Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

சகாறா அக்கா, அடுத்தவர்கள் கதையை கேட்டு இயங்க வெளிக்கிட்டால் உங்கள் சுயத்தை ஒரு நாள் இழந்து விடுவீர்கள். எனவே உங்கள் மனதில் பிரதேச வாதம் இல்லாத போது உங்கள் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

வல்வை சகாறா என்ற பெயரில் பிரதேச வாதம் இல்லை. நான் வல்வையில் பிறந்தேன். நீங்கள் அங்கு பிறந்தீர்கள் என்று யாருடனும் சண்டை பிடித்தால் தான் அது பிரதேச வாதம். எழுத்தாற்றல் உள்ளவர், புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக மற்றவர்களுக்காக வாழத்தொடங்குகின்றீர்கள்.

தப்பு.............. :( :( :(

தவறு விசுகண்ணா

நாம் அறிவு தெரிந்த காலம் முதலாக எங்களுக்காக வாழத்தலைப்பட்டதைவிட மற்றவர்களுக்காகத்தான் அதிகம் வாழ்ந்திருக்கிறோம் புதிதாக எதுவும் ஏற்பட்டுவிடவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஈழத்து சகாராக்கள் இருக்கலாம்

ஆனால் வல்வைக்கு ஒன்றுதான்......

அந்த மண்ணுக்கு தலை வணங்காதவன் எவனுமில்லை.

Link to comment
Share on other sites

இல்லை சகாறா என்று வைக்கலாமே?? :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது.

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும். :rolleyes:

சகாறா அக்கா, அடுத்தவர்கள் கதையை கேட்டு இயங்க வெளிக்கிட்டால் உங்கள் சுயத்தை ஒரு நாள் இழந்து விடுவீர்கள். எனவே உங்கள் மனதில் பிரதேச வாதம் இல்லாத போது உங்கள் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

வல்வை சகாறா என்ற பெயரில் பிரதேச வாதம் இல்லை. நான் வல்வையில் பிறந்தேன். நீங்கள் அங்கு பிறந்தீர்கள் என்று யாருடனும் சண்டை பிடித்தால் தான் அது பிரதேச வாதம். எழுத்தாற்றல் உள்ளவர், புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்

Link to comment
Share on other sites

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும்.

பாகன் மற்றும் உங்களுக்கிடையிலான கருத்தாடலைவைத்து எனது பொதுவான கருத்தை எழுதியிருந்தேன். பிரதேசவாதம் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேசம் என்ற பொதுத்தன்மையை சிதைக்கின்றது என்பது உண்மை. அதனடிப்படையில் எனது கருத்து உள்ளது. மற்றபடி ஒருவருடைய பெயர் அவரது தனிப்பட்ட உரிமை மேலும் உங்கள் எழுத்துக்களை அறிந்தவரையில் உங்கள் மீது பிரதேசவாத முத்திரை குத்த முடியாது ஆனால் இந்த பெயரில் இருக்கும் ஊர் உங்கள் எழுத்துக்களுக்கே பிரதேசவாத முத்திரை குத்தி தேசத்தில் இருந்து பிரித்து ஊருக்குள் முடக்கிவிடும் என்ற கவலை இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகன் மற்றும் உங்களுக்கிடையிலான கருத்தாடலைவைத்து எனது பொதுவான கருத்தை எழுதியிருந்தேன். பிரதேசவாதம் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேசம் என்ற பொதுத்தன்மையை சிதைக்கின்றது என்பது உண்மை. அதனடிப்படையில் எனது கருத்து உள்ளது. மற்றபடி ஒருவருடைய பெயர் அவரது தனிப்பட்ட உரிமை மேலும் உங்கள் எழுத்துக்களை அறிந்தவரையில் உங்கள் மீது பிரதேசவாத முத்திரை குத்த முடியாது ஆனால் இந்த பெயரில் இருக்கும் ஊர் உங்கள் எழுத்துக்களுக்கே பிரதேசவாத முத்திரை குத்தி தேசத்தில் இருந்து பிரித்து ஊருக்குள் முடக்கிவிடும் என்ற கவலை இருக்கின்றது.

சுகன் என்னாலும் அதனை உணர முடிந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். :rolleyes:

Link to comment
Share on other sites

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

ஏற்கனவே திண்ணையில் குறிப்பிட்டிருந்தேன் ./........முடியல .........என் உடன்பிறந்த அக்காவும் இப்படித்தான் ..........முடிவு பிழை என்பது மட்டும் திண்ணம் ..........உங்க்பாளைப்ப்றி என்ன என்ன எல்லாம் நினைத்திருந்தேன் ..என் அக்காவை நினைத்தபோது ........அதுதான் என்று முடிவை மாற்றி விட்டேன் .............

கிருபன் அண்ணையும்,சுகன் அண்ணையும் ,உங்களை குழப்பியுள்ளார்கள் ..............இது தான் ஏற்கனவே நான் குறிப்பிட்ட விடயம் ...............எம் குழப்பங்களை நாம் புற்றிந்து கொள்ளும் வரை குழப்புபவர்ளுக்கு வெள்ளிதிசை .....................நன்றி அக்கா[நிர்வாகமும் இதை புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்........]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சுது போ

அப்போ உங்கள் ஆத்தான கவிஞர் புதுவை.......................???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

எனது ஆத்தான கவிஞர் தனது பெயரின் முன் புதுவை என்று வைத்திருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிரதேசவாதத்தை மேற்கொண்டார் என்று எங்காவது யாராவது குற்றஞ்சாட்டினார்களா?

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

என்ன சகோதரி நீங்கள்?

அவர் எழுதிய கருத்தை நீங்கள் வழி மொழிவது போல் நடந்து கொள்கின்றீர்கள்....??? :(

எப்படியோ

எப்படி நீங்கள் மாத்தினாலும் நான் வல்வை சகாரா என்று தான் என்றும் எழுதுவேன்.

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

எனது ஆத்தான கவிஞர் தனது பெயரின் முன் புதுவை என்று வைத்திருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிரதேசவாதத்தை மேற்கொண்டார் என்று எங்காவது யாராவது குற்றஞ்சாட்டினார்களா?

நீங்கள் வல்வை என்று அழைப்பதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை அண்ணா மீதும் இதுபோன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் தன் நிலையில் எவருக்கும் இடம் கொடுக்ககாது இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன். அது சரி இந்த பாகன் என்பவர் யார்? எப்போது இங்கு எழுதத்தொடங்கினார்??

எனக்கு ஒன்றும் புரியல................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய பாகனின் வரவு இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று திண்ணையில் பேசினார் இன்னும் என்னால் அவரை யார் என்று மட்டுக்கட்ட முடியவில்லை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103160

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன்

சரி பெயரை மாத்தியாச்சு

இனி அடுத்து என்ன கேட்பாரோ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் என்மீதான எந்த அவப்பெயரையும் கிளப்ப முடியாது பொறுத்திருந்து பார்ப்போம்.

எனக்கும் தவிர்க்கவும் தெரியும்

தகர்க்கவும் தெரியும்.

எதிராளியின் எழுத்தின் திறன்பொருத்தே எனது கருத்தும் அமையும் விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகர்க்கவும் தெரியும்.

அது தெரிந்ததால் தான் இவ்வளவும் எழுதினேன்.

நன்றி சகோதரி வல்வை சகாரா :icon_idea:

Link to comment
Share on other sites

'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது.

டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்) அடைமொழிகளை நீக்கிவிட்டு தனியாக சகாறா என்று மாற்றினால் இளமை பொங்கி வழியும், சும்மா அந்தமாதிரி யாழில் யெளவனத்துடன் வலம் வரலாம். கிழவியிலிருந்து குமரியாகிய பேறும் கிடைக்கும்.

மேலும்,

'ஈழத்து சகாறா' என்று கூறும்போது உயிர்காத்து வாழ்வு தரும் கனடா நாட்டை புறக்கணிப்பதாகவும் பார்க்கலாம். தவிர, ஈழம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சிங்களமொழிச்சொல் என்றும் இங்கு யாழிலேயே எங்கோ வாசித்ததாக ஞாபகம். ஒரு சிங்களத்தியாக உங்களை மாற்றவேண்டும் என்று யாரோ திட்டம் தீட்டியுள்ளார்கள் போல் உள்ளது. இது சிறீ லங்கா புலனாய்வுத்துறையினதும் சிங்கள அரசினதும் சதியாகவும் இருக்கலாம். எனவே, பெயர் மாற்றம் செய்யமுன்னர் எச்சரிக்கை தேவை.

மற்றையது,

பெயர் பிரதேசவாதத்தை போதிக்கின்றது என்றால்.. யாழில் உள்ள ஏனைவர்கள் உதாரணமாக...

புங்கையூரான்

துன்னையூரான்

மல்லையூரான்

நுணாவிலான்

வல்வை லிங்கம்

இவர்கள் எல்லாம் தலையைக்கொண்டுபோய் எங்கே முட்டுவது?

எல்லாவற்றுக்கும் மேலாக 'யாழ்' எனும் சொல்லே பிரதேசவாதத்தை பறை சாற்றுகின்றது. இதற்கு என்ன செய்வது?

Edited by கரும்பு
  • Like 4
Link to comment
Share on other sites

சுய தணிக்கை செய்துவிட்டேன் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்

புரிந்துணர்வுடன் உறவுகளாகிய நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ..............நானும் மனிதன் என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதை நீக்கியுள்ளேன் .மணிப்பஈர்கள்,புரிந்துகொள்வீர்கள்.......நன்றி :):icon_idea:

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்பதை ஏன் நாம் யாழ்ப்பாணமாக பார்க்கவேண்டும்..............??? :(

யாழ் என்னும் இசைக்கருவியாகத்தான் நான் பார்க்கின்றேன் :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

உங்கள் திரியில் அவர் கருத்துகளை வாசித்த பின் எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அது தான் இதை நான் நேற்று அவரிடமே கேட்டு விட்டேன். அவருக்கு உங்கள் மேல் அவ்வளவு அன்பு தானே அக்கா.... :D நேற்று ஏதோ க்ளு கொடுத்தார். நான் நினைத்தேன் அவர் யார் என்று கண்டு பிடித்து விட்டீர்கள் என்று. இன்னும் கண்டு பிடிக்கவில்லையா?

எனக்கும் வல்வை சகாறா என்ற பெயரே பிடித்திருக்கிறது. நானும் அப்படியே அழைப்பேன். :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது

ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது

ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்

அதுதுதுதுதுதுதுதுதுதுது

சுண்டடடடடடடடடடடடடடல் :icon_idea:

ஒரு எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள்

கோபம் வந்தால் எழுத்து சரியாக வருகிறது சுண்டலுக்கு.

பலமுறை கவனித்தேன்

பச்சை கடன் தாங்கப்பா

Link to comment
Share on other sites

அதுதுதுதுதுதுதுதுதுதுது

சுண்டடடடடடடடடடடடடடல் :icon_idea:

ஒரு எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள்

கோபம் வந்தால் எழுத்து சரியாக வருகிறது சுண்டலுக்கு.

பலமுறை கவனித்தேன்

பச்சை கடன் தாங்கப்பா

:D :D

Link to comment
Share on other sites

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.