Jump to content

101 நாளில் எளிதாக குண்டாகலாம் (உபயம் :- முகப்புத்தகம்)


Recommended Posts

101 நாளில் எளிதாக குண்டாகலாம்

குண்டாக tips உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம். 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ¬ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே. எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும். தயிர் சேர்க்கவும் நன்றாகத் தூங்கவும் மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ்,தயிர் சாதம், உருளை சிப்ஸ்,ஐஸ்க்ரீம், சாக்லெட்,எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,சிக்கன், மட்டன்,வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க. இளைத்தவனுக்கு எள்ளு அன்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும் கூட. இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத் தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில் மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள் சற்று வாளிப்பான உடல்வாகு பெற எள்ளும் உளுந்தும் மிகப்பயன் தரும்.
வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண்/குடல்புண் இருந்தாலும் உடல் எடை ஏறுவதில்லை.அது போன்ற நோயினர் தினசரி காலையில் நீராகாரம்(உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம் & சீரகம் போட்டு செய்து வடிப்பது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இது குடற்புண்ணையும் ஆற்றி, உடல் எடை உயர்த்திட உதவும். தேங்காய்ப் பால் வாரம் இரண்டுமுறையேனும் உணவில் சேர்ப்பதும் நல்லது.

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தூண்டும் irritable bowel syndrome எனும் கழிச்சல் நோயிலும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. உணவு உண்ட பின், எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தம் ஆகும் போது, சூடான, காரமான உணவை சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில் மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பின், சரியான மருத்துவ சிகிச்சையுடன் சுண்டைவற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது னோயையும் நீக்கி உடல் எடையை கண்டிப்பாக அதிகரிக்கும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டாவதற்கு (உண்டாவதற்கு அல்ல ) ஆலோசனை தேவைப்பட்டால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கோ  :D

Link to comment
Share on other sites

101 நாளில் எளிதாக குண்டாகலாம்

. எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும். தயிர் சேர்க்கவும் நன்றாகத் தூங்கவும் மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ்,தயிர் சாதம், உருளை சிப்ஸ்,ஐஸ்க்ரீம், சாக்லெட்,எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,சிக்கன், மட்டன்,வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க. இளைத்தவனுக்கு எள்ளு அன்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும் கூட. இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத் தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில் மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள் சற்று வாளிப்பான உடல்வாகு பெற எள்ளும் உளுந்தும் மிகப்பயன் தரும்.

http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161

http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648

இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

 

வெந்தயத்துக்கு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதும், பெண்களில் அதிகம் காணப்படும் ஈஸ்ராஜன் எனும் ஓமோனின் செயற்பாடில் செல்வாக்கு செலுத்தலாம் என்பதும் விஞ்ஞான ரீதியில் அறியப்பட்டுள்ளது.  ஆனால் உடல் நிறை கூட நாளாந்தம் 50 கிராம் வெந்தயம் உதவும் என்பதில் நம்பிக்கை இல்லை. :rolleyes:

 

எப்படி 101 நாள் கணக்கு வந்தது என்றும் தெரியவில்லை.

 

 

மற்றும் படி மேலே மேற்கோள் கட்டிய பகுதியில் இருக்கும் உணவுகளை பார்த்தீர்கள்  என்றால், பல உணவுகள் மாச்சத்து , கொழுப்பு கூடிய உணவுகள். இவற்றை அளவு  கணக்கில்லாமல் நாளாந்தம் உண்டால் 101 நாளும் தேவையில்லை. அதுக்கு ஓடியாடி வேலை செய்யாது  , உடற் பயிற்சியும் செய்யாது  விட்டல் 101 நாள் என்ன 60 நாள் காணும் உடம்பு வைக்க. :icon_idea:

 

உடம்பு வைத்த பின் அதனுடன் வரும் வருத்தங்களுக்கு வைத்தியம் செய்ய சரியாக இருக்கும். :icon_idea:

 

உடம்பு வைத்து, வண்டி வைத்து இருந்தால் தான் பணம் வசதியுடன் இருப்பதாக நினைக்கும் எண்ணகரு  மாற வேண்டும். :icon_idea:

 

அளவான , உயரத்துக்கு ஏற்ற நிறை இருந்தால் போதும் /

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.