-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
55
பெருமாள் · தொடங்கப்பட்டது
-
Posts
-
யாழ் இணையத்தில் நானறிய உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் தவுர வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான் ஆகவே யுவர் ஆனர் இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை
-
உதயநிதின்ட மகன் எங்கை படிக்கிறார் அவர் விமானத்தில் போய் படித்து வருகிறார்............................. சீமானின் இந்த நடவடிக்கைய பார்த்து ஓட்டு குறையும் என்றால் தன் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டினம் என்று சொன்ன ஸ்டாலினிக்கு எப்படி மக்கள் ஓட்டு போடினம் திமுக்கா எதிர் கட்சியா இருக்கும் போது அக்கா கனிமொழி சொன்னா சாராய கடைகளை இழுத்து மூடுங்கோ பல ஆயிரம் பெண்கள் விதவையா இருக்கினம் என்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்களே மூடினார்களா கொல்லிநிதி சொல்லிச்சே நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொல்ல அதை நம்பி எத்தனை குடும்பங்கள் திமுக்காவுக்கு ஓட்டு போட்டவை நீட்ட ரத்து செய்து விட்டினமா உதயநிதியும் சபரிசனும் சேர்ந்து இந்த மூன்று வருடத்தில் 3000ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார்களே இப்படியான அசிங்கத்தை எப்படி அழைப்பது 10ரூபாய் பாலாஜி சிறையில் இருக்க யார் காரணம் இப்ப இருக்கும் முதலமைச்சர் ஸ்டானில் தான் காரனம் பக்கத்து வீடு நாறுது என்று சொல்வதை விட உங்கட வீட்டை முதல் சுத்தமாய் வைத்து இருங்கோ............................ நீங்கள் சீமானை பற்றி எழுதின அவதூறுக்கு என்னால் பதில் அளிக்க முடியும்......................
-
சீமான் பச்சோந்தியென்றால்....? திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி?? படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா? இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன். இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.
-
அப்ப தமிழ் நாட்டில் யார் தான் நேர்மையான அரசியல் வாதிகள் நான் கேட்ட கேள்விக்கு உங்களிடத்தில் பதில் இல்லை 2009க்கு முன்னமும் சீமான் இப்ப சாப்பிடுவது போல் தினமும் சாப்பிட்டுத் தான் இருந்தார்................கூட்டனி வைக்காம இளையதலைமுறை பிள்ளைகளின் ஆதரவோடு ஒரு பச்சை தமிழன் வளந்து வருவதில் ஏன் உங்களுக்கு அதிகம் வேர்க்குது முதல் வேர்வைய துடையுங்கோ.................... சீமான் திமுக்கா போல் ஈழ தமிழரை அழிக்க துணை போனாரா அல்லது இனி காங்கிரஸ் கூட கூட்டனி இல்லை என்று சொல்லி விட்டு திமுக்கா மீண்டும் கூட்டனி வைச்சது போல் சீமான் அரசியலில் ஏதும் கேலி கூத்து செய்தாறா கொண்ட கொள்கையில் உறுதியா நின்ற படியால் தான் 30லச்சத்துக்கு மேலான ஓட்டு சீமானை நம்பி போட்டாவை முதல் யாழில் என்னை போல் குமாரசாமி தாத்தா , தமிழ் சிறி அண்ணா எங்களை மாதிரி ஒரு பெயரில் எழுதுங்கோ பல பெயர்களில் வந்து எழுதும் நபவர்கள் இடம் நேர்மைய எதிர் பார்க்கேலாது😁 சீமானை பிடிக்காட்டி விலகி இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் தலைவர் பிரபாகரனை மனதில் வைத்து தேர்தல் பணிய இரவு பகல் பாராம பல லச்சம் பேர் செய்யும் பணிய கொச்சை படுத்த வேண்டாம் இவை இத்தனை சதவீத வாக்கு தான் எடுப்பினம் என்று கண்டமேனிக்கு எழுதுவது அருவருக்கதக்கது......................சீமான் வளந்தால் உங்கட சோற்றில் மண் அள்ளி போட்டு விடுவார் என்ற பயமா...........................அதுகள் பாடு படுவதே எமக்காக தான் எம் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவையை ஒவ்வொரு வருடமும் அவர்கள் தான் பல அடக்குமுறைக்குள் மத்தியில் நினைவு கூருகினம்................இதெல்லாம் உங்கட கண்ணுக்கு எங்கை தெரிய போகுது............................
-
சீமானின் நாக்கு ஊத்தையை வழிப்பதற்கு முதல்... தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும். வெறுமனே சீமானை மட்டும் எதிர்க்கின்றோம் என்பவர்களுக்கு வேறொரு அரசியல் ஞானமும் கட்சியும் முன்னோடியாக இருக்க வேண்டும் அல்லவா?
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts