Jump to content

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

Link to comment
Share on other sites

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

 

அவர்கள் யதார்த்தத்தை எழுதியிருக்கிறார்கள்.  நீங்கள் கற்பனையில் வாழ்கிறீர்கள்.  யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவாவது முயற்சியுங்கள்.  இந்த யதார்த்தம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

இவ்வளவுதானா ???????

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

Link to comment
Share on other sites

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

 

உங்களுக்காகவாவது எனது தமிழ் புரிந்ததே மல்லை . அந்தவகையில் எனக்குச் சந்தோசமே :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே வேறு யாராவது செய்யும்போது பார்வையாளர்களாக நின்று பார்த்து நாலு நொட்டை, நொடிகள் சொல்லிப் பழகிவிட்டதாலும், மேய்ப்பர்கள் எவரும் சரியான வழிகாட்டலைத் தராததாலும் உரையாடலில் என்னத்தைச் சொல்வது என்ற குழப்பம் இருக்கலாம். அதுதான் பலர் பேசாமல் இருக்கின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் விரும்பினால் அதை செய்யுங்கோ ,விரும்பினவர்கள் அப்பப்போ தோன்றும் கருத்துகளையும் எழுதட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆயுதப் போராட்டாமிருந்தாலும் சரி,அரசியல் போராட்டமாயிருந்தாலும் சரி உணர்ச்சி வசப்பட்டு போராடப் போவதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை...இந்தப் போராட்டமானது இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?...சலிப்பு வந்தவுடன் தாங்களாகவே போராட்டத்தை கொஞ்சங் கொஞ்சமாய் நிறுத்தி விடுவார்கள்...இறுதி யுத்தம் நடக்கும் போது புலம் மக்களோடு[மாணவர்களோடு]இவர்களும் போராட்டத்தை நடத்தி இருந்தால் அங்கு கொல்லப்பட்ட மக்களில் அரைவாசிப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம்...அந்த நேரத்திலும் தமிழகத்தில் மாணவர்கள் இருந்தார்கள் தானே அந் நேரம் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது...அரசியல்வாதிகள் போராட விடவில்லை என்பதெல்லாம் நொண்டிச் சாட்டு...வைகோவும்,சீமானும் இருந்தார்கள் தானே! அவர்கள் இருந்தும் எதனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது?
 
பாலசந்திரனின் கொலைக்கு நியாயம் கேட்டும்,மகிந்தா சகோதரர்களை தூக்கில் போடச் சொல்லிக் கோரிக்கை வைப்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்டாலும் கொத்துக் கொத்தாய் சிறுவ,சிறுமிகள் கொல்லப்படும் போது பக்கத்தில் அதுவும் 4 வருடங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டு இருந்து போட்டு பாலசந்திரனின் படத்தைப் பார்த்ததும் பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது என்பது ஏற்கக் கூடியதாய் இல்லை :(
 
எதுவும் காரணத்தோடு தான் நடக்க வேண்டும் ...காரணமில்லாமல் நடக்கின்ற எதுவும் வெற்றியளிக்காது...ஒவ்வொரு வருடமும்,தங்கட படிப்பு முடிய இந்த மாணவர்கள் தங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்...இவர்கள் இப்படித் தான் போராட்டம் அது,இது என தொடங்குவார்கள் கொஞ்ச நாள் போக தாங்களாவே அடங்கிடுவார்கள் என்று தான் அரசும்,மற்றவர்களும் நினைப்பார்கள்...தமிழர்கள் என்டாலே இப்படித் தான் எதுவும் காரணமில்லாமல் தொடங்குவதும் பின் இடையில் விடுவதும் தான் அவர்களது பழக்கம் என்றாகி விடும்.
 
கிருபன் எழுதியிருந்தார் புலம் பெயர் நாட்டில் மக்கள் இப்ப ஒரு போராட்டங்களையும் செய்வதில்லை என கேட்டு இருந்தார்...நாங்கள் தோத்துட்டமே என்ட விரக்தியை விட கடைசி நேரத்தில் லண்டனில் மாணவர்களுக்கு இடையே நடந்த பாகுபாடும்,குழுப் பிரிப்பும் அடி பிடியும் சண்டையும்,அது பத்தாதென்று இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள்,பெரிய மனிதர்களின் தலையிடு,நீ பெரிசா,நான் பெரிசா என்று சண்டைகள் வேறு நடந்தது...இது எல்லாம் சேர்ந்து தான் இங்கு போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டது இல்லா விட்டால் சுழற்சி முறையில் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை இன்று வரை தொடர்ந்திருக்கலாம்...இது லண்டன் கதை மற்ற நாடுகளில் என்ன நடந்ததோ தெரியாது...என்னைப் பொறுத்த வரை தமிழனை அழிக்க வேறு ஒருத்தரும் தேவையில்லை தமிழனே போதும்.
 
இனி மேல் போராட்டம் என்பது மக்கள் எழுச்சியாகத் இருக்க வேண்டும்...அதில் தமிழ்,முஸ்லீம் மக்கள் இருக்க வேண்டும்...இலங்கையில் அனைத்து தமிழ் பேசும் பகுதியில் தொடங்கப்பட்டு அதே நேரத்தில் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு,உலகம் பூரா இருக்கும் அனைத்து மக்களும் சேர்ந்து போராட வேண்டும்...அதுவே எமக்கு வெற்றியை பெற்றுத் தரும் அல்லது உலக நாடுகள் சேர்ந்து எதாவது ஒரு காரணத்திற்காக போனாப் போகுது என எமக்கு ஒரு நல்ல தீர்வைத் தர வேண்டும்
Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

 

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

 

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...விவாதங்கள் தொடர்ந்து நடக்கும் போது தான் தெளிவு பிறக்கும்...எப்படி ஒரு விடயம் சம்மந்தமாக ஒருவர் எழுதும் ஒரு கருத்தை வைத்து கொண்டு அவர் என்ன சொல்ல வாறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்?

Link to comment
Share on other sites

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.

 

 

விசுகு அண்ணா இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தாலே உங்களுக்கு விளங்க வேண்டும் ஏன் இந்தத் திரியில் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என்று...பதில் கருத்து எழுத முடியாமல்[ தெரியாமல்] இப்படி எழுதுபவர்களுக்கு பயந்து தான் ஒருத்தரும் இத் திரியில் கருத்து எழுதுவதில்லை

Link to comment
Share on other sites

அம்மணி ரதி , எல்லோரையும் போல் நானும் மூஞ்சிபொத்தகத்திலிருந்து மூலைமுடுக்கெல்லாம் முளைச்சிக்கிடக்கின்ற இ தளங்களுக்குள் நாளும் ஈயாக அலைகின்றேன். எல்லா இடத்திலையும் ஊத்துகின்ற கருத்துக்களையும் சாத்துகின்ற சரத்துக்களையும் அள்ளி அள்ளி கூட்டினால் இந்த உலகத்தில வைக்க இடமில்ல.  

கருத்து சொல்வது பிழையென்று நான் சொல்ல வரவில்லை. ஆண்டாண்டு காலமாக கருத்து சொல்லியாச்சி கடமையை முடிச்சாச்சி என்ற கணக்கோடு காலாவதியாகி கணக்கு விடுகின்றார்களே என்றுதான் சொல்லுகின்றேன். ஆனால், சிலர்தான் கருத்துக்கு கைகாட்டிவிட்டு செயலுக்கு முகம் காட்டுகின்றார்கள்.

தமிழக மாணவர்களின் போராடம் செயல்.

முள்ளிவாய்க்காலின் பின் இன்றுவரை துள்ளிவாய்பிளந்த எத்தனையோ கொள்ளிவாய் போசகர்களின் கருத்துப் பிதற்றல்களுக்கும் காய் நகர்த்தல் சுற்றலுக்கும் பஞ்சமில்லை இணைய மேடையில் ஆனால், ஆன காரியம் ஒன்றுமில்லை.

அதனால்தான் அம்மணி தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும் என்கின்ற அநியாயதை பொதுவிட்டு சாட்டியிருந்தேன். ஆனால், வீட்டிலே குந்தியிருந்து இ ஏட்டிலே மட்டும் பலவாறு கோட்டை கட்டுகின்ற இவர்களுக்கும் மற்றய  தமிழர்களுக்கும் மாணவர்களின் போராட்டம் ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது என்றேன் அது தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது இனியும் தணியாது என்பதையே. ஏன் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சூழலிலே இளம் மாணவர்கள் தமிழீழம் கேட்டு சுழன்றடித்தார்கள் என்றபடியினால்.

ஆக, எங்கும் நீங்கள் எதையும் எழுதுங்கள் எதையும் கிழியுங்கள் ஆனால், தமிழக மாணவர்களின் எழிச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான மீள் வளர்ச்சி என தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடலுக்கு எனது கருத்தை மேலே இறுதி செய்திருந்தேன் அவ்வளவுதான் அம்மணி வேறோன்றுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.