Jump to content

கிளி. காட்டுமிராண்டிச் செயல்; அரசுக்கு நேரடியாகத் தொடர்பு; சர்வதேச விசாரணைக்கு சம்பந்தன் வலியுறுத்து


Recommended Posts

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மீது அரசின்
அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும்,
அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி
எந்தளவிற்கு உச்சமடைந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்
கொள்ளவேண்டும்.

எனவே, சர்வதேசம் இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களை மட்டும் வெளியிடாது இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்ரெம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி
அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பில் கிளிநொச்சியில் கூட்டமைப்பு
நடத்திய முதலாவது மக்கள் சந்திப்புக் கூட்டத்தை குழப்பியடிக்கும் நோக்கில்
அரச மேலிடத்தின் அனுமதியுடன் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது
என்றும் சம்பந்தன் குற்றம்சாட்டினார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நேற்றுமுன்தினம் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவேளை அங்கு அத்துமீறி
நுழைந்தவர்கள் சரமாரியாகக் கற்களை வீசி மக்கள் மீதும், அலுவலகம் மீது 
தாக்குதல் நடத்தி பெரும் அராஜகத்தைப் புரிந்துள்ளனர்.

இதில் 20 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந் துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு
தமது கண்டனத்தைத் தெரிவித்து கருத்து வெளியிடும்போதே சம்பந்தன்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் நேற்று "உதயனி'டம் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வடக்கு மாகாணம் 24 மணித்தியாலங்களும் அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள்
இருக்கின்றது. எனவே, அங்கு எந்தவொரு நிகழ்வும் அரசின் அனுமதி இல்லாமல்
அல்லது இராணுவம், பொலிஸ் ஆகியோரின் பாதுகாப்பு இல்லாமல் நடைபெறாது.

இந்நிலையில், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின்
மீது அராஜகம் புரியப்பட்டுள்ளது. இதில் எமது மக்கள் 20 இற்கு மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மயிரிழையில்
தப்பியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் நான் இருக்கவில்லை. எனினும்,
அந்த இடத்தில் நின்ற எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு வழங்கிய
தகவல்கள் மற்றும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் நான் பார்த்த
காட்சிகளினூடாக மக்கள் மீதும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
வாகனங்கள் மீதும் கல்லெறித் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமயிரை கட்டையாக
வெட்டி அரைக் காற்சட்டையுடனும், நீளக் காற்சட்டையுடனும் நின்றுள்ளார்கள்.

இவர்களைப் பார்க்கும் போது சாதாரண மக்கள் போலத் தெரியவில்லை. அதாவது
இராணுவம், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் தோற்றத்துடன்
உள்ளார்கள்.

எனவே, குறித்த தாக்குதலில் அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ்
பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும்
சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாம் நாட்டை நேசிப்பவர்கள் என்பதைக்
காட்டுவதற்காக நாட்டின் தேசியக் கொடியான சிங்கக்கொடியை கைகளில் ஏந்தி
வந்துள்ளனர். இவர்கள் கேட்டுக் கேள்வி இல்லாமல் அமைதியாக
நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டமைப்பின் கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து
அலுவலகம் மீதும், மக்கள் மீதும் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மீதும்
கல்லெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நாட்டை நேசிப்பவர்கள் என்று
தேசியக்கொடியைக் காட்டி தம்மை அடையாளம் காட்ட முனைந்தவர்கள் இவ்வாறான
அடாவடியில் ஈடுபட்டது சரியா?

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தமக்குத் தொடர்பில்லை எனக் கூறும்
இராணுவத்தினரும், பொலிஸாரும் தாக்குதல் நடைபெறும் போது ஏன் கைகட்டி அமைதி
காத்தார்கள்? தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துகொண்ட வர்களை ஏன்
கைதுசெய்யவில்லை?

தாக்குதலில் ஈடுபட்டவேளை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்ட இராணுவப் புலனாய்வாளரை பொலிஸார் ஏன் கைது செய்யாமல் அந்த
இடத்திலேயே விடுவித்தார்கள்? எனவே, அரசின் மேலிடத்தில் இருந்து இந்த அராஜக
நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது நிரூ பணமாகின்றது.

அதேவேளை, வடக்கில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து அங்கு அரச படைகளின் கீழ் காட்டாட்சி நடக்கின்றது என்பது புலனாகின்றது.

இதேவேளை, வடக்கில் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது அளவெட்டியில் நடைபெற்ற
கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் மீது இராணுவமே சீருடைகளுடன் அத்துமீறி
நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதேமாதிரி வடக்கு மாகாணசபைத் தேர்தல்
செப்ரெம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில்,
கிளிநொச்சியில் முதலாவதாக நடந்த கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக்
கூட்டத்தையும் குழப்பியடிக்கும் நோக்கில் அரசின் அனுமதியுடன் இராணுவ,
பொலிஸ் புலனாய்வா ளர்கள், அரசின் அடிவருடிகள் அராஜகம் புரிந்துள்ளனர்.

இதிலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தல் அரச தரப்பின் வன்முறைகளுக்கு
மத்தியில் நடைபெற சந்தர்ப்பம் உள்ளதை அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச
நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் அடாவடிகளைக் கண்டித்து அதற்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா
தனது இரண்டாவது தீர்மானத்தைக் கொண்டுவந்த சில தினங்களிலே கிளிநொச்சியில்
தனது அராஜகத்தைக் காட்டியுள்ளது அரச தரப்பு. இதனூடாக  ஜனநாயக உரிமைகள்,
மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

இராணுவ அடக்குமுறையின் உச்சக்கட்டமாக கிளிநொச்சியில் பொதுமக்கள் மீதும்,
கூட்டமைப்பின் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசின்
அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும்,
அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி
எந்தளவிற்கு உச்சமடைந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம்
விளங்கிக்கொள்ளவேண்டும்.

எனவே, சர்வதேசம் இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களை மட்டும் வெளியிடாது
இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்
சம்பந்தன்.

http://onlineuthayan.com/News_More.php?id=835721936801782249
 

Link to comment
Share on other sites

த.தே.கூட்டமைப்புக்கு அடிப்பது இந்தியாவை அடிப்பதுமாதிரி என்று நினைக்கிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூட்டமைப்புக்கு அடிப்பது இந்தியாவை அடிப்பதுமாதிரி என்று நினைக்கிறார்களோ?

 

 

 

கூட்டமைப்பு மேல் தாக்குதல் செய்தவர்கள்

இதைவிட அதிகமாகத்தாக்கியிருக்கணும் என்ற எதிர்பார்ப்பா இசை?

ஏன் இந்த கோபம் சம்பந்தர் மீது???????? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.