Jump to content

நான் கண்ட கனவுகள்..!


Recommended Posts

திடீர் என்று எனக்கொரு கனவு.....

வடக்கு முதலமைச்சரா என்ன கொண்டு போய் போடுறாங்கையா.....

நானு ஐயோ ஆள விட்டிருங்க எண்டு சொல்லி கத்திட்டு ஓடிவாறன்.... என்னைய வந்து மம்மி எழுப்பி கேக்கிறா என்னடா தூக்கத்தில உளறிட்டு இருக்கேணு......

அப்புறம் என்ன வடை போச்சு I மீன் கனவு குழம்பிடிச்சு....:(

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

நான் இன்செப்சன் (inception) படத்தை பார்த்ததில் இருந்து தான் கனவுகளை ஆராய்வதுண்டு. யாரும் கனவு கண்டாலும் அந்த படத்தில் வரும் சில  காட்சிகளை சொல்லி விளங்கப்படுத்துவதுண்டு.  

 

கனவுகள் என்றதும் உடனே ஞாபகம் வருகிறமாதிரியாக அந்த படம் என் வாழ்க்கையில் மாறிவிட்டது. என்றைக்காவது ஒருநாளாவது கனவுக்குள் கனவுக்கு செல்ல வேண்டும் என்று ஆவல்.  காலத்தை வேகமாக ஓட்டிப்பார்க்க வேண்டும்.

 

 

 எனக்கு அடிக்கடி சின்ன வயசில் பரீட்சைக்கு படிக்காமல் போன மாதிரி, அல்லது வேறு பாட சோதனைக்கு வேறு பாடத்தை படித்துவிட்டு வந்த மாதிரி, வாகனத்துக்கு எரிபொருள் தீர்ந்து நடுவழியில் நின்ற மாதிரி, யாரோ துரத்த ஓடுற மாதிரி கனவுகள் வருவதுண்டு. எத்தனையோ தரம் என்னை கனவிலே சுட்டு இருக்கிறார்கள் ஆனால் அத்தனை தரமும் நான் காயத்துடன் தப்பிவிட்டேன். :lol:

 

 

நன்றி  இசை உங்கள் பகிர்வுக்கு.

 

Link to comment
Share on other sites

இசை : "டாக்டர், தினமும் தூங்கும்போது குரங்குகள் ஃபுட்பால் மேட்ச் விளையாடற மாதிரி கனவு வருது."

டாக்டர் : "சரி.. இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுங்க, கனவு வராது."

இசை : "இன்னிக்குதான் பைனல் மேட்ச். நான் நாளையிலிருந்து மருந்து சாப்பிடட்டுமா?"

:D :d

Link to comment
Share on other sites

மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க... கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே...! ...

:( :( :D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி ஐயாமாரே உங்கள் கருத்துக்களுக்கு.. :D

 

நேற்று முழுவதும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுவிட்டேன் என நினைக்கிறேன்.. அதற்கு முதல் இரண்டு நாட்களும் பயணங்களை மேற்கொண்டதால் இருக்குமோ என்று ஒரு ஐயன்.. :unsure: எது எவ்வாறு இருப்பினும்.. :D நேற்று நித்தாவுக்குப் போனபிறகு ஒரு கனவு வந்துவிட்டது.. :blink:

 

3) இது தாயகத்திலா?

அதாவது, ஒரு நாற்சார் வீடு.. எனது அண்ணன் இருக்கிறார்.. அம்மா அடுத்த அறையில் உள்ளார்.. நடுவில் தாழ்வாரத்தைச் சுற்றியுள்ள ஒரு பகுதியில் நானும், அண்ணனும் இருக்கிறோம்.. எங்களுக்குப் பக்கத்தில் இளையராஜா இருக்கிறார்.. :lol:

 

நான் எனது ஆதங்கத்தைச் சொல்கிறேன்.. அதாவது சுரங்களை எல்லாம் பிடிக்கக்கூடியதாக இருக்கு.. ஆனால் அதை தொண்டைக்குள்ளால இருந்து கொண்டுவரமுடியவில்லை என்று.. :lol: அதற்கு அதிக பயிற்சி தேவை என்கிறார் இளையராஜா..

 

இதற்குள் அம்மா மற்ற அறையில் நின்றுகொண்டு உருளைக்கிழங்கு இல்லை.. அரிசி இல்லை என்றூ சத்தமாக சொல்லிக்கொண்டிருக்கிறா.. நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.. :D

 

இதற்கிடையில், "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள" என்கிற பாட்டின் கடைசிப் பல்லவியில் ஏன் ஒரு சறுக்கல் உள்ளது என்று இளையராஜா ஐயாவைக் கேட்கிறேன்.. கனவு கட்டாகி விட்டது.. :( என்ன நடந்திருக்கும்? :huh: :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நல்ல கற்பனா சக்தி இருக்கு இசை படத்திற்கு கதை எழுதப் போங்கோ :lol:

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
யாழ் இணையத்தை முப்பரிமாணவடிவ பார்வையில் அண்மையில் கனவு கண்டேன். குறிப்பிட்ட கனவை கண்டபோது கனவிலேயே நான் அபரிமிதமான தொழில்நுட்பவளர்ச்சியைக்கண்டு சொக்கிப்போனேன். இப்படியான பிரமாண்டமான ஓர் தளத்தின் அமைப்பு தோற்றத்தை ( கனவில் கண்டதுபோல் ) நான் முன்பு கற்பனை செய்தும் பார்க்கவில்லை. கனவில் பார்த்த யாழ் இணையத்தில் ஒரு பகுதியில் முகப்பில் நடுவிலிருந்து சற்று வலதுபக்கமாக நெட்டாங்காக முப்பரிமாணவடிவில் பூமி சுழன்றுகொண்டிருக்க Realtimeஇல் எனது வீட்டு இருப்பிடமும் காண்பிக்கப்பட்டது ( GPSபோல் ).
Link to comment
Share on other sites

  • 11 months later...

நேற்று இரவு மறுபடியும் ஒரு கனவு..  :( 

 

அதாவது ஊரில், எங்களது பழைய வீட்டருகில் நானும் சிலரும் நிற்கிறோம். அந்த சிலர் யாரென்று தெரியவில்லை. :unsure: அப்போது ஒரு ஆகாய விமானம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள விமான நிலையத்தில்  :wub: தரையிறங்க வருகிறது. ஆனால் அதன் மூக்கு (Nose of the airplane) கீழ்நோக்கி இருக்கிறது.. :o மேலும், அதன் வேகமும் மிக குறைவாக இருக்கிறது. ஏறத்தாழ வானில் நின்றுவிட்டதுபோல் இருக்கிறது. :blink: 

 

இது தரையிறங்கும் முறை அல்லவே என்று யோசித்துக்கொண்டு நிற்கும்போது, அதன் மூக்கு நிமிர்கிறது. அப்பாடா என்று பெருமூச்சு விடவும், விமானம் அப்படியே கீழே விழுந்து விடுகிறது. :o பனைமரம், தென்னைமரம், மாமரம், வேப்பமரம் எல்லாம் மறைத்ததால் மேற்கொண்டு எதுவும் தெரியவில்லை. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது உலக அதிசயமாக்கிடக்கு.. இசையருக்கு ஒரு வருட இடைவெளி விட்டு கனவு வந்திருக்குது..! :lol::D

Link to comment
Share on other sites

என்னடா இது உலக அதிசயமாக்கிடக்கு.. இசையருக்கு ஒரு வருட இடைவெளி விட்டு கனவு வந்திருக்குது..! :lol::D

 

இடையில் வந்த பல கனவுகள் சுய தணிக்கைக்கு உள்ளாகிவிட்டன..  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு மறுபடியும் ஒரு கனவு..  :( 

 

 

 

இது தரையிறங்கும் முறை அல்லவே என்று யோசித்துக்கொண்டு நிற்கும்போது, அதன் மூக்கு நிமிர்கிறது. அப்பாடா என்று பெருமூச்சு விடவும், விமானம் அப்படியே கீழே விழுந்து விடுகிறது. :o 

 

பிரேசிலும் ஒல்லாந்தும் பைனலுக்கு வரும் என்று கண்ட கனவு கலைந்ததால் இப்படி ஒரு கனவு வந்ததா??? :D :D :lol:

Link to comment
Share on other sites

பிரேசிலும் ஒல்லாந்தும் பைனலுக்கு வரும் என்று கண்ட கனவு கலைந்ததால் இப்படி ஒரு கனவு வந்ததா??? :D :D :lol:

 

நான் இப்ப எதுவும் சொல்லுறதா இல்லை..  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு மறுபடியும் ஒரு கனவு..  :( 

 

அதாவது ஊரில், எங்களது பழைய வீட்டருகில் நானும் சிலரும் நிற்கிறோம். அந்த சிலர் யாரென்று தெரியவில்லை. :unsure: அப்போது ஒரு ஆகாய விமானம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள விமான நிலையத்தில்  :wub: தரையிறங்க வருகிறது. ஆனால் அதன் மூக்கு (Nose of the airplane) கீழ்நோக்கி இருக்கிறது.. :o மேலும், அதன் வேகமும் மிக குறைவாக இருக்கிறது. ஏறத்தாழ வானில் நின்றுவிட்டதுபோல் இருக்கிறது. :blink: 

 

இது தரையிறங்கும் முறை அல்லவே என்று யோசித்துக்கொண்டு நிற்கும்போது, அதன் மூக்கு நிமிர்கிறது. அப்பாடா என்று பெருமூச்சு விடவும், விமானம் அப்படியே கீழே விழுந்து விடுகிறது. :o பனைமரம், தென்னைமரம், மாமரம், வேப்பமரம் எல்லாம் மறைத்ததால் மேற்கொண்டு எதுவும் தெரியவில்லை. :D 

 

 

நானும்  இன்று விடிய  ஒரு கனவு கண்டேன்

 

சில  படங்களுக்கு கீழே திகதியை  எழுதுகின்றேன்

திகதி 18/07/2014

நான் டென்மார்க்  நோக்கி  பயணிக்கும் திகதி  அது... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  இன்று விடிய  ஒரு கனவு கண்டேன்

 

சில  படங்களுக்கு கீழே திகதியை  எழுதுகின்றேன்

திகதி 18/07/2014

நான் டென்மார்க்  நோக்கி  பயணிக்கும் திகதி  அது... :(

 

விசுகு நீங்கள் எழுதிய விதத்தில்..

உங்களுக்கு... இப்போது டென்மார்க் போகும் திட்டம் இல்லை.

ஆனால்... உங்கள் கனவில், வரும் 18´ம் திகதி டென்மார்க் போவீர்கள் என்று கனவு வந்தது. அப்படி நான் விளங்கிக் கொண்டேன். சரியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் எழுதிய விதத்தில்..

உங்களுக்கு... இப்போது டென்மார்க் போகும் திட்டம் இல்லை.

ஆனால்... உங்கள் கனவில், வரும் 18´ம் திகதி டென்மார்க் போவீர்கள் என்று கனவு வந்தது. அப்படி நான் விளங்கிக் கொண்டேன். சரியா....

 

 

இல்லை  சிறி

18-07-2014

நான் வாகனத்தில் டென்மார்க்  செல்கின்றேன்

அத்தாரின் முதலாவது துவசத்துக்காக..

 

அவருக்கு நான் என்றால் கொள்ளை  அன்பு

ஒருமுறை  தன்னுடன் எடுக்க முயற்சித்தவர்

முடியாமல் போய்விட்டது

அற்புதமாக தப்பினேன்.....

Link to comment
Share on other sites

இல்லை  சிறி

18-07-2014

நான் வாகனத்தில் டென்மார்க்  செல்கின்றேன்

அத்தாரின் முதலாவது துவசத்துக்காக..

 

அவருக்கு நான் என்றால் கொள்ளை  அன்பு

ஒருமுறை  தன்னுடன் எடுக்க முயற்சித்தவர்

முடியாமல் போய்விட்டது

அற்புதமாக தப்பினேன்.....

 

 

எப்பிடி எண்டு சொல்லுங்கள் விசுகு? 

 

நீங்கள் டென்மார்க் போவதைப் பற்றி யோசித்திருப்பீர்கள் அதாலை அப்படிக் கனவு வந்திருக்கலாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் வந்த பல கனவுகள் சுய தணிக்கைக்கு உள்ளாகிவிட்டன..  :lol:  :D

 

அப்ப ஒருவருசமா பலான நிலையில் இருந்தீங்களோ. ம்ம். பாவம் மிஸ்ஸஸ் இசையர். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை  சிறி

18-07-2014

நான் வாகனத்தில் டென்மார்க்  செல்கின்றேன்

அத்தாரின் முதலாவது துவசத்துக்காக..

 

அவருக்கு நான் என்றால் கொள்ளை  அன்பு

ஒருமுறை  தன்னுடன் எடுக்க முயற்சித்தவர்

முடியாமல் போய்விட்டது

அற்புதமாக தப்பினேன்.....

 

ஓ....

எப்படி... தன்னுடன் எடுக்க முயற்சித்தவர்? என்பதை.... கூற முடியுமா விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப எதுவும் சொல்லுறதா இல்லை..  :lol:  :D

 

 

ஏதாச்சும் ஒரு நாடு உலக கோப்பையை தனதாக்கும் மட்டும் இசையண்ணா மௌன விரதமாம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாச்சும் ஒரு நாடு உலக கோப்பையை தனதாக்கும் மட்டும் இசையண்ணா மௌன விரதமாம்.. :lol:

 

அதென்ன... ஏதாச்சும் ஒரு நாடு.

வாற.... ஞாயிற்றுக்கிழமை மாலை,

deutschlandflagge.gifஜேர்மன் வீரர்கள் உலகக் கோப்பையை....world-cup-winner-smiley-emoticon.gif கைப்பற்றிக் கொண்டு,

திங்கள் கிழமை, ஜேர்மன் மண்ணில் கால் வைக்கிறார்கள்.

 

இது கனவல்ல, நிஜத்தில் நடக்க இருக்கின்றது. :)

 

அதுக்குப் பிறகு தான்.... இசைக் கலைஞனுக்கு,

நார்.... பறக்க, கச்சேரி இருக்கு. :D  :D

Link to comment
Share on other sites

  • 6 months later...

5) தமிழகத்தில் பயங்கரம் :unsure:

 

நேற்றைய கனவில் நான் தமிழகத்தில் இருந்தேன்.. :huh: அருகில் சில நண்பர்கள்.. ஆனால் யாரென்கிற தகவல் இல்லை.

திடீரென்று பார்த்தால் எங்களது ஊரையே சுற்றி வளைத்துவிட்டது ஐசிஸ்.. :o எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகச் சொல்கிறார்கள். எல்லாரும் பவ்யமாக போகினம்.. ஆனால் ஆயுததாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கு.

எப்பிடியோ எல்லாரையும் சுடப் போறாங்கள். ஏன் இவங்கள் பேசாமல் இருக்கிறாங்கள் என்று எனக்கு குழப்பம்.

இப்ப நண்பர்களும் நானும் ஒரு மொட்டைமாடியில் இருக்கிறோம். மெதுவாக கீழே இறங்கி சந்து பொந்துகளுக்குள்ளால் வரவும் காவல்துறை இருக்கும் இடத்தை அடைந்துவிட்டோம். ஏற்கனவே அந்த இடத்தை காவல்துறை சுற்றி வளைத்து விட்டிருந்தது. தடுப்பு வேலியும் போட்டிருந்தார்கள். சென்னையில் சாலைக்கு நடுவில் இருப்பது போன்ற வேலி. :D ஒரு மேசையும் இரு கதிரைகளும். அதில் ஒரு காவல்துறை ஆய்வாளர் குந்தியிருந்து வரவேற்றார். அவர் ஒரு போக்குவரத்து போலிஸ்போல காக்கியும் வெள்ளைச்சட்டையும் அணிந்திருந்தார். :lol: நாங்க தப்பிச்சிட்டம்ல‌.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தீர்மானத்தை நாடு கடத்தின குற்றத்துக்கு இப்பிடியான கனவுதான் வரும் ^_^  :icon_idea:

Link to comment
Share on other sites

அமெரிக்க தீர்மானத்தை நாடு கடத்தின குற்றத்துக்கு இப்பிடியான கனவுதான் வரும் ^_^:icon_idea:

லண்டன்காரர் எண்டால் சும்மாவா.. :unsure: திருப்பியும் கனடாவில் நிறைவேற்றிட்டாங்கள்.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்காரர் எண்டால் சும்மாவா.. :unsure: திருப்பியும் கனடாவில் நிறைவேற்றிட்டாங்கள்.. :o:D

ஆப்பு :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.