Jump to content

ஷோபா சக்தியின் மண்டையை உடைக்க போட்ட சபதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து......

கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே?

வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை

( நிருபர் : என்னமோ பெரிய இவன் மாதிரிதான் பேசுரான். மூனுச்சிட்டு வெளையாடிட்டு இருந்துச்சு நாயிஇ கூப்பிட்டு உட்காரவச்சா எகத்தாளத்தை பாறேன்)

கே: சமீபத்தில் பில் கேட்ஸின் அறக்கட்டளைக்கு வாரன் பப்பட் 3000 மில்லியன் டாலர்களை கொடுத்து இ இந்த பணம் ஒவ்வொரு டாலரும் ஏழைகளுக்கு பயன்படும்னு வாழ்த்தி இருக்காறே அது பற்றி ?

வர: கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம்.

நிரு: இதுதான் பதிலா

வர : இதுதான் உண்மை

கே: உங்களின் அரசியல் எதைச்சார்ந்து இயங்குகிறது ?

வர: என்னுடைய அரசியல்இ அதிகாரங்களுக்கு எதிராய் இ அது யாருடைய அதிகாரமாய் இருந்தாலும் அதற்கு எதிராக இயங்குவதே ஆகும். அதே வேளை எம்மின் அதிகார எதிர்ப்பு வேறு சில மையங்களுக்கு ஆதராவாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்

கே: அதிகார எதிர்ப்பு குறித்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் போக்கு திமுக வையும் அதன் தலைமைகளையும் சார்ந்தே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு " நாகு " போன்ற வைகோ ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறதே?

வர : அதை நான் எந்தச்சூழலிலும் மறுக்கவில்லை அதே வேளை கருணா நிதி குடும்ப அரசியலை தமிழக அரசியற்களத்தில் விமர்சிக்க இங்கு இருக்கும் வேறு யாருக்கும் தகுதியில்லை என்கிற காரணத்தால்தான் வலிந்து சென்று ஆதரித்து எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு வைகோ வின் பழைய பேட்டிகளை பார்த்தீர்களானால் அவர் திமுக வின் கடைமட்ட பேச்சாளர்களை விட " ரொம்ப ஓவராக " ஜால்ரா அடித்திருப்பார். ஜால்ர அடிக்கவென்றே சில இசை கருவிகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் அவர் அதை வைத்து அடித்தால் ஓசை கிட்டாது என்று தாம்பாளத்தில் அடிப்பார்இ

ஒரு போர்முரசே

ஜால்ரா அடிக்கிறதே

அடடே ! என்று புதுகவிதை எழுதுவதற்கு வாய்ப்பெற்படுத்தி குடுத்தார். ஆனால் அணி மாறுவதற்கு தூரோகத்தின் தந்தை கருணா நிதி எந்த விதமான வாய்ப்பும் வழங்கும் முன் சொந்த செலவில் தனக்கு மட்டுமல்ல தன் கட்சிக்கும் சேர்த்து சூனியம் வைத்து கொண்டார். வைகோ ஒரு மாதம் மேற்கொள்ளும் விமான பயணத்தின் கட்டணங்களை செலுத்துவது யார்? இப்படி கேட்பதால் திமுக வை சார்ந்து பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் . நான் நெருப்புஇ நீர் என்றேல்லாம் சொல்லுபவர்களயினும் தமிழ் நாட்டு அரசியலில் இருந்தால் மாசு பட்டுத்தான் ஆகவேண்டும் இ திமுக வினரும் திருடத்தான் செய்வார்கள்இ நான் மட்டும் பத்தினி என்கிற டயலாக்கை மறந்து விட்டு அரசியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும்

( இவன் என்னத்தை தான் சொல்ல வரான்னு தெரியலையே- நிருபர் )

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

ஜ இந்த கேள்விக்கும் இ இன்னும் ஷோபா சக்திக்கு தான் விடுத்த கொலைமிரட்டல் குறித்தும் மனம் திறந்த பேட்டி நாளை தொடரும்......

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

வர : மன்னிக்கவும் திமுக விற்கு இலங்கை பிரச்சினையில் தான் ஈடுபாடு உண்டே தவிர 'ஈழ பிரச்சினையில்' அதற்கு ஏதும் நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை

( நிருபர் : தூத்தெறி நல்ல அனுப்பி விட்டான்டா எடிட்டருஇ அம்மாவாசை கிறுக்கனா பார்த்து பேட்டி எடுத்துருக்காலாம்இ இந்த இம்சைட்ட மாட்டினதுக்கு)

நிரு : கேள்வி என்னவென்றால்......

வர : கேள்வியெல்லாம் புரியுது இ உனக்கு முதல்ல திமுக நிலைப்பாடுன்னா என்னான்னு தெரியுமா?

நிரு : மத்திய அரசின் நிலைபாடுதான்னு கருணா நிதி சொல்லிருக்காரே.

வர : அப்படி வாடா என் கருப்பட்டி வாயாஇ வழிக்குஇ மத்திய அரசின் நிலைப்பாடு சும்மா வேடிக்கை பார்க்குறதுதான். அப்ப இவரும் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்கு தமிழ் இ தமிழன்இ கண்ணகி. கடல் நீர் ஏனடா உப்புகரிக்கிறது? அது கடல் கடந்து வாழும் தமிழன் விடும் கண்ணீரடா தம்பி ! சொன்னவுரு அறிஞர் அண்ணா இ அவரோட தம்பி வேடிக்கை பார்ப்பேன்னு சொன்னா அது எப்படி ஏத்துகிற முடியும்.

நிரு : அப்போ புலிகளை ஆதரிக்கனும்னு சொல்லுறிங்களா?

வர : புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம்இ மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும் இ அவரோட மத்திய அரசு மூலமா அவங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும் . புலிகள் ஒன்றும் கையேந்தவில்லை அவர்களின் கோரிக்கை உங்களின் பார்வையை மாற்றுங்கள் என்பதுதான்.

நிரு : சிறு பத்திரிக்கை உலகில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார் ?

வர : என்னை கவர்ந்தவர் என்பதை என்னிடம் கவர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு அதனால் அது குறித்து பேச விரும்பவில்லை

( டேய் டேய் இ இதுல்லாம் ரொம்ப ஓவர்டா)

நிரு: நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட்இ பகுத்தறிவுவாதி.... ( இடைமறிக்கிறார்)

வர : பெரியாரிஸ்ட் என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் பகுத்தறிவுவாதி என்பதில் உடன் பாடில்லை. ஒருவன் என்று பெரியாரிஸ்ட் என்கிற நிலை எடுக்கிறனோ அன்றே அவன் பகுத்தறிய துவங்கிவிட்டான் என்பது நம் சமூக விஞ்ஞானம். ஆனால் பெரியாரிசம் என்பது ஒரு சிந்தனை முறை தானே தவிர அதை தத்துவமாக கொள்ளமுடியாதுஇ இன்னமும் இந்த பின் நவீன சூழலில் லெனினின் மேற்கோள்களின் அடிப்படையில் பிரச்சினையை அனுகும் மார்க்சீயர்களின் அவல நிலை பெரியாரிஸ்டுகளுக்கு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியாரிஸம் இறுதி தீர்வு குறித்தெல்லாம் மிகவும் சிரத்தை எடுத்து சிந்திக்கவில்லைஇ இப்படியெல்லாம் வாழ்ந்தோமானால் கடைசியில் எல்லோரும் இப்படி ஒரு நிலைக்கும் போவோம் என்றேல்லாம் அது பரிந்துரை செய்வதில்லை இ நவீன வடிவில் சொல்லவேண்டுமானால் " அவரு உக்காந்து யோசிக்கலையோ" என்றே தோன்றுகிறது. அவரின் சிந்தனை போக்கில் பிரச்சினைகளை அனுகுவதே பெரியாரிஸ்டாக இருப்பவனின் ஒற்றை செயல்திட்டமாக இருக்கமுடியும். அது ஒரு சகல ரோக நிவாரணி. அதே வேளை அது என்றைக்கும் ஒற்றை தீர்வை முன்வைக்க வில்லை

( டேய் இம்சைஇ நான் என்ன கேக்க வந்தேன் நீ என்னடா சொல்ற. நீங்க ஒரு பெரியாரிஸ்டுஇ பகுத்தறிவுவாதின்னு சொல்லறங்களே உண்மையான்னு கேட்க வந்தா இ மொன்னை பிளேடு போடுறானே )

நிரு: நீங்கள் சமீபத்தில் ரசித்த விடயம் ?

வர : நயந்தாரா

( நிரு: அதை ஏண்டா வாயில ஜொள்ளு ஒழுக சொல்ற )

நிரு : அது இல்லிங்கா நீங்கள் சமீபத்தில் ரசித்த பொதுவான விஷயம்?

வர : ஓ நீ அப்படி கேட்கிறாயா இ அன்பு அம்மா நிச்சயம் இலங்கை அரசை கண்டித்து நடத்தும் போராட்டத்துகு தலைமை தாங்குவார்கள் என்று அன்புத்தோழி கதை நாயகன் இஅன்புத்தம்பி திருமாவளவன் இ சொன்னதும் அதை அன்பு அண்ணன் வைகோ புன்சிரிப்புடன் ஆமோதித்ததையும் நான் ரொம்ப ரசித்தேன்.

( நிரு : இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள இவன் முதுகுல யாராவது டின் கட்ட போவது உறுதி )

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது என்ன நடந்தென்றால்

( இன்னும் சில மணிகளில் தொடரும்)

http://kuttapusky.blogspot.com/2006/07/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது இ நடந்தது என்னவென்றால் ஒரு நாள் "போண்டா" கனேசனும் நானும் மூவேந்தர் புத்தக கடையில நின்று கொண்டிருந்தோம். அப்போது அவன் இடுப்பில் எதோ புத்தகம் சொருகி வைத்திருந்ததுபோல் இருந்ததுஇ அவன் வழக்கமா அவனுடைய கட்சி அலுவலகத்துக்கு போகும் முன் அ.மார்க்ஸ் வகை புத்தகங்களைத்தான் அப்படி மறைத்து கொண்டு செல்வான்( கம்யூனுஸ்டு கட்சி அலுவலகத்துள் கலக எழுத்துகள் கொண்ட புத்தகங்களுக்கு அறிவிக்க படாத தடை உள்ளதுஇ கலகத்தை அனுமதித்தால் புரட்சி பின் தங்கி விடும் என்ற பயம் போலும்) அது போல நினைத்துக்கொண்டு " என்ன புத்தகம்டா அது" என்றேன். அதற்கு "எங்க எம்.எல்.ஏ கேட்டாங்க அதான் கொண்டு போறேன்" என்றான். ஆபிஸ்-க்கு தானே போற அப்புறம் ஏன் அதை சரோஜா தேவி புத்தகம் போல் மறைத்து கொண்டு போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நீ பார்த்துட கூடதுன்ன்னு தான் அப்படி வச்சுருக்கேன்னு சொன்னான் "அப்படி என்னாட நான் பார்க்க கூடாத புக்கு" சொல்லி பிடிங்கி பார்த்தேன் அது ஷோபாசக்தியோட "கொரில்லா" நாவல். சும்மா ஒரு நாள் விவாதம் பன்னிகிட்டு உக்கார்த்திருந்தப்போ நாய் கவிதை படிச்ச வெறுப்பில "சுகன்" என் கையில் மாட்டுனா பிரிச்சு பேன் பார்க்க போறேன்னு போதைல சொல்லிட்டேன்இ அதுல இருந்து ஈழப்பிரச்சினைல மாற்று குரல்களின் கருத்துகளை எல்லாம் நம்மகிட்ட தெரிவிக்கமாட்டனுங்க நம்ம பயலுக. அதுனாலதான் உங்கிட்ட காட்டல ஏன்ன இது புலிகளுக்கு எதிரான நாவலுன்னு எங்க ஆபிஸுல சொன்னாங்க அப்படியென்றான். சரி குடு நான் படிச்சுட்டு தாரன்டா"ன்னு சொன்னதுக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அன்னைக்கு சாயுங்காலம் நண்பர்கள் மத்தியில் இதைச்சொன்னேன்இ அவுனுங்களும் சேர்ந்துகிட்டு என்னைய நக்கலடிக்கும் நோக்கில் இந்த நாவல பற்றி ரொம்ப புகழ ஆரம்பித்தாங்க. நானும் ஒரு புது நாவல் படிக்க கிடைக்காத வெறுப்பில ஷோபாசக்தி கையில் கிடைத்தால் அவர் மண்டையை உடைப்பேன்னு சபதம் போட்டேன் . கூட இருந்த நண்பர்கள் "இது வன்முறை" மற்றதின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்னு இலக்கியம் பேச ஆரம்பிச்சானுங்க. நானும் காலைல அத மறந்துட்டேன்.

அப்போ என்னுடன் இருந்த கவிஞன்.சுகுணாதிவாகர் இதை அ.மார்க்ஸிடம் சொல்லியிருக்கான் போல இ இதுல்லாம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மதியம் என் மொபைலுக்கு போன் வந்தது.

ஹலோ என்றேன்

வணக்கம் வரவனையானோ ? என்றது குரல்

ஆம் என்றேன்

நான் ஷோபசக்தி பேசுறேன். என்னை நினைவிருக்கா

ம்ம் சொல்லுங்கள் நலமா? என்றேன்

நலம்தான் இ நீங்கள் தானே என் மண்டை உடைப்பது என்று அறிவித்துள்ளீர்கள்இ எப்படி உடைப்பிங்கள்.கையிலா தடியிலாஇ என்றார்

அது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்து என்றேன்

நான் இப்போது இன்டியால தான் இருக்கேன்இ பிரான்ஸுக்கு உங்களை அலைய விடாமல் இங்கையே வந்து விட்டேன் வேண்டுமாயின் உடைத்து விட்டு போங்கள் என்றார்.

பிறகு அவர் பேசிய எண் போதிய பணமில்லாமல் இணைப்பு துண்டிக்கபட்டது

இதுதான் நடந்தது

கே : இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

வர : மிகவும் வருத்தமடைந்தேன்

கே: தேவையில்லாமல் அடுத்தவரை புண்படுத்திவிட்டோமென்றா ?

வர : இல்லை அவர் அழைத்தும் நம்மால் சென்று அடிக்க முடியவில்லையே என்று.

சரி உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

சமுதாய நலனுக்கு பலம் சேர்க்கிற கேள்வி இதற்கு விரிவான விடையை நாளை அளிக்கிறேன்.

( நாளை தொடரும் )

http://kuttapusky.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு வசந்தன் அண்ணா!

தே...க்காரரும் அந்தக் கடுப்பில் தானாம் இருக்கினம்! ஜனநாயக செயற்பாட்டில் உச்சமாக அது தானாம் நடக்கும் :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.