Jump to content

வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை


Recommended Posts

வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை

அணுஆயுதங்களை எடுத்துச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.

வடகொரியா ஏற்கெனவே அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய 6 புதிய வகை ஏவுகணைகளை சோதனை நடத்தியது. இதில், 'டெபோடாங்}2' என்ற ஏவுகணை அமெரிக்கா வரை தாக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. கொரியா}ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்தன.

கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது. இக்கூட்டத்திற்கு ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளது.

இத்தகவலை ஐநா.,வுக்கான பிரெஞ்சு தூதர் ஜீன் மார்க் தெரிவித்துள்ளார்.

newstamilnet.com

Link to comment
Share on other sites

வடகொரியா மீது தடைவிதிக்கும் யோசனைக்கு சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு

வடகொரியா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டமைக்காக அந்த நாட்டிற்கு எதிராக தடைகளை விதிக்கும் யோசனைக்கு சீனாவும் ரஷ்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வட கொரியாவின் ஏவுகணை மற்றும் பேரழிவு ஆயுதத் திட்டங்களுக்கு உதவக் கூடிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உலக நாடுகள் வழங்குவதை தடை செய்யும் தீர்மானமொன்றை ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன் பாதுகாப்பு சபையில் கொண்டு வந்துள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து அச்சுறுத்தாத தீர்மானமொன்றை விரும்புவதாகத் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புச் சபையில் இரு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளதன் காரணமாக வட கொரியாவிற்கு எதிரான தடைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளன.

அணுவாயுத நாடென தன்னை அறிவித்துள்ள வட கொரியா பொருளாதாரத் தடை என்பது யுத்தப் பிரகடனத்திற்கு ஒப்பானது எனத் தெரிவித்துள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவுக்கு எதிரான தடைகள் நிலைமையை மோசமாக்கும் என தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை தோல்வியில் முடிவடைந்துள்ள போதிலும், அந்த நாட்டை அதன் அணுவாயுதத் திட்டங்களை கைவிடச் செய்யும் முயற்சியிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் நீண்ட தூர ஏவுகணை நீண்ட நேரம் விண்ணில் செல்லவில்லை என்பதை அறிந்துள்ளோம். எனினும், இதற்காக எமது முயற்சிகளை கைவிடப் போவதில்லை என புஷ் தெரிவித்துள்ளார்.

புஷ், ஜப்பானிய பிரதமர் யுனிச்சிரோ கொய்சுமியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இருவரும் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கொண்டு வரும் தீர்மானம் குறித்து இணங்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி, தென்கொரிய ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான், வட கொரிய அதிகாரிகள் தனது நாட்டிற்கு வருவதை உடனடியாக தடை செய்துள்ளது.

தென் கொரியா தனது நாட்டிலிருந்து வட கொரியாவிற்கு உணவு மற்றும் உரங்கள் செல்வது பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது. எனினும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தலைவரான பிரான்ஸ் தூதுவர் வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை குறித்து 15 நாடுகளும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

13 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளதாகவும் இரண்டு நாடுகள் தலைவரின் அறிக்கையை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானால் கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை குறித்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலகில் நீண்ட தூர ஏவுகணை பரவலுக்கு முக்கிய காரணமான நாடு வட கொரியா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்.

Link to comment
Share on other sites

அப்ப அமெரிக்காவுக்கு யார் தடை போடுறது. அவையட்டத்தானே பேரழிவு ஆயுதங்களும் நீண்டதூர ஏவுகணைகளும் குவிஞ்சு கிடக்கு...! :wink: :roll: :idea:

Link to comment
Share on other sites

வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் தான் (அமெரிக்க)வல்லாதிக்கத்தை எதிர்த்து நிற்கிறது. தொடர்ந்து நிற்பார்களா நாணற்புல் போல் வளைந்து குடுப்பார்களா காலம் தான் பதில் சொல்லும். :roll:

Link to comment
Share on other sites

கியுபா எதிர்த்து ஆலமரமா நிற்கவில்லையா..! அகதிகள் ஆக்கி மக்களைக் கவர்ந்து பாத்திச்சினம்...பொருளாதாரத்த

Link to comment
Share on other sites

கியூபா பணிய மறுக்கியதே தவிர ஈரான், வடகொரியாபோன்ற (அணுவாயுத)பலமான நாடு கிடையாது. இன்னமும் கியூபாவின் தீவு ஒன்று அமெரிக்காவின் கையில் தான். அமெரிக்காவின் பிரபல்ய சிறைக்கூடம் ஒன்றும் அங்கே உள்ளது. அமெரிக்கா அந்தத் தீவை கொடுக்க மறுத்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தனின் பலம் தான் அங்கே ஆக்கிரமிப்பு சக்திகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றது சதாம் உசைன் பலமற்றவர் என்று அறிந்ததால் குதிக்க முடிந்த அமெரிக்காவிற்கு, அமெரிக்கா வரை ஏவுகணைகளை அனுப்பும் சக்தி பெற்றுள்ள வடகொரியாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை??

நாமும் பலமாக இருக்கும்போது தான், எம் மீதான அடக்குமுறைகளை தகர்க்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்

பொருளாதாரத்தடைகளை வடகொரியா மீது விட்டு எவ்வித பலனையும் ஜநா பெறப்போவதில்லை. அது ஒரு சுத்துமாத்து. வழமையாக சீனா, ரசியா தவிர எந்த நாட்டோடும் வடகொரியா உறவை வளர்க்கவில்லை. அவைகளும், இத்தடை குறித்து எதிர்ப்பதால் பலன் புூச்சியம் தான்!!

Link to comment
Share on other sites

அப்ப அமெரிக்காவுக்கு யார் தடை போடுறது. அவையட்டத்தானே பேரழிவு ஆயுதங்களும் நீண்டதூர ஏவுகணைகளும் குவிஞ்சு கிடக்கு...! :wink: :roll: :idea:

ஏன் குருவிஸ் நீங்களும் மதியும் போடலாமே உங்களுக்கு

ராம்ராஜின் உதவியும் கிடைக்குமே :P :P :P :P

அல்லது ஆனந்தசங்கரி( உங்களுக்கு சின்னவயது பிள்ளைகள் இருந்தால் கவனம் வீட்டுக்கு எடுப்பது ஒக்கே)

Link to comment
Share on other sites

வடகொரியா அணுச்சோதனை செய்ததற்காக அவசர கூட்டம் போடும் ஐ.நா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு அணுகுண்டுச் சோதனை செய்த போது என்ன செய்தார்கள்.

மாமியார் உடைத்தால் மட்குடம் மருமகள் உடைத்தால் பொற்குடமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.