Jump to content

ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள்.


Recommended Posts

ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள்.

18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான்.

உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா வட்டிகட்டிக்கப் பெற்று பணத்தைச் செலுத்தியாயிற்று. ஆனால் எதிர்பார்த்த உதவி  கிடைக்கவில்லை. நாம் வாக்குறுதியளித்த பணத்தின் மீதி ஒருலட்சரூபாய் (அண்ணளவாக 600€) செலுத்த வேண்டியுள்ளது.

 

இந்த உதவியை முடிந்தவர்கள் தந்து உதவுங்கள் குறித்த போராளியின் விடுதலையைப் பெற்றுத்தந்த நன்றியை என்றென்றும் மறக்கமாட்டோம்.

 

நம்பிக்கைகள் பொய்த்துப்போவதும் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போவதும் வளமையான அனுபவம். அது போல இதுவும் ஒரு அனுபவமாய் கடந்து போகிறது.

 

உதவ முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் :-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/

 

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி அக்கா.. என்னாலான ஒரு சிறு தொகை அனுப்பியிருக்கிறேன்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி அக்கா.. என்னாலான ஒரு சிறு தொகை அனுப்பியிருக்கிறேன்.

 

நன்றி.

மிக்க நன்றிகள் இசைக்கலைஞன். உங்கள் உதவி கழிவுபோக146,83€ கிடைத்தது.

 

மேலும் தேவைப்படும் உதவி - 450,17€

 

 

Link to comment
Share on other sites

தனது பங்களிப்பாக இந்தப்போராளியின் விடுதலைக்கு  கள உறவு சுமேரியர் 18ஆயிரம் (112€) இலங்கை ரூபாய்களை உதவியுள்ளார்.

 

மேலும் தேவைப்படும் உதவி - 338,17€

 

Link to comment
Share on other sites

மின்னல் மிக்க நன்றிகள். உங்கள் உதவி 100€ கழிவுபோக 96,45€கிடைத்தது. குறித்த போராளிக்கு உங்கள் உதவியை அனுப்புகிறேன்.

 

மேலும் தேவைப்படும் உதவி - 241.72€

Link to comment
Share on other sites

  • 6 months later...

குறித்த போராளியின் வழக்கிற்காக ஒன்றரைலட்சரூபா உதவி தேவைப்பட்டிருந்தது. இவ்வுதவியை தேவைப்பட்ட காலத்தில் தந்துதவி இவரது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். கடந்தமாதம் விடுதலையாகி தனது குடும்பத்தோடு குறித்த போராளி இணைந்துள்ளார்.

10993347-sagen-quot-danke-quot-auf-dem-h

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.