Jump to content

மனசே நலமா???


Recommended Posts

மனச்சோர்விற்கு என்ன காரணம்???

மனச்சோர்வு என்பது ஒவ்வொருவது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் உணரப்படுவது உண்டு.

நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் எதிர்பாராத பிரிவு, இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில்

உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களினால் வராலாம் மற்றும் தோல்வி மன்ப்பான்மை

போன்ற உணர்வுகளோடும் மனம் சோர்ந்து மனச்சோர்வு ஏற்படலாம்.

நிரந்தரமற்ற பல நிகழ்வுகளின் பாதிப்பு பெரிதாக மனச்சோர்வை உண்டாக்குவதில்லை.

சில நாட்கள் சிறிய தாக்கம் இருந்து மறைந்து விடும். சில வருத்தங்கள், கஷ்டங்கள் அன்றாடம்

மாறி மாறி நம் வாழ்க்கையில் வரும். அவற்றை எல்லாம் நாம் மனச்சோர்வு எனக் கொள்ளக்கூடாது.

திடீரென ஏற்படும் இழப்புக்களால் தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சாகமின்மை

போன்ற அறிகுறிகள் சூழ்நிலை காரணமான மனச்சோர்வினால் உண்டாகிறது.

இந்த மனச்சோர்வு ஒவ்வொருக்கொருவர் வேறுபடும். உடல் மற்றும் மூளையில் ஏற்படும் இராசயன

மாற்றத்தினால் ஏற்படும் மனச்சோர்வு மகிழ்ச்சியாக வாழ்பவர்களுக்கும் எல்லோரிடத்திலும்

சுமூகமாக பழகுபவர்களுக்கும் கூட ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இவர்கள் பெரும்பாலும் விடியற்காலை தூக்கத்தை இழப்பவர்களாக எதிலும் ஈடுபாடு

அற்றவர்களாக, மிகவும் குற்ற உணர்வு உள்ளவர்களாகவும், தாம் வாழ்வதில் அர்த்தமில்லை

என்றும் எண்ணுபவர்களாகவும் காணப்படுவர். சிலர் நிஜ உலக ஈடுபாட்டிலுருந்து விலகி குழப்பத்தில் வாழ்வார்கள்.

இந்நோய் உண்டாவதற்கு பாரம்பரியம் உடல் மற்றும் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம்,

மன இறுக்கம், ஆளுமை போன்ற காரணிகளால் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சிலர் தொடந்து தோல்வியைத் தழுவுவதாலும் வாழ்க்கை கஷ்டமானது என்று வலுவடைந்து

விடுவதாலும் மனச்சோர்வு அடைகிறார்கள்.

ஆரம்பநிலையில் உள்ள நோயாளிகள் சிலர் அவர்களாகவே மனச்சோர்விலிருந்து விடுபட்டு விடுவதும் உண்டு.

இயலாதவர்கள் மருத்துவரை அணுகி நல்லபடியாக மனசை பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

Link to comment
Share on other sites

ம்ம் சிலருக்கு த்தான் மனசோர்வு ஏற்படும்..சிலருக்கு ஏற்படவே ஏற்படாது..ஏன்னா அவைக்கு மனசே இல்லையே :lol::lol::lol::lol: :evil:

தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சாகமின்மை

:roll: :roll: :roll: இது லீவுலயும் வரும் எப்பிடி போக்க..ஏதும் வழி அக்கா? :roll:

Link to comment
Share on other sites

இது லீவுலயும் வரும் எப்பிடி போக்க..ஏதும் வழி அக்கா?

இது வெரி சிம்பிள் பிள்ளை பேசாம லீவுக்கை மாத்திரம் உங்கடை மனசை அவரிட்டை(யார் எண்டு கேக்கப்பிடாது) கொடுத்து விடுங்கோவன்...............

எனக்கிருக்கிற மனசோர்வு கொஞ்சம் வித்தியாசமானது என்னவெண்டால் மனிசின்ரை சொந்தகாரர் யாராவது வீட்டை வந்தா ஏற்படுகிறதே.........என்ன செய்யலாம்

Link to comment
Share on other sites

இது லீவுலயும் வரும் எப்பிடி போக்க..ஏதும் வழி அக்கா?

அது ஒண்டும் இல்லைங்கோ சும்மா MSN க்கு முன்னல இருந்து பேசினாலும் வரும் :wink:

Link to comment
Share on other sites

தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சாகமின்மை

காதலித்தாலும் இதே நிலைமை தான் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

குட்டிக்கு சொந்த அனுபவமோ :P :P

இப்ப உது இல்லாததுதான் குறை. சும்மா பட்டாம்பூச்சியாய் சுதந்திரமாக பறந்து திரியுற என்னை ஏன் பா இப்படி கேட்கிறியள்? :P

Link to comment
Share on other sites

ம்ம் சிலருக்கு த்தான் மனசோர்வு ஏற்படும்..சிலருக்கு ஏற்படவே ஏற்படாது..ஏன்னா அவைக்கு மனசே இல்லையே :lol::lol::lol::lol: :evil:

:roll: :roll: :roll: இது லீவுலயும் வரும் எப்பிடி போக்க..ஏதும் வழி அக்கா? :roll:

வீட்டைச் சுத்தி ஓடுங்கோ (ஐ மீன் உடற் பயிற்சி செய்யுங்கோ)

தூக்கம் வரும்.

பசிக்கும்.

உற்காகமாகவும் இருக்கும். :wink: :wink:

Link to comment
Share on other sites

ம்ம் சிலருக்கு த்தான் மனசோர்வு ஏற்படும்..சிலருக்கு ஏற்படவே ஏற்படாது..ஏன்னா அவைக்கு மனசே இல்லையே :lol::lol::lol::) :evil:
Link to comment
Share on other sites

இது வெரி சிம்பிள் பிள்ளை பேசாம லீவுக்கை மாத்திரம் உங்கடை மனசை அவரிட்டை(யார் எண்டு கேக்கப்பிடாது) கொடுத்து விடுங்கோவன்...............

எனக்கிருக்கிற மனசோர்வு கொஞ்சம் வித்தியாசமானது என்னவெண்டால் மனிசின்ரை சொந்தகாரர் யாராவது வீட்டை வந்தா ஏற்படுகிறதே.........என்ன செய்யலாம்

முகம் கனகாலத்துக்கு அப்புறம் நலமா? ம்ம் நல்ல தீர்வுதான் சொல்லி இருக்கிறியள் சகிக்கு. நீங்களும் அதே மாதிரி அவையள் வரும் போது மனசை மனுசிட்டை கடன் குடுங்களன் ஹீ ஹீ கவ் இஸ் மை ஐடியா?? :wink: :wink: :wink: :P :P

Link to comment
Share on other sites

அது ஒண்டும் இல்லைங்கோ சும்மா MSN க்கு முன்னல இருந்து பேசினாலும் வரும் :wink:

அப்ப என்ன வடிவேலு சேர் நீங்கள் 24 அவர்ஸ் எம் எஸ் என் ல போல :wink:

யூ நோ எம் எஸ் என்லயும் மனச்சோர்வு வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. கவனம் வடிவேலு. :wink: :P :P

Link to comment
Share on other sites

காதலித்தாலும் இதே நிலைமை தான் :lol::lol::lol:

:shock: காதலாவது..கத்தரிக்காயாவது :evil: (கோவம் உங்க மேல இல்லை நிலாக்குட்டி :P )

Link to comment
Share on other sites

இப்ப உது இல்லாததுதான் குறை. சும்மா பட்டாம்பூச்சியாய் சுதந்திரமாக பறந்து திரியுற என்னை ஏன் பா இப்படி கேட்கிறியள்? :P

அதுதானே மற்றவை சுதந்திரமாக இருந்தால் பிடிக்காதே. இதுவும் நாளடைவில் மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். கவனம் வடிவேலு. :P :P

Link to comment
Share on other sites

அப்ப என்ன வடிவேலு சேர் நீங்கள் 24 அவர்ஸ் எம் எஸ் என் ல போல :wink:

யூ நோ எம் எஸ் என்லயும் மனச்சோர்வு வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. கவனம் வடிவேலு. :wink: :P :P

ம்ம் பாவமக்கா எம் எஸ் என்..இப்படி ஆக்கள் கன நேரம் இருக்கு அதுக்கு மனச்சோர்வு வரப்போவுது..பாவம் அது யாருக்கு போய் சொல்லும்..இல்லை யார்தான் அதுக்கு அட்வைஸ் குடுப்பினம் சொல்லுங்கோ :cry: :cry: :wink:

Link to comment
Share on other sites

ம்ம் பாவமக்கா எம் எஸ் என்..இப்படி ஆக்கள் கன நேரம் இருக்கு அதுக்கு மனச்சோர்வு வரப்போவுது..பாவம் அது யாருக்கு போய் சொல்லும்..இல்லை யார்தான் அதுக்கு அட்வைஸ் குடுப்பினம் சொல்லுங்கோ :cry: :cry: :wink:

ஹீ ஹீ அதுக்கு மனச்சோர்வு வந்தால் பிறீஸ் ஆகிடும். அதாவது இயக்கம் அற்றுப் போகும் :P :P :P :wink:

அப்புறம் வடிவேலு சேருக்குத் தான் கஷ்டம். :wink:

Link to comment
Share on other sites

ஹீ ஹீ அதுக்கு மனச்சோர்வு வந்தால் பிறீஸ் ஆகிடும். அதாவது இயக்கம் அற்றுப் போகும் :P :P :P :wink:

அப்புறம் வடிவேலு சேருக்குத் தான் கஷ்டம். :wink:

அவரால தான் ஏற்படுது சோ, அவருக்கு கஷ்டம்னா பறவால..நமக்குமெல்லோ கஷ்டம்..இதால நமக்கும் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கு..இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுதுக்கா? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அவரால தான் ஏற்படுது சோ, அவருக்கு கஷ்டம்னா பறவால..நமக்குமெல்லோ கஷ்டம்..இதால நமக்கும் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கு..இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுதுக்கா?
ண்

உங்களுக்கு பாடசாலை லீவு விட்ட பின் போழுது போகவில்லை என்று தெரியுது :wink: :wink:

Link to comment
Share on other sites

ண்

உங்களுக்கு பாடசாலை லீவு விட்ட பின் போழுது போகவில்லை என்று தெரியுது :wink: :wink:

ரொம்பதான் லொள்ளு :lol:

Link to comment
Share on other sites

:shock: காதலாவது..கத்தரிக்காயாவது :evil: (கோவம் உங்க மேல இல்லை நிலாக்குட்டி :P )

ஏன் சகி காதலும் கத்தரிக்காயும் என்றீங்க? ஓஹோ என் மேலை கோவம் இல்லை தானே. அதுவரைக்கும் சந்தோசம் :P :P :P :P அப்போ யார் மேலை கோவம் சகிக்கு? ஓகோ புரியுது புரியுது உங்க தூக்கமின்மை பசியின்மை உற்சாகமின்மைக்கு காரணமானவர் மீது தானே கோவம் ஹாஹா. ஓகே ஓகே :wink:

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்கள் மத்தியில் முக்கிய நோயாக இந்த மனச்சோர்வு காணப்படுகுது. இந்த மனச்சோர்வு அதிகரித்து தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது. அதற்காக தான் மருத்துவர்கள் பல அறிவுரைகள் கொண்ட புத்தகங்களை இதற்காக வெளிவிடுகின்றார்கள். மனதை சந்தோசமாக வைத்திருப்பது தான் இதற்குரிய முக்கிய தீர்வு.

மனதை சந்தோசமாக வைத்திருக்க என்ன வழிகள்? அதற்கான விடைகள் உங்கள் மனதில் தான். :wink:

தகவலுக்கு நன்றிகள் ரசிகை.

Link to comment
Share on other sites

ண்

உங்களுக்கு பாடசாலை லீவு விட்ட பின் போழுது போகவில்லை என்று தெரியுது :wink: :wink:

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

உற்சாகமின்மைக்கு காரணமானவர் மீது தானே கோவம் ஹாஹா. ஓகே ஓகே

:lol::lol: ஆமா..எவர் மேல? சும்மா பட்டாம்பூச்சியா இருக்கிற என்னை மாட்டி விடாதைங்கோ..ஹிஹி இதை எங்கயோ கேட்ட மாதிரி இல்லை :lol::lol::( :wink:

Link to comment
Share on other sites

ஏன் சகி காதலும் கத்தரிக்காயும் என்றீங்க?

கத்தரிக்காய் முதல்லா குண்டா அழகா இருக்கும் நிலா..அப்புறம் கொஞ்ச நாள் போக..மெலிஞ்சு வாடி கருவாடு ஆயிடும்..அத்தான் நிலா :lol:

Link to comment
Share on other sites

கத்தரிக்காய் முதல்லா குண்டா அழகா இருக்கும் நிலா..அப்புறம் கொஞ்ச நாள் போக..மெலிஞ்சு வாடி கருவாடு ஆயிடும்..அத்தான் நிலா

362345co.gif362345co.gif362345co.gif362345co.gif

Link to comment
Share on other sites

நிறைய சிரிக்காதிங்க...பல்லில் இருந்து குருதி கொட்டுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.