Jump to content

.சுவிஸ் துர்கா மாநிலத்தில் உண்ணாவிரத போராட்டம்!


Recommended Posts

தமிழக மாணவர்களை ஆதரித்து சுவிஸ் துர்கா மாநிலத்தில் உண்ணாவிரத போராட்டம்!

மாபெரும் எழுச்சியாக தமிழ்நாட்டு  மாணவர்களின் ஓயாத போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக, அம் மாணவச்செல்வங்களின் எழுச்சியை ஆதரித்து சுவிஸ் துர்க்கா மாநில கலை கலாச்சார மன்றத்தினால் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அன்றைய மாணவர் புரட்சி ஐரோப்பாவுக்கு விடுதலை, இன்றைய மாணவர் புரட்சி எம் ஈழதேசத்தின் விடுதலை. எமக்காக பசி என்னும்
ஆயுதத்தை எடுத்து போராடும் எம் தாய் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களை ஆதாரித்து துர்க்கா கலை கலாச்சார மன்ற வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது.


எதிர்வரும் 23ம் திகதி (23-03-2013) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 18:00 மணிவரை Lauligstr.02 8570 Weinfelden  என்னும்
முகவரியில் அமைந்துள்ள துர்க்கா கலை கலாச்சார மன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள இவ் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உள்ளங்களும் ஒருமித்த உணர்வோடு கலந்து கொள்ளவும்.


இவ் உண்ணாவிரத போராட்டம் பற்றிய மேலதிக விபரங்களை தெரிந்துகொள்வதாயின், (+41) 076 506 49 96 / 078 615 59 73  இலக்கங்களில் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.

 

எமது வானொலிக்கு துர்கா வாழ் மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட செய்தியை இங்கே இணைந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.