Jump to content

சித்திரை நினைவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரை நினைவுகள்

 

 

சித்திரை நிலவில்

நித்திரை நீக்கி - உன்

முத்திரை விழி பார்த்திருந்தேன்...

நிலவின் குளிர்ச்சி 

உந்தன் முகத்திலா.....

உன் முகத்தில் குளிர்மை

நிலவின் முகத்திலா - என்று

குழம்பிய கணங்களைக் கடப்பதுதான்

காதலின் சுகமா என்றிருந்தேன்....

 

என்னில் ஒட்டிய நினைவு நீயடி...

உன் விழியால் எனை நனைத்தாயடி...

உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி....

அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி....

 

வலிக்கும் நிலத்தில் தான்

என் வாழ்வு....

மறுபடி நீ வந்து - என்னை

மணக்கும் பொழுதில் தான்

பலிக்கும் என் நினைவென்று...

சிந்திய முத்துக்கள் கொண்டு

என்னை வழியனுப்பியவள்....

குரல் கேட்டு

நாலு சித்திரை கடந்துவிட்டது....

அவள் நினைவுகளோ - என்னை

அகல மறுக்கிறது......

 

எங்களைக் காக்கவென்று - தன்

இரும்புக் கரங்களால்

பேரினவாதம் எங்களை நெரித்த போது

சிக்கிய புறாக்களில்

என் மனதை மயக்கிய

மாடப்புறாவும் தானே மாட்டியிருக்கும்....

 

ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே

இன்னும் பதிலில்லை.....

இதில் என் ஒருசோடி விழிகளை நான்

எங்கே தேடுவது......

 

களத்தில் துப்பாக்கிகள்

மெளனித்து விட்டன......

ஆனாலும் புலத்தில் - மெளனிக்காத

துப்பாக்கி நினைவுகளோடு

தமிழர் குலமறுத்தவரின்

கழுத்துக்களில் தூக்குக் கயிற்றின்

சுருக்குக்கள் விழும் வரை

எதிரியுடனான போரில் 

என் பங்கும் என்றும் இருக்கும்

என் சித்திரை நிலவின்

ஒருதுளி நினைவு என்னுள் இருக்கும் வரை......

 

 

அன்புடன் 

 

அரிஞ்சயன்....

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்மங்களும், நீதிகளும்,

கறையான் அரித்துப் போன,

காவோலை ஏட்டுச் சுவடிகளாய்,

பாதி புரிந்தும், பாதி புரியாமலும்,

பாதிக்கப் பட்டவனைப் பார்த்து,

ஏழனம் செய்கையில்,

எக்காளமிட்டுச் சிரிக்கின்றன,

ஏகாதிபத்தியத்தின்,

அகலப் பெரிதான வாய்கள்!

 

எப்படி எமக்கு நீதி கிடைக்கும், அரிஞ்சயா? :o 

 

ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றிகள்! :D  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தர்மங்களும், நீதிகளும்,

கறையான் அரித்துப் போன,

காவோலை ஏட்டுச் சுவடிகளாய்,

பாதி புரிந்தும், பாதி புரியாமலும்,

பாதிக்கப் பட்டவனைப் பார்த்து,

ஏழனம் செய்கையில்,

எக்காளமிட்டுச் சிரிக்கின்றன,

ஏகாதிபத்தியத்தின்,

அகலப் பெரிதான வாய்கள்!

 

எப்படி எமக்கு நீதி கிடைக்கும், அரிஞ்சயா? :o

 

ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றிகள்! :D  

கருத்துடன் சேர்த்து தமிழரின் ஏக்கத்தையும் கோடிட்டுக் காட்டிய   புங்கையூரனுக்கு எனது நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது அரிஞ்சயன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கிறது அரிஞ்சயன்

எமது சிதைக்கப்பட்ட வாழ்வியலின் ஒரு துளியைத்தொட்டு எழுதிய வரிகள் உங்கள் மனதைத் தொட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரை நினைவுகள்

 

 

சித்திரை நிலவில்

நித்திரை நீக்கி - உன்

முத்திரை விழி பார்த்திருந்தேன்...

நிலவின் குளிர்ச்சி 

உந்தன் முகத்திலா.....

உன் முகத்தில் குளிர்மை

நிலவின் முகத்திலா - என்று

குழம்பிய கணங்களைக் கடப்பதுதான்

காதலின் சுகமா என்றிருந்தேன்....

 

என்னில் ஒட்டிய நினைவு நீயடி...

உன் விழியால் எனை நனைத்தாயடி...

உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி....

அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி....

 

வலிக்கும் நிலத்தில் தான்

என் வாழ்வு....

மறுபடி நீ வந்து - என்னை

மணக்கும் பொழுதில் தான்

பலிக்கும் என் நினைவென்று...

சிந்திய முத்துக்கள் கொண்டு

என்னை வழியனுப்பியவள்....

குரல் கேட்டு

நாலு சித்திரை கடந்துவிட்டது....

அவள் நினைவுகளோ - என்னை

அகல மறுக்கிறது......

 

எங்களைக் காக்கவென்று - தன்

இரும்புக் கரங்களால்

பேரினவாதம் எங்களை நெரித்த போது

சிக்கிய புறாக்களில்

என் மனதை மயக்கிய

மாடப்புறாவும் தானே மாட்டியிருக்கும்....

 

ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே

இன்னும் பதிலில்லை.....

இதில் என் ஒருசோடி விழிகளை நான்

எங்கே தேடுவது......

 

களத்தில் துப்பாக்கிகள்

மெளனித்து விட்டன......

ஆனாலும் புலத்தில் - மெளனிக்காத

துப்பாக்கி நினைவுகளோடு

தமிழர் குலமறுத்தவரின்

கழுத்துக்களில் தூக்குக் கயிற்றின்

சுருக்குக்கள் விழும் வரை

எதிரியுடனான போரில் 

என் பங்கும் என்றும் இருக்கும்

என் சித்திரை நிலவின்

ஒருதுளி நினைவு என்னுள் இருக்கும் வரை......

 

 

அன்புடன் 

 

அரிஞ்சயன்....

 

நாலு சித்திரை என்ன கூடச் சித்திரை வந்தால்தான் அதிலை சுகம் இருக்கும் . உங்கடை கவிதையை பாராட்டிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, தொடர்ந்து பகிருங்கள்

கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் உடையார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு சித்திரை என்ன கூடச் சித்திரை வந்தால்தான் அதிலை சுகம் இருக்கும் . உங்கடை கவிதையை பாராட்டிறன் .

மைத்திரேயி

 

நான் நாலு சித்திரையென்று எழுதியிருந்தேன், வன்னியில் எங்கள் இனம் நசுக்கப்பட்டு நாலு வருடங்கள், அதில் சிக்குண்ட காதலுக்கும் நாலு வருடங்கள் ஆகிவிட்டதென்று....

 

கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காதலின் வேதனையும்  
        கண்முன் நிகழ்ந்த அழிவுகளும்
கால வோட்டத்தில் இவையிரண்டும்  
            கரைந்தோடும் நிலையிங்கு
கவி வரியாய் களை கட்ட  
           கன்னித் தமிழில் அரிஞ்சயனால்
பவித்திரமாய் புனையப்பட்டமை  
           பாராட்டுக்குரிய விடயமன்றோ  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

காதலின் வேதனையும்  
        கண்முன் நிகழ்ந்த அழிவுகளும்
கால வோட்டத்தில் இவையிரண்டும்  
            கரைந்தோடும் நிலையிங்கு
கவி வரியாய் களை கட்ட  
           கன்னித் தமிழில் அரிஞ்சயனால்
பவித்திரமாய் புனையப்பட்டமை  
           பாராட்டுக்குரிய விடயமன்றோ  

 

யாழ்வாணன்

 

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.