Jump to content

மனசுக்குள்ளே மட்டும் .........ஒரு குட்டிக் கதை


Recommended Posts

 அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக  தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில்  ஏதோ தேடுகிறாள். 
       இறுதி  நிமிடங்கள், இப்போதாவது  ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட  மறந்த  காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க  மறுத்த மன்னிப்புகளை.....
 
      கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள்.
      இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, 
                            முதல் முறையாய் அவன் கண்களின் ஓரம் கண்ணீர்த்துளிகள், .....................காட்ட  மறந்த  காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க  மறுத்த மன்னிப்புகளை...........
                              சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் அங்கிலை.
  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்வரை, ஒருவரது அருமைகளைப் புரிந்து கொளவதில்லை!

 

புரிந்தாலும், அதை வெளிக்காட்டக் ;'கெளரவம்' இடம் தருவதில்லை!

 

இறுதியில், எல்லாம் முடிந்தபின் 'பிராயச்சித்தம்' தேடுவது தான், எம்மில் பெரும்பாலானோரின் நடைமுறை!

 

நன்றிகள், நீதிமதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கள் நீதிமதி
Link to comment
Share on other sites

வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தேடுவதே பலரது வாழ்க்கையாகப் போய்விட்டது.

வாழ்க்கை வாழென அழைக்கையில் வாழாமல்... காலங்கடந்து அதனை வாழ நினைக்கையில்

அது எங்கோ தொலைந்து போயிருக்கும். அதேபோலத்தான்... அன்பையும் காட்டவும் பெறவும் தவறிவிடுகின்றோம்!

 

வாழ்க்கை வாழ்வதற்கே... வீணாக்க இல்லை!

 

அருமையான ஒரு விடயத்தை விளக்கிய குட்டிக் கதைக்கு மிக்க நன்றி :)

Link to comment
Share on other sites

கருத்துகளுக்கு நன்றி,          புன்கையூரன், ரதி, கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான ஒரு விடயத்தை எவ்வளவு சுருக்கி இலகுவில் புரியும்படி
எழுதிய திறமைக்குப் பாராட்டுக்கள் நீதிமதி.தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கைந்து வரிகளுக்குள் கனதிய்யான விடயத்தை சொல்லிவ்வீட்டிர்கள்...பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

மிகவும் கனதியான ஒரு விடயத்தை எவ்வளவு சுருக்கி இலகுவில் புரியும்படி

எழுதிய திறமைக்குப் பாராட்டுக்கள் நீதிமதி.தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி சுமே அக்கா 

நான்கைந்து வரிகளுக்குள் கனதிய்யான விடயத்தை சொல்லிவ்வீட்டிர்கள்...பாராட்டுக்கள்...

நன்றி சுபேஸ் 

Link to comment
Share on other sites

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது தான் மனிதகுணம் . அதில் சுடலைஞானமும் ஒன்று . கடுகில் துவாரம் போட்ட நீதிமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்  :) :) . தொடர்ந்து எழுதுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கைந்து வரிகளில்..........அத்தனை பெரிய உண்மை.........பாராட்டுக்கள் நீதிமதி.

 

 

சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் ............

 

 

....................அங்கில்லை( அங்கு இல்லை)

Link to comment
Share on other sites

நான்கைந்து வரிகளில்..........அத்தனை பெரிய உண்மை.........பாராட்டுக்கள் நீதிமதி.

 

 

சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் ............

 

 

....................அங்கில்லை( அங்கு இல்லை)

நன்றி நிலாமதி 

அங்கு இல்லை என்பதை சேர்த்து எழுதினால் " அங்கில்லை " என்று தான் வரும் என்று நினைக்கின்றேன் :)

Link to comment
Share on other sites

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது தான் மனிதகுணம் . அதில் சுடலைஞானமும் ஒன்று . கடுகில் துவாரம் போட்ட நீதிமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்  :) :) . தொடர்ந்து எழுதுங்கள் .

நன்றி கோமகன்,          நன்றி, மன்னிப்பு, பாராட்டு, என்பன உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். காதல் வார்த்தைகளால், செயலால் வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் உறவும் வாழ்கையும் அர்த்தமுள்ளதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டிக்கிறுக்களுக்கு நன்றிகள்.....

Link to comment
Share on other sites

வேலை, பொருளாதார & மற்றும் பல பிரச்சனைகளால் ஓய்வெடுத்து மனவிட்டு பேச சிலர் நேர ஒதுக்குவது குறைவு.

 

அடிக்கடி சுற்றுலா சென்று ஆறுதலாக வாழ்கையை குடும்பத்துடன் செலவிட்டால் எந்த பிரச்சனையுமில்லை.

 

மனவிட்டு பேசாததால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கு

 

கணவனோ மனைவியோ ஈகோதான் பலருக்கு பெரிய பிரச்சனை.

 

நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டின புதுசிலை எல்லா ஆம்பிளையழும் கரைகட்டி வெளுப்பினம் . பேந்து ஏனோ தானோ எண்டு இருப்பினம் .நல்ல கதையை எழுதி இருக்குறிங்கள்  . உங்களை நான் பாராட்டிறன் .

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமோ அக்கா சொன்னது போல

ஒரு நாவலுக்குரிய கருவை இவ்வளவு இரத்தினச் சுருக்கமாய் சொல்லியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் அக்கா, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.. :)

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.