Jump to content

“சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் வாழ்த்து..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

johnhery.jpg

சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை

ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது.

புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது.

நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில் இருந்து விடுபட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை அடைவதற்கான பயணத்தில் சிறிலங்கா மக்களுக்கு உதவ, அதிபர் ஒபாமா சார்பிலும், அமெரிக்க மக்களின் சார்பிலும், நான் ஆவலாக இருக்கிறேன்.

இந்த முக்கிய விவகாரங்களை எதிர்கொள்வதற்கு எல்லா சிறிலங்கர்களுடனும், சிறிலங்காவுடனும் பங்காளராக செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது.“என்று ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6879:2013-04-12-02-03-14&catid=1:latest-news&Itemid=18

Link to comment
Share on other sites

நீங்கள் உப்பிடியே ஆவலாக இருக்கவேண்டியதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் சிறிலங்கன் இல்லை  என்று கத்துவதை  ஏன் உங்கள் காதுகள் கேட்க மறுக்கின்றன என்பதற்கு பதில் தாருங்கள்

Link to comment
Share on other sites

முதலில் நான் சிறிலங்கன் இல்லை  என்று கத்துவதை  ஏன் உங்கள் காதுகள் கேட்க மறுக்கின்றன என்பதற்கு பதில் தாருங்கள்

 

ஒருவர் கத்தும்போது அதனை தெளிவாகக் கேட்க வாய்ப்புகள் உண்டு. பலரது கத்தல்கள் இரைச்சலாகவே இருக்கும். அந்த ஒருவர் ஈழத் தமிழினத்தின் தலைவனாக இருந்து கத்தினால் இன்னும் தெளிவாக அடுத்தவர் செவியைச் சென்றடையும். இன்று நானே தலைவன் என்று எண்ணிலடங்காதவர்கள் தலைகாட்டுகின்றனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, எந்தத் தலைவனுடன் பேசுவது?.

Link to comment
Share on other sites

கெரிக்கு சில ஆண்டுகள் தேவை அமெரிக்க காங்கிரசில் "அமெரிக்கர்கள் ஏமாற்றுப்பட்டுவிட்டார்கள்" என்று அறிக்கை வாசிக்க. அதுவரைக்கும் அவர் 2010 ஆண்டு தான் சிங்களவரை வைத்து அமெரிக்க வெளிவிவாகார குழுவுக்காக தாயாரித்த அறிக்கையிலிருந்து விலகுவது கஸ்டம்.

 

இலங்கையில் கெரியின் அறிக்கை 2010லிருந்து மேலே எங்கும்செல்லவில்லை.  அது இந்த வருடம், அடுத்த வருடம், அங்காலை... இலங்கையில் எதுவும் செய்யும் சந்தர்ப்பம் இல்லை. இலங்கை இரகசிய பேச்சுவார்த்தை என்று அமெரிக்கரிடம் திரும்ப நேரம் கேட்டிருக்கு.

 

ஓமாமா அரசாங்கத்தால் சீனா உள் நுளைவைத்தடுத்து இலங்கையில் ஒரு தீர்வை கொண்டு வரமுடியாவிட்டால் அமெரிக்காவால் அதை பிறகு எப்பவுமே செய்ய இயலாது. அமெரிக்காவின் பலம் கடைசியாகச் சவால் விடப்படும் இடம் கொறிய தீவகற்பங்களில்தான்.  அதன் பின்னர் சீனாவின் பலம் ஆட்டமுடியாத இறுக்கமாகிவிடும் அதன் பின் எப்படி ஸ்ரேல் அமெரிக்காவின் கழுத்திலிருந்து மற்றவர்களை "எப்படி சுகம்" என்று கேட்டதோ அதோ நிலைக்கு தான் வந்துவிடுவேன் என்றுதான் இலங்கை நினைக்கிறது. அண்மையில் இலங்கை மந்திரி ஒருவர் ஆசியாவில் மிக திறமையான தலைமை உருவாகியிருக்கிறது என்று இதைத்தான் கூறினார்.

 

இந்த காலத்துக்கெதிரான பந்தயத்தை வைத்துத்தான் இலங்கை அரசியல் கொண்டு செல்கிறது. இதில் இலங்கை வெல்லும் சந்தர்ப்பம் 50:50.  இலங்கை வென்றால் அதன் பின்னர் முஸ்லீம் பிரச்சனைதான் இலங்கையில் இருக்கும். அதை இந்தியா தட்டிக்கழிக்க வடக்கில் இருக்கும் முஸ்லீம்கள் இலகுவில் கருணாநிதி மாதிரி இடம் கொடுக்க மாட்டர்கள்.  மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் அதிகம் கொண்டிருந்ததில்லை. LIOL இலங்கையில் புதிய சுத்திகரிப்பு ஆலையை கட்டிய பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் அரசியல் ஆதிக்கமே இருக்காது.

 

கெரி படிக்கப் போற மிக பிழையான பாடம் வட கொறியா.  அதில் இறுதியில் அமெரிக்க ஆயுதபலம் வெற்றி காணும். இது வெறும் மிரட்டலாக முடிந்துவிட்டால் என்ன அல்லது உண்மையானாக ஒரு போரில் முடிந்தால் என்ன இதுதான் முடிவு. இதனால்தான் சீனா, ரூசியா கூட வட கொரியாவின் இந்த பேக்கூத்தை விரும்பவில்லை. இதே பாடத்துடன் கெரி இலங்கையில் வந்திறங்கி இந்தியா காணாத தோல்விகளை சந்திக்கிற சந்தர்ப்பம்தான் அதிகம். 

 

நமக்கு அமெரிக்கா செய்த ஒரே ஒரு நன்மை பிரச்சனையை ஐ.நாவுக்கு கொண்டு சென்றது. தேர்தலின் பின்னால் தமிழ் நாட்டு மாணவர்களால் இந்தியாவை வைத்து ஐ.நா வில் ஏதாவது செய்ய முடியுமாயிருந்தால் அதில் எமக்கு ஏதாவது கிடைக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.