Jump to content

புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள்


Recommended Posts

புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள் காரணம்!

கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் கிருஸ்ணபிள்ளை கமலநாதன் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலைக்கு டென்மார்க் ஊடகங்கள் முக்கிய பணியை ஆற்றியுள்ளன.

கிருஸ்ணபிள்ளை கமலநாதன் டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் பராமரிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் இணைப்பாளராக செயற்படுபவர். இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனையில் வைத்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்டார். "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்ட கமலநாதன் பின்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறிலங்கா இராணுவம் கமலநாதனை கருணா குழுவிடம் ஒப்படைத்தது. இப்படிப் பந்தாடப்பட்ட கமலநாதன் கடைசியில் கருணா குழுவால் பொலநறுவையில் உள்ள தீவுச்சேனையில் அடைத்து வைக்கப்பட்டார்.

கமலநாதன் கடத்தப்பட்ட செய்தி வெளியானதும் டென்மார்க்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தீவிரமாக செயலில் இறங்கினார்கள். டென்மார்க் ஊடகங்களுக்கு இச் செய்தியை தெரியப்படுத்தினார்கள். அடுத்தநாள் கமலநாதன் இராணுவ துணைக் குழுவால் கடத்தப்பட்டார் என்கின்ற செய்தி அனைத்து டென்மார்க் ஊடகங்களிலும் வெளிவந்தது. டென்மார்க்கின் இரண்டு தேசிய தொலைக்காட்சிகளும் இச் செய்தியை ஒளிபரப்பின.

கமலநாதன் கடத்தப்பட்ட செய்தி டென்மார்க் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, டென்மார்க்கில் உள்ள கருணா குழுவின் கைக்கூலிகள் வெலுவெலுத்துப் போனார்கள். இது நாள் வரை இக் கைக்கூலிகள் தம்மை ஜனநாயகவாதிகளாகக் காட்டிக் கொண்டு, டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் இந்தக் கடத்தல் செய்தி இவர்களை டென்மார்க் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விட்டது. கருணா குழுவிற்காக இணையத்தளங்களை நடத்துகின்ற இக் கைக்கூலிகள் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்தார்கள். உடனடியாக கருணா குழுவுடன் தொடர்பு கொண்ட இவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை எடுத்து விளக்கி, கமலநாதனை விடும்படி கூறினார்கள். கமலநாதனை முதலில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவே கடத்தியிருந்தது. இந்தச் செய்தியும் கசியுமானால், அது மேற்குலக ஊடகங்களுக்கு ஈராக்கில் நடக்கும் சம்பவங்களையே நினைவுபடுத்தும். இந்த விடயமும் கடத்தல்காரர்களுக்கு உணர்த்தப்பட்டது. இதை அடுத்து கருணா குழுவும் கமலநாதனை விடுவித்தது.

டென்மார்க்கில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்களும் டென்மார்க் ஊடகங்களும் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர் கமலநாதனை கொலை வெறி பிடித்த கருணா குழுவிடம் இருந்து காப்பாற்றுவதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர். இவர்களுடைய இப் பணி போற்றத்தக்கது. ஊடகங்கள் ஆற்றிய இப் பணியை எண்ணி ஒரு ஊடகமாக நாமும் பெருமை கொள்கிறோம்.

webeelam.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.