Jump to content

மரணம் திலீபன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணம் திலீபன்

தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா?

அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தள்ளி குடியிருந்ததற்கு ஒரே காரணம் அந்த இடத்தின் அமைதியான சூழ்நிலைதான். சிலநாட்கள் வீட்டு ஓனர் மகள் பிரசவத்திற்கு சென்றிருந்த சமயங்களில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு யூக்களிப்டஸ் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் வரும் சப்தத்தை கூட கேட்டிருக்கிறேன். பக்கத்தில் ஒரே ஒரு டெண்டல் காலேஜ், அதைச் சார்ந்த மாணவர் குடியிருப்பு அவ்வளவுதான் சுத்துவட்டார இரண்டு கிலோமீட்டர்களுக்கு. ராத்திரி பகலாய் ஷிப்ட் போட்டுக்கொண்டு அங்கிருந்த மலைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்த சப்தம் மட்டும் இரவு வேளைகளில் கேட்கும். அந்த குடியிருப்பில் மொத்தம் இருபது இருபத்தைந்து வீடுகள் தான் இருக்கும், அனைத்தும் தனிவீடுகள் பெரும்பாலும் சாப்ட்வேர் இன்ஜினேயர்களுடையது. அதற்கென ஒரு செக்யூரிட்டி சர்வீஸ், குடியிருப்பைச் சுற்றிலும் இரவில் மின்வலை பாதுகாப்பும் உண்டு. ஒன்றிரண்டு முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன் லேசாய் உதறும் அவ்வளவுதான், ஆனால் வலைக்கு அருகில் சென்றால் உய்யென்று சப்தம் மட்டும் பெரிதாய் வரும்.

காலையிலிருந்தே அன்பு குரைத்துக் கொண்டிருந்தான். பாட்டிதான் சொல்லும் நாய்களுக்கு மரணத்தின் சாயல் தெரியுமென்று, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, ரொம்ப நாளா பக்கத்து வீட்டில் இருக்கும் பொட்டை நாயை ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற படைப்புக்களைத்தாருங்கள் நண்பரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன்தாஸ்பின் படைப்பை வரவேற்கின்றோம். தொடர்ந்து நல்ல படைப்புக்கள் வரட்டும்!

முன்பு களத்தில் பிரச்சனைப்பட்ட மோகன்தாஸ் இவர் தானே! அதுவும் ஒரு கதைக்காக என நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது உரிமைக்கு தம் உயிர் துறக்கும் திலீபன் போன்றவர்களின் விருப்பம் தான் இறந்த பின்னும் தன்னால் இப்போராட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே. அப்படி ஓர் திலீபனின் மறைவும் மேகாதாஸிற்கு எம் போராட்ட தியாகத்தை உணரவைத்துள்ளது.

தொடர்ந்து சிறந்த ஆக்கங்களைத் தருவார் என்னும் எதிர்பார்ப்புக்களுடன்..

நட்புடன் பிறேம்.

Link to comment
Share on other sites

எமது தேசத்து தியாகி திலீபனின் மறைவு எமது தேசியப்போராட்டத்தை உணர்ந்து

அதைப்பற்றி எழுதத் தூண்டியுள்ளது. இப்படியான சிறந்த படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி வசந்தன் -

தொடர்ந்து தாருங்கள்......!

விசயம் எல்லாம் தெரிந்தும் - வேணும்னே - கண்ணைமூடிக்கொண்டே - தெருகூத்து ஆடுற -

லால் - லபக்கு-டாஸுகளுக்காக! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.