Jump to content

தமிழக மீனவர்கள் மீதான வன்முறை தொடர்கதையா? – இரா.தமிழ்க்கனல்


Recommended Posts

நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது.

குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன.

 
கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  6ம் தேதியன்று நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் படுகாயம் அடைந்தார். மார்ச் 13ம் தேதியன்று, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு மன்னாரில் சிறைவைக்கப்பட்டனர். 19ம் தேதியன்று 3 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இரும்புத்தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.  அடுத்த நாளன்று, நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவர்களை கொடுவாள்களால் இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், 4 மீனவர்களுக்கு கைகளில் கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மாதம் 6ம் தேதியன்று 30 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைப் படையால் கைதுசெய்யப்பட்டு, ஏப்.18வரை சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
 
 
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா 5 முறை கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு பலன் கிடைத்தது என சொல்லிக்கொள்ளலாம் என்றால், தூத்துக்குடி மீனவர்களை மட்டும் 10 நாள் வைத்திருந்துவிட்டு வழக்கு பதியாமல் திருப்பி அனுப்பினார்கள். மற்றபடி, தமிழ்நாட்டின் காப்பாற்றக் கோரும் கோரிக்கைகளை வழக்கம்போல டெல்லி கிடப்பில் போட்டதுதான் மிச்சம். இதற்கும். ஏப். 7ம் தேதியிட்ட கடிதத்தில், ஜெயலலிதா சற்று கடுமையாகவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இந்தியாவின் மீதான வலிந்த தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்! ஆனாலும் என்ன?!
 
 
இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், வெகு காலத்துக்குப் பிறகு, தமிழகத்தின் ஒரு பொது நிகழ்வாக மாறியதும், இத்தாக்குதல்களுக்கு ஒரு காரணமாகவேணும் இருக்கக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னொன்று, தமிழகத்துக்கு வந்த சிங்கள பக்தர்கள், சிங்கள எம்.பி., பவுத்த பிக்குகள் மீதான தாக்குதல், தாக்குதல் முயற்சிகளும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலை தமிழீழத்தில் உள்ள தமிழர்கள் ஏற்கிறார்களா, தமிழகத் தமிழர்களின் பெரும் ஆதரவு இதற்கு இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகள் தொக்கி நிற்பது ஒருபுறம்…ஆனால், மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துவிட்ட மார்ச் மாதத்தைப் போலவே, ஏப்ரலிலும் நிலைமை மாறிவிடவில்லை. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும் தொடருகின்றன. பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்னையில், முக்கியமில்லாத ஒருவர் என்றாலும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் ஒருவர், போகிறபோக்கில் ஒரு விசயத்தை தூவிவிட்டுச் சென்றுள்ளார். இதை, ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது அக்கறையுள்ள யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
 
90களில் தனித்தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் ஒரு பாடலில், ’’ தமிழகத்தில் எது செய்தாலும் புலிகளே செய்தார் எனும் பேரெத்தன் வாழ்ப்பாடி எனும் ஊர் பேர் கெடுக்க வந்த ராமமூர்த்தி’’ என முன்னாள் மத்திய அமைச்சரைப் பற்றிக் குறிப்பிடுவார். அதைப்போல, கூடங்குளம் விவகாரத்தில் கோமாளித்தனமாக இருந்தாலும் மக்களுக்கு எதிராக கூசாமல் பேசக்கூடியவர், என கடுமையாக விமர்சிக்கப்படுபவர், இந்தியப் பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் நாராயணசாமி. கடந்த 10ம் தேதியன்று சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர், ’இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் அளிப்பதால்தான், இலங்கை கடற்படை தமிழக, புதுவை மீனவர்களை சுடுகிறது’ என்று கூறினார். இதற்கு, திமுகவின் புதுச்சேரி மாநிலப் பிரிவின் சார்பில் மட்டும் உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி உள்பட சில தரப்புகள் மட்டுமே, தமிழக-தமிழீழ தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக எதிர்ப்பு தெரிவித்தன. தமிழீழத்துக்காக புதிதாகத் தீவிரக் குரல் கொடுக்கும் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் மட்டுமல்ல, தொடர் ஈழ ஆதரவு அமைப்புகளின் தலைமைகளும் இதில் கனத்த அமைதி காக்கின்றன. இந்த அமைதி இனியும் தொடருவது சரிதானா? என்பது பெரும் பொருள்பொதிந்த கேள்வியாக எழுந்து நிற்கிறது!
 
 
ஏனென்றால், இதுவரைக்கும் இலங்கை அரசுத் தரப்பினரால் மட்டுமே சொல்லப்பட்டு வந்த ‘நியாயப்படுத்தும் காரணத்தை’ இந்திய அரசும் சொல்லத் தொடங்கி இருக்கிறது. தமிழர்களுக்கு நாராயணசாமி எப்படிப்பட்டவர் என்றாலும் உலகத்தைப் பொறுத்தவரை அவர் இந்திய அரசின் பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் என்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
 
தமிழக மீனவர்கள் மட்டும் அல்ல, எல்லைதாண்டி மீன்பிடிக்கும் எந்த அப்பாவியையும் தாக்குவது, அதுவும் ஜனநாயக நாட்டின் அரசுப் படை தாக்குவதை, முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகையை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பன்னாட்டு சட்டப்படி நீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்தக் கோரிக்கையில் வலுவாக நிற்கும், தமிழக ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள், தமிழக மீனவர்கள் உண்மையிலேயே எல்லை தாண்டுகிறார்களா என்பதைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவதில்லை. இதே சமயத்தில், முப்பது ஆண்டு காலம் போரால் பாதிக்கப்பட்ட தமிழீழ கரையோர மக்களின் ஒரு தலைமுறையே, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இப்போதுதான் ஏதோ கொஞ்சம் கடலுக்குள் போகத் தொடங்கியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கு முந்தைய மீன்பிடியையே செய்கையில், தமிழக, கேரள மீனவர்களோ நவீனப் படகுகளுடன் சர்வசாதாரணமாக ஈழத்தின் கடல்பிரதேசத்தில் ஊடுருவி வந்துவிடுகிறார்கள்.
 
 
அரசியல் அமைப்புகள் இதில் (கள்ள) அமைதி காத்தாலும், நேர்மையான தமிழக மீனவர்கள் தரப்பு, ஈழத்துக் கரைவரைக்கும் போவதை மறுக்கவில்லை. ‘எங்களுக்கு அங்கேதான் பாடு கிடைக்குது, நாங்க வேற என்ன செய்ய?’ எனக் கேட்கிறார்கள், அப்பாவித்தனமாக.
 
 
தமிழீழ மீனவர்களும் தமிழக மீனவர்கள் ஈழப்பகுதியில் மீன்பிடிப்பதை முற்றிலும் எதிர்க்கவில்லை. இழுவைப் படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் தரையோடு தரையாக அள்ளுவதைப் போல, அந்தப் பகுதியில் உள்ள மீன்வளம் மொத்தத்தையும் அழிப்பதுதான் பிரச்னை என்கிறார்கள். கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வட இலங்கை கடற்பகுதி இருந்தவரையில், இந்த பிரச்னை பெரிதாக எழவில்லை. இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ள நிலையில், தமிழீழ மீனவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது, இலங்கை அரசுத் தரப்பு.
 
 
தனியான இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, எந்த தமிழக அரசியல் அமைப்பும் இனி மீனவர் தாக்கப்படுவதை மட்டும் கண்டிப்பது பொருளற்றதாக ஒன்றாகவே இருக்கும்.  அதேபோல, தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவைப் பெறவேண்டும் என நினைக்கும் நேர்மையான தமிழீழ அரசியல் அமைப்புகளும் தமிழக அமைப்புகளுடன் பகிரங்கமாக இந்தப் பிரச்னையைப் பற்றி கருத்துப் பரிமாறுவது காலத்தின் கட்டாயம். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்புடைமை இருக்கிறது.
 
 
 
பிரச்னையை சரிசெய்ய முன்வராமல், தமிழகத்தின் ஆதரவை இழந்துவிடுவோம் என ஈழத்து தலைவர்கள் நினைப்பார்களேயானால், விரைவில் அப்படியொரு அவல யதார்த்தத்தைக் காண்பார்கள்! அடுத்தடுத்த தலைமுறைகளும் அவர்களை மன்னிக்காது!
 
தமிழ்லீடருக்காக இரா.தமிழ்க்கனல்

 

http://tamilleader.com/?p=10430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.