Jump to content

தமிழக மீனவர் தொடர்பான செய்திகள்


Recommended Posts

இலங்கைக் கடற்படை அட்டகாசம்: காரைக்கால் மீனவர்கள் 26 பேர் கைது.

 

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பட்டினச்சேரி, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மீனவர்கள்,  5 விசைப்படகுகளில் , நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே,  அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, 26 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர்.  இலங்கை ராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களில் மட்டும், 35க்கும் மேற்பட்ட புதுச்சேரி மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதியன்று காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.கடந்த மார்ச் 7ம் தேியன்று காரைக்கால் மேடு கிராம மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கோடியக்கரை அருகே மீ்ன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சந்திரகுமார், காசிநாதன், முருகையன் மற்றும் சித்திரவேல் ஆகியோர் கிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது காரைக்கால் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை விளக்கம்:

காரைக்கால் பகுதி மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததால், மீனவர்களை நேற்று கைது செய்ததாக, இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர், கோசல வர்னகுலசூர்யா, தெரிவித்துள்ளார். மீனவர்களின் 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், அனைவரும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வர்னகுலசூர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டும் , இந்திய மீனவர்கள் 53 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 34 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 19 பேர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

http://puthiyathalaimurai.tv/karaikal-fishermen-attacked-by-lankan-navy

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

11 ஏப்ரல், 2013

 

நாகை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர்

 

நாகை மீனவர்கள் நால்வர் கோடியக்கரை பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

புதன்கிழமை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே நாகை வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்களது படகை மறித்து உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும் அவர்களது மீன்பிடியைப் பறித்து கடலில் கொட்டியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்களும் வியாழனன்று காலை தலைமன்னார் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என செய்திகள் கூறுகின்றன.

சில நாட்களுக்கு முன் காரைநகர் பகுதியிலும் தலைமன்னார் அருகிலும் கைதான 50 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன்னமும் அங்கே சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை குறித்து இலங்கை கடற்படையினரின் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.

 

 

முன்னர் இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்.

 

120413125841_indian_fishermen_released_3

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130411_nagaifishermenattacked.shtml

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

11 ஏப்ரல் 2013

 

இலங்கை சிறையில் இருந்த 19 மீனவர்கள் விடுதலை.

 

img1130411022_1_1.jpg

 

கடந்த 13 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 19 தமிழக மீனவர்களை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நேற்று மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்கி 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர்.

இந்திய, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பினர்.

இந்த நிலையில், இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 19 மீனவர்களும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள், இரும்பு கம்பிகளால் தாக்கி, அவர்கள் வைத்திருந்த சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர். காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/11/1130411022_1.htm

Link to comment
Share on other sites

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்; இன்று 5 வது நாள்.

 

img1130412003_1_1.jpg

 

 

கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது.

கடந்த 7 ஆம் தேதி 500 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் அவசரக் கூட்டம் நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது.

மீன்பிடித் தடைக்காலம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் இனிமேல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு மேல் தான் கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/12/1130412003_1.htm

 

Link to comment
Share on other sites

பாதுகாப்பு இல்லை! மீனவர்களுக்கு ஆயுதம் தாருங்கள்- உதயகுமார்.

 

img1130412046_1_1.jpg

 

தமிழக மீனவர்களை தாக்கிக்கொண்டிருக்கும் இலங்கை அரசை நட்பு நாடு என்று கூறுவதா என்று கேள்வி எழுப்பிய உதயகுமார் மீனவர்களுக்கு பாதுகாப்பு தரமுடியாத நிலையில் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று இடிந்தகரையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை கடற்படையினை கண்டித்தும் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயகுமார்,

"78 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து துன்புறுத்தியது, மேலும் கச்ச தீவு கோடியக்கரை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை அடித்து துன்புறுத்தியுள்ளது.

இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசு இலங்கையினை நட்பு நாடு என்று கூறுகிறது. இதனாலேயே தமிழக மீனவர்களின் உரிமைக்காக இந்த உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொள்கின்றோம்.

அது மட்டுமில்லாமல் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/12/1130412046_1.htm

 

Link to comment
Share on other sites

இந்த தலைப்பில் தனி திரி ஆரம்பித்து, அது தொடர்பான செய்திகளை இணைப்பதற்கு நன்றி துளசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்று துளசிக்கு அளவு கடந்த நம்பிக்கை போல, தனி திரியே நிரந்தரமாக

தொடங்கிவிட்டார். :lol:

 

Link to comment
Share on other sites

மீனவர் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்று துளசிக்கு அளவு கடந்த நம்பிக்கை போல, தனி திரியே நிரந்தரமாக

தொடங்கிவிட்டார். :lol:

 

நாளுக்கு நாள் மீனவர்களை சுடுவதும் கைது செய்வதும் தொடர்கிறது. :rolleyes:

புரட்சி அண்ணாவும் முன்னர் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக ஒரு பகுதி திறக்க சொல்லியிருந்தார். அது இன்னும் திறக்கப்படாததால் நான் இந்த தலைப்பில் திரி ஆரம்பித்து விட்டேன். என்னால் தொடர்ச்சியாக செய்திகளை இணைக்க முடியுமோ தெரியாது. ஏனைய கள உறவுகளும் இணைத்தால் நல்லது. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

எதற்குப் பார்க்க வந்தீர்கள்? சோனியாவின் காங்கிரசாரைக் கடிந்த ராமேஸ்வரம் மீனவர்கள்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 19 பேர் இன்று ராமேஸ்வரம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த காங்கிரஸாரிடம், ‘நாங்கள் சிறையில் இருந்தபோதெல்லாம் எங்களை பற்றி கவலைப்படாமல், இப்போது மட்டும் ஏன் வர்றீங்க’ன்னு ஆவேசமாக பேசினர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி ராஜ், சேவியர் பூண்டி, சூசைஅருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், படகுகளையும் சிறை பிடித்து சென்றனர்.

இந்த நிலையில் 30 நாள் சிறைவாசத்துக்கு பிறகு 19 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்டு மீனவர்கள் இன்று பகல் 2 மணியளவில் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு கொடுத்தனர்.

ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கூறுகையில் ‘‘கடந்த மாதம் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கிளம்பினோம். அன்று பகல் ஒரு மணியளவில் தனுஷ்கோடி கரை தெரிய நம்ம நாட்டு எல்லைக்குள்ள மீன்பிடிச்சுகிட்டு இருந்தோம். அப்ப 2 கப்பல்களில் இலங்கை கடற்படை வந்தாங்க. கப்பலில் இருந்தவர்கள் எங்கள் படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துகிட்டு ஏன் எல்லை தாண்டி வந்தீங்கன்னு கேட்டாங்க. நாங்க எங்க எல்லைக்குள்ளதான் இருக்குறோம்னு சொன்னோம். ஆனா அவங்க அதை நம்பல. உங்கள இங்க வரவிட்டுட்டு உங்க நாட்டு நேவி என்ன செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு கேட்டுகிட்டே எங்கள ஒவ்வொருத்தரா வரச்சொல்லி முதுகில அடிச்சு தங்களோட கப்பலில் ஏத்திகிட்டு எங்க படகுகளை இலங்கைக்கு இழுத்துட்டு போனாங்க. நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவங்க கேக்கல.

அன்னைக்கு சாயங்காலம் அங்குள்ள போலீஸ் ஸ்டேசனில் இருக்க வெச்சாங்க. விசாரணை செய்றோம்கிற பேரில ராத்திரி பூராவும் எங்கள தூங்கவிடல. மறுநாள் காலையில் மன்னார் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. கோர்ட்டில் எங்கள முதலில் 22ஆம் தேதி வரையும், மறுபடி இந்த மாதம் 11ஆம் தேதி வரையும் சிறையில் வைக்க சொன்னாங்க. எங்கள சிறையில வைக்க சொன்னதும் எங்க படகுகள தனித்தனியா நிறுத்தி வைக்க அனுமதி கேட்டோம். ஆனா கடற்படையினரோ, போலீஸ்காரங்களோ அதுக்கு அனுமதிக்கல. எங்க படகுகள ஒன்றோட ஒன்று அருகில் நிக்கிற மாதிரி ஒரே இடத்தில கட்டி வச்சிருத்தாங்க. நேற்று காலை மன்னார் நீதிமன்றத்துக்கு எங்கள கூட்டிட்டு போனாங்க. அங்க இருந்த நீதிபதி எங்களை விடுதலை செஞ்சு உத்தரவிட்டார்.

விடுதலை ஆனவுடன் எங்க படகுகள் இருக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போக சொன்னோம். ஆனா அவங்க இன்னைக்கு காலைலதான் எங்கள அங்க கூட்டிட்டு வந்தாங்க. அங்க இருந்த படகுகளில் ஒன்றோட ஒன்று மோதி சேதமாயி நின்னுச்சு. இதில் பூண்டியோட படகுக்குதான் அதிக சேதம். எங்க படகுகளில் இரண்டு படகை இயக்க முடியல. அதனால மத்த இரண்டு படகில் பழுதான படகுகளை கட்டி இழுத்து வந்தோம்’’ என்றனர்.

முன்னதாக சிறையில் இருந்து ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் கை குழந்தைகளுடனும் கண்ணீருடனும் காத்திருந்தனர். போலீஸ், புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட மீனவர்களை அவர்களது குடும்பத்தினர் அழுதவாறே வரவேற்றனர்.

இதுவரை இல்லாத வழக்கமாக சிறையில் இருந்து மீண்ட மீனவர்களை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் துறைமுகத்திற்கு வந்திருந்தனர். ராமேஸ்வரம் நகர் காங்கிரஸ் தலைவர் பாரிராஜன் விடுதலையாகி வந்த மீனவர்களுக்கு துண்டு போட முயன்றார்.

அப்போது சில மீனவர்கள் ‘சிறையில் இருந்தபோதெல்லாம் எங்களை பற்றி கவலைப்படாமல், இப்போது விடுதலையாகி வந்தவுடன் எதுக்கு பார்க்க வர்றீங்க. மீனவர்கள் யாரும் காங்கிரஸ்காரங்ககிட்ட துண்டு வாங்காதிங்கன்னு’’ கோபமாக சத்தம் போட்டனர்.

இதனை எதிர்பார்க்காத காங்கிரஸார் திகைத்து போயினர். ஒருவழியாக அங்கிருந்த மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், அருளானந்தம், சேசு, எமரிட் ஆகியோர் மீனவர்களை சமாதானபடுத்தினர். இதன்பின்னர் காங்கிரஸார் மீனவர்களுக்கு துண்டு போர்த்தினர்.

 

306074_442915082460788_26528861_n.jpg

 

544748_442915095794120_1433796140_n.jpg

 

19001_442915109127452_1200696963_n.jpg

 

45328_442915129127450_1926356042_n.jpg

 

525244_442915135794116_1844908292_n.jpg

 

544301_442915199127443_1725193346_n.jpg

 

534333_442915212460775_1842786419_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

11 04 2013

 

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் மீது இரும்பு கேபிளினால் தாக்குதல்!

எதற்கும் துணிந்தவர்களாகி விட்டார்கள் இலங்கை கடற்படையினர். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் அதைக் கண்டு பயந்துவிட மாட்டோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று நிருபிப்பதை போன்று மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். நேற்று (10.04.2013) இரவு இந்திய கடல் பகுதியான வேதாரணியத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம், மணிகண்டன், விஜயகுமார், சௌந்தர்ராஜன் ஆகிய 4 பேர் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை, இலங்கை கடற்படையினர், நம் இந்திய எல்லைக்குள் வந்து இரும்பு பைப், மற்றும் இரும்பு கேபிளினால் மிகக் கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், இவர்களின் வலை, ஜி.பி.எஸ் கருவி, ஐஸ் பெட்டி ஆகியவற்றையும் அறுத்தும் உடைத்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.

இனி ஒருமுறை உங்களை கடலில் பார்த்தால் சுட்டு கடலில் வீசிவிட்டுப் போய் விடுவோம் என்று எச்சரித்து விட்டு சாவகாசமாக கிளம்பியிருக்கின்றனர்.

நான்கு பேருக்கும் பலத்த உள்காயம் ஏற்பட்டு உடலின் பல பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது.

அடிபட்ட மீனவர்கள் தமது ஊருக்கு தகவல் சொல்ல அவர்கள் மற்ற படகுகளில் சென்று அவர்களை ஏற்றி கரைக்கு கொண்டுவந்து நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேதாரண்யம் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் சொன்னார்கள்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் கூறியதாவது:

இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். நமது எல்லைக்குள்ளே அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தினர். எங்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை பறித்து சென்றனர்.

இந்திய கடற்படை இந்த பகுதியை கண்டுகொள்வதே இல்லை. இதனால்தான் இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குகிறது.

கடந்த 5ம் தேதி காரைக்காலில் இருந்து சென்ற 26 பேரை கைது செய்தனர். அதன்பிறகு இராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 25க்கும் மேற்பட்டவர்களை பிடித்து சென்றனர்.

நமது நாட்டு எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தை கண்காணிக்க இந்த பகுதியில் நமது கடற்படையும் ரோந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

 

524206_560695497303784_615709966_n.jpg

 

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 46 பேர் விடுவிப்பு.

 

rameswaram.png

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்ப்டட நாகை மீனவர்கள் 46 பேர் இந்திய கடலோர காவல்படையால் மீட்கப்பட்டு நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 10 ஆம் தேதி நாகையில் இருந்து சென்ற மீனவர்கள் 46 பேர் வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இதுபற்றி தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படையினர், இலங்கை கடற்படையினருடன் பேச்சு நடத்தி மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

http://puthiyathalaimurai.tv/46-nagai-fisherman-released

Link to comment
Share on other sites

இலங்கை கடற்படை அட்டூழியம்… காரைக்கால் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

 

நாகை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

 

காரைக்கால் கிழிஞ்சல்மேட்டை சேர்ந்த ராஜ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் ரமேஷ் (32), செல்வம் (29), வேதநாயகம் (30), வீரபாகு (45), சத்தியநாதன் (25) காரைக்கால் மேட்டை சேர்ந்த வீரப்பன்(39) ஆகிய 7 பேர் மீன்பிடிக்க சென்றனர். கோடியகரையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

 

அப்போது மீன்பிடி படகில் சாதாரண உடையணிந்த இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் பெட்ரோல் குண்டுகளை மீன்பிடி படகை நோக்கி வீசினார்கள். எனவே மீனவர்கள் படகை நிறுத்தினார்கள். உடனே இலங்கைப் படையினர் படகு அருகே வந்து உள்ளே ஏறினார்கள். அங்கிருந்த மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

 

கோடாரி, அரிவாள், இரும்பு குழாய், பணிகட்டிகளை அள்ளிபோட பயன்படுத்தும் சவுல் ஆகியவற்றால் தாக்கினார்கள். இதில் வேதநாயகம், வீரபாகு ஆகியோருக்கு கோடாரி வெட்டு விழுந்தது. சத்தியநாதனுக்கு கண் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலை வாக்கி டாக்கி, ஜி.பி.ஸ். கருவி ஆகியவற்றை கடலில் வீசும்படி எச்சரித்தனர். இதனால் அவற்றை மீனவர்கள் கடலில் வீசினார்கள்.

 

அதைதொடர்ந்து அவர்களை மிரட்டி விட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றனர். படுகாயம் அடைந்த நிலையில் படகை ஓட்டிகொண்டு மீனவர்கள் காரைக்கால் வந்தனர். இன்று காலை 6 மணிக்கு படகு காரைக்கால் வந்து சேர்ந்தது. 8 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காரைக்கால் மீனவர்கள் மீது கடந்த மாதம் இருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். 5 நாட்களுக்கு முன்பு காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்களை சிங்கள படையினர் கைது செய்து சிறைவைத்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-sri-lankan-navy-attacks-eight-indian-fishermen-173398.html

 

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள் பிரச்சனை என்பதை பலரும் மறுத்து ஒதுக்கி வருகிறார்கள். இந்த நிலையில் அதைப்பற்றிய விழிப்புணர்வும் தீர்வும் நிச்சயம் தேவை. இந்த திரியும் அதற்கு உதவட்டும். நன்றிகள்  துளசி.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் சமீபகாலமாக இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமாகியுள்ள அரசியல் எதிர்ப்புகளால் தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல்களும் அதிகரித்திருப்பதாக கூறுகிறார் நாகைமாவட்ட மீனவர் தலைவர் ராஜேந்திரநாட்டார்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/04/130413_fishermen.shtml

Link to comment
Share on other sites

6-வது நாளாக தொடரும் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம்.

 

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமநாதபுரம் மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது.

இதனிடையே, நாளை முதல் மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது வருத்தமளிப்பதாக மீனவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறாம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும், ஐந்து விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://www.newsalai.com/details/sixth-day-fisherman-strike-in-ramanathapuram.html#.UWrfI0qC9S0

 

Link to comment
Share on other sites

இந்திய மீனவர்களை கைது செய்யவில்லை; இலங்கை கடற்படை மறுப்பு

f1cad894b936d3e102a347ab46c65a57.jpg

 

இந்திய மீனவர்கள் யாரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் இதனை மறுத்துள்ள கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கை கடற்படையினர் எந்த ஒரு இந்திய மீனவர்களையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்தார்.

எனினும் இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை கடற்படையினரால் 56 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்தும் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஒவ்வொரு தடவையும் இலங்கைக் கடற்படை அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

எனினும் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 19 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=689951974615161855

 

 

 

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் தங்களை Lions என்று பெருமையாகச் சொல்லிகொள்வார்கள்.. ஆனால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்றுமே Liars ஆகத்தான் இருந்து வந்துள்ளார்கள்.

 

தமிழக மீனவர்கள் ஏல்லை தாண்டிப் போகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டும் உண்டு.. மீனவர்கள் சிறிய ஜி.பி.எஸ். கருவிகளின் துணை கொண்டு தமிழக எல்லைக்குள்ளேயே நின்று கொள்ளவேண்டும். சிங்களவன் எல்லைதாண்டி வந்து தாக்குதல் நடத்தும் பட்சத்தில் Distress சமிக்கைகளை அனுப்ப வேண்டும். இந்தக் கருவியும் பெரிய விலையுள்ள கருவி அல்ல..

 

அதையும் மீறி தாக்குதல் நடக்கும் பட்சத்தில் இந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்ற வழக்குப் பதிய வேண்டும். இது சட்டரீதியிலான நெருக்குதலை இந்திய அரசின்மீது கொண்டுவரும்.

Link to comment
Share on other sites

ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைக்காவலை நீட்டித்தது மன்னார் நீதிமன்றம்.

 

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவலை ஒரு வாரம் நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்ற நீதிபதி அந்தோணி சூட்சம் முன்னிலையில் இன்று மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி 5 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 30 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இன்றைக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் மீனவ சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், மீனவர்களின் காவல் வரும் 26 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க மீனவ அமைப்புகளின் கூட்டம் இன்று தங்கச்சிமடத்தில் நடைபெறுகிறது.

 

 

http://puthiyathalaimurai.tv/indian-fishermen-from-rameswaram-to-appear-in-mannar-court-today

 

Link to comment
Share on other sites

காரைக்கால் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

19th April 2013

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 காரைக்கால் மீனவர்களின் சிறைக்காவலை நீட்டித்து, யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில், இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட 26 மீனவர்களையும், வரும் 26-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தையடுத்து, மீனவர்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து, கடந்த 5-ஆம் தேதி இரவு, கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 26 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, 6-ஆம் தேதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மீனவர்கள் 26 பேரையும், 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

http://www.newsalai.com/details/jail-custody-extension-to-karaikkal-fisherman.html#.UXPla0qC9S0

 

Link to comment
Share on other sites

மீண்டும் நீட்டிக்கப்பட்டது காரைக்கால் மீனவர்களின் காவல்

 

ஏப்ரல் 26, 2013

 

இலங்கை அனுராதாபுரம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்களின் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கமான நீதிபதி இல்லாத காரணத்தால், மீனவர்களை விசாரணைக்காக திங்கட்கிழமை அழைத்து வரும்படி பொறுப்பு நீதிபதி ஆர்.சபேசன் உத்தரவிட்டார். காரைக்கால் மீனவர்களின் காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு:

 

அதே நேரத்தில், ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த 30 மீனவர்கள், மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவல் அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி அந்தோணிப்பிள்ளை சூட்சம் தெரிவித்தார்.

காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 26 பேர் கடந்த 5 ஆம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் 6 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

 

இவர்கள் அனைவர் மீது எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

 

http://puthiyathalaimurai.tv/karaikal-fishermen-custody-extended-for-3rd-time

 

Link to comment
Share on other sites

மீனவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் : மீனவர் சங்கத்தினர் முடிவு

 

27th April 2013

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மே 2ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மீனவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 

இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 11 மீனவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில், தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடம் அருகே மே 2ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

 

http://www.newsalai.com/details/fishermen-on-strike.html

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் காவல் 4ஆவது முறையாக நீட்டிப்பு.

 

இலங்கை கடற்படையால் கடந்த மாதம் முதல் வாரத்தில் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் காவலை அனுராதபுரம் நீதிமன்றம் 4ஆவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் காவல் வரும் 20ஆம் தேதி வரை 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் 26 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 5ஆம் தேதி காரைக்கால் மீனவர்களும், 6ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுதலை செய்வதற்காக கடற்படைத் தளத்திலிருந்து உரிய ஆவணங்கள் அளிக்கப்படாததால், அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில், இன்று மீனவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1305/06/1130506028_1.htm

 

Link to comment
Share on other sites

20 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கைக் கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். தற்போது மீன்பிடி தடைக் காலம் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82078&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

30 தமிழக மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை.

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 30 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று மாலை தமிழகம் திரும்புவார்கள்.

காரைக்கால், ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 56 பேர், கடந்த ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களின் 9 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுவரை தமிழக மீனவர்களின் காவல் நான்கு முறை இலங்கை நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டதையடுத்து, இன்று இலங்கையில் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 30 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 7 மணி அளவில் அவர்கள் தமிழக கரையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1305/08/1130508019_1.htm

 

Link to comment
Share on other sites

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

Friday 10th May 2013

 

1368156911.png

 

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 20 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களில் 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த மாதம் 5ம் தேதி மீன்பிடிக்க சென்ற போது இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் நீதிமன்ற காவலை கடந்த 6ம் தேதி 4 வது முறையாக மே 20 வரை நீட்டிப்புச் செய்து ஊர்க் காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 7ம் தேதி முதல் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

http://www.newsalai.com/details/karaikal-fishermen-struggl-rail-blockade.html

 

Link to comment
Share on other sites

கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்கி 6 தமிழக மீனவர்கள் காயம்!

Friday, 2013-05-10

 

கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவு அருகே, மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளது'' என்றனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82387&category=TamilNews&language=tamil

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.