குறித்து வெளிவந்த ஆழமான கட்டுரையாகும்.
   
மறைந்த சிவரமணியின் கவிதைகளை ஆங்கிலத்தில் அழகான மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான அரசியல் கட்டுரைகளை இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றார்.


அடேல் பாலசிங்கம்


adele_balasingam5.jpg


அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த பெண்மணியாவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் பாலசிங்கம் லண்டனில் வாழ்ந்து பின்னர் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்து தமிழ் சமூகம் குறித்த சிந்தனை கொண்டவராவார். ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’ (women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் தரும் சிறந்த நூலாகும். ‘சுதந்திர வேட்கை’ ( The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட நூலாகும். இருபது ஆண்டுகால தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளாச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்பங்களையும் இந்த நூல் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றது. மிகவும் கொந்தளிப்பான கால கட்டங்களையும் அக்கால கட்டங்களில் கட்விழ்ந்த அவலமான நிகழ்வுகளையும் சுதந்திரம் வேண்டி நிற்கும் போராளிகளினதும், பொதுமக்களினதும் ஆழமான உணர்வலைகளையும் உறுதிப்பாட்டினையும் இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
     
யாழ்ப்பாணத்து சீதண முறைமை பண்டைய தாய்வழிச் சொத்துடமை உறவு முறையுடன் தொடர்பு உடையது என்பதை நிறுவும் ஆய்வாக இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவற்பைப் பெற்றன.


உதயகுமாரி பரமலிங்கம்


nila59.jpg


லண்டன் மிடில்செக்ஸ் பல்கழகத்தின் இளநிலைப்  பொறியியல் பட்டதாரியான உதயகுமாரி பரமலிங்கம், அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைத்து வருகின்றார்.
       1. ‘எந்தையும் யானும்’  (நிலாவினதும் அவரது தந்தை சிவம் பரமலிங்கத்தினதும் கவிதைகள்)         
       2.  ‘எழுத எழுத’  (சக்கர நாற்காலியில் தன் வாழ்வை நகர்த்தும் நிலாவின் சுயசரிதம்)
       3. ‘நிலாவின் இந்திய உலா’ 2003,2009 களில் இந்தியா சென்ற நிலாவின் அனுபவங்களின் கோர்ப்பு.  2010 இல் வெளிவந்த சிறந்த பயணக்கட்டுரைக்கான தமிழியல் விருதினை 2011இல் பெற்றது.
       4. ‘உறைக்கும் உண்மைகள்’ ஐரோப்பிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல். அக்டோபர் 2010 திருநெல்வேலி, தமிழகம்.
        5. ‘அம்மா வாழ்க!’ பலவிதமான ஆக்கங்களின் தொகுப்பு. ஜனவரி 2012, லண்டன்.
நாடகங்கள்  பதினைந்திற்கும் மேற்பட்டவை (யாழ்ப்பாணம்)
இலண்டனில் மூன்று நாடகங்கள்.


திருமதி சீதாதேவி மகாதேவா


mahadeva59.jpg


லண்டன் ஹரோவில் வசித்து வரும் சீதாதேவி 1998இல் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியை. குழந்தை வைத்தியம், மனநோய் சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியச் சேவை போன்ற துறைகளில் பயிற்சி  பெற்று பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவையில் 27 ஆண்டுகளும், இலங்கையில் 12 ஆண்டுகளும் சேவையாற்றியவர்.
பெண்ணுரிமை, இலட்சிய உள்ளம், இலட்சியத் திருமணம், வைத்திய விஞ்ஞான அபிவிருத்தி, நாளாந்த சுகாதாரம், பிரித்தானியா, காந்தி-கியூரி – கண்ணதாசன் - பாரதி போன்ற பல்துறை முன்னோடிப் பெரியார்கள், சைவம், தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை அனுபவங்கள், தனது குடும்பத்தார், அண்மையும் பெண்மையும் போன்ற கருப்பொருட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். பூந்துணர் -2007, பூந்துணர் - 2010, பூந்துணர் - 2012 தொகுப்பு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  
       
மீனாள் நித்தியானந்தன்


meenal_nithiyananthan.jpg


லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான மீனாள் நித்தியானந்தன் அனுபவம் மிகுந்த மருத்துவத் தாதி ஆவார். அரபு நாடுகளில் வேலை செய்த அவரது அனுபவங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. அரபுமொழி, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட அவர் லண்டன் விமர்சனக் கூட்டங்களில் நூல் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ‘தாயும் சேயும்’ மருத்துவ நூல் குறித்த நுட்பமான விமர்சனமொன்றினை இவர் முன்வைத்துள்ளமை விதந்துரைக்கப்பட்டது.


2009 ஆம் ஆண்டு லண்டன் ஏர்ல்ஸ் கோர்ட்;டில் நடைபெற்ற நூல் கண்காட்சியில் நேரில் பார்த்து, இந்திய ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து இவர் எழுதிய ‘லண்டன் நூல் கண்காட்சி சில மனப்பதிவுகள்’ என்ற கட்டுரை மிகச் சிறந்த விவரணக் கட்டுரையாகும்.


புனிதம் பேரின்பராஜா


punitha_p.jpg


இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புனிதா பேரின்பராஜா இலங்கையில் ஆசிரியராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட புனிதா பேரின்பராஜா லண்டன் ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு, ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும், செயலாளராகவும் செயலாற்றியவர்.


1987 ஆம் ஆண்டு ஹரோவில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உதவிய புனிதா பேரின்பராஜா ‘பாடல் மூலம் தமிழ்’ என்ற நூலினை எழுதி வெளியிட்டவர். இதன் பாடற்தொகுப்பு தற்பொழுது இறுவெட்டாக வெளிவந்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துவரும் புனிதா பேரின்பராஜாவின் பாடல்கள் 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் முன்னிலையில் மேடையேற்றம் கண்டது. இவரது சமூக சேவைகள் குறித்து 2004ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் மாநகர மேயரின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு  தமிழ்சமூகத்திற்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்தவர்.


திருமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி


38 வருட கால சங்கீத ஆசிரியத் தொழிலில் ஆனுபவம் கொண்ட ஸ்ரீமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி கர்நாடக சங்கீத பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கமைய வழிகாட்டி நூலை எழுதி 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இசைக் கலையை பயி;ல்வோர் மட்டுமன்றி சாதாரண மக்களும் வாசித்து அறிந்து உணர்ந்திடும் வகையில் எளிமையும் இனிமையும் நிறைத்து இதனை வெளியிட்டுள்ளார்.


சிவகாமி மகாலிங்கம்


1947 இல் கொழும்பில் பிறந்த சிவகாமி மகாலிங்கம் தனது கணவருடன் பிரித்தானியாவுக்கு வந்து பிரித்தானியாவின் வருமான மற்றும் சுங்க திணைக்களத்தில் முழுநேர ஊழியையாகப் பணியாற்றியவர். நமது நாளாந்த சமையல் கலை திறமைகள் புலம்பெயாந்து வாழும் நமது சந்ததியினருக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கில், மேற்கு நாடுகளின் நவீன வாழ்வுக்கேற்ப இசைவு படுத்தப்பட்ட இலங்கை மற்றும் ஆசிய நாட்டு பாரம்பரிய சமையல் என்னும் ஒரு புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். Rice and Curry (Kari) என்ற தலைப்பில் 400 உணவுகள் தயாரிக்கும் முறைகளின் விபரங்கள் அதில் அடங்கியுள்ளன. தொண்டு அடிப்படையில் சமையல் கலை விளக்கங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலமும் பல்வேறு தர்ம ஸ்தாபன நிகழ்வுகளுக்கு உதவி இருப்பதுடன் சுனாமி அனர்த்த நிதி சேகரிப்பு உட்பட பல்வேறு நிதி சேகரிப்பு நிகழ்வுகளுக்கும் இவர் உதவி புரிந்துள்ளார்.



ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
             
ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான தீர்க்கமான கருத்துக்கள் கொண்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 1975 இல் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின்; வர்த்தகவியல் ஆசிரியராகக் கடமை புரிந்தவர். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்துவரும் ராஜேஸ்வரி லண்டனில் விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினை அமைத்து இன்றுவரை திறம்பட நடாத்திவருகின்றார். 1980 முதல் தமிழ் சமுதாயத்தில் அக்கறை கொண்டு பல சமூகவேலைகளை முன்னெடுத்து வருவதோடு அங்குள்ள பல மாணவர்களை தத்தெடுத்து சகல செலவீனங்களையும் தனியொருவராக நின்று செய்து வருகின்றார்.


‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்ற நூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 2012 ஆம் ஆண்டில் ‘மூச்சுப் பயிற்சி’ என்ற இறுவெட்டொன்றை வெளியிட்டுள்ளார். ஆரோக்கியமாக மக்கள் வாழ்வதில் அக்கறை கொண்டு இத்தகைய நூல்களை எழுதி வரும் ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் தற்பொழுது ‘பிரதிபலிப்பு முறை’ என்ற தலைப்பில் நோய்களைத் தடுக்கும் நூல் ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறார். 


சி.மாதுமை 


யாழ்ப்பாணத்தில் பிறந்து திருகோணமலையைப் புகலிடமாகக் கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பொருளியல் முதலாம் தரப்பட்டதாரியான சி. மாதுமை பீ.எஸ்.பீ நிறுவனத்தில் திட்டமிடல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். தனது சிறுவயது முதல் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த மாதுமை பல பரிசில்களைப் பெற்று இளம் எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றிருந்தார். தனது இருபத்தாறாம் வயதில் ‘தூரத்துக் கோடை இடிகள்’ (2005) என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.


மாதுமையிடம் இலக்கிய நடையும்,யாழ்ப்பாணத்துப் பேச்சு நடையை லாவகமாகக் கொண்டு எழுதும்; பாங்கும் நிறையவே காணப்படுவது அவர் திறமைக்குச் சான்று என்று முதுபெரும் விமர்சகரும், எழுத்தாளருமாகிய கே.எஸ்.சிவகுமாரன் கூறுகின்றார்.  முதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்தியதர மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இனவேறுபாடுகளுக்கு அப்பால் மனித உறவுகளின் அந்நியோன்யம், வெளிநாடுகளில் இலங்கைத்தமிழர் சிலரின் கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப் பெண் வயோதிபருக்கும் , அனாதைப் பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கணநேரக் காதலை வெளிப்படுத்த முடியாத அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின் உதாசீனம், குருவை உதாசீனம் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மணவாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி, தோல்விகளுக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப் பலவிதமான நிகழ்;ச்சிகள் அவர் கதைகளின் அடிநாதமாக ஒலிப்பதை இனங்காணமுடிகிறது என்று சிவகுமாரன் கூறுகின்றார்.  


ஷாரிகா திராணகம  


மறைந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் பேராசிரியை டாக்டர் ரஜனி திராணகமவின் மகளான ஷாரிகா சமூக மானிடவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவராவர். ‘ ‘In My Mother’s House – civil war in Srilanka’  என்று பென்சில்லேனியா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கும்  இவரது ஆராய்ச்சி நூல் இலங்கைக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வடபுலத்துத் தமிழர்களதும். முஸ்லிம்களதும் சமூக ஊடாட்டங்களைப்பற்றிய மிக ஆழமான ஆய்வாகப் பரிணமித்திருக்கின்றது.
    
இலங்கையின் தலைசிறந்த சமூகவியல் அறிஞரான கணத் ஒபேசேகர யுத்தத்தின் நிழலில் சாதாரண மக்கள் எத்தகைய உறுதியோடு வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நூல் நேர்த்தியாகச் சித்தரிக்கின்றது என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றும் சாரிகா ‘Traitors'  என்ற மற்றுமொரு ஆங்கில நூலின் இணை ஆசிரியராகத் திகழ்கின்றார்.


சுகதினி பானுகோபன்


யாழ். வலிகாமம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகதினி பானுகோபன் தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். இணுவில் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்த சுகதினி பானுகோபன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ பட்டப்படிப்பை மேற்கொண்டவர். கல்வி பயிலும் காலம் தொட்டே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்ட சுகதினி ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.


மைத்ரேயி ராஜேஸ்குமார்


மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையும், மேற்கத்தைய மெய்யியலையும் சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்றவர் மைத்ரேயி ராஜேஸ்குமார். பென் பவிங் என்ற டச்சுப் பாதிரியார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின் புணர் வாழ்வு செயற்பாட்டாளராகவும், யுத்த காலப் பகுதியில் பணியாற்றிய காலத்தில் எழுதிய டயறிக் குறிப்புகளை அழகாகப் பதித்து வெளியிட்டிருக்கிறார்.
   
Of Tamils and Tigers : A Journey Through Sri Lnaka’s  War  Years  என்ற தலைப்பில் வெளியான இந்த நூல் மைத்ரேயின் ஆங்கிலப் பிரதியைச் செப்பனிடும் நுட்பமான ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த ஆவணத்தை  ஆழந்த ஈடுபாட்டுடனும் பெரும் கரிசனையுடனும் செம்மைப்படுத்தி தந்திருப்பதை பென் பவிங் நன்றியோடு நினைவு கூர்ந்ததை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். ஆங்கில நாடக மேடையேற்றங்கள் குறித்து இவர் எழுதிய விமர்சனங்கள் ஆங்கில ஏடுகளில் வெளியாகியுள்ளன.


பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன்


jeyaalaki_arunagirinathan.jpg


கர்நாடக சங்கீதம் குறித்தும், சைவத் திருமுறைகள் குறித்தும் லண்டனில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜெயஅழகி அருணகிரிநாதன் ‘The Tevaram Contribution to Saivism and Indian Music’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெயிட்டவர். இலங்கையிலும், இந்தியாவிலும் சங்கீத ரத்தினம், சங்கீத வித்துவான் போன்ற பட்டங்களைப் பெற்ற ஜெயஅழகி அருணகிரிநாதன் லண்டன்  SOAS, University of London இல் சங்கீத இசையைக் கற்பித்துவருகின்றார். London Oriental Fine arts Academy  இன் வருடாந்த பரீட்சையின் பிரதம பரீட்சையாளராகவும் கடமைபுரிந்து வருகின்றார்.


பிறேமளாதேவி ரவீந்திரன்


யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பீடத்தில் கற்று ‘நாட்டியக் கலைமணி’ பட்டம் பெற்ற ஸ்ரீமதி பிறேமளாதேவி ரவீந்திரன் நாட்டியக் கலைஞராகவும், ஆசிரியராகவும், பரீட்சகராகவும் இலங்கை , லண்டன், ஐரோப்பிய நாடுகள் என்று பலவிடங்களிலும் பலகால அனுபவம் கொண்டவர். லண்டன் சங்கீத சபையில் பங்கேற்றுப் பணியாற்றிவரும் பிறேமளா இறைய தலைமுறையினருக்கு அறிவு நோக்கமாகவும், பரீட்சை நோக்கமாகவும் ‘பரதநாட்டியம்’ குறித்த நூல்களை இரண்டு பிரிவுகளாக்கி நூல் வடிவில் தந்துள்ளார்.நடனம் பற்றிய இவரது பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
    
நாட்டியம் மட்டுமன்றி கர்நாடக இசை வாய்ப்பாட்டிலும், வடமொழி, இந்துப்பண்பாடு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்ற பிறேமளா ரவீந்திரன் தொடர்ந்தும் கலை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.


சாரங்கா


எழுத்துலகில் சாரங்கா என எல்லோராலும் அறியப்பட்ட குணாளினி தயானந்தன் ஒரு ஆங்கிலப் பட்டதாரியாவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியான சாரங்கா தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். 1992 ஆம் ஆண்டு ஈழநாதத்தில்  ‘ஓன்றரைக்கால்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த சாரங்கா யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘ஸ்கிறிப்ட் நெற்’ திரைக்கதை எழுத்தாளர்  தெரிவில் இறுதிச் சுற்றுவரை தேறிச் சான்றிதழ் பெற்றவர்.


‘தரமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படைத்து ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும். மேல் நாட்டு நல்லறிஞர் இலக்கியங்களை தமிழில் மீள் கூறவேண்டும்’ என்ற இலக்கிய வேட்கையோடு திகழும் சாரங்கா கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு பரிசில்களைத் தட்டிக்கொண்டவர்.


குரும்பசிட்டி சன்மார்க்க சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, வலம்புரி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கவிதைப் போட்டியில் முதற்பரிசு, பாரீசில் தமிழ் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கம். விபவி கவிதைப் போட்டியில் பரிசு. அமுது சிறுகதைப் பரிசு. திருமறைக் கலாமன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு, ‘சுகவாழ்வு நிலையம்@ நடாத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு, சதாவதானி கதிரவேற்பிள்ளை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு. ஞானம் நடாத்திய புதிய பரம்பரை எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுதிப் போட்டியில் அதி சிறந்த படைப்புக்கான ஞானம் விருது (2003)எ;று பல பரிசில்களைப் பெற்றவர்.


ஞானம் வெளியீடாக 2004 இல் வெளியான ‘ஏன் பெண்ணென்று...’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி 2003இல் ஞானம் விருது பெற்ற நூலாகத் தெரிவுசெய்யப்பட்டது.


‘நவீனத்துவ உள்ளியல்புகளை நேர்த்தியாக உள்வாங்கி, இயற் பண்பியலின் நல்ல அம்சங்களையும் மனதிலிருத்தித் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்த ஆக்க ஆளுமையுடைய படைப்பாளி.  அவரது படைப்புக்களில் நாம் வாழும் சமூகத்தின் எரியும் பிரச்சனைகள், சமகாலப் போர்ச்சூழலின் அவலங்கள், பெண்ணியம் ஆகியவற்றை அழகாகக் கையாண்டுள்ளார். விடுதலை வேண்டி நிற்கும் அமுக்கப்பட்ட குரலின் விழிப்பு ஓசை கேட்கிறது. அது இன விடுதலையிலிருந்து பெண் விடுதலை வேண்டி நிற்கும் பெரும் பரப்பில் எதிரொலிக்கின்றது. ஆக்க அமைதியுடன் படைக்கப்பட்ட இவரது ஆக்கங்கள் உருவச் செழுமையுடன் கலா நுட்பமும் கொண்டவையாக அமைந்துள்ளன. உணர்ச்சிகளின் மென்மையான வெளிப்பாடு இவரது கதைகளின் உயிர்நாடி. வாழ்க்கைக் கோலத்தின் முரண்பாடுகளை இவர் அணுகும் முறை அற்புதமானது. சொற்சிக்கனம் கவிதை நடையின் சாயல், குறியீடுகளின் பயன்பாடு, சொல்லாமல் சொல்லும் உத்தி, ஆகிய சிறப்புக்களுடன், சிறுகதைப் பிரக்ஞையுடன் சாரங்காவின் படைப்புக்கள் அமைந்துள்ளன’ என்று புலோலியூர் க. சதாசிவம் அவரது சிறுகதைகள் குறித்துக் கூறுகின்றார்.


தஷந்தி சங்கர்


thasanthi56.jpg


கொழும்பு திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் தனது கல்வியை மேற்கொண்ட தஷந்தி சங்கர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரி ஆவார். தமிழ்மொழியில் மிகுந்த பற்றும் தமிழ் படைப்புக்களை வியந்து ரசிக்கும் மனமும் கொண்ட தஷந்தி சங்கர் இளவயது முதல் கவிதை நிகழ்வுகளில் தன் திறனால் அங்கீகாரம் பெற்றவராவார். இலகு தமிழில் இனிய மொழி நடையில் பலவேறு பார்வைகளில் ஆழமான கருத்துக்களோடு ‘என் விரல்களின் தவம்’ என்னும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை 2008இல் வெளியிட்டவர்.
  
கவிச்சுவை குன்றாமல் புதிய பரிமாணங்களைப் புகுத்தி, கவிதைகளில் புதுமை படைக்கும் முயற்சியில் இவர் தொடர்ந்தும் தனது தமிழ்ப் பணியை ஆற்றி வருகின்றார்.


ரோகினி சிவபாலன்  


தொலைக்காட்சி நாடகமான ‘சித்திரா’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமான ரோகினி சிவபாலன் அந்நாடகத்தின் சிறந்த நடிகையாகப் பேசப்பட்டவர். சமய யாத்திரைகளை மேற்கொண்டு ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ , காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர். தொடர்ந்தும் சமய யாத்திரைகளை மேற்கொள்வதிலும், சமய நூல்களை எழுதுவதிலும் முனைப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.


பிறேமலதா பஞ்சாட்சரம்


லண்டனில் ஹரோவில் வாழ்ந்துவரும் பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழத்தின் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பதியில் அமைந்த சப்பச்சிமாவடி சாவகச்சேரி என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.
  
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்ட பிறேமலதா லண்டனில் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். புதுக்கவிதைகளை எழுதுவதில் நிறைந்த ஆர்வம் கொண்ட பிறேமலதா ‘தாய்மேல் ஆணை’ என்னும் கவிதைத் தொகுப்பை 2004ம் ஆண்டில் வெளியிட்டவர்.


நிதர்சனா ஜெகநாதன்


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நிதர்சனா ஜெகநாதன் 2000ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். ‘லண்டன் தமிழ் நிலையத்தின்’ மாணவியான நிதர்சனாவின் இளமனதில் தாய்நாட்டு நினைவுகளும் அன்றைய வாழ்வும் நெஞ்சில் உதிர்த்தபோது கவிதை மழையாகி நெஞ்சை நனைத்தது என்கின்றார். லண்டன் தமிழ் நிலையத்தின் அதிபராகச் செயற்பட்ட கலாநிதி நித்தியானந்தன் அவர்களால் ‘இளம் நினைவுகள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2004 ல் வெளியிடப்பட்டது.


சமிஸ்ரா சிவக்குமார்


லண்டன் கிறீன்விச் பல்கலைக்கழகத்தின் Business  Administration  துறைப் பட்டதாரியான சமிஸ்ரா சிவக்குமார் ‘லண்டன் ஸ்ரீ மீனாட்சி நடனப் பள்ளியில்’ ஸ்ரீமதி சாந்தா அன்னபபூரணி அவர்களிடம் பரதநாட்டியக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டுகொண்டவர். ஸ்ரீ பிரகாஷ் ஜலகுடி, சித்ரா விஸ்வேஸ்வரன் போன்ற பிரபல நாட்டிய ஆசிரியர்களிடம் மேலும் பயின்று நாட்டியத்தின் நுணுக்கங்களைப் புடம்போட்ட சமிஸ்ரா சிவக்குமார் மிருதங்க மேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் நட்டுவாங்கத்தைக் கற்றுக்கொண்டவர். 2012 ஆம் ஆண்டில் ‘நாட்டிய அலங்காரம்’ என்ற நாட்டிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். பந்த நல்லூர் பாணியில் தனது நாட்டிய வெளிப்பாடுகளை மேற்கொண்ட சமிஸ்ரா சிவக்குமார் லண்டன் மேடைகளில் தனது நாட்டியத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.


ஜெயந்தி யோகராஜா


jeyanthi_n.jpg


பரதநாட்டியக் கலையை இலங்கையில் புகழ்பெற்ற ஸ்ரீமதி லிலா நாராயணனிடமும், பின் கலாஷேத்திரா, அடையாறு லட்சுமணனிடமும் கற்றுத் தேறிய ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா 1982 ம் ஆண்டு அனைத்து இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தனிநடனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவராவார். ‘பரத இலக்கணம்’ , ‘நாட்டிய விலாசம்’ ஆகிய இரு நாட்டிய நுணுக்கங்கள் பற்றிய நூல்களை  எழுதி வெளியிட்ட   இவர் ‘நாட்டியக் கிரியா’ இறுவெட்டையும் வெளியிட்டவர். தற்போது நெதர்லாந்து லண்டன் போன்ற நாடுகளில் நாட்டிய ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். 


நவஜோதி ஜோகரட்னம்


navajothy_baylon_4.jpg


ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் நவஜோதி ஜோகரட்னம் யாழ்ப்பாணம் இளவாலைக் கொன்வென்டின் வார்ப்பு. ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற 2005ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பு லண்டனில் ஒரு ஈழத்துப் பெண்படைப்பாளி எழுதி வெளியிட்ட முதலாவது தமிழ் கவிதைத் தொகுப்பு எனப் பலரது பாராட்டைப் பெற்றது. லண்டனில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் நான்கு சிறுகதைகளுக்குப் பரிசில்கள் கிடைத்துள்ளன. CeeI TV  தரிசனம், ஜி.ரி.வி போன்ற தொலைக்காட்சிகளிலும், ETBC, Sunrise, Kishmath, Lonldon tamil Radio போன்ற வானொலிகளிலும் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கடமை புரிந்த அனுபவம் கொண்டவர். தற்பொழுது குயு வுஎ (இணையத் தொலைக்காட்சியில்) தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், அரசியல்போன்ற பல துறைகளில் 275 இற்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளார். 

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1374:2013-03-09-07-04-34&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

 

 

 

மாதவி சிவலீலன்

madhavi_sivaleelan5.jpg

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான மாதவி சிவலீலன் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். முதுகலைமாணிப் பட்டதிற்காகக் ‘கம்பராமாயணக் கதையமைப்பும் கட்டமைப்பும்’ என்னும் ஆய்வேட்டை  யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த பிரபல நாட்டுக்கூத்துக் கலைஞரான பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவரது காலத்து அரசியல் பொருளாதாரம் சமூகம், சமயம் போன்ற அனைத்து விடயங்களையும் கொண்டப hடல்களை ஆக்கியவர். இவர் கூறும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் பொருந்துவதாக உள்ளதே அவரது பாடல்களின் சிறப்பு எனக் கூறும் மாதவி சிவலீலன் ஈழத்தில் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களால் வெளிக்கொணரப்படாது மறைந்திருக்கின்றனர் என்று கூறுகின்றார். அந்நாட்களில்; கிராமங்களில்; இடம்பெறும் நாடக இடைவேளைகளின் போது சமூகச்சுற்றாடலின் பனை போன்ற இயற்கை வளங்களின் நன்மைகள் குறித்தும், சமூகத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வெளிப்படுத்தி சமூகத்தை சிந்திக்க வைத்து நெறிப்படுத்தியவர்களில் முக்கியமாத் திகழ்ந்தவர் பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவர்கள்;. இத்தகைய சமூக அக்கறையோடு; சிறந்த நாடகக் கலைஞராகவும் செயற்பட்டவரை வெளிக்கொண்டுவரும் நோக்கில்தான் அத்தகைய ஒரு ஆய்வு நூலை மேற்கொண்டதாகக் கூறுகின்றார் மாதவி;. 

1957 ஆம் ஆண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் 12 ஆம் திருவிழா பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் குடும்பத்தினரால் பரம்பரையாக இடம்பெறும் திருவிழா. அன்றைய தினம் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை மேடையேற்றினா.;; இவரது மகன் சகடாசுரனாக நடித்தபோது இறக்கும் காட்சியில் உண்மையாகவே இறந்துபோய்விட்டார். இந்த துன்பகரமான நிகழ்வின் பின்னர் கோயில்களில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதை நிறுத்தினார் என்று அவரது மருமகனான சங்கீத பூஷணம் சு.கணபதிப்பிள்ளை கூறியதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார் மாதவி சிவலீலன்.

தற்போது லண்டன் தமிழ் நிலையத்தில்; தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்பவற்றிலும் ஆர்வமுடையவர்.

 

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1374:2013-03-09-07-04-34&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35

 

நன்றி இணைப்புக்கு. இந்த மாதவி காரை சுந்தரம்பிள்ளையின் மகளா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

 

 

------

 

 

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

rajeswary_balasubramaniyam.jpg

 

 

 

இவவை எழுத்தாளர் என்பதை விட.... ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்... மற்றைய பேச்சாளர் மீது... மேசையில், குடிக்க வைத்திருந்த தண்ணீரை ஊத்திய ரவுடிப் பெண்ணாக பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

அடிவாங்கின மாடு கட்டையை இழுத்துக் கொண்டு ஓடத்தான் நினைக்கும் :D  அதுட்ட போய்  பால் கறக்க நினைக்க கூடாது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கின மாடு கட்டையை இழுத்துக் கொண்டு ஓடத்தான் நினைக்கும் :D  அதுட்ட போய்  பால் கறக்க நினைக்க கூடாது :D

 

நான் கதை வாசிக்கிறது குறைவு. ஆனால்... கிருபன் ஏதாவது பதிஞ்சிருந்தால்.... விசேசமிருக்கும் என்று எட்டிப் பார்த்த போது தான்... இந்த ராட்சசியின் படம் ஞாபகத்துக்கு வந்தது வினித். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் கதை வாசிக்கிறது குறைவு. ஆனால்... கிருபன் ஏதாவது பதிஞ்சிருந்தால்.... விசேசமிருக்கும் என்று எட்டிப் பார்த்த போது தான்... இந்த ராட்சசியின் படம் ஞாபகத்துக்கு வந்தது வினித். :D  :lol:

எனக்கும் இவ்வளவு தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் லண்டனில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தில் தமிழினத்திற்கு விரோதமான செயற்பாடுகள் வெறும் வன்மத்தால் மட்டும் வரவில்லை. தமிழினம் அழிந்துபோக துணையாக நடந்துகொண்டு எப்படித் தமிழ் மீது பற்றாக இருக்கின்றார் இவர்?

Link to comment
Share on other sites

அவர் எங்கை தமிழ்மீது பற்றாக இருக்கிறார்?  தீபம் ரீவி அறிவிப்பாளர்கள் எல்லோ அவர் மீது பற்றாக இருந்து  கலந்துரையாடலுக்கு கூட்டி வருகிறார்கள்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கும் இவ்வளவு தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் லண்டனில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தில் தமிழினத்திற்கு விரோதமான செயற்பாடுகள் வெறும் வன்மத்தால் மட்டும் வரவில்லை. தமிழினம் அழிந்துபோக துணையாக நடந்துகொண்டு எப்படித் தமிழ் மீது பற்றாக இருக்கின்றார் இவர்?

 

பர்றிமாகரன் ஒரு எழுத்தாளர் என்று அறிந்துள்ளேன் அவரின் மனைவியோ... மகளோ எழுத்தாளர் என்று தெரியாது, அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சி மேடைகளின் பேச்சாளரா? மர்றையவர் அந்நெகர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கின்றேன்.

மற்றும் படி... ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை பார்த்தால்.... எனக்கு, நித்திரையிலிலும்... மூத்திரம் வரும். அவ்வளவு... ராட்சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்றிமாகரனது மனைவிதான் றீற்றா. முன்னர் ஐபிசி வானொலியில் அடிக்கடி வருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

 

rajeswary_balasubramaniyam.jpg

 

அரசியல் அபிப்பிராய பேதங்களால் நடக்கும் உயிர்ப் பலிகள் அநியாயமானவை.

இவைகளைக் கண்டிப்பது மனித உரிமைக்காகப் போராடும் பலரின் கடமையாகும் என்று

துணிவோடு செயற்படும் எழுத்தாளராக ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திகழ்கிறா.

 

இந்தம்மாவைப் பற்றி இப்படி ஒரு பொய்யை எழுதி இருக்காங்களே. இவர் சிறீலங்கா சிங்கள அரசு செய்வதை எல்லாம் நியாயம் என்று கற்பிக்கும் ஒரு மனநோயாளி. இவர் உயிர்ப்பலிகள் பற்றி.. மனித உரிமைக்காகப் போராடுறவராமோ..???! இவை எல்லாம்

எங்கட இனத்தின் எழுத்தாளர்கள்..????! ம்ம்ம்... என்ன செய்வது.. சொல்ல எழுதக் கேட்க வேண்டிய நிலைமை நமக்கு. ஆனால் நிச்சயமாக இவர்களின் எழுத்தை எந்த ஒரு உருப்படியான மனிதனும் படிக்கமாட்டான். :icon_idea::(:rolleyes:

 

மேலும் இந்தப் பெண்மணி பற்றி புனையப்பட்ட பொய் ஒன்றே மற்றவர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இழக்கச் செய்து விடுகிறது. நீங்கள் எழுதினால் என்ன விட்டால் என்ன...???! அப்படின்னு இருக்குது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்றிமாகரனது மனைவிதான் றீற்றா. முன்னர் ஐபிசி வானொலியில் அடிக்கடி வருவார்.

 

ஓம்.... கிருபன். சிலர் சொல்லும்... நாலு வரி கூட.... பசுமரணித்தாணியில் பதியப் பட்ட, ஒரு சொல்லாக... மூளையின் ஒரு பகுதியில் பதியப்பட்டிருக்கும். நீங்கள் ஞாபகமூட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஒரு மாபெரும் இன அழிப்பை நியாயப்படுத்திய "ஒன்றையும்"  இதில் இணைத்ததால் இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.

 

அத்தோடு அவா இலங்கைத் தேசிய தினத்திற்குக் எம்பஸி போய்க் கொண்டாடியபோது எடுத்த போட்டோக்கள் அவாவின் நடுநிலைமைக்குச் சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஷந்தி சங்கர்  முன்னர் யாழிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
http://www.yarl.com/forum/lofiversion/index.php/t7379.html

Link to comment
Share on other sites

 இவ்வளவு தமிழ் பெண் எழுத்தாளர்கள் லண்டனில் இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.