Jump to content

சித்திரை நினைவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரை நினைவுகள்

 

 

சித்திரை நிலவில்

நித்திரை நீக்கி - உன்

முத்திரை விழி பார்த்திருந்தேன்...

நிலவின் குளிர்ச்சி 

உந்தன் முகத்திலா.....

உன் முகத்தில் குளிர்மை

நிலவின் முகத்திலா - என்று

குழம்பிய கணங்களைக் கடப்பதுதான்

காதலின் சுகமா என்றிருந்தேன்....

 

என்னில் ஒட்டிய நினைவு நீயடி...

உன் விழியால் எனை நனைத்தாயடி...

உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி....

அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி....

 

வலிக்கும் நிலத்தில் தான்

என் வாழ்வு....

மறுபடி நீ வந்து - என்னை

மணக்கும் பொழுதில் தான்

பலிக்கும் என் நினைவென்று...

சிந்திய முத்துக்கள் கொண்டு

என்னை வழியனுப்பியவள்....

குரல் கேட்டு

நாலு சித்திரை கடந்துவிட்டது....

அவள் நினைவுகளோ - என்னை

அகல மறுக்கிறது......

 

எங்களைக் காக்கவென்று - தன்

இரும்புக் கரங்களால்

பேரினவாதம் எங்களை நெரித்த போது

சிக்கிய புறாக்களில்

என் மனதை மயக்கிய

மாடப்புறாவும் தானே மாட்டியிருக்கும்....

 

ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே

இன்னும் பதிலில்லை.....

இதில் என் ஒருசோடி விழிகளை நான்

எங்கே தேடுவது......

 

களத்தில் துப்பாக்கிகள்

மெளனித்து விட்டன......

ஆனாலும் புலத்தில் - மெளனிக்காத

துப்பாக்கி நினைவுகளோடு

தமிழர் குலமறுத்தவரின்

கழுத்துக்களில் தூக்குக் கயிற்றின்

சுருக்குக்கள் விழும் வரை

எதிரியுடனான போரில் 

என் பங்கும் என்றும் இருக்கும்

என் சித்திரை நிலவின்

ஒருதுளி நினைவு என்னுள் இருக்கும் வரை......

 

 

அன்புடன் 

 

அரிஞ்சயன்....

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்மங்களும், நீதிகளும்,

கறையான் அரித்துப் போன,

காவோலை ஏட்டுச் சுவடிகளாய்,

பாதி புரிந்தும், பாதி புரியாமலும்,

பாதிக்கப் பட்டவனைப் பார்த்து,

ஏழனம் செய்கையில்,

எக்காளமிட்டுச் சிரிக்கின்றன,

ஏகாதிபத்தியத்தின்,

அகலப் பெரிதான வாய்கள்!

 

எப்படி எமக்கு நீதி கிடைக்கும், அரிஞ்சயா? :o 

 

ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றிகள்! :D  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தர்மங்களும், நீதிகளும்,

கறையான் அரித்துப் போன,

காவோலை ஏட்டுச் சுவடிகளாய்,

பாதி புரிந்தும், பாதி புரியாமலும்,

பாதிக்கப் பட்டவனைப் பார்த்து,

ஏழனம் செய்கையில்,

எக்காளமிட்டுச் சிரிக்கின்றன,

ஏகாதிபத்தியத்தின்,

அகலப் பெரிதான வாய்கள்!

 

எப்படி எமக்கு நீதி கிடைக்கும், அரிஞ்சயா? :o

 

ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றிகள்! :D  

கருத்துடன் சேர்த்து தமிழரின் ஏக்கத்தையும் கோடிட்டுக் காட்டிய   புங்கையூரனுக்கு எனது நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது அரிஞ்சயன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கிறது அரிஞ்சயன்

எமது சிதைக்கப்பட்ட வாழ்வியலின் ஒரு துளியைத்தொட்டு எழுதிய வரிகள் உங்கள் மனதைத் தொட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரை நினைவுகள்

 

 

சித்திரை நிலவில்

நித்திரை நீக்கி - உன்

முத்திரை விழி பார்த்திருந்தேன்...

நிலவின் குளிர்ச்சி 

உந்தன் முகத்திலா.....

உன் முகத்தில் குளிர்மை

நிலவின் முகத்திலா - என்று

குழம்பிய கணங்களைக் கடப்பதுதான்

காதலின் சுகமா என்றிருந்தேன்....

 

என்னில் ஒட்டிய நினைவு நீயடி...

உன் விழியால் எனை நனைத்தாயடி...

உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி....

அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி....

 

வலிக்கும் நிலத்தில் தான்

என் வாழ்வு....

மறுபடி நீ வந்து - என்னை

மணக்கும் பொழுதில் தான்

பலிக்கும் என் நினைவென்று...

சிந்திய முத்துக்கள் கொண்டு

என்னை வழியனுப்பியவள்....

குரல் கேட்டு

நாலு சித்திரை கடந்துவிட்டது....

அவள் நினைவுகளோ - என்னை

அகல மறுக்கிறது......

 

எங்களைக் காக்கவென்று - தன்

இரும்புக் கரங்களால்

பேரினவாதம் எங்களை நெரித்த போது

சிக்கிய புறாக்களில்

என் மனதை மயக்கிய

மாடப்புறாவும் தானே மாட்டியிருக்கும்....

 

ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே

இன்னும் பதிலில்லை.....

இதில் என் ஒருசோடி விழிகளை நான்

எங்கே தேடுவது......

 

களத்தில் துப்பாக்கிகள்

மெளனித்து விட்டன......

ஆனாலும் புலத்தில் - மெளனிக்காத

துப்பாக்கி நினைவுகளோடு

தமிழர் குலமறுத்தவரின்

கழுத்துக்களில் தூக்குக் கயிற்றின்

சுருக்குக்கள் விழும் வரை

எதிரியுடனான போரில் 

என் பங்கும் என்றும் இருக்கும்

என் சித்திரை நிலவின்

ஒருதுளி நினைவு என்னுள் இருக்கும் வரை......

 

 

அன்புடன் 

 

அரிஞ்சயன்....

 

நாலு சித்திரை என்ன கூடச் சித்திரை வந்தால்தான் அதிலை சுகம் இருக்கும் . உங்கடை கவிதையை பாராட்டிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, தொடர்ந்து பகிருங்கள்

கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் உடையார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு சித்திரை என்ன கூடச் சித்திரை வந்தால்தான் அதிலை சுகம் இருக்கும் . உங்கடை கவிதையை பாராட்டிறன் .

மைத்திரேயி

 

நான் நாலு சித்திரையென்று எழுதியிருந்தேன், வன்னியில் எங்கள் இனம் நசுக்கப்பட்டு நாலு வருடங்கள், அதில் சிக்குண்ட காதலுக்கும் நாலு வருடங்கள் ஆகிவிட்டதென்று....

 

கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காதலின் வேதனையும்  
        கண்முன் நிகழ்ந்த அழிவுகளும்
கால வோட்டத்தில் இவையிரண்டும்  
            கரைந்தோடும் நிலையிங்கு
கவி வரியாய் களை கட்ட  
           கன்னித் தமிழில் அரிஞ்சயனால்
பவித்திரமாய் புனையப்பட்டமை  
           பாராட்டுக்குரிய விடயமன்றோ  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

காதலின் வேதனையும்  
        கண்முன் நிகழ்ந்த அழிவுகளும்
கால வோட்டத்தில் இவையிரண்டும்  
            கரைந்தோடும் நிலையிங்கு
கவி வரியாய் களை கட்ட  
           கன்னித் தமிழில் அரிஞ்சயனால்
பவித்திரமாய் புனையப்பட்டமை  
           பாராட்டுக்குரிய விடயமன்றோ  

 

யாழ்வாணன்

 

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.