Jump to content

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?


Recommended Posts

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?


இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
 

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

புலம்பெயர் மண்ணில் பிறந்த தமிழ் வம்சாவழிகளான பெண்மணிகள் அழகி போட்டி என்ன எதுவும் நடத்தலாம் . ஏனெனில் அவர்கள் வயதுக்கு வரும்பொழுது கெலியிலும் , பல்லக்கிலும் , லுமோ காரிலும் தூக்கிப் பறித்து அவர்களுக்கு தாங்கள் அழகி என்ற போதையை ஏற்றியது புலம்பெயர் டமிழ்ஸ் தானே !!!!!

Link to comment
Share on other sites

என்னுடைய மேலான கருத்து என்னவென்றால், இவர்கள் எங்களின் மானத்தை வாங்கி விட்டார்கள். இனி எப்படி வெளியில் தலை காட்டுவது என்று தெரியவில்லை. இவர்கள்தானா உங்கள் அழகிகள் என்று யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்???!!!

Link to comment
Share on other sites

இலக்கிய சந்திப்புக்கு போனதன் பிற்பாடு சாத்திரி ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்

.

அந்த சோகத்தை சுகத்தை தனிய. எழுதிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே ஆரம்பிச்சிருக்குது. அது நாடு நாடா பரவேக்க.. யாழ் கள உறவுகளும் தங்கள் பிள்ளைகளை வெளிக்கிடுத்திக் கூட்டிக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. :lol:

 

இது வாழும் இடத்தின் பால்.. நாகரிகக் கலப்பிற்கு இளையவர்கள் விரும்புவதை இனங்காட்டுகிறது. நீங்கள் என்னதான் கத்தினாலும்.. வாழும் நாடுகளின் கலாசார.. நாகரிகப் பண்புகள் கலந்து இளையவர்கள் தம்மை இனங்காட்ட விரும்புவதை யாரும் தடுக்க முடியாது. ஏன்னா அதுதான் அவர்களுக்கு கூடிய மகிழ்ச்சி அளிக்கிறது.

 

கனடாவில் தமிழ் பஷன் சோ... நடக்குது..

 

http://youtu.be/WrkjqMHFxSc

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்புக்கு போனதன் பிற்பாடு சாத்திரி ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்

அங்க ஏதாவது வந்தாதானே  காஞ்சு போய்க் கிடந்திச்சு  :D

Link to comment
Share on other sites

முதலில், உலகின் எந்த விவாதத்திலும் பொருளாதார முனைப்புத் தான் கடைசிக் கருத்தைக் கூறிக்கொண்டிருக்கிறது. இது மாற்ற முடியாதது. எங்கெல்லாம் பணம் பண்ண முடியுமோ அங்கெல்லாம் அது பண்ணப்பட்டுக்கொண்டே இருக்கும். எமது சமூகத்திற்குள் எத்தனை புடவைக் கடைகள் இருக்கின்றன. எப்போதேனும் நிகழ்வுகளிற்கு மட்டும் உடுத்தப்படும் கீழத்தேய உடைகள் பலநூறு டொலர்களிற்கு விற்பனையாகிக்கொண்டு தானே இருக்கின்றன. ஊடகம் நாகரிகம் வியாபாரம் மனங்கள் கடத்தப்படுதல் என்பதெல்லாம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
 
அடுத்து, புலத்தில் இந்தியத் திரைப்படங்கள் மட்டும் தான் இன்று தமிழ் அடையாளத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் நிலையிருக்கிறது. அதனால் தான், கலியாணவீடுகள், சாமத்தியவீடுகள் என்று அனைத்தும் திரைப்படம் ஒத்ததாக இருக்கிறது. ஒரு கலியாணத்திற்கு எம்மவர்கள் சர்வசாதாரணமாக 40 முதல் 60 ஆயிரம் டொலர்களைச் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். அழகு என்பது என்ன என்பதையும் திரைப்பட ஊடகம் தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், ஒரு விiயாட்டுபோட்டியினைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு சிறுவன் எப்படா மாலை மைதானத்திற்குச் சென்று அந்த தொலைக்காட்சி காட்டிய வீரர் போல் விளையாடுவது என்று ஏங்குகின்றானோ அது போன்றே யுவதிகள் திரைப்படத்தில் பார்த்தபடி நடக்க ஏங்குகிறார்கள். பெண் என்பவளின் பெருமை அழகில் இருக்கிறது என்பதாக இந்தியத் திரைப்படங்கள் காமடி ற்றாக்கிற்குச் சமாந்தரமாக கதாநாயகியின் அழகிப்போட்டி ற்றாக்கை மட்டுமே ஓட்டிக்கொண்டிருக்கையில் அழகிப்போட்டி எதிர் பார்க்கக் கூடிய விளைவே.
 
ஆனால் மேலிரு விடயங்களும் அழகிப்போட்டி நடத்தப்படுவதற்கான பல காரணங்களில் இரண்டைக் கூறுகின்றன. ஆனால் உங்கள் கேள்வி அழகிப்போட்டி சரியா அல்லது தேவையா என்பதே. எனவே மேலிரண்டு விடயங்களும் உங்கள் கேள்விக்கான பதிலில்லை. எனது பார்வையில் அழகிப்போட்டியியில் எந்தத் தவறும் இல்லை. அது தேவைதானா என்று தீர்ப்புக் கூறுவது எங்களைச் சார்ந்ததும் இல்;லை:
 
உலகில் எது தான் முடிந்தமுடிவான அர்த்தபூர்வமானது? அனைத்தையும் அர்த்தமானது என்றும் நிறுவலாம் அர்த்தமற்றது என்றும் நிறுவலாம். வாழ்வு என்பது தான் அனைத்திற்கும் அடிப்படை. வாழ்வு என்ற அடிப்படை சார்ந்து தான் அனைத்து அர்த்தங்களும் உணரப்படுகின்றன. அந்த வாழ்வு என்பதைக் கூட உலுக்கித்தள்ளி விவாதங்களை முன்வைத்தபடி இருக்கின்றார்கள். இந்நிலையில் அழகிப்போட்டி தேவையா என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.
 
கடந்த ஆண்டு கனடாவில் ஹொண்டா எக்கோட் கார்களைக் காட்டிலும் பி.எம்.டபிள்யூ கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. அதற்காக கனடாவின் மத்தியதரத்தின் பணநிலை ஒட்டுமொத்தமாக பி.எம்.டபிள்யூ நிலையாகிவிட்டது என்பதல்ல. பலர் மூச்சுமுட்டும் கடனிற்கு வாகனம் வாங்குகிறார்கள். பி.எம்.டபிள்யூ எக்கோட் என்ற அளவிற்கு இன்று இருப்பது சார்ந்து பல விடங்கள் அவதானிக்கப்படலாம். மேலும் பி.எம்.டபிள்யூ தவிர்த்து அவுடி மற்றும் இதர பெயர்களிற்கான தேடல்களும் நோக்கப்படலாம். இந்த அவதானிப்புக்களிற்கும் அழகிப்போட்டிக்கும் இடையில் பலத்த சமாந்தரங்களை அவதானிக்க முடியும்.
 
முடிவாக, 'மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா' என்று ரசிச்சிற்றுப் போறது தான் வினைத்திறன் மிக்கது :D  போட்டி ஒழுங்கமைப்பாளர்கள், காலாதிகாலமான மேலோட்டமாக அழகு விடயங்களிற்கு அப்பால் அழகு என்றால் என்ற விசாரணைகளை உள்ளடக்கி போட்டியை மேலும் மெருகூட்டலாம் என்பதை மட்டும் நாம் வேண்டுமாயின் எதிர்பார்க்கலாம். 
Link to comment
Share on other sites

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????



அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

அலை, ஏன் கொஞ்ச நாளா, ஏலம் விடுகிற மாதிரிக் கருத்தெழுதிறீங்கள்? :D

 

றியல் எஸ்ரேற்றிலா, இப்ப வேலை? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்நாடுகளிலை நடக்கிற சாமத்தியவீடு கலியாண வீட்டிலையெல்லாம் மானாட மயிலாட,சூப்பர்சிங்கர் எல்லாமே நடக்குது. அப்பிடிப்பாக்கேக்கை இது வெரி சிம்பிள்......ஆனால் நான் இரண்டுக்கும் எதிர்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுக்கு நான் எதிர்ப்பு இல்லை, ஆனால் தவிர்கக்கூடிய ஒரு நிகழ்வு இது.

 

ஆனால் சுவிஸ் நாட்டில் எமது பெண் பிள்ளைகள் மிக அழகாக இருக்கிறார்கள் என்பதனை சொல்லியே ஆகவேண்டும்.

 

குறிப்பாக இது ஒரு பாரிய பின்னணியுடன் அரங்கேற்றப்படும் ஒரு நிகழ்வாக இருக்கலாம். கொடுக்கல் வாங்கல் சமப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் தேசியத்தின் சார்பில் கூச்சல்கள் எழுப்பப்பட்டிருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

கால, கலாச்சார  வெள்ளத்தில் அடியுண்ட நதி எப்படிக் கரை சேரப் போகிறதோ ? 
 

Link to comment
Share on other sites

அலை, ஏன் கொஞ்ச நாளா, ஏலம் விடுகிற மாதிரிக் கருத்தெழுதிறீங்கள்? :D

 

றியல் எஸ்ரேற்றிலா, இப்ப வேலை? :o

 

 

என்னவோ தெரியாது 2 முறை வசனங்கள் விழுகுது புங்கை, உந்த அழகுராணிப் போட்டிக்கு நடுவர்களாக தம்பிமார் சுண்டனையும் சுபேசனையும் அனுப்பலாமா?

உப்பிடி திருமதிகளுக்கும் வைச்சால் நாங்களும் போவமாக்கும் :lol:  :lol:

என்ன சோத்தன்ரிமாரின் எண்ணத்தைப் பாருங்கோ எண்டு சொல்லுறது விளங்குது :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

என்னுடைய மேலான கருத்து என்னவென்றால், இவர்கள் எங்களின் மானத்தை வாங்கி விட்டார்கள். இனி எப்படி வெளியில் தலை காட்டுவது என்று தெரியவில்லை. இவர்கள்தானா உங்கள் அழகிகள் என்று யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்???!!!

 

அழகி என்பதிற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன?

 

இப்பும் தலை காட்டுகின்றீர்கள்தானே, அதேமாதிரி இனியும் காட்டலாம்

Link to comment
Share on other sites

இது  விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் சார்ந்த விசயம்.

 

முன்னாள் அகதிகளின் அழகிப்போட்டி. நாடற்றவர்களின் அழகிப்போட்டி. இவ்வாறன தலைப்புகளே உண்மை. இவ்வாறன தலைப்புகளில் ஏதாவது நடந்தால் அதில் கருத்துச் சொல்லலாம். சுவிஸ் கனடா பிரான்ஸ் இங்கிலாந்து தமிழர்களின் அழகிப்போட்டி என்பதில் கருத்துக்கூற எதுவும் இல்லை.

 

உலகில் பல நாடுகளில் நடக்கும் அழகிப்போட்டிகள்போல் இதுவும் ஒன்றாக கருதுவது ஒன்றே சிறந்த வழி என்பது எனது கருத்து.

 

 

இதுதான் அழகு என்பது வியாபாரம். அங்கே ஏனையவை அழகில்லை என்பது நிறுவப்பட்டு வியாபாரம் நடக்கின்றது. இதற்கு குறிப்பிட்ட சமூகக் கண் தமிழ்க்கண் ஈழக்கண் எல்லாம் கொண்டு அணுக முடியாது. உலகில் பொதுவாக நடக்கும் ஒரு வியபாரச் சமாச்சாரம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலை கட்டிக் கொண்டு அழகிப் போட்டி செய்வதை விட... நீச்சல் உடையில், அழகிப் போட்டி செய்வதை... வரவேற்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

சிலருக்கு மூளை நல்லாக வேலை செய்யும். வேறு சிலருக்கு பாடும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். மற்றும் சிலருக்கு அழகான உடல் இருக்கிறது. அவரவர் தமக்கு கிடைத்ததை மேலும் வளப்படுத்தி, பெருமை கொள்ளவும் வாழும் வழியை வகுத்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை நாடுகளும் சமுதாயங்களும் வழங்க வேண்டும்; வழங்கி வருகின்றன. மூளை வேலை செய்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டு அழகான உடலை கொண்டவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க மறுப்பது நியாயமற்ற ஒதுக்குமுறையாக அமைகிறது. ஆகவே அழகி போட்டிகள் தேவையானவையும் ஊக்கப்படுத்தப்பட வேண்டியவையும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அட விடுங்கப்பா!
 
வான் கோழிகளுக்கும், ஒரு ஆசை இருக்காதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் இன்னும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நிற்கின்றோம்


இளையவர்கள் அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் எம் இளையவர்கள்

எங்கோ சென்றுவிட்டார்கள்

 

வேகமாக அடிக்கும் காற்றினை எதிர்த்து அதன்  விசையில் வீழ்ந்து புரள்வதைவிட

அந்தக் காற்றின் வேகத்துடன் இசைந்து நடந்தால் தாக்கம் குறைவாகவே இருக்கும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.