Jump to content

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

Link to comment
Share on other sites

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

 

அவர்கள் யதார்த்தத்தை எழுதியிருக்கிறார்கள்.  நீங்கள் கற்பனையில் வாழ்கிறீர்கள்.  யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவாவது முயற்சியுங்கள்.  இந்த யதார்த்தம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

இவ்வளவுதானா ???????

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

Link to comment
Share on other sites

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

 

உங்களுக்காகவாவது எனது தமிழ் புரிந்ததே மல்லை . அந்தவகையில் எனக்குச் சந்தோசமே :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே வேறு யாராவது செய்யும்போது பார்வையாளர்களாக நின்று பார்த்து நாலு நொட்டை, நொடிகள் சொல்லிப் பழகிவிட்டதாலும், மேய்ப்பர்கள் எவரும் சரியான வழிகாட்டலைத் தராததாலும் உரையாடலில் என்னத்தைச் சொல்வது என்ற குழப்பம் இருக்கலாம். அதுதான் பலர் பேசாமல் இருக்கின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் விரும்பினால் அதை செய்யுங்கோ ,விரும்பினவர்கள் அப்பப்போ தோன்றும் கருத்துகளையும் எழுதட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆயுதப் போராட்டாமிருந்தாலும் சரி,அரசியல் போராட்டமாயிருந்தாலும் சரி உணர்ச்சி வசப்பட்டு போராடப் போவதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை...இந்தப் போராட்டமானது இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?...சலிப்பு வந்தவுடன் தாங்களாகவே போராட்டத்தை கொஞ்சங் கொஞ்சமாய் நிறுத்தி விடுவார்கள்...இறுதி யுத்தம் நடக்கும் போது புலம் மக்களோடு[மாணவர்களோடு]இவர்களும் போராட்டத்தை நடத்தி இருந்தால் அங்கு கொல்லப்பட்ட மக்களில் அரைவாசிப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம்...அந்த நேரத்திலும் தமிழகத்தில் மாணவர்கள் இருந்தார்கள் தானே அந் நேரம் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது...அரசியல்வாதிகள் போராட விடவில்லை என்பதெல்லாம் நொண்டிச் சாட்டு...வைகோவும்,சீமானும் இருந்தார்கள் தானே! அவர்கள் இருந்தும் எதனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது?
 
பாலசந்திரனின் கொலைக்கு நியாயம் கேட்டும்,மகிந்தா சகோதரர்களை தூக்கில் போடச் சொல்லிக் கோரிக்கை வைப்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்டாலும் கொத்துக் கொத்தாய் சிறுவ,சிறுமிகள் கொல்லப்படும் போது பக்கத்தில் அதுவும் 4 வருடங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டு இருந்து போட்டு பாலசந்திரனின் படத்தைப் பார்த்ததும் பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது என்பது ஏற்கக் கூடியதாய் இல்லை :(
 
எதுவும் காரணத்தோடு தான் நடக்க வேண்டும் ...காரணமில்லாமல் நடக்கின்ற எதுவும் வெற்றியளிக்காது...ஒவ்வொரு வருடமும்,தங்கட படிப்பு முடிய இந்த மாணவர்கள் தங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்...இவர்கள் இப்படித் தான் போராட்டம் அது,இது என தொடங்குவார்கள் கொஞ்ச நாள் போக தாங்களாவே அடங்கிடுவார்கள் என்று தான் அரசும்,மற்றவர்களும் நினைப்பார்கள்...தமிழர்கள் என்டாலே இப்படித் தான் எதுவும் காரணமில்லாமல் தொடங்குவதும் பின் இடையில் விடுவதும் தான் அவர்களது பழக்கம் என்றாகி விடும்.
 
கிருபன் எழுதியிருந்தார் புலம் பெயர் நாட்டில் மக்கள் இப்ப ஒரு போராட்டங்களையும் செய்வதில்லை என கேட்டு இருந்தார்...நாங்கள் தோத்துட்டமே என்ட விரக்தியை விட கடைசி நேரத்தில் லண்டனில் மாணவர்களுக்கு இடையே நடந்த பாகுபாடும்,குழுப் பிரிப்பும் அடி பிடியும் சண்டையும்,அது பத்தாதென்று இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள்,பெரிய மனிதர்களின் தலையிடு,நீ பெரிசா,நான் பெரிசா என்று சண்டைகள் வேறு நடந்தது...இது எல்லாம் சேர்ந்து தான் இங்கு போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டது இல்லா விட்டால் சுழற்சி முறையில் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை இன்று வரை தொடர்ந்திருக்கலாம்...இது லண்டன் கதை மற்ற நாடுகளில் என்ன நடந்ததோ தெரியாது...என்னைப் பொறுத்த வரை தமிழனை அழிக்க வேறு ஒருத்தரும் தேவையில்லை தமிழனே போதும்.
 
இனி மேல் போராட்டம் என்பது மக்கள் எழுச்சியாகத் இருக்க வேண்டும்...அதில் தமிழ்,முஸ்லீம் மக்கள் இருக்க வேண்டும்...இலங்கையில் அனைத்து தமிழ் பேசும் பகுதியில் தொடங்கப்பட்டு அதே நேரத்தில் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு,உலகம் பூரா இருக்கும் அனைத்து மக்களும் சேர்ந்து போராட வேண்டும்...அதுவே எமக்கு வெற்றியை பெற்றுத் தரும் அல்லது உலக நாடுகள் சேர்ந்து எதாவது ஒரு காரணத்திற்காக போனாப் போகுது என எமக்கு ஒரு நல்ல தீர்வைத் தர வேண்டும்
Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

 

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

 

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...விவாதங்கள் தொடர்ந்து நடக்கும் போது தான் தெளிவு பிறக்கும்...எப்படி ஒரு விடயம் சம்மந்தமாக ஒருவர் எழுதும் ஒரு கருத்தை வைத்து கொண்டு அவர் என்ன சொல்ல வாறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்?

Link to comment
Share on other sites

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.

 

 

விசுகு அண்ணா இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தாலே உங்களுக்கு விளங்க வேண்டும் ஏன் இந்தத் திரியில் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என்று...பதில் கருத்து எழுத முடியாமல்[ தெரியாமல்] இப்படி எழுதுபவர்களுக்கு பயந்து தான் ஒருத்தரும் இத் திரியில் கருத்து எழுதுவதில்லை

Link to comment
Share on other sites

அம்மணி ரதி , எல்லோரையும் போல் நானும் மூஞ்சிபொத்தகத்திலிருந்து மூலைமுடுக்கெல்லாம் முளைச்சிக்கிடக்கின்ற இ தளங்களுக்குள் நாளும் ஈயாக அலைகின்றேன். எல்லா இடத்திலையும் ஊத்துகின்ற கருத்துக்களையும் சாத்துகின்ற சரத்துக்களையும் அள்ளி அள்ளி கூட்டினால் இந்த உலகத்தில வைக்க இடமில்ல.  

கருத்து சொல்வது பிழையென்று நான் சொல்ல வரவில்லை. ஆண்டாண்டு காலமாக கருத்து சொல்லியாச்சி கடமையை முடிச்சாச்சி என்ற கணக்கோடு காலாவதியாகி கணக்கு விடுகின்றார்களே என்றுதான் சொல்லுகின்றேன். ஆனால், சிலர்தான் கருத்துக்கு கைகாட்டிவிட்டு செயலுக்கு முகம் காட்டுகின்றார்கள்.

தமிழக மாணவர்களின் போராடம் செயல்.

முள்ளிவாய்க்காலின் பின் இன்றுவரை துள்ளிவாய்பிளந்த எத்தனையோ கொள்ளிவாய் போசகர்களின் கருத்துப் பிதற்றல்களுக்கும் காய் நகர்த்தல் சுற்றலுக்கும் பஞ்சமில்லை இணைய மேடையில் ஆனால், ஆன காரியம் ஒன்றுமில்லை.

அதனால்தான் அம்மணி தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும் என்கின்ற அநியாயதை பொதுவிட்டு சாட்டியிருந்தேன். ஆனால், வீட்டிலே குந்தியிருந்து இ ஏட்டிலே மட்டும் பலவாறு கோட்டை கட்டுகின்ற இவர்களுக்கும் மற்றய  தமிழர்களுக்கும் மாணவர்களின் போராட்டம் ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது என்றேன் அது தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது இனியும் தணியாது என்பதையே. ஏன் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சூழலிலே இளம் மாணவர்கள் தமிழீழம் கேட்டு சுழன்றடித்தார்கள் என்றபடியினால்.

ஆக, எங்கும் நீங்கள் எதையும் எழுதுங்கள் எதையும் கிழியுங்கள் ஆனால், தமிழக மாணவர்களின் எழிச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான மீள் வளர்ச்சி என தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடலுக்கு எனது கருத்தை மேலே இறுதி செய்திருந்தேன் அவ்வளவுதான் அம்மணி வேறோன்றுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.