Jump to content

கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்


Recommended Posts

உங்கள் நோக்கமும் சிந்தனையும் நாட்டை நோக்கி இருந்தால் அது காணும் .

அதற்காக மனிதன் தன் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தப்போவதில்லை .

போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள் ,நீங்கள் எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.

அதை விட்டு விட்டு மற்றவனுக்கு வந்து அதை செய்வம்  இதை விடுவம்  என்று சீன் காட்ட கூடாது .இளையராஜா கச்சேரிக்கும் இதுதான் நடந்து .

இயல்பாக இருப்பதுதான் அழகு பாசாங்கு பண்ணுவது வெறும் நடிப்பாகிவிடும் .(யாழில் அதற்கு குறைவே இல்லை ).

Link to comment
Share on other sites

உங்கள் நோக்கமும் சிந்தனையும் நாட்டை நோக்கி இருந்தால் அது காணும் .

அதற்காக மனிதன் தன் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தப்போவதில்லை .

போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள் ,நீங்கள் எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.

அதை விட்டு விட்டு மற்றவனுக்கு வந்து அதை செய்வம்  இதை விடுவம்  என்று சீன் காட்ட கூடாது .இளையராஜா கச்சேரிக்கும் இதுதான் நடந்து .

இயல்பாக இருப்பதுதான் அழகு பாசாங்கு பண்ணுவது வெறும் நடிப்பாகிவிடும் .(யாழில் அதற்கு குறைவே இல்லை ).

 

நாட்டை நோக்கி மற்றவர்கள் எப்படி செயற்பட வேண்டும் என நீங்கள் வகுப்பு எடுக்காமல் விட்டாலே பெரிய புண்ணியமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒரு ஆள் மற்றவர்களின் ஒற்றுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல் சுடு தண்ணி குடிச்ச நாய் மாரி வல் வல் வல்  :D 



100 தமிழன் நல்லவனாய் இருந்தால் அதிலை ஒன்று கெட்டதாய் இருக்கும் என்று சொல்வார்கள்...அதிலை ஒரு ஆளை நான் நேரில கண்டு விட்டன்....

Link to comment
Share on other sites

தம்பி இன்னமும் ஊர் அடிபடவில்லை ,நூறில ஒருவன் தான் நல்ல தமிழன் தம்பி .

தம்பி சுண்டல் -Empty vessels make the most noise.

Link to comment
Share on other sites

சரி அண்ணை நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும் அப்பிடியே கொஞ்ச நாளைக்கு அப்பிடியே அந்த ஓரமாய் போய் உக்காந்து இருங்க..... நான் பையன் எல்லாம் செம கடுப்பில இருக்கிறம் வாங்கி கட்டாதிங்க.....

இப்ப தான் ஒருத்தனுக்கு நல்லா குடுத்திட்டு வாறம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இன்னமும் ஊர் அடிபடவில்லை ,நூறில ஒருவன் தான் நல்ல தமிழன் தம்பி .

தம்பி சுண்டல் -Empty vessels make the most noise.

நல்லவர்களுக்குத் தான் நல்லவர்களை தெரியும்......நான் பழகின ஆக்கள் அப்படி.....நீங்கள்??????????

Link to comment
Share on other sites

விடுதலை வேண்டும் !

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!

 

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


'கொடு' தலை என்றால், கொடுத்திடத் துடிக்கும்,
கொள்கை மறப்படை பகைஉயிர் குடிக்கும்,

 

'எடு' தலை என்றால், பகைதலை எடுக்கும்,
இலக்கம் கோடியென் ரெண்ணிக்கை கொடுக்கும்!

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


காடுமே டெல்லாம் பசிக்க ஊண்தேடிக்
கண்ணீரில் மிதக்கின்ற தமிழர்கள் கோடி!

 

வாடுமே அவருளம்! துவண்டிடும் நாடி!
வற்றாத வளஞ்சேர்க்க வா,தமிழ் பாடி!

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


என்னென எண்ணினார், எந்தமிழ்த் திறத்தை?
எதிர்க்கின்ற காட்டவா, வழிவழி மறத்தை?

 

சொன்னாலும் சொல்லுவோம் குறள்சொல்லும் அறத்தை!
சூடேற விட்டாலோ காட்டுவோம் புறத்தை!

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


புலிபெற்ற பிள்ளைக்குப் பூனையா எதிரி?
புறப்பட்டு விட்டாலோ பகையோடும் சிதறி!

 

வலிபெற்ற நெஞ்சங்கள் துடிக்கவா பதறி?
மானமே உயிராகும், மற்றெல்லாம் உதிரி!

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


பெற்றோரை உற்றோரை பேணுவோம் நாளை!
பிள்ளைகள் மனைவியைப் பார்ப்போம்அக் காலை!

 

கற்றவர் கல்லாதார்க் கித்து,அழைப் போலை!
காளையர் கன்னியர் நிமிர்த்துவீர் தோளை!

 

விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!


-- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Link to comment
Share on other sites

காலத்தின் தேவையறிந்து இந்தக் கருத்துடன் உடன்பட்டு அல்லது முடிந்தவரை பொறுப்புடன் நடந்து கொள்ளும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.