Jump to content

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளித்து இளைஞர் பலி - வைகோ அஞ்சலி.[படம்]


Recommended Posts

மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை
எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை,
கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு,
பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி
ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த
பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல்
முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில்
இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட
இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும்
சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே
கருகினார்.


 அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் உணர்வாளர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர்.

தீக்குளித்து பலியானவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்நிலையில்,
தீக்குளித்து இறந்த இளைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ விரைகிறார்.  தற்சமயம் ஈரோட்டில் தங்கியிருக்கும் அவர் மதுரை
விரைகிறார்.

படத்தில் இருப்பவர் பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கிய ராஜ்.


fire.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13441:madurai-fire&catid=36:tamilnadu&Itemid=102
Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! இத்தகைய போராட்ட முறைகள் வேண்டவே வேண்டாம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளே... உங்கள் உயிரை, அநியாயமாக தீக்கு இரையாக்காதீர்கள்.
தயவு செய்து, உங்கள் எதிர்ப்பை வேறு வழிகளில் காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்க் காணிக்கைகள்!

 

தமிழுணர்வாளர்கள் நீண்டகாலம் வாழவேண்டுமே தவிர தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இவ்வாறான முடிவுகளை மக்கள் எடுப்பதற்கு அரசியல்வாதிகளும் காரணம்: அகிம்சை போராட்டங்களை, உணர்வுகளை அவர்கள் மதித்து நடக்காதமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்  காணிக்கை  எம் சார்பில்....

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்....

தமிழக உறவுகளே இனியும் தீக்குளிப்புகள் வேண்டாம். உயிருடன் இருந்து போராடுங்கள்.

தீக்குளித்து இறந்தவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்....

தமிழக உறவுகளே இனியும் தீக்குளிப்புகள் வேண்டாம். உயிருடன் இருந்து போராடுங்கள்.

தீக்குளித்து இறந்தவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

அவரின்..... பெயர், ஊரை இன்னும் கண்டு பிடிக்காதது கவலைக்குரியது.

அதுகும், மாணவர் என்னும் போது.... அவரின் பெற்றோர்... எவ்வளவு வேதனை அடைவார்கள்.

ஏன் தான்... அவசர முடிவை எடுக்கிறார்களோ... தெரியவில்லை.

இந்த மாணவர் போராட்டத்தில்... இவரின் இழப்பு, முதலும்... இறுதியுமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

உண்மையான உணர்வுள்ள சுயநலமில்லாத தமிழுணர்வாளர்களே! நீங்கள் வாழ வேண்டும். வாழ்ந்து கொண்டே போராட வேண்டும். வார்த்தைகளின்றித் தவிக்கிறேன். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.


 


இவ்வாறான முடிவுகளை மக்கள் எடுப்பதற்கு அரசியல்வாதிகளும் காரணம்: அகிம்சை போராட்டங்களை, உணர்வுகளை அவர்கள் மதித்து நடக்காதமை.

அவரது இறுதி நேர தாக்குதல் பாணியைப்பார்க்கும்  போது  அவர்கள் அகிம்சைமீது நம்பிக்கை  இழந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முயன்றது தெரிகிறது

 

புரிந்து கொள்ளுமா காந்தி  தேசம்?????

Link to comment
Share on other sites

அவரின்..... பெயர், ஊரை இன்னும் கண்டு பிடிக்காதது கவலைக்குரியது.

அதுகும், மாணவர் என்னும் போது.... அவரின் பெற்றோர்... எவ்வளவு வேதனை அடைவார்கள்.

ஏன் தான்... அவசர முடிவை எடுக்கிறார்களோ... தெரியவில்லை.

இந்த மாணவர் போராட்டத்தில்... இவரின் இழப்பு, முதலும்... இறுதியுமாக இருக்கட்டும்.

 

தீக்குளித்தவர் யார் என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுதும் கருகி இறந்துள்ளார் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லிமாக இருக்கலாம் என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். :rolleyes:

 

இறந்தவர் மனநிலை சரி இல்லாதவர் என வழக்கை மாற்ற காவல்துறை முயற்சிக்கிறதாம். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
தயவு செய்து உங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் சகோதரர்களே  
 
உங்களின் தமிழ் ஈழ ஆதரவை முடிந்தவரைக்கும் சாத்வீக வழிகளில் போராடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.தயவு செய்து இப்படி அனியாயமாக உங்கள் உயிர்களை வீணாக்காதீர்கள்.இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழ் உயிரும் மிகவும் பெறுமதி வாய்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஏதும் செய்ய முடியல அவனால ... ஆற்றாமையில் தற்கொலை பண்னிக்கிறான்..


ஆக்கபூர்வமாக செயல்படணும்.. ஆக்கபூர்வமாக செயல்படுணும்.. அறிவுறைக்கு மட்டும் பஞ்சமே கிடையாது..  என்ன பண்னனும் என்று எதும் தெரியாது.. சும்மா எழுத வேண்டியது.. உண்ணாவிரதம்.. அல்லது கடையடைப்பு....?  ஓட்டில் காட்ட வேண்டும் வித்தையை..? இந்த லாஜிக்கு..?ம்ம் நாளையே ஓட்டு வாங்கினவன் மாறி போய்விட்டால்.. நீங்கள் ஓட்டு போட்டவனைத்தான் திட்டுவீர்கள்.. லாஜிக்கு வந்து ஒட்டு போட்டவணுக்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நீங்களும் கூடவா எங்களை அழவைக்கவேண்டும்? இன அழிப்பிற்காக நீதி வேண்டி உலகை
உலுக்கும் தருணத்தில் நீயே உனை அழித்தால் நீதி தேவதை என்ன மண்டியிட்டு
அமர்ந்தா கண்கள் பனிப்பாள்? வேண்டாம் பிள்ளைகளே....நாங்கள் எற்கனவே
நடைபிணங்களாய் நாதியற்றுக்கிடக்கிறோம். இப்போதுதானே நீங்கள் உள்ளீர்கள்
என்று முகம் நிமிர்த்தத் தொடங்கினோம் மீண்டும் எங்களை அழவைப்பதில்
உங்களுக்கு எப்படி விருப்பு வந்தது. எம் பிள்ளை தீ குளித்து கருகினாற்போல்
கும்பி கொதிதலருகிறது எங்கள் ஆன்மா வேண்டாம் பிள்ளைகளே இந்த விபரீத
முடிவுகள் இவ்வகையில் உங்கள் போராட்டம் உயிர் எரித்துத் தொடர்ந்தால் தாங்க
முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.. :(


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

உயிரைப் பலி கொடுக்காமல் அரசியல் போராட்டத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதைப் புரிந்து செயற்படுங்கள் தமிழக சகோதரர்களே.

 

 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

உயிரைப் பலி கொடுக்காமல் அரசியல் போராட்டத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதைப் புரிந்து செயற்படுங்கள் தமிழக சகோதரர்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.