Jump to content

வாடைக்காற்று


Recommended Posts

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான்.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நீங்கள் எழுதிய 'செங்கை ஆழியன்' என்ற தலைப்பின் மூலமும், சின்னக்குட்டியின்' ஊர் உளவாரம்- வாடைக்காற்று' மூலமும் பலதகவல்களினை அறியக்கூடியதாக இருந்தாலும், அவற்றில் வராத செய்திகளினையும் 'வாடைக்காற்று' என்ற புதிய தலைப்பின் மூலம் இப்படத்தினைப்பற்றிய மேலதிகத்தகவல்களினை அறியக்கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

சிறு வயதில் வாசித்த இந்த நாவல், பிறகு திரைப்படமாக பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரபாவின் மூலம் இவ் நாவலின் கதை மீண்டும் யாபகத்துக்கு வருகிறது. இதில் நடித்த ஜேசுரட்டிணம் தான் TTN ' நையாண்டி மேளம்' தொடரில் நடிப்பவரா?

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு பாராட்டுக்கள் கானபிரபா, செங்கை ஆழியனின் சில கதைகளை படித்தபோதும்

தலைப்புகள் மறந்துவிட்டது. நீங்கள் இதில் கூறியதும் ஞாபகம் வருக்கிறது. இந்தப்புத்தகம்

நான் வாசித்து இருக்கிறேன். அருமையான கதை. நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி கானபிரபா.

Link to comment
Share on other sites

வணக்கம் அரவிந்தன், மற்றும் ரசிகை

வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.

அரவிந்தன்

யேசுரட்ணம் நையாண்டி மேளத்தில் நடிக்கவில்லை, அப்புக்குட்டி ராஜகோபாலின் தம்பி தான் நடிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடைக்காற்றில் நடித்த ஆனந்தராணி பாலேந்திராவும், டாக்டர் இந்திரகுமாரும் இலண்டனில் வாழ்ந்துவருகிறார்கள். ஆனந்தராணி பாலேந்திரா கணவருடன் தமிழ் அவைக்காற்றுக் கழக மேடை நாடகங்களைத் தயாரித்தும், நடித்துவருகிறார். அத்தோடு தீபம் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமைகளில் செய்திகள் வாசிப்பார். பல வருடங்களாக அரங்கேற்றங்கள் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து திறம்பட வழங்கிவருகிறார்.

டாக்டர் இந்திரகுமார் ஓர் சிறந்த எழுத்தாளரும்கூட. இவர் எழுதிய "விண்வெளியில் வீரகாவியங்கள்" என்ற புத்தகத்திற்கு ஈழத்து, தமிழக அரசின் பரிசுகளும் கிடைத்தன. தற்போது கிழக்கு இலண்டனில் வசித்துக்கொண்டு எழுதுவதோடு, தனது மருத்துவப் பணியையும் தொடர்ந்து செய்துவருகிறார்.

Link to comment
Share on other sites

வணக்கம் செல்வமுத்து மாஸ்டர்

மேலதிக தகவல்களை பகிர்ந்துகொன்டமைக்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

வாடைக்காற்று படம் பற்றிய விமர்சனத்திற்கு இடையில் படங்களை போட்டு நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம் கானபிரபா,

ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களை இணைக்கின்ற உங்கள் பணி பாராட்டுக்குரியது.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

அன்பின் மணிவாசகன்

தங்கள் கருத்துக்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கை ஆழியானின் குவேனி ஜன்மபூமி இரு நாவல்களும் வாசியுங்கள் மிக அருமையாக எழுதியுள்ளார். இவரின் அனைத்து கதைகளும் சிறந்த படைப்புகள் யானை காட்டாறு போன்றவற்றில் வ்ன்னிக்காட்டு வாழ்க்கை இனிக்கும். கங்கை கரையோரம் பேராதனைப் பல்கலைக் கழக வாழ்க்கை இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

Link to comment
Share on other sites

'குவேனியின் காதலன்' நாவலின் இறுதியிலே வடபகுதித் தமிழர்களின் மேனி நிறங்கள் ஒரே மாதிரி இல்லாததற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். அந்நாவலைத் தொடர்ந்து அதைப்பற்றி ஏதாவது விமர்சனங்கள் வருமா என அப்போது எதிர்பார்த்தேன். என் பார்வைக்கு கிட்டவில்லை.

அந்த காரணம் இதுதான்:

விஜயனதும் நண்பர்களதும் மனைவிகளும் பிள்ளைகளும் பிறிதொரு கப்பலில் நாடுகடத்தப்பட்டார்கள் எனவும், கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக அந்தக் கப்பல் வடபகுதியில் கரையொதுங்கியதாகவும், அவர்களை வடபகுதியிலுள்ளவர்கள் அடிமைகொண்டார்கள் என்பதுவுமே அது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.