Jump to content

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Recommended Posts

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Posted by
சாந்தி ரமேஷ் வவுனியன்


Saturday, April 6, 2013

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....!



28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர்
தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து
போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும்
இதுவாகவே இருந்தது.


இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து
உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது
இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால்
பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று
வருகிறவர்களுக்கான மாற்று வழியைச் செய்ய வகையும் தெரியவில்லை.
 


eelam6.jpg


03.04.2013 மதியம் 12.27இற்கு அந்த இலக்கத்திலிருந்து வந்த குரல் ஒரு பெண்ணுடையது.


ஏன்னக்கா உங்களுக்கு இரக்கமே வராதா ? எத்தின தரமமக்கா மிஸ்கோல்
விட்டனான் ? உங்கடை பிள்ளை தானக்கா நானும்....நீங்கள் தானக்கா எங்களுக்கு
உதவ வேணும்....! எனக்கொரு கையும் கண்ணும் இல்லை நான் காயப்பட்டிருக்கேக்க
நீங்கள் வந்து பாத்தனீங்களக்கா....! அழுதழுது தனது கதைகளைச் சொல்லிக்
கொண்டு போனவளின் தொடர்பு அறுபட்டது.


அடுத்து அரைமணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் அழைத்தாள். அக்கா காசு
முடிஞ்சுது ஒருக்கா எடுங்கோ...! சரி நீங்க கட்பண்ணுங்கோ நானொரு
2மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். காத்திருப்பன் கட்டாயம் எடுங்கோ
அக்கா....! சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். உரிமையோடும் அதிகாரத்தோடுமான
அவளது குரல் ஞாபகத்தில் எங்காவது பதியமாகியிருக்கிறாளா ? அவள் யார் ? 
தேடத் தொடங்கியது மனசு.


அடுத்த 3மணித்தியாலத்தின் பின் அவள் அழைத்த இலக்கத்திற்கு அழைத்தேன்.

உங்கடை பேரென்ன ? சங்கீதத்துடன் சேர்ந்த ஒரு இராகத்தின் பெயரைச்
சொல்லித் தன்னை அடையாளப்படுத்தினாள். அவளும் அவளது கணவனோடு
வீரச்சாவடைந்துவிட்டதாகவே 2009 முடிவுகளின் பின்னால் கிடைத்த செய்தி. ஆனால்
2013இல் அவள் தான் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை நம்புவதற்கு சிரமமாகவே
இருந்தது.

000            000               000
 


870feb1750d6719784d6fb689dc970c8.jpg


1990களில் அவள் போராளியானவள். அந்த நாட்களில் விடுதலைப்பாதையில்
அணிவகுத்தவர்களுள் அவளும் ஒருத்தியாய் மாங்குளத்தில் முதல்
சண்டையனுபவத்தைப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பின் 1991ஆனையிறவுச் சமரில்
ஒரு கண்ணை இழந்தாள். யாழ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று மீண்டும்
பணியில் இணைந்து 1992இல் துறைசார் பயிற்சியொன்றில் இணைக்கப்பட்டாள். அவளது
சாதனையும் ஒவ்வொர வீரமிகு விழுதுகளின் கதைபோல 2001 வரையும் எழுதிவிட
முடியாத வீரம் படைதோரின் பெயர்களுள் அவளும் ஒருத்தியாய்....!

2001இல் தீச்சுவாலை நடவடிக்கையில் கையையும் காதையும் இழந்தாள். அவள்
பணியாற்றிய துறையைச் சேர்ந்தவொரு வீரன் அவளைக்காதலித்தான். 2002இல்
அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. 2004இல் ஒரு குழந்தைக்கு
அம்மாவானாள். பணியின் நிமித்தம் வீடு குடும்பம் பலருக்கு மறந்து போகிற
விடயம். அதுபோல அவளது காதல் கணவனும் வீட்டை மறந்து பணியில்....!
காற்றுப்புகா இடங்களில் கடமை முடிக்க அவன் வீட்டை மறந்து போயிருந்தான்.

நம்பிய சமாதானம் இரத்தகளமாய் மாறிக்கொண்டிருந்த தருணத்தில் வன்னிக்கள
முனையில் கணவனும் மனைவியும் கடமையில் மூழ்கினர். பிள்ளையுடன் கூட நேரம்
செலவளிக்க முடியாது பணியில் ஊறிக்கிடந்தனர்.


யுத்தம் வன்னியை இறுக்கியகாலம். 2009ஏப்றல் மாதத்தின் தொடக்கம். புதிய வழியொன்றின் திறவுகோலாக
நம்பிய ஆனந்தபுரம் சமர்க்களத்தில் அவளது காதல் கணவனும் களத்தில் நின்றான்.

வெற்றிவரும் ஒரு பெரும் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் அவளும் அவள்
போன்ற பலரும் தங்கள் கணவர்களை , சக தோழ தோழிகளின் வெற்றிச் செய்திக்காய்
காத்திருந்தார்கள்.

சமரின் உக்கிரம் எதிர்பாராத பேரிடியாய்.....ஈழவிடுதலைப்பாதையின்
விடிவெள்ளிகளான  முதல் நிலைத்தளபதிகள் பலரையும் இழந்து களம் மாறியது.
ஏல்லோருடைய கனவுகளும் நம்பிக்கைகளும் கரைந்து போனது. அவளது கணவனும் அந்தச்
சமரில் வீரச்சாவடைந்து விட்டதாய் செய்தி மட்டும் வந்தடைந்தது.

நெஞ்சில் விழுந்த பேரிடியைத் தாங்கும் வலுவை இழந்தாலும் குழந்தைக்காக
அவள் உயிர் மீண்டாக வேண்டிய கட்டாயம். மணவாழ்வில் அவனோடு கரைந்த
பொழுதுகளின் நினைவோடு வழியும் கண்ணீரின் கடைசிச்சொட்டு காயும் வரை
அவனுக்காய் அழுதாள். ஊலகத்தின் மூலையெங்கும் எழுச்சி கொண்டிருந்த
உலகத்தமிழரின் பேரெழுச்சி மூலம் மாற்றமொன்று துளிர்க்குமென நம்பிய
ஆயிரமாயிரம் பேரைப்போல அவளும் நம்பியிருந்தாள்.
 


news%5C2009%5C4%5Cimages%5CnewsLTTE_DEAD



கால நேரம் பாராமல் வெடிக்கும் குண்டுகளின் சத்தமும் சாவுகளின்
குரல்களுமான பொழுதொன்றில்; விழுந்த எறிகணையில் வயிற்றில் காயமடைந்தாள்.
சாவின் கடைசித்துளி வரை போனது நிலமை. இடையில் செத்துப்போய்விடாமல்
தன்னுயிர் மீள வேண்டுமென அவள் இயன்றவரை முயன்று மருத்துவம் பெற்றாள்.

000         000           000

நினைத்தவை எல்லாம் மாறி நிலமையும் மாறியது. 2009மே 17கால் போன போக்கில்
எதிரியின் எல்லைக்குள் குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள். களையெடுப்பில்
அவளும் கைநீட்டப்பட்டு சிறையில் அடைபட்டு வெளியுலகை வெளியுலக
மனிதர்களையெல்லாம் மறந்த காலங்கள் அவை. சூனியத்தின் வாயில் சிதைந்து போனது
குரல்கள். அவளது குரலும் 4ம் மாடிவரை போய் மீண்டு சிறையொன்றில்
அடைக்கப்பட்டாள்.


வாழ்வுக்கும் சாவுக்குமான மரண வேதனையை அந்த நாட்களில்
அனுபவித்தாள். துயரமே அவளைத் தின்று தொலைத்தது. ஒரு புறம் ஊனத்தின்
வலி....மறுபுறம் குழந்தையின் எதிர்காலம்.....இன்னொரு புறம் சிறைவாழ்வின்
நீளம்....? இரவுகள் நித்திரை தொலைக்க மன அழுத்தம் பயங்கரம் மிக்க கனவுகள்
இதுவே நிரந்தரமானது.

எல்லா இழப்பின் இறுதியிலும் எல்லோரும் இனி கடவுளே எல்லாம் என நம்புகிற
ஒரு நிலமை இவளுக்கும். 2011இல் சிறைவாழ்வு முடிந்து குழந்தையுடன்
இணைந்தாள். வருமானமில்லை வாழ்வுக்கான ஆதாரமில்லை.

அப்போது சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு உள்ளுரில் இயங்கிய
நிறுவனமொன்று 10ஆயிரம் ரூபா பண உதவி கொடுத்தது. அந்தப் பத்தாயிரம் ரூபாவோடு
இரவல் காணியில் தறப்பாளைக்கட்டிக் கொண்டு அவளுக்கு மிஞ்சிய உறவான
அம்மாவும் வன்னியில் ஒரு ஊரில் குடியேறினார்கள்.


அன்றாடப் பொழுதைக் கழிக்கவே பேரவலம் மிக்க கொடுமையை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய துயரம்.
உதவிகள் தேடி யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத அச்சம்.


வெளிநாடுகளிலிருந்து முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் செய்கிறார்கள் என ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் யாரிடம் தொடர்பு கொண்டு யாரிடம் கேட்பது ? இன்னொருவரிடம் கையேந்த சுயகௌரவமும் இடங்கொடுக்காத மனநிலை....!

அண்மையில் ஊனமுற்ற முன்னாள் போராளியொருவனின் மரணவீட்டுக்குப்
போயிருந்தாள். வந்திருந்த பலரும் ஆளையாள் கண்டதும் அழுது தங்களை ஞாபகம்
கொண்டனர். மரண வீட்டில் வந்திருந்த ஒரு ஊனமுற்ற முன்னாள் சக தோழன் தான்
அவளுக்கொரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்தான். இலக்கம் கிடைத்தும் எப்படி
அறிமுகமாவது எப்படி உதவி கேட்பதென்ற குழப்பம் மீண்டும் அந்தத் தோழனே
நம்பிக்கை கொடுத்தான்.

எடுத்துக் கதையுங்கோ அவையின்ரை கடமைதானே எங்களுக்கு உதவிறது ?
இதிலையென்ன பயப்பிடக்கிடக்கு ? பயப்பிடாமல் கேளுங்கோ... யோசிக்காமல்
உரிமையோடை கேளுங்கோ.....! என்ற அவனது வார்த்தைகளோடு கொஞ்சம் தெம்பு வந்தது.


000         000            000

பேச ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும் 23நிமிடங்களும் கரைந்து போனது.
ஆயிரமாயிரம் கதைகளை அவளது வாழ்வு சுமந்து துடிப்பதை அவள் விளக்கிக் கொண்டு
போனாள்.

என்னாலை வேலையொண்டும் செய்யேலாதக்கா பிள்ளையின்ரை படிப்பு , வயது போன
அம்மா இதோடை இந்த ஊனத்தோடை இந்த சமூகத்தோடை சண்டை போட்டு சமாளிக்கேலாமல்
இருக்குதக்கா...! எங்களைக் கண்டாலே சனம் ஒரு மாதிரியாத்தானக்கா
பாக்குது...! றோட்டில போனா ஒவ்வொருதற்றை பார்வையும் ஏதோ நாங்கள்
தீண்டத்தகாத மாதிரித்தானக்கா பாக்கினம்....அந்த நேரம் செத்துப் போகாமல் ஏன்
வாழ்றமெண்ட வெறுப்புத்தான்....என்னேயிறதெண்டே தெரியாமல் தானிருக்கிறன்.

நீங்களும் நான் கனதரம் மிஸ்கோல் விட எடுக்காமல் விட்டது சரியான கோவமாக்
கிடந்தது அதுதான் கோவமாக் கதைச்சுப்போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோக்கா.
நாங்கள் இருந்த நிலமையும் வாழ்ந்த வாழ்க்கையும் பாருங்கோ இப்ப என்ன
நிலமையெண்டு ? ஏனடா இயக்கத்துக்கு போனமெண்டும் சிலவேளை நினைக்கிறது தான். 

அழுகை மாறி அவள் அந்தநாள் கதைகள் முதல் ஆயிரமாயிரம் நினைவுகளை மீளவும்
தந்தாள். இறந்து போனதாய் நம்பிய பலர் உயிருடன் வாழும் கதைகளையெல்லாம்
சொன்னாள்.

அக்கா அமுதினியைத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரியுமெல்லோ அவளுக்கு
காலில்லை கையும் ஏலாதுதானே...! அவளை ஒருவர் பிரான்சிலையிருந்து வந்து
கலியாணங்கட்டி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு தெரியுமே ?

அமுதினியாரைக்கட்டினாள் ?

அது பெரிய கதையக்கா....அவளுக்கு 35வயது. குடும்பம் சரியான கஸ்ரம்
கடையொண்டில வேலை செய்து கொண்டிருந்தவள். பிரான்சிலயிருந்து ஒருவர் இஞ்சை
வந்து நிண்டு ஆக்களுக்கு உதவி செய்தவர். அவருக்கு இப்ப வயது 66. தான்
கலியாணங்கட்டிறனெண்டு உங்கை கனபேரைக் கேட்டவர். அமுதினி வேலை செய்த
இடத்திற்கு நெடுகப்போய் வந்திருக்கிறார்.


இஞ்சை எங்கடை சனம் தெரியும்தானேக்கா தனிய எங்களை வாழ விடாதுகள்.....! அவளுக்கும் வேறை
வழியில்லை இவர் வெளிநாடு எடுக்கிறனெண்டு சொல்லி கலியாணங்கட்டீட்டார். பிறகு
வெளிநாடும் எடுக்கேல்ல வருசத்துக்கு ஒருக்கா வந்து 3மாதம் நிண்டிட்டுப்
போறார். ஒரு கடையும் போட்டுக்குடுத்து ஓட்டோ ஒண்டும் எடுத்துக்
குடுத்திருக்கிறார். பிள்ளைக்கும் இப்ப 2வயதாகீட்டுது. அவர் வெளிநாடு
கொண்டு போறது கஸ்ரமெண்டு சொல்றாராம்.

அவரது பெயர் விபரத்தை விசாரித்தேன். அவள் சொன்ன போது எனக்கு யாரோ
மூஞ்சியைப் பொத்தி அடிச்சது மாதிரியிருந்தது. 2010ம் ஆண்டு நான்
வானொலியொன்றில் நேசக்கரம் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர்
தொடர்பு கொண்டு விதவைகளுக்கு உதவ விரும்புவதாகக் கேட்டிருந்தார். நானும்
வயதான ஒருவர் தன் பிள்ளையைப் போலொருத்திக்கு உதவுவார் என நம்பி கதைத்த போது
அவர் ஒரு போரால் பாதிக்கப்பட்ட விதவையை தான் திருமணம் செய்ய
விரும்புவதாகச் சொன்னார்.


எனக்கு அறுவது தாண்டீட்டுது மனிசி செத்துப்போட்டா 4பிள்ளையள் அவையெல்லாம் கலியாணம் கட்டீட்டினம் நான் நல்லாவேலை செய்தனான்...இப்ப பென்சன் வருது....நான் செத்துப் போனா என்ரை பென்சன்
வீண்தானே.....ஆரும் ஒரு பிள்ளையை கலியாணம் கட்டினா அந்தப்பிள்ளைக்கு என்ரை
காசும் பிரியோசனப்படுமெல்லே ?

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் அந்த அறுபது தாண்டிய
ஐயாவின் இரக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஐயா நீங்கள் கலியாணம்
கட்டாமல் உங்கடை பென்சனில பத்துப்பிள்ளையளைப் படிப்பிச்சு விடுங்கோவன் ?
எங்கடை பிள்ளையின்ரை வறுமையை நீங்கள் ஒரு தமிழன் இப்பிடி பயன்படுத்த
நினைக்கிறது சரியோ ?

ஐயாவுக்கு கடும் கோவம் வந்திட்டுது. நான் ஊரில போனால் ஆளாளுக்கு வயது
வித்தியாசம் பாக்காமல் வந்து நிக்குங்கள். இப்பத்தைய நிலமையில வெளிநாடு
வாறதெண்டா உந்த வயது வடிவு ஒண்டும் பாக்காமல் வெளிக்கிடுங்கள் தெரியுமே ?

அதுக்கு மேல் அவரோடு முரண்பட்டு வாதிட விரும்பாமல்.....சரி உங்கடை
விருப்பப்படி செய்யுங்கோ ஆனால் தயவு செய்து எனக்கு ரெலிபோனெடுக்காதையுங்கோ
என்னிட்டை இப்பிடி கலியாணங்கட்ட பெண் கேட்காதையுங்கோ.....! சொல்லிவிட்டுத்
தொடர்பை நானே அறுத்தேன்.


அதன் பின் பல தடவை அந்த ஐயா தொடர்பு கொண்டு ஒரே தொல்லையான போது இனிமேல் என்னுடன் இத்தகைய கதையோடு வந்தால் பெயர் விலாசம் யாவற்றோடும் ஊடகங்களில் அம்பலப்படுத்திவிடுவேன் எனச் சொன்னபோது ''நீ பாரன் நான் ஊருக்குப் போய்....''அடுத்த வார்த்தைகள் தமிழில் உள்ள
கெட்டவார்த்தைகளாக தொடர்பைத் துண்டித்து அந்த இலக்கத்தையும் தொலைபேசியில்
நிறுத்தி விட்டேன்.

அன்று சவால்விட்டு  இதோ பார் என்ற அதே நபர் அமுதினியைத் திருமணம்
செய்துள்ளதை மனசால் ஏற்க முடியாது போனது. இந்த நிலமைக்கு இட்டுச் சென்ற
எல்லார் மீதும் கோபமே வந்தது.

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன
கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

அக்கா என்னை பிழையாய் நினைக்கக்கூடாது இப்பிடியான வயது போன யாரும்
இருந்தா எனக்கும் ஒண்டைக்கட்டித்தாங்கோக்கா நானும் என்ரை பிள்ளையை ஒரு நல்ல
நிலமைக்கு கொண்டு வந்திருவன்...!

உமக்கென்ன விசரோ ? பைத்தியம் மாதிரி....! (தணிக்கை...) எனது
வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது கட்டுப்பாட்டை இழந்து அவள் மீது கோபமாக
மாறியது. அவள் அழத்தொடங்கினாள்.

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான்
தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப
வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம்
இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!


சாமானுகள் விக்கிற விலையில சாதாரணமா வாழிறதெண்டாலே நாளுக்கு ஐநூறு ரூவாய்
வேணும்....மாதத்துக்கு 15ஆயிரம் ரூவாய் அதுகும் என்னைமாதிரியான ஊனங்களுக்கு
மருந்து அதிதெண்டு எவ்வளவு தேவையள்...! ஆரிப்ப எங்களை மதிக்கினம்
சொல்லுங்கோ பாப்பம் ?


அறுவது வயதோ எழுவது வயதோ இருக்கிற வரையும் ஏதோ
வாழ்ந்திட்டுப் போக ஆராவது வெளிநாட்டு ஆம்பிளையள் முன் வந்தா நான்
கட்டுவனக்கா....! ஏனெண்டா எனக்கு என்ரை பிள்ளையின்ரை வாழ்க்கை
முக்கியம்....! அவள் அழுதழுது சொல்லிக் கொண்டு போனாள்....

என்னால் அவளது முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தொலைபேசியை
நிறுத்தினேன். அவளது கதைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
அவள் ஊனமென்றதை தெரிந்தே முன்வந்து காதலித்து அவளை அவளது கணவன் திருமணம்
செய்தான். அவளது ஊனத்தை அவன் ஒரு போதும் சுமையாகவே எண்ணியதில்லை.
கண்ணுக்குள் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் அவர்கள்
வாழ்ந்தார்கள். இன்று அவன் ஒரு வேளை உயிரோடிருந்து இந்த முடிவினைக் கேட்க
நேரின்....???

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்திருந்த போராளிப்பெண்களின்
குரல்களில் ஒரு குரல் போலவே இவளது குரல் எனக்குள் வந்து வந்து போனது....!
இந்த அவலங்களுக்கெல்லாம் காரணமான நானும் என்போன்ற தமிழர்களும் இவர்களது
வாழ்வை மாற்ற என்ன செய்யப்போகிறோம் ?????


05.04.2013 அதிகாலை தொடக்கம் மதியம் வரையும் 11தடவைகள் மிஸ்கோல் விட்டிருந்தாள். 2குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

05.04.2013 மாலை 15.57இற்கு அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் இப்படித்தான் எழுதியிருந்தாள்:-

அக்கா மன்னிச்சுக் கொள்ளுங்கோ....உங்கடை தொடர்பு வந்த போது என்னுறவை
மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தேன். எனது இயலாமையையே உங்களிடம் சொன்னேன்.
நான் கதைத்தது பிடிக்காமல் கட் பண்ணீட்டீங்கள். அக்கா உங்களை நம்புகிறேன்
தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் எதிர்பார்த்திருக்கிறேன்.

06.04.2013 (இரவு 00.45மணி)

 

http://mullaimann.blogspot.de/2013/04/blog-post.html

Link to comment
Share on other sites

விவசாயி தலைப்பையும் படங்களையும் மட்டும் பார்த்து விட்டு எழுதியிருக்கிறார் போல் இருக்கிறது.

இதை முழுவதும் படித்ததன் பிற்பாடு என்ன செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் முன்பு அவர்களின் உயிரைக் கேட்டோம். இப்பொழுது உடலையும் கேட்கிறோம். ஈனப் பிறப்புகள் நாங்கள்.

Link to comment
Share on other sites

பல சம்பவங்கள் உணர்த்துவது என்னவென்றால், உள்ளூர்ச் சமூகமே இவர்களை ஒதுக்கி வைக்கிறது என்பதை.. இதைவிடக் கொடுமை வேறு இருக்கமுடியாது. சொந்தக் குடும்பத்துக்குள்ளேயே ஒதுக்கிவைக்கப்படும் சோகம்..

 

உள்ளூர் சமூகத்தின் ஆதரவு இல்லாவிட்டாலும், ஒதுக்கி வைத்து கொடுமையாவது செய்யாதிருக்கலாம்..

 

வயதான ஐயா மறுமணம் செய்ததை என்னவென்று சொல்ல..?! அந்தப் போராளிப் பெண்ணுக்கு ஏதோ உதவி கிடைக்கிறது என ஆறுதல் கொள்வதா.. அல்லது இழவுவீட்டில் பிடுங்கியதுவரையில் இலாபம் என்று இருக்கும் மந்தைகளை நோவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான்

தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப

வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம்

இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!

 

இந்த வலி யாருக்கும் விளங்காது!

Link to comment
Share on other sites

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன

கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

 

மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

 

 

 

Link to comment
Share on other sites

இந்த போராளிக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க எவளவு வரும்? என்று ஒரு கள உறவு கேட்டிருந்தார்.... தான் முயற்சி செய்து பாபதர்க்கு.....

Link to comment
Share on other sites

விவசாயி தலைப்பையும் படங்களையும் மட்டும் பார்த்து விட்டு எழுதியிருக்கிறார் போல் இருக்கிறது.

இதை முழுவதும் படித்ததன் பிற்பாடு என்ன செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் முன்பு அவர்களின் உயிரைக் கேட்டோம். இப்பொழுது உடலையும் கேட்கிறோம். ஈனப் பிறப்புகள் நாங்கள்.

சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் இவள் போன்ற மனநிலமையில் பலர் எதற்கும் தயராக இருக்கிற அவலத்துக்கான மாற்றத்தை கொண்டு வரும் சக்தி புலம்பெயர் அனைத்து தமிழர்களின் கையிலுமே இருக்கிறது.

..

வயதான ஐயா மறுமணம் செய்ததை என்னவென்று சொல்ல..?! அந்தப் போராளிப் பெண்ணுக்கு ஏதோ உதவி கிடைக்கிறது என ஆறுதல் கொள்வதா.. அல்லது இழவுவீட்டில் பிடுங்கியதுவரையில் இலாபம் என்று இருக்கும் மந்தைகளை நோவதா?

அவர்களது இயலாமையை பயன்படுத்துவதை சுயநலம் மிக்க வக்கிரமென்றே சொல்லலாம்.

 

இந்த வலி யாருக்கும் விளங்காது!

 

உண்மைதான் வலியை மாற்ற எங்களால் ஆன உதவிகள் உறுதுணையாகும். ஆனால் எத்தனைபேருக்கென்று கையேந்துவது ? என்பதுதான் இப்போதைய பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அளவுக்கு அதிகமாக மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள். அந்த வகையில் சில முன்னாள் போராளிகளின் தனிப்பட்ட முடிவுகளை இட்டு சிலாகிப்பது எமக்குப் புதிதல்ல. ஆனால் அது அனாவசியமானது. பெரியார் என்பவர் ஒரு 27 வயது மணியம்மையை திருமணம் செய்த போது அதனை புரட்சி என்று சொன்ன நாம் (தமிழர்கள்).. அரபாத் 68 வயதில் திருமணம் செய்த போது உலகமே புகழ வாழ்த்த கூடி இருந்து வாழ்த்திய நாம்.. ஒரு 66 வயது தமிழ் முதியவரும்.. 35 வயதுப் பெண்மணியும் அவரவர் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு அவரவர் தேவைக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தலையீடு செய்வது என்பது அநாகரிகமானது. அதுவும் புலம்பெயர் சூழலில் வாழ்பவர்கள் அதனைச் செய்வது இன்னும் மோசமான செயல்.

 

இங்கே புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ வயதானவர்கள்.. ஆசிய நாடுகளிற்குப் போய் வறிய குடும்பங்களில் பெண்ணெடுத்து வருகின்றனர். முஸ்லீம்களில் பலர் இவ்வாறு செய்து அவர்களை மேற்கு நாடுகளுக்கு அழைத்து வருகின்றனர். அவை அந்த நபர்களின் சொந்தப் பிரச்சனை. அதனை சமூகப் பிரச்சனை என்று பார்ப்பதும்.. பழி வாங்கும் தோறணையில் அணுகுவதும் சரியா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்..??!

 

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்துள்ள பல தமிழ் பெண்களில் அநேகர்.. இங்கு வந்து குடியேறிய தமிழ் ஆண்களை மணம் முடித்து வந்தவர்களாவர். அவர்களில் பலர் பல்வேறு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று மற்றும் பெறாமல்.. தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். பலர் அரச உதவிப்பணத்தைப் பெறக் கூட இப்படி நடந்து கொள்கின்றனர். இப்படியான ஒரு சமூகப் பின்னணி கொண்ட நாம்.. ஒரு போராளி தனக்குரிய ஆபத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு 66 வயதானவரை மணந்து கொள்வதில் (அதுவும் ஏலவே திருமணமான போராளிகள்) என்ன தவறு இருக்கிறது..??! அதனை தவறென்று சொல்லும் நாம்.. அவர்களுக்கு வேறு என்ன வழியை காட்டுகின்றோம்.. என்ற கேள்விகள் நிறையவே எழுகின்றன..!

 

மேலும் இந்த முன்னாள் போராளிகள் தோல்வி ஒன்றுக்கான சூழலுக்கு தயார்ப்படுத்தப்படாத நிலையில் தோல்வி எய்தப்பட்டுள்ளதன் விளைவாக அதன் அதிர்ச்சியில் தாக்கத்தில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றமையால்.. எந்தச் சமூகத்தின் முன் தலைநிமிர்ந்து நின்றார்களோ.. அந்தச் சமூகத்தின் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை எய்தி இருக்கிறார்கள்.

 

உண்மையில் இவர்களை அந்த அதிர்ச்சிகளில் இருந்தும் மீள வைக்க வேண்டிய பொறுப்பு.. எங்கள் சமூகத்தினது. குறிப்பாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் கல்விச் சமூகத்தினது. ஆனால் அது அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை. அல்லது அது சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில்.. இதனை சர்வதேச அமைப்புக்களூடாகக் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான உருப்படியான நகர்வுகள் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. செய்யப்பட்டிருந்தால்... இப்படியான கதைகளும் போராளிகளின் இன்றைய கஸ்டத்தை காட்டி  ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. இந்தப் போராளிகள் எதற்காக போராடினார்களோ அதன் பிரதான இலச்சியத்தையும் குழிந்தோண்டிப் புதைக்கும் காணொளிகளும்.. கட்டுரைகளும்.. வரையப்படும் நிலை தோன்றி இருக்காது. இது கூட எதிரிக்கு எம்மீதான அடக்குமுறைக்கு உதவி நிற்கிறது.

 

நாம் எல் எல் ஆர் சி.. பற்றிக் கதைக்கிற அளவிற்கு.. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு.. எதிர்காலம்.. குறித்து சர்வதேச மட்டத்தில் முன்னிறுத்துவதில்லை. அவர்களுக்கு நிகழ்ந்த அநியாயங்களுக்கு நீதியும் கோருவதில்லை. எல்லாம் பயங்கரவாத உச்சரிப்புக்குள் முடக்கப்பட்டுக் கிடக்க விடப்பட்டுள்ளது.

 

மேலும்.. இந்த இவர்கள் மீது முன்னாள் போராளி என்ற அந்த முத்திரை மிகக் கொடூரமான மக்களை அவர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்கும் செயலைச் செய்கிறது. இதனை போர் முடிந்த ஆரம்பத்திலேயே இங்கு யாழில் சுட்டிக்காட்டி இருந்தோம். எவரும் அதைப்பற்றி துளியும் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இப்படி முன்னாள் போராளிகள் என்று அழைப்பதையும் அவர்களை சமூகத்தில் தனித்து இனங்காட்டுவதையும்.. எதிரியும் துரோகிகளும் முன்னின்று செயற்படுத்துகின்றனர். இது போர் களத்தில் அவர்கள் சரணடைந்த பின்னும் சுட்டுக்கொன்றதை விட மோசமான சித்திரவதை ஆகும். அதுவே மக்களும் அவர்களை விட்டு பயத்தால் தூர விலகி இருக்கச் செய்கிறது.

 

இந்தியப் படைகள் காலத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்த மக்கள் இன்று அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. அந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தாகும். இதனை புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய வகைகளுக்கு திரித்தும்.. மொழுகியும் எழுதி வருகின்றனர் என்ற சந்தேகம் எமக்குள் இயல்பாக எழுகிறது.

 

ஓரிருவர்.. ஓரிரு இடங்களில்.. போராளிகளை மதிக்கத் தெரியாதவர்கள் இருக்கலாம். போராட்ட காலத்திலும் அப்படியான ஊர்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் போர் பாதிப்புற்ற மக்களுக்கு (முன்னாள் போராளிகள் என்போரே இதில் அதிகம் அடங்குகின்றனர்) நாம் செய்ய வேண்டியது இரண்டு.

 

1. இவர்களை தோல்வியின் தாக்கத்தில் இருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள மன அளவில் உள்ள பாதிப்பில் இருந்தும்...  மீட்டு இயல்பிற்குக் கொண்டு வருவது.

 

2. அவர்கள் சமூகத்தில் சந்தித்து நிற்கும் சவால்களில் இருந்தும் அவர்கள் மீண்டு வர வழிகாட்டுவது... அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை.. ச்மூகத்தோடு இரண்டறக் கலக்கும் வரை.. துணையிருப்பது.குறிப்பாக இவர்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுவதை இயலுமானவரை தடுப்பது.. தவிர்க்கச் செய்வது.

 

இதனைச் செய்யாமல்.. வெறுமனவே அவர்களை கஸ்டத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும் தள்ளிவிட்டு விடுப்புப் பார்த்துக் கொண்டு அவற்றை இட்டு போலி  மனித உரிமை அக்கறைகளும்.. காணொளிகளும்.. கட்டுரைகளும்.. கதைகளும்.. கவிதைகளும் வரைந்து என்ன பயன்..??! இந்தக் கேள்வி எனக்குள் எப்போதோ எழுந்த போதும்.. ஒரு சிறு குழுவாக ஒரு பெரிய சவாலை சந்திப்பது இலகு அல்ல என்பதால் ஒடுங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக எம்மவர்களில் மற்றவர்களை நம்ப முடியாத ஒரு சூழலில்.. இது இவ்வாறு அமைந்து விடுகிறது.

 

இதில் இருந்து மீள வேண்டின் சர்வதேச கவனத்தை இவர்கள் மீது திருப்புவதும் கூட இவர்களின் மீள்விற்கு ஒரு வழியாக அமையலாம்..! மேலும் போராளிகள் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் நல்ல.. அல்லது பாதகமற்ற முடிவுகளை சிலாகித்து கெடுப்பதிலும் அவர்களின் புத்திக்கு சிந்தனைக்கு செயற்பட விடுவது நன்று..! :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. நீங்கள் சொல்லுறதும் ஒருவகையில் சரிதான். ஆனால், வெளியில் உள்ள இளைஞர்கள் எல்லாரும் முன்வந்தால்... இந்த நிலை ஏற்படாதுதானே?! அதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா??? :rolleyes:   

 

பந்தி பந்தியா கருத்து எழுதுறது இலகு. ஆனால்... அதை செயல்வடிவில் கொண்டுவாறது கஷ்டம்

ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்... அதை செய்வதற்கான மனநிலையும் திடமும் முதலில் நமக்குள் வரவேண்டும்.

அது உங்களிடம் இருக்கா நெடுக்ஸ்?  :unsure:  :rolleyes:   

 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நீங்கள் சொல்லுறதும் ஒருவகையில் சரிதான். ஆனால், வெளியில் உள்ள இளைஞர்கள் எல்லாரும் முன்வந்தால்... இந்த நிலை ஏற்படாதுதானே?! அதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா??? :rolleyes:   

 

பந்தி பந்தியா கருத்து எழுதுறது இலகு. ஆனால்... அதை செயல்வடிவில் கொண்டுவாறது கஷ்டம்

ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்... அதை செய்வதற்கான மனநிலையும் திடமும் முதலில் நமக்குள் வரவேண்டும்.

அது உங்களிடம் இருக்கா நெடுக்ஸ்?  :unsure:  :rolleyes:   

 

நடக்கிற விசயமா கதையுங்க. புலம்பெயர் தேசத்தில் உள்ள இன்றைய இளைஞர்கள் ஊரில் இருந்து பொண்ணே வேணான்னு இருக்கிறாங்க.. (அநேகர்). ஊரில இருந்து பெண்ணுப் பொறுக்கிற அந்த அல்லோலகல்லோலம் இப்ப கொஞ்சம் ஓய்ஞ்சிருக்குது. ஏன்னா.. இப்போ புகலிடத்தில் பிறந்தவர்களுக்கு பொண்ணு.. பையன் தேடும் காலம்..!

 

இவர்களில் அநேகருக்கு தாயகம் என்றாலே என்னென்று தெரியாது. அவர்களைப் போய்.. இந்த விதவைப் பெண்களை திருமணம் செய் என்றால் செய்வார்களா..???! ஏன்.. புகலிடத்தில் இருந்து கதை கட்டுரை காணொளி தயாரிப்பவர்கள் தான் தங்கள் பிள்ளைகளுக்கு செய்து வைப்பார்களா..??!

 

இன்னொன்றும் வெகு இலகு கவிதையார். அது மற்றவனைப் பார்த்து கேள்வி கேட்கிறது. அந்தக் கேள்வியை நீங்களே உங்களை நோக்கிக் கேட்டுப் பாருங்க..???! நடைமுறைச் சாத்தியமா என்று..???!

 

என்னைப் பொறுத்த வரை.. இந்த விதவைகளுக்கு மறுவாழ்வளிக்கிறன்.. மண்ணாங்கட்டி அளிக்கிறன் பேர்வழிகளோடு அந்தளவு கருத்தியல் நெருக்கம் இல்லை.

 

மனிதாபிமான உதவி தேவைப்படும் இடத்தில் அதை வழங்கி.. அவர்களே தங்களுக்குரிய வாழ்வை தேடிக் கொள்ள வழிகாட்டுதலும் புத்திமதியும் வழங்க முடியுமே தவிர.. எங்களால் அதற்கு அப்பால் சென்று பொறுப்புக்களை சுமக்க முடியாது. இதுதான் பொதுவான இளைஞர்களின் நிலைப்பாடும். இந்த எல்லைக்குள் நின்று கொண்டு தான்.. நாம் மிச்சத்தை சிந்திக்கனும்..! அதைவிட்டிட்டு.. இப்படியே கேள்வி கேட்டுக் கிட்டே இருந்தா.. பிரச்சனைகளை சந்திக்கும் மக்களுக்கு தீர்வு தான் என்ன..??!

 

ஒரு விதவையை.. அல்லது கணவன் காணாமல் போன ஒரு பெண்ணை குழந்தையோடு திருமணம் செய்ய ஒரு இளைஞன் வீராவேசத்தோடு முன் வருகிறான் என்று வையுங்கள். நீங்கள் எல்லோரும் அவனை வாழ்த்துவீங்க.. புரட்சி தீரன் என்று எழுதுவீங்க. ஏன் சுவரொட்டி கூட ஒட்டி வாழ்த்துவீங்க. கவிதை எழுதுவீங்க. பேஸ்புக்கில போடுவீங்க. இவை கொஞ்சம் + வ். இன்னும் கொஞ்சப் பேர்.. - வ் வா.. விரசமா கதைப்பாங்க.. பழிப்பாங்க.. புறணிபாடுவாங்க.. குற்றம் குறை சொல்லுவாங்க.

 

ஆனால் அந்த திருமணத்தின் அப்புறமான அவனின் குடும்ப வாழ்வுக்குள் எழக் கூடிய பிரச்சனைகள்.. அந்தப் பெண்ணின் மனநிலைகள்.. மாற்றங்கள்.. தேவைகள்.. இவை தரக்கூடிய பாதிப்புக்களை நீங்கள் சுமைப்பீர்களோ..???! நீங்கள் எல்லோரும் அதைச் செய்ய முன்வருவீர்கள் என்றால்.. நானும் உங்கள் கேள்விக்கு சாதகமான பதிலைத் தரலாம். ஆனால் நிஜத்தில் அது நடக்காது.

 

நீங்கள் போராட்டம் என்று ஒரு தொகுதி இளைஞர்களிடம் ஆயுதத்தையும் தேசத்தையும் பொறுப்பையும் கையளித்துவிட்டு.. மிகுதிப் பேர்.. போராட்டம் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்.. எதிரியை புகழ வேண்டிய இடத்தில் புகழ்ந்து.. அவனோடு நெருங்க வேண்டிய இடத்தில் நெருங்கி... அவனுக்கு பணிய வேண்டிய இடத்தில் பணிந்து... அப்புறம் வெளிநாடுகளில்.. காட்டிக்கொடுக்க வேண்டாததுகளை எல்லாம் காட்டிக் கொடுத்து.. ஒரு சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு.. நல்ல கன்னி கலையாத கூந்தல் மழுங்காத பொண்ணுங்களா பார்த்து சைட் அடிச்சுக் கொண்டு.. அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணிறது இருக்குப் பாருங்க.. அதைப் போல.. ஒரு துரோகத்தனம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது..!

 

இதுதான் எம் சமூக நிஜம். இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஓரிரு விதிவிலக்குகள்.. சமூகப் புறநடைகளே தவிர அவை பலரின் தப்பிப்புவாத உதாரணங்களே தவிர.. அதுவே சமூக வழக்கம் அல்ல..! எமது சமூக வழக்கம் மேலே சொல்லப்பட்டுள்ளது. இதற்குள் நின்று கொண்டு தான் நாம் தீர்வு தேட வேண்டும். இன்றேல் எல்லோரும் மாற வேண்டும். ஓரிருவரை தியாகம் செய்யக் கேட்பது அல்ல நீதி.. போராட்டம்..! எல்லோரும் தாய் நாட்டுக்காக இதய சுத்தியோடு.. தியாகம் செய்ய முன்வந்திருந்தால்.. இன்று இந்த நிலை இந்தப் பெண்களுக்கு வந்திருக்காது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

 

சரி.. அந்த ஐயா தவிச்ச முயல் அடிச்சது தப்புன்னு ஒரு கருத்துக்கு எடுத்துக் கொள்வோம்.. அப்போ அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வளிப்பது யார்..??! 

 

அவர்கள் கையைப் பிடிச்சு இழுக்கும் அவர்கள் வாழ்வை சீரழிச்சு விபச்சாரம் வரை கொண்டு போகும்.... சிங்களவனும் ஒட்டுக்குழுக்களுமா..???!

 

அந்த ஐயா மீது புறணிபாடும் நாம்... ஏன்.. அதற்கு சாத்தியமான மாற்றுக்களை முன்வைக்கிறோம் இல்லை. ஏன்னா.. எங்களிடம் உருப்படியா எதனையும் செய்யும் மனநிலை இல்லை. ஆளாளால் தான் தப்பிக்கனும்.. சுகபோகமாக இருக்கனும்.. இடையில் பாவம்.. புண்ணியம் பார்க்கிறவன் ஏதாவது செய்தால் அதை விமர்ச்சிச்சு நாங்கள் எங்களை வித்தியாசமான புரட்சியாளர்களாக் காட்டிக்கிட்டு.. வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு இருக்கனும்.

 

இதனால்.. நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா..??! அப்படி தீர்வு வருமென்றால்.. அதனை இனங்காட்டி நடைமுறைப்படுத்துவது தான் புத்திசாலித்தனம். சமூகத் தேவை..! அப்படியான ஏதாவது கருத்து இங்க வந்திருக்கா..?????!  :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

உங்களின் கேள்வி ஒருபக்க நியாயமானது  மட்டுமே.

 
முள்ளிவாய்க்கால் முடிவின்போது எனது உள்மனதில் நான் நினைத்தேன்....
மாவீரர்களின் கனவை புதைத்துவிட்டோம் என்று.
ஆனால் இனி மாவீரராக இருப்பவர்களை காப்பற்றுவோமா? என்று.
 
முன்னை நாள் போராளிகளின் நிலைகளை இப்போது கொண்டு வந்து இலக்கியம் படைக்கிறார்கள்.
இதே நிலைதான் முன்பும் இருந்தது. அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
வலித்தவர்கள் மட்டும் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார்கள்.
மாவீரர் குடும்பத்தில் இருந்தே அடுத்த போராளியும் செல்லும் நிலைமை அன்றும் இருந்தது. அடுத்தவீட்டில் புலிகளின் வரியால் வாடி வதங்கி போய்  இருந்தார்கள் .
 
இது தமிழனின் இயற்குணம்.
 
இது இப்போது மட்டும் வந்ததல்ல.............. முன்பு வேறு வடிவு 
இப்போ இந்த வடிவு.
வடிவங்கள் மாறுகின்றன. விடயம் ஒன்றுதான்.
வடிவங்கள் மாறும்போது சிலருக்கு தெளிவாக தெரிகிறது.
 
கள உறவு அர்ஜுன் அவர்கள் (இது தனிமனித தாக்குதல் என்று கருதும் இடத்து நீக்கிவிடவும்) புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பை பற்றி துடித்து துன்புற்று எழுதுகிறார். 
மொத்த குடும்பமும் கனடாவில் இருக்கிறார்கள். எமக்கு அப்படி வசதி கிடைக்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பு என்று புலிகள் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார்கள். அவரக்ளிடமும் வேறு தெரிவு இல்லை என்பது எமக்கு தெரியும். 
பிள்ளைகள் எல்லாம் படித்து முடிந்த பின் வயது போன நேரத்தில் சேவை செய்ய தான் யாழ்பாணம் போவாராம் என்று இன்னொரு திரியில் எழுதிய அர்ஜுன்  அவர்கள். எங்கள் வீடில் புலிகள்  காட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆள்பிடித்ததட்கு மிகுந்த கண்டனம் தெரிவிக்கின்றார்.
கட்டாய ஆட்சேர்ப்பு காலத்திற்கு முன்பு அங்கயகன்னிகள் தாமாகவே சேர்ந்து தாமாகவே கரும்புலி படகு ஏறிய காலங்களில். இவர்கள் போய் ஏறினார்களா????
அன்று அங்கய கன்னி 
இன்று அவள் தங்கை 
இதுதான் நிலைமை. 
சாதியை  சொல்லி அயல்வீட்டு மனிதனை மிதித்தவன் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? 
இந்த முதியவருக்கு இந்த துணிவை இந்த அறிவை கொடுத்தது யார்???
 
அடுத்தவன் படிக்கவில்லையாம் என்று இங்கே எழுத்திலேயே எழுதுகிறார்களே?
அவர்கள் விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் சென்றரில் இருந்தா யாழில் எழுதுகிறார்கள் ? அவர்கள் என்ன படித்து கிழித்தார்கள்? படிப்பிலே கிழித்தவன் அப்படி எழுதுவானா ? மற்றவனை காட்டி தம்மை மேம்படுத்துவது. ஒரு போலி நாடகம் போட்டு  ராஜா  ஆவது இது சமூகம் கற்று கொடுக்கிறது. 
உமா மகேஸ்வரன் புளட்டை தொடங்கியதட்கும் இதுதான் அடிப்படை காரணம்.
எமது இனம் அழிந்து போனதற்கும் இதுதான் காரணம்.
 
போராளிகளின் வாழ்வை தக்கவைத்து  இதை திருத்திவிட முடியாது.
ஓவரு மனிதனும் அறிவு பெற வேண்டும்.
ஒரு தமிழனுக்கு யாரவது அடித்தால் எல்லா தமிழனுக்கும் வலிக்க வேண்டும்.
பிரபாகரனுக்கு மட்டுமே வலித்தால்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

உங்களின் கேள்வி ஒருபக்க நியாயமானது  மட்டுமே.

 
முள்ளிவாய்க்கால் முடிவின்போது எனது உள்மனதில் நான் நினைத்தேன்....
மாவீரர்களின் கனவை புதைத்துவிட்டோம் என்று.
ஆனால் இனி மாவீரராக இருப்பவர்களை காப்பற்றுவோமா? என்று.
 
முன்னை நாள் போராளிகளின் நிலைகளை இப்போது கொண்டு வந்து இலக்கியம் படைக்கிறார்கள்.
இதே நிலைதான் முன்பும் இருந்தது. அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
வலித்தவர்கள் மட்டும் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார்கள்.
மாவீரர் குடும்பத்தில் இருந்தே அடுத்த போராளியும் செல்லும் நிலைமை அன்றும் இருந்தது. அடுத்தவீட்டில் புலிகளின் வரியால் வாடி வதங்கி போய்  இருந்தார்கள் .
 
இது தமிழனின் இயற்குணம்.
 
இது இப்போது மட்டும் வந்ததல்ல.............. முன்பு வேறு வடிவு 
இப்போ இந்த வடிவு.
வடிவங்கள் மாறுகின்றன. விடயம் ஒன்றுதான்.
வடிவங்கள் மாறும்போது சிலருக்கு தெளிவாக தெரிகிறது.
 
கள உறவு அர்ஜுன் அவர்கள் (இது தனிமனித தாக்குதல் என்று கருதும் இடத்து நீக்கிவிடவும்) புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பை பற்றி துடித்து துன்புற்று எழுதுகிறார். 
மொத்த குடும்பமும் கனடாவில் இருக்கிறார்கள். எமக்கு அப்படி வசதி கிடைக்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பு என்று புலிகள் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார்கள். அவரக்ளிடமும் வேறு தெரிவு இல்லை என்பது எமக்கு தெரியும். 
பிள்ளைகள் எல்லாம் படித்து முடிந்த பின் வயது போன நேரத்தில் சேவை செய்ய தான் யாழ்பாணம் போவாராம் என்று இன்னொரு திரியில் எழுதிய அர்ஜுன்  அவர்கள். எங்கள் வீடில் புலிகள்  காட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆள்பிடித்ததட்கு மிகுந்த கண்டனம் தெரிவிக்கின்றார்.
கட்டாய ஆட்சேர்ப்பு காலத்திற்கு முன்பு அங்கயகன்னிகள் தாமாகவே சேர்ந்து தாமாகவே கரும்புலி படகு ஏறிய காலங்களில். இவர்கள் போய் ஏறினார்களா????
அன்று அங்கய கன்னி 
இன்று அவள் தங்கை 
இதுதான் நிலைமை. 
சாதியை  சொல்லி அயல்வீட்டு மனிதனை மிதித்தவன் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? 
இந்த முதியவருக்கு இந்த துணிவை இந்த அறிவை கொடுத்தது யார்???
 
அடுத்தவன் படிக்கவில்லையாம் என்று இங்கே எழுத்திலேயே எழுதுகிறார்களே?
அவர்கள் விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் சென்றரில் இருந்தா யாழில் எழுதுகிறார்கள் ? அவர்கள் என்ன படித்து கிழித்தார்கள்? படிப்பிலே கிழித்தவன் அப்படி எழுதுவானா ? மற்றவனை காட்டி தம்மை மேம்படுத்துவது. ஒரு போலி நாடகம் போட்டு  ராஜா  ஆவது இது சமூகம் கற்று கொடுக்கிறது. 
உமா மகேஸ்வரன் புளட்டை தொடங்கியதட்கும் இதுதான் அடிப்படை காரணம்.
எமது இனம் அழிந்து போனதற்கும் இதுதான் காரணம்.
 
போராளிகளின் வாழ்வை தக்கவைத்து  இதை திருத்திவிட முடியாது.
ஓவரு மனிதனும் அறிவு பெற வேண்டும்.
ஒரு தமிழனுக்கு யாரவது அடித்தால் எல்லா தமிழனுக்கும் வலிக்க வேண்டும்.
பிரபாகரனுக்கு மட்டுமே வலித்தால்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

Link to comment
Share on other sites

சரி.. அந்த ஐயா தவிச்ச முயல் அடிச்சது தப்புன்னு ஒரு கருத்துக்கு எடுத்துக் கொள்வோம்.. அப்போ அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வளிப்பது யார்..??! 

 

அவர்கள் கையைப் பிடிச்சு இழுக்கும் அவர்கள் வாழ்வை சீரழிச்சு விபச்சாரம் வரை கொண்டு போகும்.... சிங்களவனும் ஒட்டுக்குழுக்களுமா..???!

 

அந்த ஐயா மீது புறணிபாடும் நாம்... ஏன்.. அதற்கு சாத்தியமான மாற்றுக்களை முன்வைக்கிறோம் இல்லை. ஏன்னா.. எங்களிடம் உருப்படியா எதனையும் செய்யும் மனநிலை இல்லை. ஆளாளால் தான் தப்பிக்கனும்.. சுகபோகமாக இருக்கனும்.. இடையில் பாவம்.. புண்ணியம் பார்க்கிறவன் ஏதாவது செய்தால் அதை விமர்ச்சிச்சு நாங்கள் எங்களை வித்தியாசமான புரட்சியாளர்களாக் காட்டிக்கிட்டு.. வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு இருக்கனும்.

 

இதனால்.. நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா..??! அப்படி தீர்வு வருமென்றால்.. அதனை இனங்காட்டி நடைமுறைப்படுத்துவது தான் புத்திசாலித்தனம். சமூகத் தேவை..! அப்படியான ஏதாவது கருத்து இங்க வந்திருக்கா..?????!  :icon_idea::rolleyes::(

 

நெடுக்ஸ்.. நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.. அந்த ஐயா அந்தப் பெண்ணை தனது நாட்டிற்கு எடுத்திருந்தார் என்றால்.. இப்போது மட்டும் என்ன பாதுகாப்பை வழங்கிவிட்டார்?? பணப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறார்.. அவ்வளவுதான்..

 

வெறும் பண உதவிகளை வெளியில் இருந்து குறிப்பிடத்தக்கவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..! ஆனால் இந்த ஐயா பண உதவியைச் செய்துகொண்டு தாம்பத்தியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.. இதற்கும் அங்கே நேரடியாக நடக்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? இந்த விடயத்தில் ஐயா ஒருவர்.. மற்ற விடயங்களில் பலர்.. அவ்வளவுதான்..

Link to comment
Share on other sites

இப்போல்லாம் முன்னாள் போராளிகளை வைத்து விவாதம் நடத்திறதே வேலையா போச்சு......

அட போங்கப்பா..... அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கு அவருக்கும் பிடிசிடுக்கு......

ஒரு வேலை சோத்துக்கே கஷ்டப்பட்டு கொண்டு உங்க உதவாத கதையல கேட்டு கொண்டு இருக்கிறதும் பாகா....

இப்ப அந்த பொண்ணுக்கு ஒரு கடை ஒரு ஆட்டோ ன்னு கிடைச்சிருக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோபகாரம் செய்வதற்கும் vulnerable (இயலாதவர்களாக?) ஆக இருப்பவர்களை நம்பிக்கை கொடுத்து துஷ்பிரயோகம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

 

 

Link to comment
Share on other sites

இவளவு நாளும் அந்த பொண்ண கண்டுக்காம விட்ட உறவினர்கள் சுற்றம் எல்லாம் இப்ப தேடி தேடி வருவினம்.... அது மட்டுமல்ல இராணுவம் மற்றும் அதன் கைகூலிகலிடம் இருந்தும் ஒரு பாதுகாப்பு......

இங்கே அந்த ஐயா விரும்பா விட்டாலும் தன்னுடைய பாதுகாப்புக்காக அந்த பெண்ணே விரும்பி குழந்தை பெற்று இருக்கலாம்.....

கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் பிரித்தலும் நிறைந்தது தானே வாழ்கையே..... அதாவது வாழ்க்கை ஒரு கணக்கு.... ஒவோன்றுக்கும் ஒவொரு விலை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்த ஜயாவின் மகள் வயசு தான் அந்தப் பெண்ணுக்கு இருக்கும்.அவரின்ட மகளுக்கு இப்படியொரு நிலைமை வந்து இவரிலும் பார்க்க வயதானவர் இவரது மகளுக்கு இப்படி செய்தால் இவருக்கு எப்படி இருக்கும்?...கல்யாணம் முடித்தவர் தன்னோடு கூட்டி வந்து மனைவி அந்தஸ்து குடுத்து குடும்பம் நடத்தினாவது ஓரளவுக்கு மன்னிக்கலாம்...படுக்க ஆசையாய் இருந்தால் இங்கிருக்கும் விபச்சாரிகளை தேடிப் போக வேண்டியது தானே!...ஒரு நல்ல மனிதன் என்டால் தன்ட மகள் மாதிரி என்று நினைத்து தத்தெடுத்து அப் பெண் வாழ ஏதாவது வழி[சுயதொழில்] செய்திருக்க வேண்டும்...கேடு கெட்ட சமூதாயம் எம்மோடது :(
Link to comment
Share on other sites

அவர் மகள் மாதிரி நினைச்சு உதவி செய்திருந்தாலும் அங்கால போக விட்டிட்டு அதைப்பற்றியும் தப்பு தப்பா பேசி இருக்கும் எங்க சனங்க சோ.....

Link to comment
Share on other sites

இந்த திரியால்  பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. பலரும் பல கருத்துக்களை முன்வைகின்றார்கள்.
 
ஒரு நியாயமான அரசியல் தீர்வு மட்டுமே ஒரு தீர்வை ஓரளவிற்காவது கொண்டுவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.. அந்த ஐயா அந்தப் பெண்ணை தனது நாட்டிற்கு எடுத்திருந்தார் என்றால்.. இப்போது மட்டும் என்ன பாதுகாப்பை வழங்கிவிட்டார்?? பணப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறார்.. அவ்வளவுதான்..

 

வெறும் பண உதவிகளை வெளியில் இருந்து குறிப்பிடத்தக்கவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..! ஆனால் இந்த ஐயா பண உதவியைச் செய்துகொண்டு தாம்பத்தியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.. இதற்கும் அங்கே நேரடியாக நடக்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? இந்த விடயத்தில் ஐயா ஒருவர்.. மற்ற விடயங்களில் பலர்.. அவ்வளவுதான்..

 

உங்க எத்தினையோ.. இளமைத் துடிப்பும்.. பி எம் டம்பிள்யு கிறுக்கும் கொண்ட மாப்பிள்ளை மார் ஊரில போய் கலியாணம் கட்டி கூத்தும் அடிச்சிட்டு இந்தா கூப்பிடுறன் என்றிட்டு ஒரேயடிய ஓடி வரினம்.. அந்தாக்களோட ஒப்பிடேக்க.. அந்த ஐயா பறுவாயில்லைத் தானே.

 

திருமணமே ஒரு வகை விபச்சாரம் தானே. அது இந்த ஐயா செய்தால் என்ன காதலிச்சு (தானே ஒன்றைச் செட்டப் செய்து.. அதுதான் காதல்) இளமைத் துடிப்போடு ஒருத்தர் செய்தால் என்ன.. எல்லாம் செயலும் விளைவும் ஒன்று தானே.

 

அதுவும் தமிழ் பெண்கள் விசாவுக்கும்.. வெளிநாட்டு சுகபோகத்திற்கும்.. காசுக்கும் தானே கலியாணமே முடிக்கினம். அப்புறம் என்ன. அது விபச்சாரமில்லையா..???! :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே ஒரு வகை விபச்சாரம் தானே.  

அதுவும் தமிழ் பெண்கள் விசாவுக்கும்.. வெளிநாட்டு சுகபோகத்திற்கும்.. காசுக்கும் தானே கலியாணமே முடிக்கினம். அப்புறம் என்ன. அது விபச்சாரமில்லையா..???! :lol::icon_idea:

இந்தக் கதையைப் பார்த்தால் மனிதர் எல்லாரும் விபச்சாரத்தால்தான் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுக்கலாம்.

மனிதரோ, விலங்கோ ஒரு பருவத்திற்கு வந்த பின்னர் தமது துணைகளை தாமே தெரிவு செய்கின்றனர். அதிலும் வயதுக்கு வந்த மனிதர் யாருடைய கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயமாகச் சிந்தித்து திருமணத்திற்கோ, கூடி வாழ்வதற்கோ சம்மதித்தால் அதைப் பற்றிக் கருத்துக் கூறவேண்டியதில்லை.

வாழ்வு கொடுக்கின்றேன், தியாகம் செய்கின்றேன் என்ற போர்வையில் சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் நல்லவர்களையும் நம்பமுடியாமல் உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.