Jump to content

10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம்.


Recommended Posts

10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம்.

 

 

 

way-to-go.jpg

 

களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை  தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையான கருத்துக்கள் எழுதினாலும் அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்திருக்கும் யாழ் களத்தில் எனக்கு பிடித்த கருத்தாளர் ! என்னும் பல ஆயிரம் கருத்துக்களை பதிந்திட இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன்..  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் யாழ்கள நகைச்சுவைக்காவியம் அரசியல் மதிநுட்பன் இசை அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை  இந்த பத்தாயிரம்  பல்லாயிரம் குட்டி போட வாழ்த்துக்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்,

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் 'யாழைச்' சேரும். :D

எங்கள் வீட்டின் 'செல்லப் பிள்ளை', நீங்கள் அல்லவோ,

இன்று போல, இன்னும் 'பத்து' தேவை அல்லவோ!  :lol:

 

வாழ்த்துக்கள், இசை!

 

தனிச் சிரிப்புக் குறிப் பதிவுகள், போனாப்பிறகு வேகம் கொஞ்சம் குறைவு தான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களாடா மச்சான் :lol:  இன்னும் எழுதி கிழி கிழியென கிழிக்கவும் :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

79559d1290149810-congrats-umer15-his-10010000posts.pngவாழ்த்துக்கள் மாம்ஸ்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இசைகலைஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

டிஸ்கி:

 

Link to comment
Share on other sites

சகல திரிகளிலும் மூழ்கியும்  :) சகல உறவுகளுடனும் நல்லுறவை பேணியும் :D 

யாழ்களத்திற்கு மெருகூட்டும் உறவிற்கு வாழ்த்துக்கள்  :)  :D

Link to comment
Share on other sites

கருத்து நிறைந்த நகைச்சுவையுடன் கூடிய சரியான பதிலடி மன்னன் இசை அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன்...மிகவும் சிந்தித்து கருத்துக்களை எழுதுபவர் நீங்கள்......பயணம் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன்..! :)

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் இசை அண்ணா  :) 

 

நான் உங்கள் கருத்துகள் மற்றும் நகைச்சுவைக்கு ரசிகை. ஈழப்போராட்டம் தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. எனவே சிலர் வைக்கும் கருத்துகளை அதிகம் வாசிப்பதுண்டு. அந்தவகையில் உங்கள் கருத்துகளையும் கண்டால் ஓடிவந்து வாசிப்பேன். :)

நல்ல பொறுமைசாலி நீங்கள். :) சிரித்துக்கொண்டே பதிலடி கொடுப்பதில் வல்லவர். :D

பி.கு: என்றாலும் என் பெயர் அன்னலட்சுமியா என்று போனவருடம் நீங்கள் கேட்டதை நான் இன்னும் மறக்கேல்லை. :(:lol: எல்லாரும் எனக்கு பழைய பெயர் வைக்க வேண்டும் என்று ஒரே பிடியாய் நிற்கிறார்கள். :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10000.gif

 

பத்தாயிரம் பதிவுகளைப் பதிந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள் :).
அனைவருடனும் சுமூகமான, உறவைப் பேணும் இனிய உறவு, இசை. தொடர்ந்தும் யாழில் இணைந்திருந்து, எம்மை மகிழ்வு படுத்த வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனின் நகைச்சுவை ததும்பும் கருத்துக்களுக்கு நான் ஒரு ரசிகன் :)

இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டுச் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.!

Link to comment
Share on other sites

இரண்டு வசனங்களுடன், நாலு ஸ்மைலிகள்  மாத்திரம் போட்டு எழுதினாலும், மிக சுவாரசியமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் 'மிஸ்டர் டங்குவார்'  :D 

 

Link to comment
Share on other sites

10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம்.

 

 

 

way-to-go.jpg

 

களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை  தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.

 

வாழ்த்துக்களுக்கு நன்றி நுணா.. தளராத உறுதியான செயற்பாட்டைக் காட்டுபவர் நீங்கள்..! உங்களை ஒரு முன்னுதாரணமாக அடிக்கடி நினைத்துக் கொள்வேன்..! நீங்கள் தன்னடக்கமான, உங்களைப் பற்றி அதிகம் தெரிவித்துக்கொள்ளாத ஒரு கணினி விற்பன்னராக இருப்பீர்கள் என்பது எனது கணிப்பு..! (அதாவது எங்களைமாதிரி ஓட்டைவாய் இல்லை.. :D )

 

மற்றும்படி நான் கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டீர்களே..  :(  அதுதான் கொஞ்சம் கலக்கமாக உள்ளது..! :D

இந்தப் பத்தாயிரம் பதிவுகளும் நல்லவையோ.. அல்லவையோ.. அதன் முழுப் பெறுமானமும் இங்கே களம் அமைத்துக் கொடுத்த மோகன் அண்ணாவுக்கும், நிர்வாகிகள், மட்டுறுத்துனர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக மேலும் எழுதத் தூண்டிய களத்தின் உறவுகளுக்கும் (முக்கியமாக மச்சாளுக்கும் :wub: ) முக்கிய பங்குண்டு என்றால் அது மிகையில்லை அல்லவா? :D

 

மீண்டும் ஒரு நன்றி..!

நகைச்சுவையான கருத்துக்கள் எழுதினாலும் அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்திருக்கும் யாழ் களத்தில் எனக்கு பிடித்த கருத்தாளர் ! என்னும் பல ஆயிரம் கருத்துக்களை பதிந்திட இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன்..  

 

அன்பின் சிகரம் தமிழரசு..! அண்மையில் தமிழ்சிறி என்று நினைக்கிறேன்.. உங்கள் எழுத்துக்களில் சிறிது சோகம் இழையோடும் என்று எழுதியிருந்தார்..! நினைத்துப் பார்க்கையில் உண்மையாகவே தோன்றுகிறது..!

 

உங்கள் எழுத்துக்களில் மீண்டும் மகிழ்ச்சி வெளிப்படும் காலம் வரவேண்டும்..! அன்று எம் தாயகத்தில் சந்திப்போம்..! :(

 

நன்றி தமிழரசு..!

 

எங்கள் யாழ்கள நகைச்சுவைக்காவியம் அரசியல் மதிநுட்பன் இசை அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

 

எனது அன்பின் இளவல் சுபேஸ்..! :D

 

அண்மைக்காலமாக அதீதமான நகைச்சுவை இழையோடுகிறது உங்கள் எழுத்துக்களில்.. ஆனாலும் முன்பு கிட்டாருடன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த என் தம்பி இன்று கடற்கரையில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருப்பது ஏன்.. ஏன்.. ஏன்..? :D

 

கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்க இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்..!

 

வாழ்த்துக்களுக்கு நன்றி உடன்பிறப்பே..! :icon_idea:

குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இசைக்கலைஞனின் சேவை தொடர

 

10,000 வாழ்த்துக்கள். 

 

சிந்தனைக் குதிரை மல்லை அவர்களே..! :D தங்களது வாழ்த்து எனது பாக்கியம்..! உங்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்..! தொடராக எழுத வேண்டிய சத்தான சிந்தனைகளை சுருக்கமாக எழுதி விடுவதில் செம்மல் நீங்கள்தான்..!

 

நன்றி மல்லையூரன்..!

வாழ்த்துக்கள் இசை  இந்த பத்தாயிரம்  பல்லாயிரம் குட்டி போட வாழ்த்துக்கள்  :D

 

பத்தாயிரம் குட்டிகளா? :o அதற்கு நிறையப் பசுக்கள் செலவாகுமே அமைச்சரே..! :unsure:

 

வாழ்த்துக்களுக்கு நன்றி நந்தனார்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டங்கு அண்ணா :D

Link to comment
Share on other sites

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்,

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் 'யாழைச்' சேரும். :D

எங்கள் வீட்டின் 'செல்லப் பிள்ளை', நீங்கள் அல்லவோ,

இன்று போல, இன்னும் 'பத்து' தேவை அல்லவோ!  :lol:

 

வாழ்த்துக்கள், இசை!

 

தனிச் சிரிப்புக் குறிப் பதிவுகள், போனாப்பிறகு வேகம் கொஞ்சம் குறைவு தான்! :icon_idea:

 

வேகம் குறைவுதான்..! :D தன்னெழுச்சியாகத் தோன்றுகிற பதில் வெறும் முகக்குறியாகவும் இருக்கலாம் அல்லவா.. :rolleyes: அதனால் சிலசமயம் எழுதாமலே போய்விடுவதுண்டு.!

 

வாழ்த்துக்களுக்கு நன்றி புங்கை..

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களாடா மச்சான் :lol:  இன்னும் எழுதி கிழி கிழியென கிழிக்கவும் :D  :icon_idea:

 

தாய், தகப்பன் வழியில் சரியான எண்ணிக்கையில் எனக்கு மச்சாள்மார் இல்லாத குறை எப்பவுமே உண்டு..! :( இருக்கும் மச்சாள்மாரும் வயது வித்தியாசத்தில் கொஞ்சம் எடக்குமுடக்கு..! :unsure:

 

அதனால் தற்போதைக்கு நன்றி சொல்லிப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை மச்சாள்..! :D

79559d1290149810-congrats-umer15-his-10010000posts.pngவாழ்த்துக்கள் மாம்ஸ்... :)

 

அடேயப்பா.. இவ்வளவு பெரிய சுவரொட்டியா? :lol: நன்றி உடன்பிறப்பே..!

 

கூடியவிரைவில் எல்லாம் சரிவந்து மறுபடியும் இல்லறக் கடலில் தொபுக்கடீர் என்று குதிக்க வாழ்த்துக்கள்..! :D

 

Link to comment
Share on other sites

தோழர் இசைகலைஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

டிஸ்கி:

 

 

இசைத்தெரிவுக்கு நன்றி புரட்சி..! எங்கள் பிறப்பின் நாதமோ இந்த இசை என்று கேட்கத் தோன்றுகிறது..!

 

0:00 மனதை வருடும் ஒரு புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பம்.. அந்த அமைதியான ஆரம்பம் என்பது பிறந்து, சில வினாடிகள் அழுது முடித்த குழந்தை அமைதியாகிப் பின்னர் தான் பிரவேசித்த இந்த உலகை வியப்புடனும், மருட்சியுடனும் நோக்குவதுபோல் இருக்கிறதல்லவா?

 

0:52 வயலின் தொகுப்பு இசை..  அன்னையின் மடியில் பால் குடித்து, உலகைச் சிறிது கணித்து, வளர்ந்து சிறுபிள்ளையாகும் தருணமல்லவா?

 

1:32 இல் சிறிது தாமதப்படும் இசைக்கோர்வை.. பதின்ம வயதுக்குள் எட்டிப்பார்க்கும் அக்குழந்தை சிறிது கலவரப்பட்டு, மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு நிலையைக் காட்டுகிறதல்லவா?

 

1:52 மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதன்போக்கில் வளர்ச்சி காணும் பருவமல்லவா..?

 

2:37 படபடக்கும் கண்களால் தனக்கான காதலின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்தானே..?

 

2:48 இசை.. காதலின் பிரசவிப்பில் உலகையே சுற்றிவரத்துடிக்கும் ஒரு உற்சாகமல்லவா..

 

3:26 உற்றார் அணைபோடும்போது ஒரு சோகம்.. காதலைப் பிரிந்த ஒரு வலி..

 

4:04 அந்த வயதுக்கே உரிய கள்ளத்தனம்.. உற்றாரை மீறித் தன்காதலைச் சேர்வது எப்படி?

 

4:34 காதலுக்கு முன் எவருமே பெரிதில்லை.. அங்கேதான் என் வாழ்க்கை..

 

5:12 தீதும் நன்றும் பிறர்தர வாரா.. எனக்கான விதி என்னிடமே உள்ளது..! :rolleyes:

 

மனதில் பட்டதை எழுதினேன்..! வாழ்த்துக்களுக்கு நன்றி புரட்சி..! :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.