Jump to content

மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள்
எஸ்.கோபாலகிருஷ்ணன்


ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மாபெரும் இனப்படுகொலைகளும் அதே சமயத்தில் அரங்கேறின. சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது. தமிழகத்தில் மக்கள் மத்தியில் போரின் அழிவுகள் குறித்த பெருங்கவலை இருந்தாலும் அரசியல் ரீதியான போராட்டமாக அவை முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த மூன்றாண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமே போராடியும் குரெலுழுப்பியும் வந்தார்கள். போர்க்குற்றங்களை விசாரிக்கவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை மறு சீரமைக்கவும் பரிந்துரைத்த ஐ.நா. தீர்மானங்களை இலங்கை அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. இன்றுவரை ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைபட்டு வருகிறார்கள். இது போதாதென்று தமிழர் பகுதிகளில் இந்துக் கோவில்களை அழித்து பவுத்த விகாரைகளை அமைப்பது, தமிழ்ப் பகுதிகளுக்குச் சிங்களப் பெயர் சூட்டுவது, ராணுவத்தினர் அதே பகுதிகளில் முகாமிட்டுப் பெண்களைப் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா அண்டை நாட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து சில அறிக்கைகளை விடுப்பதோடு சரி. அந்த அறிக்கைகளிலும் இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ள எந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் தயங்கியதில்லை.

இந்நிலையில் மார்ச் மாதம் ஸ்விட்சர்லாந்து தேசத்தின் ஜெனீவா நகரத்தில் கூடிய ஐ.நா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை எதிர்த்து அமெரிக்க அரசு ஒரு தீர்மானம் கொண்டுவர முனைந்தது. ஏற்கனவே அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இரண்டு தீர்மானங்களில் எந்தப் பெரிய பயனும் விளைந்திடவில்லை. ஏனெனில் அந்த இரு தீர்மானங்களும் இலங்கை அரசே தன் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை வழங்குகின்றன. மூன்றாவது தீர்மானம் முதல் இரண்டு தீர்மானங்களை விட வலிமை குறைந்ததாகவே இருந்தது.

மேலும் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதில் இலங்கை அரசைத் தனக்கு அடிபணிய வைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆயினும் இந்தத் தீர்மானத்தை சில ஈழ ஆதரவாளர்கள் ஆதரிக்கவே செய்தார்கள். காரணம் இலங்கை அரசுக்கெதிரான ஒரு சிறு நகர்வையும் அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

ஆனால் சென்னை இலயோலாக் கல்லூரியில் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்த 8 மாணவர்கள் வைத்த முதல் கோரிக்கை 'இலங்கை அரசுக்கெதிரான அமெரிகாவின் தீர்மானம் ஒரு கண் துடைப்பு. அதை நிராகரித்து இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் தீர்மானத்தை இந்திய அரசு தன்னிச்சையாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

முதல் மூன்று நாட்களுக்கு மாணவர் போராட்டத்தை ஈழ ஆதரவு சக்திகளும் அரசியல் கட்சிகளும் மட்டுமே ஆதரித்துவந்தன. வை.கோ, பழ.நெடுமாறன் ஆகியோர் போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தை தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களைக் கையிலெடுக்கச் செய்த பெருமை தமிழக அரசையே சாரும்(!).

கல்லூரி நிர்வாகம் போராட்டத்தைத் தொடர அனுமதி மறுத்துவிட்டதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் உண்ணாநிலையைத் தொடர்ந்த மாணவர்களை ஒரு நள்ளிரவில் குற்றவாளிகளைப் பிடிப்பதுபோல் தமிழகக் காவல்துறை பிடித்தது. வாயிற்கதவை உடைத்து ஆதரவாகத் திரண்டிருந்த கூட்டத்தினர் மீது தடியடி நடத்தி கைது செய்து மருத்துவமனையில் அடைத்தது காவல்துறை. சென்னை இராயப்பேட்டை அரசும் மருத்துவமனையில் இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரால் காக்க வைக்கப்பட்டார்கள். பார்வையாளர் நேரத்தில் மட்டுமே மாணவர்களைப் பார்க்க முடியும் என்று காவல்துறையினர் அறிவித்தார்கள்.

இலயோலா மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். ஒரு மாணவி மற்றும் எட்டு மாணவர்கள் கல்லூரி வாசலில் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்தார்கள். முதலில் நட்டநடு சாலையில் அமர்ந்த இந்த மாணவ மாணவிகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட பின் அருகில் இருந்த நடைபாதையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் உண்ணாநிலையைக் கடைபிடித்த முதல் மாணவி மோனிஷா. கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவர் தமிழரல்ல. ஆனால் இலங்கையில் வதைபடும் அப்பாவித் தமிழர்களின் துயரத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு கொண்டவராக இருக்கிறார் இவர். சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் ஆடவர் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழகத்தின் மற்ற நகரங்களான திருச்சி, கரூர், ராஜபாளையம், மன்னார்குடி போன்ற நகரங்களின் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். நாளுக்கு நாள் வளர்ந்த இந்தப் போராட்டம் தீப்பொறி போல் தமிழகமெங்கும் பரவியது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களின் கல்லூரி மாணவ மாணவியரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றித் தெரியவந்ததே தமிழக மாணவர்கள் போராட்டத்தால்தான் என்று சொல்வது மிகையல்ல. அந்த அளவு இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய தேசிய ஊடக நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்தன. மாணவர் போராட்டம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது கூட பல தேசிய ஊடகங்கள் அவற்றை முறையாகப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்தவர்கள் போராடும் மாணவர்களை ஏளனப்படுத்தும் வகையிலேயே செய்தார்கள்.

ஆனால் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது, பொதுவாக கலைக் கல்லூரி மாணவகர்ளும் சட்டக் கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராடுவதை அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், படிப்பதற்கான அனுமதி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். முத்தாய்ப்பாக மாணவர்களால் ஊக்கம் பெற்று "சேவ் தமிழ்ஸ்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் மனிதச் சங்கிலிப் போராட்டம், தொடர் முழக்கப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றார்கள். தங்கள் சம்பள உயர்வுக்காக்கூடப் போராட்டக் கொடி தூக்காதவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் மற்ற மாணவர்கள் மத்தியில் பரவியதை அடுத்து இலயோலா மாணவர்கள் உண்ணாநிலையைக் கைவிட்டார்கள். அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவர்களும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் தமிழகத்தின் வேறு சில நகரங்களின் கல்லூரி மாணவர்களும் பத்து நாட்களுக்கு மேல் உண்ணா நிலையைக் கடைப்பிடித்தார்கள். பிறகு அவர்களும் உண்ணாநிலையைக் கைவிட்டார்கள்.

உண்ணாநிலை தவிர ராஜபட்சே உருவ பொம்மை எரிப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை மறியல், தொடர் முழக்கப் போராட்டம் என்று பல்வேறு வழிகளில் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில மாணவர்கள் தீக்குளித்தார்கள்.

திரைத் துறையினரும் போராடும் மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்தின. நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், தனுஷ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராதாரவி. வாகை சந்திரசேகர், ராதிகா, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா, வரலட்சுமி உட்பட பல்வேறு முன்னணி நடிக நடிகையர் பங்கேற்றார்கள்.

நடிகை நடிகையரின் உண்ணாநிலையை முடித்துவைக்க போராட்டத்தைத் துவக்கிய இலயோலா கல்லூரி மாணவர்கள் அழைத்து கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

போராட்டம் உச்சக்கட்டமாக இருந்த நாட்களில் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துவிட்டது. ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானத்தை வலுபெறச் செய்யும் வாக்கியங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆனால் அது போன்ற வாக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தீர்மானம் தன்னளவிலேயே நிறைவேறியது.

மாணவர் போராட்டம் ஓரளவுக்குத் தணிந்துவிட்ட சூழ்நிலை உருவாகியிருப்பதால் கல்லூரிகள் திறக்கப்பட்டன. போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்காமல் இருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அனைவரையும் ஆச்சரியம் கொள்ளவைக்கும் விதமாக இலங்கையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போராடும் மாணவர்கள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. மாணவர்களை மனதாரப் பாராட்டிப் பேசிய தமிழக முதல்வர் அவர்களைப் போராட்டத்தைக் கைவிடக் கோரினார்.

கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவர்கள் தொடர்ந்து போராட உத்தேசித்துள்ளார்கள். அனைத்து மாணவர்களும் தினமும் எங்கு எந்த வேலையில் இருந்தாலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பின் எழுச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் போராட்டம் அறிவுஜீவிகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் புத்துணர்வு கொள்ளச் செய்திருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் நம்பிக்கை பெற்ற ஈழ ஆதரவாளர்கள் அமெரிக்கத் தீர்மானத்தின் ஓட்டைகளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். மாணவர்களின் தனி ஈழத்துக்கான் கோரிக்கைகள் சில அறிவு ஜீவிகளின் விமர்சனத்தைப் பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை. மாணவர்களுக்கு முறையான வாசிப்பு இல்லை, ஈழப் பிரச்சினை குறித்த சரியான புரிதல் இல்லை என்ற விமர்சனங்களில் நியாயமும் இருக்கிறது.

ஆனால் இவை அனைத்தும் வருங்காலத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான அறிவுரையாக இருக்கலாமே அன்றி தன்னலம் பாராமல் அண்டை நாட்டவர்கள் நசுக்கப்படுவதற்கு எதிராக இத்தனை ஆயிரம் இளைஞர்கள் போராடுவதைச் சிறுமைபடுத்தப் பயன்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்த விமர்சகர்கள் கவனம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இது முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டமாகவே நீடிப்பதையும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்ககூடிய இளைய தலைமுறை சிறிய அளவில்கூட வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதையும் பாராட்டக்கூட அவர்களுக்கு மனம்வரவில்லை.

தங்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கூடுமானவரை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்ட வழிமுறைகளைத் திட்டமிடுவதிலும் மாணவர்கள் குழுவினருக்கு இருக்கும் தெளிவும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இறுதி இலக்கை அடையும்வரை இதே தெளிவுடன் போராட்டம் தொடர வேண்டும், முறையான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பிரச்சினையின் ஆழத்தையும் பன்முக விளைவுகளையும் புரிந்துகொண்டால் இன்னும் வீரியமாக போராட முடியும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டுமே தமிழர்கள் மீதும் மனித உரிமை மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=b3a5a2de-15bd-47de-a1cb-beb48ef3f37b

Link to comment
Share on other sites

தமிழின விரோதிகளின் கைக்கூலிகள் ஆனந்தசொங்கிரி, டக்லஸ், யோகேஸ்வரி பற்குணராஜா போன்றோரின் துணையுடன்  தமிழக மாணவர் போராட்டத்தால் எந்தப்பயனும் இல்லை என்ற ஒரு மாயையை உருவாக்க சோ என்ற கைக்கூலிப் பத்திர்கையாளர் துக்களக்கில் (கடந்த இதழில்) முயன்றுள்ளதாக தெரிய வருகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.