Jump to content

'இத்தமிழச்சியால் எழுந்து நிற்க முடியாது என யார் சொன்னது?'


Recommended Posts

thusa+family.jpg2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது கடின முயற்சியால் தற்போது மிகவும் தேறி விட்டார். ஆம் வைத்தியர்களின் முடிவுக்கு மாறாக இவரால் இப்போது உபகரணத்தின் உதவியுடன் நிற்க முடிகின்றது. இது மருத்துவர்களை வியப்புக்குள்ளாக்கி விட்டது.

thusa.jpg

மேலும் இம்முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக இவரால் மெல்ல மெல்லத் தனது சொந்தக் கால்களால் நடக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இவர் துப்பாக்கிச் சூடு பட்ட முதல் மணிநேரங்களில் இரு முறை இதயத் துடிப்பு நின்று பரா மெடிக்ஸ் உதவியால் இயங்க வைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிருடன் இருப்பதே போதும் என்ற நிலை மாறி இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்குக் காரணமாக துஷாவின் தன்னம்பிக்கை மாத்திரமின்றி அவருக்கு ஊக்கமளித்து மிக ஆதரவாகக் கவனித்துக் கொண்ட பெற்றோரும் சகோதரர்களும் கூட அடங்குவர்.

இந்நிலையில் துஷா தனக்கு மிக விரைவில் குணமடைய வேண்டும் எனக் கடும் மனவுறுதிப்பாட்டுடன தினசரி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் ஏனைய சிறுவர் சிறுமியருக்கு இணையாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சிறுமி தனக்கு நடனமாடவும், நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடவும் உலகம் முழுதும் சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளதாகக் கூறியுள்ளாள். இச்சிறுமி மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட 21 வயதுடைய இளைஞனுக்கு கடந்த வருடம் 17 வருட சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

துஷாவின் மருத்துவ செலவுகள் இன்னமும் தொடர்வதால் அவருக்கு உதவி செய்ய விரும்புவோர் BACS payment மூலம் account number 53441075, sort code 20-44-22க்கு அனுப்பலாம்.

 

http://4tamilmedia.com/all/tips/12699-london-gang-shooting-victim

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறுமியே..! தன்னம்பிக்கையே வாழ்க்கை என்பதற்கு நீவிர் சாட்சி!

 

துஷாவின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்கூட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!!

Link to comment
Share on other sites

மிகவும் சந்தோசமான செய்தி! சோர்ந்து விடாமல் ஊக்கம் கொடுக்கும் பெற்றோர் மிகவும் மெச்சப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. துஷா விரைவில் நடக்கமுடியும் என்று நம்புகின்றேன்,.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியா இருக்கு, வைத்தியரால் இனி எழுந்து நடமாட முடியாது என்று சொன்ன சிறுமி தன் தன்னம்பிகையாலும் விடாமுயற்சியாலும் எழுந்து நிற்பதைப்போல் நாமும் நம்பிக்கை விடாமுயற்சியோடு எம் இலட்சியப் பயணத்தை தொடர்ந்தால் நிச்சயம் வெல்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தகவலுக்கு, இணையத்தில் சுட்டது: http://www.bbc.co.uk/news/uk-england-london-19717503 http://www.dailymail.co.uk/news/article-2120557/Thusha-Kamaleswaran-shooting-Why-gunmen-bars.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக‌ ம‌கிழ்ச்சியான‌ செய்தி. ம‌னித‌ உட‌ல், அதுவும் ந‌ர‌ம்புத் தொகுதி மிக‌வும் அதிச‌ய‌மான‌ செய‌ல் பாடு கொண்ட‌து. மூளையில் இர‌த்த‌ ஓட்ட‌ம் த‌டைப்பட்டு ஏற்ப‌டும் stroke நோயாளிக‌ளின் மூளையில், பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ந‌ர‌ம்புக் க‌ல‌ங்க‌ளின் தொழிலை, சுற்றியிருக்கும் ஆரோக்கிய‌மான‌ ந‌ர‌ம்புக் க‌ல‌ங்கள் எடுத்துக் கொண்டு ப‌குதிய‌ள‌வான‌ உட‌ல் அவ‌ய‌வ‌த் தொழிற்பாட்டை மீள‌ ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. துஷாவின் விட‌ய‌த்தில் முண்ணான் பாதிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. முண்ணானை ஆக்கும் ந‌ர‌ம்புக் க‌ல‌ நீட்சிக‌ள் (axons) மீள‌வும் புதுப்பிக்க‌ப் ப‌டும் ஒரு செய‌ல் பாடு ந‌டைபெறுவ‌து சாத்திய‌ம். அனேக‌மாக‌ இது உட‌ற்ப‌யிற்சியாலும் ம‌ன‌ உறுதியாலும் வேக‌ப் ப‌டுத்த‌க் கூடிய‌ ஒரு செய‌ல்பாடும் கூட‌. அது வ‌ரை ம‌ன‌ம் த‌ளராம‌ல் இருக்க‌ எல்லோரும் கை கொடுக்க‌ வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மகள் மேலும் குணமடைய எல்லாம் வல்ல அந்த இறைவனை நாடுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.முயற்ச்சிக்கு எப்பவும் பயன் உண்டு.இணைப்பிற்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சியான செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி எங்கட கோயிலுக்கு குடும்பமாக வருவினம்...இச் சிறுமிக்கு தன்னம்பிக்கையும்,தெய்வ பக்தியும் அதிகம்...துசாவையும்,அவவின் பெற்றோரையும் பாராட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷா முழுதும் குணமடைந்து நடைபோட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி, வாழ்த்துக்கள் துஷாவிற்க்கும் மனம் தளராமல் ஊக்குவித்த பெற்றோருக்கும், விரைவில் பூரண குணமாக பிரார்த்திக்கிறேன். பலர் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமே கதைப்பார்கள், இப்பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகிறது, என் வீட்டிலும் பிறந்தவுடன் மகளுக்கு கழுத்து எலும்பு நேராக இல்லை, பின் ஒரு வைத்தியரை வைத்து மசஜ் செய்துதான் நேராக வந்தது, ஆனா உறவினர்களின் தொல்லைகள் & கதைகள் தாங்க முடியாமல் பல நாட்கள் மனைவி அழுதிருக்கிறார்

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. விரைவில் நன்கு நடப்பதற்கு வாழ்த்துவதுடன் இறைவனை
வேண்டுகிறேன். சுட்ட மிருகத்திற்கு 17 வருட ஜெயில் காணாது. ஆக்கள்
இருக்கும் கடைக்குள்  உங்கள் மோட்டு வேலையைக் காட்டுவதா. பெற்றோர்
சகோதர்கள் தான் இந்தச் சிறுமியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான  தகவல் ,முயற்சி  பலனைத்தரும் .

பெற்றோருக்கு  வாழ்த்துக்கள் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. இன்னும் விரைந்து பூரண குணம் பெற்று தான் வைத்தியராகனும் என்று துஷா முன்னர் ஒரு தடவை பிபிசியில் சொன்னதற்கு இணங்க.. அவர் விருப்பம் போல ஆகி..  வாழ வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. துஷா விரைவில் நடக்கமுடியும் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷா முழுதும் குணமடைந்து நடைபோட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நம்பிக்கையுள்ள சிறுமி. கண்டிப்பாக ஒருநாள் நடப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.