Jump to content

நிழற்பட புலனாய்வு


Recommended Posts

.

நிழற்பட புலனாய்வு

 

 

 

படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும்.  :icon_idea:
 
 
கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும்.  :)
 
 
 
சரி.. முதலாவது.
 
 
 
 
1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?
 
 
5E3A4597E98649C6B2B7BB0ECAFF2D11.jpg
Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம் எங்கே எடுத்தது என்றால், நீங்கள் எங்கே எடுத்தது என்பதையும் சொல்ல வேண்டுமா? இங்கே தான் . கடைசிப்படம்... http://www.matrixgames.com/forums/tm.asp?m=2460775&mpage=1&key=

Link to comment
Share on other sites

சரி..
 
இங்கு கண்டுபிடிப்பதற்குரிய காரணங்கள் தான் முக்கியம்.  :icon_idea:  :icon_idea:
 
அடுத்தமுறை image shag / some image server இன் மூலம் தரவேற்றுகிறேன்.
 
URL இருப்பதால் தானே இலகுவாகிறது.  :)


பஞ்சி காரணமாக தரவேற்றாமல் விட்டுவிட்டேன். 



அதில் இருக்கும் விசயங்களைப் பட்டியல் இடுங்கள்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டோ என்பது ஆங்கிலச்சொல் ஆங்கிலத்தில் எழுதப்படுவது தவிர்கப்படவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அறைகளுடன் கூடிய மாடிக் கட்டிடம் ஒன்று காணப்படுகிறது. பக்கத்தில் கடற்கரை உள்ளதால் 
காற்றில் பிரித்தானிய, அமெரிக்கக் கொடிகள் பறக்கின்றன. இரண்டே இரண்டு சிற்றுந்துக்கள் காணப்படுவதால் அங்கு எதுவும் நடைபெறவில்லை.

Link to comment
Share on other sites

சரி..
 
1. பிரித்தானியக் கொடி அமெரிக்கக்கொடியை விட சற்று உயரமாகப் பறக்கின்றது. 
 
ஆகவே இடம் பிரித்தானியாவுக்குச் சொந்தம்.
 
2. தென்னை மரங்கள் பின் புலத்தில். 
 
- ஆகவே அயனமண்டலப் பிரதேசம்.( Tropical )
 
3. படம் நிலமட்டத்திற்கு அண்மையில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் பின்னால் கடல் தெரிவதால்..
 
‍   - இடம் கடல் மட்டத்தில் இருந்து உயரம் குறைவாக இருக்க வேண்டும்.
 
 
4. கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் தரைப்பகுதி ( Floor ) 1 1/2 அடிக்கு அதிகமாக‌ அளவுள்ள கொன்கிரீட்டால் பலமாகப் போடப்பட்டுள்ளது.  அத்தோடு 3 க்கு மேற்பட்ட கொன்கிரீட் தூன்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
‍ - ஆகவே இது குண்டுவீச்சுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய இராணுவ கட்டிடம்.
 
5. தெருவின் ஓரத்தில் இருக்கும் மழைநீர் ஓடும் துளைகள்..
 
 - பொதுவாக மழைநீர் கான்கள் தெருமட்டத்தில் திறக்கும். கான் கிண்டும் அளவிற்கு நிலம் ஆழமில்லாதப்டியால் துளை போட்டுள்ளார்கள்.
 
6. அமெரிக்க பிரித்தானிய கொடிகள் கூட்டாகப் பறப்பதால் இரண்டு நாடுகளும் சம்பந்தப் பட்டுள்ளன.
 
இவற்றை சேர்த்துப்பார்த்தால்..
 
கடலோடு, கடல் மட்டதிலும் அதிகம் உயரமில்லாதா, இராணுவ, அமெரிக்க‌ பிரிட்டன் கூட்டு , பிரிட்டன் சொந்தம், அயனமண்டல...
 
இப்படியான இடங்கள்:
 
1. பிலிப்பைன்ஸ்
2. டியகோ கார்சியா
3. கியூபா
 
பில்ப்பைன்ஸ், கியூபா போன்றவை பிரிட்டனுக்குச் சம்பந்த மில்லாதவை.
 
ஆகவே டியகோ கார்சியா.
 
டியகோ கார்சியாவின் சராசரி உய்ரம் கடல் மட்டத்தில் இருந்து 4 அடிகள் மாத்திரமே.
 
படம் அமெரிக்க படைத்தள அலுவலகம்.
 
 
 ********************************************************
 
 
சுமேரியாவில் கண்டெடுத்த இரண்டு உடைந்த சட்டித் துண்டுகளை வைத்து நாம அங்கிட்டு இருந்து தான் இங்கிட்டு வந்தோம் என்று எழுதுபவரிடம் கூடுதலாக எதிர்பார்த்தேன்.  :D
 
 
சோபா, தூயவன், பெருமால், சித்தன் , மெசோ நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுவராசியமான தலைப்பு ஈசன்.
தொடர்ந்து படங்களை, இணையுங்கள்.... துப்புத் துலக்க ஆவலாயுள்ளோம்.Searching_Emoticon.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள் ஈசன்.

Link to comment
Share on other sites

ஆந்திரா பொலிஸார் நக்ஸலைட் தீவிரவாதி ஒருவர் எந்த நாட்டுக்ச் சென்று வந்தார் என்பதைக் கண்டுபிடிப்பதில் உங்கள் உதவியை நாடியுள்ளனர். அவரின் கணனியில் இருந்து 8 படங்களை ஒன்றுசேர்த்து பின்வரும் படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கண்டுபிடியுங்கள்.. காரணத்தோடு.  :icon_idea:

 

 

AP_zps45d6aed0.png

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் 2 - ராஜஸ்தான்.
படம் 4 - காஷ்மீர்.
ப‌டம் 5 - தமிழ் நாட்டின் கொடைக்கானல், ஊட்டி பகுதியாக.. இருக்கலாம்.
ஃபோட்டொ புல‌னாய்வு, தொட‌ரும்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், நல்ல திரி ஒன்று!

 

படங்கள் படங்கள் கொஞ்சம் சின்னனாக் கிடக்கு! அதிலையும் அரைவாசியை, உங்கட இலக்கங்கள் சாப்பிட்டுப் போட்டுது! :o முயற்சிக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C8

 

ஆனால் காரணம் சொல்ல மாட்டேன். உள்ளக புலனாய்வு அறிக்கைகளை எல்லாம் இப்படி பலர் முன்னிலையில் பகிரக் கூடாது.. ^_^:wub::D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Photo --- புகைப்படம்

புகைப்படம்- கறுப்பு வெள்ளைப் படம்! (புகை=கறுப்பும், வெள்ளையும்)

 

நான் நினைக்கிறன் நுணா, நிழற்படம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்! :icon_idea:

Link to comment
Share on other sites

சில படங்கள் திசை திருப்புவதற்காக இணைக்கப்பட்டவை.
 
C1 - செவ்வாய்க்கிரக நிலம்.
C2 - ராஜஸ்தான் பாலைவனம் (இந்தியா)
C4 - தாஜ்மஹால் கோபுரம் (இந்தியா)
C8 - ஆக்ரா வீதி (இந்தியா)
 
இந்தியா ஆந்திராவாசிக்கு வெளிநாடல்ல.செவ்வாய்க் கிரகமும் வெளிநாடல்ல.
இப்படங்கள் குளப்புவதற்காக இணைக்கப்பட்டவை.
 
ராஜஸ்தான் படம் தலைப்பாகை, பல்லக்கு என்பவற்றை வைத்தும், மினரட் என்னும் கோபுரத்தை வைத்து தாஜ்மகாலையும், நிழல் குடை டிரக்டர், பின்னால் வரும் லொறி, ஆட்கள் என்பவற்றை வைத்து C8  இந்தியா என்பதையும் ஊகிக்கலாம்.
 
நாசாவின் செய்வாய்ப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இலகுவாக C1 ஐ அடயாளம் காண முடியும்.
 
ஆகவே உங்கள் புலனாய்வை மிகுதியான படங்களின் மேல் திருப்புங்கள்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை, பாலைவனம் என்பதால் ஆப்கான் ஆக இருக்கலாம். ஆனால் நச்சலைட்டுக்கு அங்கே என்ன வேலை. நீங்கள் நச்சலைட்டும், தலிபானுக்கும் தொடர்பு எனப் புதுக்கதை கிளப்புகின்றீர்கள்!!

Link to comment
Share on other sites

ஜோர்டன் நாடு என நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

மலை, பாலைவனம் என்பதால் ஆப்கான் ஆக இருக்கலாம். ஆனால் நச்சலைட்டுக்கு அங்கே என்ன வேலை. நீங்கள் நச்சலைட்டும், தலிபானுக்கும் தொடர்பு எனப் புதுக்கதை கிளப்புகின்றீர்கள்!!

 

 

நக்ஸல் பாரி அறவழிப் போராட்டகுழுவின் கொள்கைகளுக்கு தோழமையுள்ள பிரதேசத்தில் தான் அந்த நாடு உள்ளது.  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கோபி பாலைவனத்தின் மஞ்சள் நதிக்கு அண்மையில் இருக்கும் ஓர் இடமாக இருக்கலாம்.  :unsure: 

Link to comment
Share on other sites

1. பின் புலத்தில் உயர்ந்த மலைத்தொடருடன் கூடிய வெண்மணல் பாலைவனம்.
 
ஆப்கானில் மலைத்தொடருடன் கூடிய பாலைவனம் உள்ளது. இவை வெண்மணல் அற்றவை. மத்திய கிழக்கில் ஜோர்தானில் மலைகளுடன் கூடிய பாலைவனம் உள்ளது. ஆனால் இது வெண்மணல் அற்றது. சீனாவில் மலைகளுடன் கூடிய வெண்மணல் பாலைவனம் உள்ளது.
 
 
2. உயர்ந்த கிளைகளைக் கொண்ட மரங்கள் அதிகமாகவும் ஈச்சை மரங்கள் குறைவாகவும்.
 
மத்திய கிழக்கு பாலைவனத்தில் ஈச்ச மரங்களே அதிகம். சீன கோபி பாலைவனத்தில் சிறிய விவசாய மரங்கள் உண்டு.
 
 
3. கட்டிட அமைப்பு. சீன கூரை அமைப்போ, அரேபிய கட்டிட அமைப்போ காணப்பட வில்லை. ஸ்பானிய பெரிய வளைந்த ஜன்னல் அமைப்புள்ள மாடிக்கட்டிடம் தெரிகிறது.
 
 
ஆகவே இது..
 
1. மத்திய கிழக்கல்ல‌
2. ஆப்கான் அல்ல.
3. சீனா அல்ல.
 
பின் எது ?
 
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாடின் பாலைவனச் சோலை.
 
hotels-huacachina-oasis.jpg
Link to comment
Share on other sites

ஃப்ளோரிடா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.