Jump to content

நாடோடி நான்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார்அவருக்கு எழுபது வயதாகின்றதுஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர்.

 

இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர்பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" .

 

எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

 

இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர்நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம்அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர்.

 

மூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள்நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள்எமக்கு எதுவும் புரியவில்லைபின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக...

 

கடைசியாக நான்என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லைஅவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்...

 

மற்றைய மூவருக்கும் தமக்கென மொழி மதம்நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லைஅவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்...

 

எங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்ததுஅதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம்அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்...

 

அழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்ததுபெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது....  அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்...

 

இப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார்தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார்.

 

1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லைஇடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார்உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார்.

 

தாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள்.

 

தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள்ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள்இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்...

 

எங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில்  எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்...

 

கடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்...  தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்.........

 

முடிவில் அவர்களிடம்  ஒன்றை மட்டும்  சொல்வேன்

 

"உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால்  நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தீயா!

 

நல்லதொரு பகிர்வு!

 

வெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்!

 

எமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது மக்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது! :o , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தீயா!

 

நல்லதொரு பகிர்வு!

 

வெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்!

 

எமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது மக்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது! :o , 

நன்றி புங்கையூரான்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 

நல்லதொரு பதிவு. விரைவில் மலரனும் எங்கள் தமிழீழம்

உங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.

அண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் "பரதேசி" படம் பார்த்தீர்களா? அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்

 

சரியாகச் சொன்னீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.

அண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் "பரதேசி" படம் பார்த்தீர்களா? அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.

உண்மைதான் கிருபன் தமிழகத் தமிழரை விடுவோம் இன்று ஈழத் தமிழர் பலரே எமது வரலாறு தெரியாமல் உள்ளனர்.  முதலில் எங்கள் பிள்ளைகளுக்கு எம் வரலாற்றை மொழியை சொல்லி கொடுக்க தயங்கக் கூடாது. நாம் எமது பணியை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மைவிட புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் சிறந்தவர்கள் எம் பிள்ளைகள் அவர்களுக்கான படித்தவர்கள் மத்தியிலான ஊடாட்டங்களும் அந்தந்த நாடுகளில் எம்மைவிட அதிகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.