Jump to content

தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவாக லண்டனில் மாணவர் ஆர்ப்பாட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

531581_601243119904810_597038987_n.jpg

 

இணைப்பு: முகநூல்

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மாணவர்களைப் பின்பற்றி..... ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, அவுஸ்திரேலிய மாணவர்களும் தமது ஆதரவை... தத்தமது நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன் நடாத்த முன் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த காலத்தில் சக நாடுகளிலும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது எமது கடமை.

Link to comment
Share on other sites

தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மூவர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானிய வாழ்த்தமிழர்களே அம்மாணவர்களுக்கு வலுச்சேர்க்க வாருங்கள்.

 

 

Contact us : 00447417397640
Naavarasan

Link to comment
Share on other sites

தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மூவர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானிய வாழ்த்தமிழர்களே அம்மாணவர்களுக்கு வலுச்சேர்க்க வாருங்கள்.

 

 

Contact us : 00447417397640

Naavarasan

 

அந்த மூவரும் இவர்கள் தான்.

 

531547_10200950106897922_1694368377_n.jp

 

(முகநூல்: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

மனசாட்சியை அடகு வைத்துவிட்ட இந்திய நாட்டின் தூதரக வாயிலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஊனை உருக்கி உரிமை போராட்டம் நடத்தும் மூன்று இளைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ...தமிழகத்தில் மூலை முடுக்கெங்கும் புரட்சித்தீ பரவி வரும் வேளையில் லண்டனில் இந்த இளைஞர்களை சந்தித்து ஊக்கப்படுத்தகூட பெருந்திரளான மக்கள் முன்வராதது வேதனை. -

 

579000_10200711438849779_428133001_n.jpg

Link to comment
Share on other sites

இவர்கள் இப்பொழுதும் உண்ணாவிரதம் இருக்கிறார்களா? இவர்கள் ஒரு அடையாள உண்ணாவிரதத்தோடு இதை முடித்துக் கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சி,மிஞ்சிப் போனால் ஈஸ்டர் மண்டே ஹொலிடே மட்டும் இருப்பினம்...அது மட்டும் இருக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தை தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்தானே மேற்கொண்டார்கள். இது ஒரு அடையாள உண்ணாவிரதமாக தெளிவுபடுத்தி இதனை முற்று செய்து கொண்டு தொடர்ந்து தமிழக மாணவர்கள் போராட்டவடிவங்களுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் அவற்றிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் பணிகளில் ஈடுபடலாம். ஒரு கடுமையான போராட்டம் வெளிநாடுகளில் நிகழ்த்தும் காலம் வரும் அப்போது இவர்கள் உறுதியாகப் போராட்டங்களில் ஈடுபடவேண்டும். இப்போதுதான் மாணவர் போராட்டம் என்பது அரும்பியிருக்கிறது. அது முகிழ்க்கும் காலத்திற்காக இவர்களும் தம்மைத் திடப்படுத்தி உழைக்கவேண்டும்.தன்னலம் கருதாது இவ்வுண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் பிள்ளைகளுக்கு தலை வணங்குகிறேன்.

 

இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இப்பொழுதும் உண்ணாவிரதம் இருக்கிறார்களா? இவர்கள் ஒரு அடையாள உண்ணாவிரதத்தோடு இதை முடித்துக் கொள்வது நல்லது.

 

மிஞ்சி,மிஞ்சிப் போனால் ஈஸ்டர் மண்டே ஹொலிடே மட்டும் இருப்பினம்...அது மட்டும் இருக்கட்டும்

 

நீங்கள் இல்லாட்டி உங்கடை ஆக்கள் வீட்டுக்கை இருந்துதான் செய்வியளாக்கும்.

Link to comment
Share on other sites

இந்தியனை நம்பி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதில் ஒரு நன்மையும் இருக்காது.

 

சபேஸன் சொன்னது போல்  ஆதரவுக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது மரியாதைக்குரியது.

 

 

எதற்க்கும்  பரமேஸ்வரனிடம் அறிவுரை கேட்பதும் நல்லது  எப்படி  எந்த ஒரு வாக்குறுதியும் இல்லாமல்  சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது என :D

Link to comment
Share on other sites

கனடாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பலர் இப்போ கம் என்று திரிகினம் .

Link to comment
Share on other sites

வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத இனம் தமிழினம்தான். கண் முன்னாடி செய்து முடியாது போன விடயங்களைக் கூட மறந்து திரும்பவும் தொடங்கிய இடத்திற்கே செல்ல நிற்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் இளையோரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லவென்றே இங்குஒரு கூட்டம் அலைகிறது.  பாவம், எமது தமிழ் இளையவர்கள்.  சொந்த புத்தியின்றி ஆட்டு மந்தைகள் போல் சொல்புத்தி கேட்டு அழியவென்றே பிறப்பெடுத்தவர்கள்.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலின் பின்னரும் தாயகத்தில் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக இல்லை. அவர்களும் பலவேறு முடிந்த வழிகளில் போராடுகிறார்கள். தொலைத்தவர்களை தேடுகிறார்கள். காணிகளை வீடுகளை கேட்கிறார்கள்.
 
அவர்களின் பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களை தமது துன்பங்களை எடுத்து சொல்ல கேட்கிறார்கள்.

 

நாமும் எம்மால் முடிந்ததை இந்த நாலு வருடமும் செய்து வந்தோம். ஆனால் பெரிய மாற்றங்கள் என்று இல்லை - இந்த மாணவர் எழுச்சி வரும் வரை.

 

மாணவர்களும் எந்த அரசியல் கட்சி சாராமல் நியாயமான கொள்கைகளை முன்வைத்து அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தம்மை தாமே எரிப்பதும் தவறு, ஆயுதம் ஏந்தி போராடுவதும் தவறு இல்லை உண்ணாவிரதம் இருப்பதும் தவறு என்றால் - நாம் தமிழராய் பிறந்தது தான் தவறாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களும் எந்த அரசியல் கட்சி சாராமல் நியாயமான கொள்கைகளை முன்வைத்து அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். 

தம்மை
தாமே எரிப்பதும் தவறு,

ஆயுதம் ஏந்தி போராடுவதும் தவறு

இல்லை உண்ணாவிரதம் இருப்பதும் தவறு என்றால் -

நாம் தமிழராய் பிறந்தது தான் தவறாக இருக்கவேண்டும்.

 

நான் நினைக்கின்றேன் எமக்கு மேலிருந்து ஒரு சக்தி  திடீரெனக்குதித்து எமக்கு ஒரு விடிவைத்தரும் என்று நினைக்கிறார்கள் போலுள்ளது

எல்லோரும் அப்படியே  வாயைப்பிழந்தபடி ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்களாக....... :(

Link to comment
Share on other sites

இவர்கள் ஏதோ தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்..! இவர்கள் செய்வது தவறென்றால் வேறு என்ன மாதிரியான போராட்டங்களைச் செய்யலாம்?

  1. கணினியில் எழுதலாம். :unsure:
  2. நூலகத்தில் எடுத்த புத்தகத்தில் எழுதி விடலாம். :huh:
  3. லண்டன் பணத்தாள்களில் எழுதி விடலாம். :blink:
  4. பெண் நண்பிகளுடன் உரையாடலாம். :wub:
  5. மக்டோனல்ட்ஸ் சாப்பிட்ட பெட்டியில் எழுதிப் போடலாம். யாராவது பார்ப்பார்கள். :icon_idea:
  6. காரில் எழுதிவிட்டு ஓட்டலாம். :rolleyes:
  7. அடுத்தவர் காரில் கீறி விடலாம். :wub:
  8. துவக்கு வாங்கி அடுத்தவன் தலையில் வைத்து அவனுக்கு உபதேசிக்கலாம். :D
  9. வார இறுதி கேளிக்கைகளில் தண்ணி போட்டுவிட்டு கதைக்கலாம். :lol:

ரெல்.. ரெல்.. மீ.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத இனம் தமிழினம்தான். கண் முன்னாடி செய்து முடியாது போன விடயங்களைக் கூட மறந்து திரும்பவும் தொடங்கிய இடத்திற்கே செல்ல நிற்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் இளையோரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லவென்றே இங்குஒரு கூட்டம் அலைகிறது.  பாவம், எமது தமிழ் இளையவர்கள்.  சொந்த புத்தியின்றி ஆட்டு மந்தைகள் போல் சொல்புத்தி கேட்டு அழியவென்றே பிறப்பெடுத்தவர்கள்.

 

 

ஆயுதப்போராட்டம் தோல்வி.
அகிம்சை போராட்டம் தோல்வி.அடுத்தது ஏதாவது இருந்தால் சொல்லவும்.
Link to comment
Share on other sites

ஆயுதப்போராட்டம் தோல்வி.
அகிம்சை போராட்டம் தோல்வி.அடுத்தது ஏதாவது இருந்தால் சொல்லவும்.

 

இனிமேல் இம்சைக்கும், அகிம்சைக்கும் இடையாலை ஒரு போராட்டம் நடத்தலாம்..! :D

 

நியானி: அகற்றப்பட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இனிமேல் இம்சைக்கும், அகிம்சைக்கும் இடையாலை ஒரு போராட்டம் நடத்தலாம்..! :D

 

Copy that! :D

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

Link to comment
Share on other sites

இவர்கள் ஏதோ தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்..! இவர்கள் செய்வது தவறென்றால் வேறு என்ன மாதிரியான போராட்டங்களைச் செய்யலாம்?

  1. கணினியில் எழுதலாம். :unsure:
  2. நூலகத்தில் எடுத்த புத்தகத்தில் எழுதி விடலாம். :huh:
  3. லண்டன் பணத்தாள்களில் எழுதி விடலாம். :blink:
  4. பெண் நண்பிகளுடன் உரையாடலாம். :wub:
  5. மக்டோனல்ட்ஸ் சாப்பிட்ட பெட்டியில் எழுதிப் போடலாம். யாராவது பார்ப்பார்கள். :icon_idea:
  6. காரில் எழுதிவிட்டு ஓட்டலாம். :rolleyes:
  7. அடுத்தவர் காரில் கீறி விடலாம். :wub:
  8. துவக்கு வாங்கி அடுத்தவன் தலையில் வைத்து அவனுக்கு உபதேசிக்கலாம். :D
  9. வார இறுதி கேளிக்கைகளில் தண்ணி போட்டுவிட்டு கதைக்கலாம். :lol:

ரெல்.. ரெல்.. மீ.. :icon_mrgreen:

 

இது எல்லாம் தவறில்லை ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் எந்த  வாக்குறுதியின் அடிப்படையில் அதை இடையில் நிறுத்தினார் என்பதை சொல்லாது ஈழபோராட்டத்துக்கு அறிவுரை சொல்லும் கேவலமான  தேசியம்  புலம்பெயர் தேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

:lol::D:(  அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தைத்தான்  வேண்டாம் என்று கூறுகிறேன்.

 

Link to comment
Share on other sites

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

 

 

உமாவை  போட்டு தள்ளியதை சொல்கிறீர்களா É

Link to comment
Share on other sites

ஒரு மட்டுநிறுத்தினராக இருந்து கொண்டு இப்படி கருத்து எழுதலமா?

 

 

அவர் தலைவர் என்று சொன்னால் அதுக்கு பதில் எழுதி இருக்கவேண்டும் அல்லது விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால்   இது ஒரு அப்பட்டமான தனிநபர் தாக்குதல்.

:D:lol:

Link to comment
Share on other sites

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

 

நீங்கள் சொன்ன எதைக் கேட்டிருக்க வேண்டும்?

 

  1. முதலில் புளட்டில் போய் இணைந்தீர்கள்.. அதாவது உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொன்னது.. நாங்கள் சரியான முடிவை எடுத்துவிட்டோம்.. நீங்களும் புளட்டில் இணையுங்கள்..!
  2. பிறகு புளட்டில் பிரச்சினைப்பட்டு, அந்த இயக்கத்தையே அழிக்க முற்பட்டீர்கள்..! இந்த இடத்தில் உங்களது முதலாவது முடிவு தவறானது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்களை நம்பி புளட்டில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழிவுக்கு உள்ளாக்கினீர்கள்..!
  3. பிறகு அதையும் விட்டுவிட்டு லண்டனுக்குப் போய் கனடா வந்தீர்கள். அப்படியானால் இரண்டாவது முடிவும் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்திருக்கிறீர்கள்..! உங்களை நம்பி புளட்டில் கலகம் செய்தவர்களின் கதியும் அதோகதி..
  4. பிறகு புலிக்காய்ச்சலில் புலிப்புராணம் பாடி போராட்டத்தைக் கொச்சைப் படுத்தினீர்கள்..! சரி, பிழை ஒருபுறம் இருக்கட்டும்..! இதனால் போராடியே ஆகவேண்டும் என்று புலிகளில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அழிவதற்குத் துணை போனீர்கள்..!

 

இன்று எங்களுக்கு அரசியல் கற்பிக்கிறீர்கள்..! :D ஒரு நிலையில் இல்லாத உங்களது சொல் அம்பலம் ஏறுமா..? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்..! :lol:

 

நாளைக்கு நாங்கள் தலைவருக்குச் சொன்னது பிழை என்று மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இது எல்லாம் தவறில்லை ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் எந்த  வாக்குறுதியின் அடிப்படையில் அதை இடையில் நிறுத்தினார் என்பதை சொல்லாது ஈழபோராட்டத்துக்கு அறிவுரை சொல்லும் கேவலமான  தேசியம்  புலம்பெயர் தேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

:lol::D:(  அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தைத்தான்  வேண்டாம் என்று கூறுகிறேன்.

 

 

அவரில் பிழை இருக்கலாம்..! ஆனால் என்னால் அவரில் பிழைபிடிக்க முடியாது..! ஏனென்றால் நான் உண்ணாவிரதம் இருப்பதற்குத் தயாராக இல்லை..! :rolleyes:

 

பிழை பிடிக்க நினைப்பவர்கள் அவர்களே சாகும்வரை ஒரு உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம்..! :D அதை எவ்வாறு செய்வது என்கிற படிப்பினையை அவருக்கு வழங்கலாம்..! :icon_mrgreen: இடையில் நிறுத்த வேண்டி வந்தால், ஏன் நிறுத்தினேன் என்பதை பொதுமக்களுக்கு விளக்கலாம்..! :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.