Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

கருத்துக்களைப் பகிர்ந்த புத்தன், விசுகு அண்ணா, சாந்தி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 

நன்றியிருக்கட்டும் மிகுதி எங்கே, வசந்தி ஓடிப்போயிட்டாவா அல்லது கெட்டுப்போயிட்டாவா?

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 7


வசந்தி தேவகியைப் பார்த்து கதச்சீங்களோ அக்கா என்று கேட்டாள். ஓம் வசந்தி இன்று காலையில்தான் வசந்தனோட கதைச்சனான். தான் கொஞ்சநாள் ஒரு பிள்ளைக்கு டியூசன் எடுத்தனான்தான். அதுக்காக காதல் எல்லாம் இல்லை. அவ வீணா கற்பனை பண்ணி வைச்சிருந்தா அதுக்கு நானோ பொறுப்பு என்று சொன்னவன். தன்னை இனித் தொந்தரவு செய்ய வேண்டாமாம் என்று தேவகி கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தி மயங்கி விழுந்திருந்தாள்.

தேவகிக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல. என்ன செய்யிறதென்று ஒரு கணம் தான் யோசிச்சிருப்பாள். உள்ளே சென்று கணவனை அழைத்து வந்து வசந்தியைத் தூக்கித் திண்ணையில் கிடத்திவிட்டு வசந்தியின் பெற்றோரிடம் கணவனை அனுப்பினாள். எதுக்கு வீண் வம்பு. குமர்ப்பிள்ளையின் விசயம். ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தால் என்ர தலை தான் உருளும் என தனக்குள் நினைத்தபடி தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து வசந்தியின் முகத்தில் தெளித்தாள். தண்ணீர் பட்டதும் வசந்தியின் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு கண்களை மெல்லத் திறந்தாள்.

தேவகியைப் பார்த்ததும் எல்லாம் நினைவுக்குவர ஐயோ அக்கா என்று சொல்லிப் பெருங் குரலெடுத்து  அழ ஆரம்பித்தவளை தன் தோளில் சாய்த்து அனைத்து ஆறுதல்ப்படுத்த முனைந்தாள் தேவகி. சில ஆம்பிளையள் உப்பிடித்தான் வசந்தி. நீங்கள் சின்னப் பிள்ளை. அனுபவம் பத்தாது. தாய் தகப்பனுக்குப் பயந்தவங்கள் ஏன் காதலிக்கிறாங்களோ தெரியேல்லை. இப்பவாவது வசந்தனைப் பற்றித் தெரிந்துதே. அந்த அளவுக்கு நல்லதுதான் என்று கூறி முடிய, அக்கா என்னால வசந்தனை மறக்க ஏலாது. அவர் என்னை மறக்கலாம். இந்த ஜென்மத்தில நான் கட்டினா அவரைத்தான் அல்லது இப்பிடியே இருந்திட்டுப் போவன் என கேவிக் கேவி வசந்தி கூற, இப்ப யார் என்ன சொன்னாலும் வசந்தியின் மண்டையில் ஏறப்போவதில்லை என எண்ணியபடி சரி பரவாயில்லை. பிறகு உதைப்பற்றிக் கதைப்பம். இப்ப உங்கட வீட்டில இருந்து யாராவது வருவினம் வீட்டை போங்கோ என்றார். அக்கா நீங்கள் வசந்தன்ர விசயத்தைச் சொல்லிப் போட்டீங்களே என்று வசந்தி கேட்டதற்கு இல்லை மயங்கி விளுந்திட்டீர் என்று மட்டும் தான் சொன்னனான். பாவம் உம்மட அம்மா அப்பாவுக்கு நான் சொல்லி அவையின்ர மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. ஆனால் எல்லாத்தையும் மறந்து படிப்பில கவனத்தை வையும். எல்லாம் தன்ர பாட்டில மறந்திடும் என்றார். வசந்தி எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளின் மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டது.

வசந்தியின் தாய்தான் மகளின் நிலை கேட்டு ஓடிவந்தார். என்னதான் கோபம் இருந்தாலும் மயங்கி விழுந்துவிடாள் என்றதும் மனம் பதறத்தான் செய்தது. என்ன கறுமமோ எக்குத் தப்பா ஏதும் நடந்திட்டுதோ என்றும்  ஏதேதோ யோசனை ஓடியது. உள்ளுக்குள் ஏற்பட்ட நடுக்கத்தை மறைத்தபடி என்னம்மா கோவிலுக்குப் போறன் என்று சொல்லிப்போட்டு இங்க வந்து நிக்கிறாய் என்றார் மகளைப் பார்த்து. வசந்தி ஏதும் சொல்ல முதலே நான்தான் அக்கா வசந்தியின்ர ரிசல்ஸ் பற்றிக் கேட்டு இங்க கூட்டிக்கொண்டு வந்தனான் என்றதும் வசந்திக்கும் தாய்க்கும் கூட நின்மதி ஏற்பட்டது.

வசந்தி எழுந்திருக்க நினைத்தாலும் சோர்வு விடவில்லை. எந்தகக் காயத்தின்  வலியும்  தாங்கிகொள்ள முடியும். ஆனால் மனம் சோர்ந்துவிட்டால்  எதுவும் செய்ய விடாது. வசந்தி எத்துனை திடமானவள். இப்படி வாடிப்போய் சோர்வுடன் நடந்து செல்வதை தேவகி இரக்கத்துடன் பார்த்தாள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. நான் தான் வலியக் காதலைச் சொல்லியிருப்பினும் கொஞ்சம்கூட என்னில் அன்பில்லாமலா என்னைக் காதலித்தார். இல்லை நடித்தார். இத்தனை நாள் பழக்கத்தை எப்படித் தூக்கி எறிய முடியும்? பொழுது போக்குக்காக என்னோட கதைச்சிருக்கிறார். நல்ல காலம் நெருக்கமாப் பழகி நான் என்னை இழக்கவில்லை. என்னத்தை இழக்கிறது. மனதை பறிகொடுத்தபிறகு எதை இழந்தென்ன விட்டென்ன. வசந்தனை விட என் வாழ்வில் வேறு யாருக்கும் இடம் இல்லை என எண்ணியவள், தாய் எதோ கேட்டதையும் தான் கவனிக்காததையும் உணர்ந்து என்னம்மா என்றாள். உள்ளதைச் சொல்லு வசந்தி,அவனோட  ஒரு தப்பும் நடக்கேல்லைத் தானே என்றதும், என்னம்மா நீங்கள் என்னை கேவலமா நினைச்சுப் போட்டியளே என்று  மன வருத்தத்துடன் கூறினாள். அவளின் குரல் தாய்க்கு அவள்மேல் இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதில்லை மயங்கி விழுந்தது  என்றதும் நான் என்னென்னவோ நினைச்சுப் பயந்துபோனன் என்று சமாளித்தார்.

மாதங்கள் சில ஓடின. வசந்தி வெளியில் அதிகம் திரிய எண்ணவில்லை வசந்தனைப் பார்க்கவும் ஆசை கொள்ளவில்லை. படிப்பில் கவனத்தை வைத்தாள். சில வேளைகளில் கோவிலுக்குப் போவாள். தாய் பொருட்கள் வாங்கக் கடைக்கு அனுப்பினால் போவாள். மற்றப்படி வீட்டில் தான். வசந்தன் இப்ப கொழும்பில என்று ஒருநாள் தேவகி அக்கா சொன்னார். அவளுக்கு அது ஒரு ஆறுதலைத் தந்தது என்றே தோன்றியது.

மாதங்கள் நகர்ந்து  ஒருவருடம் ஓடியது. வசந்தி இம்முறை நன்றாகப்  பரீட்சை எழுதியதை உணர்ந்தாள். இடையில் லண்டன் எக்ஸ்சாமும் எடுத்து திறமைச் சித்தி எய்தி இருந்தாள். அவளின் ஒன்றுவிட்ட சித்தப்பா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வேலை செய்தபடியால்,   கணக்குப் பதிவாளர் வேலை ஒன்று இருக்கு. முதல் ஒரு மாதம் சம்பளம் தர மாட்டினம். நல்லாச் செய்தால் அடுத்த மாதத்திலிருந்து சம்பளம். எதுக்கும் போய் பாக்கச் சொன்னார். சரி ரிசல்ஸ் வரும் வரைக்குமாவது பொழுது போகட்டும் என எண்ணிய வசந்தி அடுத்த வாரத்திலிருந்து வேலையை ஆரம்பித்தாள். அவளின் சுறுசுறுப்பும் அமைதியும் அவளை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அடுத்த மாதமே சம்பளத்துடன் வேலையும் கொடுத்துவிட்டனர். இரு மாதங்களில் புதிதாக அந்த இடத்தில் கச்சேரி ஒன்று ஆரம்பிக்க இருப்பதாகவும், அங்கு திட்டமிடல் அலுவலர் வேலைக்கு ஆட்களை எடுக்கப் போவதாகவும் வசந்தியிடம் திறமை இருப்பதால் அதற்கு விண்ணப்பிக்கும் படியும் உதவி அரசாங்க அதிபரே கூறியதில் வசந்திக்கு தலை கொள்ளாச் சந்தோசம்.

அன்று வீட்டுக்குப் போனதும் பெற்றோரிடம் தன் சந்தோசத்தைப் பகிர்ந்தாள். தாய்க்கு பணம் வருகிறதே என்னும் சந்தோசம். தந்தைக்கு காதலில் விழுந்த மகள் அதை நினைத்து சீரழியாமல் இப்படி நல்ல நிலைக்கு வந்துவிட்டாளே என்று சந்தோசம். எதுக்கும் இப்ப வேலைக்கு போடுங்கோ அதுக்குள்ள ரிசல்சும் வந்திடும் தானே. பிறகு முடிவெடுக்கலாம் என்று மகிழ்வோடு கூறிவிட்டுச் சென்றார்.

தொடரும் ........................
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியிருக்கட்டும் மிகுதி எங்கே, வசந்தி ஓடிப்போயிட்டாவா அல்லது கெட்டுப்போயிட்டாவா?

 

வருகைக்கு நன்றி வந்தி. வசந்தி கெட்டும்போகேல்ல, ஓடியும் போகேல்ல :D

 

 

Link to comment
Share on other sites

//மாதங்கள் நகர்ந்து  ஒருவருடம் ஓடியது. வசந்தி இம்முறை நன்றாகப்  பரீட்சை எழுதியதை உணர்ந்தாள். இடையில் லண்டன் எக்ஸ்சாமும் எடுத்து திறமைச் சித்தி எய்தி இருந்தாள்.//

 

லண்டன் பரீட்சை எழுதியபின் ஏன் ஃபிரான்சுக்கு முதலில் போனவ?  :rolleyes:  தொடருங்கள்.. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டன் பரீட்சை எழுதியபின் ஏன் ஃபிரான்சுக்கு முதலில் போனவ?  :rolleyes: 

 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி இசை. பிரான்சுக்கு எனக்குத் தெரியாமல் எப்ப வசந்தி போனவ???

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு தான் முழுக்க வாசித்தேன்.கதை நல்லாய்தான் போகுது.தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.

சுமே என் தண்னியோ :D நான் சுவைப்பிரியன்(பழைய சஜீவன்) :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக் கிழமை எண்டு கொஞ்சம் போட்டது. பெயரே மாறிப் போச்சு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சுவைப்பிரியன். :lol:

 



பகுதி 8

வசந்தி வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கும் அழைப்பு வந்துவிட்டது. நிறையப் பேர் இந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர் என சிறிய தந்தை கூறியும் வசந்திக்கு பெரிதாகப் பயம் ஏற்படவில்லை. ஏனெனில் அவ்வூரில் வசந்தியுடன் போட்டிபோடுமளவு பெரிதாக எவரும் இல்லை. இருந்தும் தன்  திறமையின் மேல் அவளுக்கிருந்த நம்பிக்கையும் அப்படி எண்ண  வைத்தது.
நேர்முகத் தேர்வன்று காலையில் எழுந்து சேலை அணிந்து கையில் மணிக்கூடும் ஒரே ஒரு காப்பும் போட்டு, உதட்டுச் சாயம் மற்றும்  தேவையற்ற ஒப்பனைகள் இன்றி, நெற்றியில் கறுப்புப் பொட்டும் திருநீறும் மாத்திரம் அலங்கரிக்க வசந்தி கிளம்பினாள். காலை இளவெயில் தேகத்தில் பட்டு ஒரு புத்துணர்வைக் கொடுத்தது. என்ன கேட்பார்கள் என்ன பதில் கூறலாம் என எண்ணிக்கொண்டே நடந்தவள், அலுவலகத்தை நெருங்க முதலே பார்த்தாள். என்ன நிறையப் பேர் நிக்கினம் ஒரேயடியாக நேர்முகத் தேர்வோ என எண்ணினாள். நிறையப் பேரைப் பார்த்ததும் அவளின் நடை கொஞ்சம் தயங்கியது.

என்ன பயம் எனக்கு எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு ஒரு அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவன் கண்ணில் பட்டான். நெஞ்சு ஒருமுறை திடுக்கிட்டுத் திணறியது. ஒரு வினாடிதான் அவனைப் பார்த்திருப்பாள். தேகத்தில் உடனே ஒரு நடுக்கம் கோபம் என உணர்வுகள் பரவின. இவனும் தேர்வுக்குத்தான் வந்திருக்கிறானோ?? அல்லது சும்மா வந்து நிக்கிறானோ என்றெல்லாம் எண்ணியவள், தன்னைச் சமாளித்து நேர்த்தியாக்கிக்கொண்டு அவன் நின்ற பக்கமே பார்க்காது விரைந்து  நடந்து சென்று கட்டடத்துள் நுழைந்தாள். அங்கு போனபின் தான் அவளுக்கு விளங்கியது வசந்தனின் தங்கையும் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தாள். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் திரும்பி நின்றுகொண்டாள் வசந்தி. அவன் தன் தங்கையைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். தன்னைப் பார்க்க வரவில்லை அவன் என்ற நினைப்பு மனதுள் ஓடிய வேகத்திலேயே அவளுக்குச் சிரிப்பும் வந்தது. என்னைத் தெரியாது எனச் சொன்னவன் ஏன் என்னைப் பார்க்க வரப் போகிறான் என்று எண்ணியபின் அவளின் தடுமாற்றம் சிறிது குறைந்து தெளிவு ஏற்பட்டது.

நான்காவதாக அவளை அழைத்தனர். இருவர் அவளை மாறி மாறிக் கேள்விகேட்க அவளுக் தடுமாற்றமே  இன்றி பதில் கூறினாள். குறித்த விடயத்தை தட்டச்சுச் செய்யும்படி கூறியவுடனும் அவள் விரைந்து அவர்கள் சொல்பவற்றை சுருக்க எழுத்து முறையில் தட்டச்சுச் செய்து மீண்டும் அவர்கள் கூறியதை எவ்விதப் பிழைகளும் இன்றி வாசித்தும் காட்டினாள். தேர்வு நடத்திய இருவருக்கும் இவளில் முழுத் திருப்தியும் ஏற்பட்டதை அவர்களின் முகங்கள் காட்டின.

வெளியே வந்தவளுக்கு ஏனோ தெரியவில்லை கட்டாயம் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அத்தோடு ரிசல்ஸ் வந்தவுடன் அதைக் கொண்டுவரும்படியும் அவர்கள் கூறியது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ஸ் வந்துவிடும். உடனே கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு வெளியே வந்தவள், அவளை அறியாமலே வசந்தன் நின்ற திசை பார்த்தாள். ஒரு கணம்தான். பின் தலை திருப்பிக்கொண்டு நீ நின்றால் என்ன. எனக்கும் நீ யாரெனத் தெரியாது என்பதுபோல் நடந்து சென்றாள்.

அவன் தன்னைப் பார்த்துகொண்டு இருப்பானோ என்னும் எண்ணம் தோன்றியது. கொழும்பில் இருந்து இங்கு வந்துவிட்டானோ?? ஆள் இளப்ப கொழுத்து வெள்ளையாகி பார்க்க முன்பைவிட அழகாக இருப்பதுபோல் பட்டது. கொழும்புத் தண்ணியாக்கும் என்று எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டவளை மனச்சாட்சி இடித்தது. உன்னை நிராகரித்தவனைப் பற்றி வெட்கம் கெட்டு இப்படி நினைக்கிறாயே என. நான் அவரை வெறுக்கவில்லையே என தன்னையே சமாதானம் செய்துகொண்டு வீடு வந்து சேர்ந்தாள் அவள்.

என்ன வேலை தந்திட்டாங்களோ என்று தாய் கேட்டார். உடன சொல்ல மாட்டினம் அம்மா. என்ர ரிசல்ஸ் வந்த உடன கொண்டுவரச் சொன்னவை என்றாள் கடிதம் போடுவாங்கள் போல வசந்தி என்றபடி அப்பா வந்தார். ஓமப்பா ஆனால் ரிசல்ஸ் நல்லா வந்தால் கட்டாயம் இந்த வேலை எனக்குத்தான் என்றாள் நம்பிக்கையோடு. நல்ல ரிசல்ஸ் வந்தால் வேலைக்குப் போறதோ அல்லது யூனிவேசிற்றிக்கு போறதோ என்றாள் தந்தையைப் பார்த்து. அதுதான் எனக்கும் குழப்பமாக் கிடக்கு. உங்கட சித்தப்பன் வேலை கிடைச்சால் அதைச் செய்யிறதுதான் புத்திசாலித் தனம் என்று சொல்லுறான். போகப் போக நல்ல சம்பளமும் நிரந்தர அரசாங்க உத்தியோகமும் என்று சொன்னவன் என்றுவிட்டு அரை மனதோடு மகளுக்கு சரியான பதில் தான் கூறவில்லை என்ற உணர்வும் மேலோங்க அவளைப் பார்த்தார்.

இன்னும் ஒரு கிழமை இருக்குத் தானே அப்பா வடிவா யோசிக்கிறான் என்றவளை இடைமறித்து, படிச்சு முடிச்சும் வேலைக்குத்தானே போகப்போறாய் வசந்தி. அதுக்கு இப்பவே கிடைச்ச வேலையைச் செய்தால் என்ன என்றார் தாய். நீ சும்மா இரு. இதில வசந்திதான் முடிவு எடுக்க வேணுமே தவிர நாங்கள் இல்லை. ஒரு கிழமை யோசியுங்கோ வசந்தி என்றுவிட்டு அவர் நகர கிடைகிறதை விட்டுப் பறக்கிறதுக்கு ஏன் ஆசைப்படுவான் எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு தாய் செல்வதைப் பார்த்தாள். அம்மா கூறுவதிலும் தவறு இல்லை. அவருக்குப் பெரிதாகக் கல்வி அறிவு இல்லை. அதனால் கல்வியின் அருமையும் தெரியவில்லை. நல்ல காலம் அப்பாவுக்கும் பெரிதாக இல்லைத்தான். ஆனால் அவர் எவ்வளவு புரிந்துணர்வோடு நடக்கிறார் என எண்ணித் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஒரு வாரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு தெளிவு வந்திருந்தது. அப்பாவும் பாவம் கஷ்டப் படுறார் தானே. நான் வேலைக்குப் போனால் அந்தச் சம்பளம் எவ்வளவு உதவும். அதனால் வேலை செய்வதுதான் நல்லது. நான் படிக்கத் தொடங்கினால் அப்பா காசு கட்டுவார்தான். ஆனாலும் ஏன் இப்பிடி ஒரு நல்ல அப்பாவைக் கஸ்ரப் படுத்துவான் எனத் தீர்மானித்தவள் தந்தையிடமும் தன் தீர்மானத்தைக் கூறினாள். பிறகு நீங்கள் என்னைக் குறை கூறக்கூடாது வசந்தி என்றுவிட்டு அவரும் சம்மதித்தார். அடுத்தநாள் ரிசல்ஸ் வந்துவிட்டது. 2B 2C மோசமில்லை. ஆனால் நல்லாத்தானே படிச்சனான். ஒரு A கூட வரவில்லையே என வருத்தமாக இருந்தது. பரவாயில்லை இதே நால்ல ரிசல்ஸ் தானே என தந்தை ஆறுதல் கூறியது தந்தையின் பால் அவளுக்கிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது.

அன்றே அலுவலகத்துக்குச் சென்று அவளின் ரிசல்சைக் காட்டியவுடன் அவளுக்கு வேலை கொடுக்கப்பட்டு விட்டது. அவள் அதை எதிர்பார்த்ததுதான் எனினும் கிடைத்தவுடன் மகிழ்வு இரட்டிப்பாகியது. புதிதாகத் தொடங்கப்பட்ட கச்சேரி என்பதால் வேறு வேறு பதவிகளுக்காகச் சிலர் எடுக்கப்பட்டும், வேறு இடங்களிலிருந்து  மாற்றலாகியும் சிலர் வந்தனர். இவள் தலைமை அதிகாரியின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டு,  வாகனம் வீட்டில் வந்து ஏற்றி இறக்குமளவு இவள் வேலை அவருக்கும் பிடித்துவிட, மூன்று மாதத்திலேயே வசந்தியின் வாழ்வு உயர்ந்துவிட்டது. அவளின் சுறுசுறுப்பும் அழகும் கம்பீரமும் கூடிப் போனதில் அங்கு வேலை செய்யும் இரு ஆண்களுக்கு அவளில் காதல் ஏற்பட்டது. அவர்களில் ஒருவன் நேரடியாகவும் இன்னொருவன் பெற்றோர் மூலமாகவும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். தாய்க்கு வேலை கிடைத்தவுடனேயே மகளைக் கட்டிக் குடுப்பதில் விருப்பமில்லை. சின்ன வயதுதானே ஏன் அவசரப்படுவான் என்றார். தந்தைதான் தானா வாற சம்பந்தத்தை ஏன் விடுவான். பொருத்தத்தைப் பார்ப்போம். பொருந்தினால் கொஞ்சநாள் கழித்துச் செய்யலாம் என்று கூறி வசந்திக்கும் விடயத்தைத் தெரியப்படுத்தினார். வசந்தி  தந்தையிடம் தான் இப்போதைக்குத் திருமணம் செய்யப்போவதில்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டாள்.  அவரும் அதைப் பெரிது படுத்தவில்லை. சரி அம்மா கொஞ்சக்காலம் வேலையைச் செய்யுங்கோ என்றுவிட்டார்.
அது அவளுக்கு நின்மதியைக் கொடுத்தது. அவளும் தானும் தன் வேலையுமாகக் காலங்கழிக்கத் தொடங்க மீண்டும் விதி வசந்தனோடு வந்தது.

அவள் வேலை முடிந்து போகும்போது அலுவலக வாகனத்திலேயே செல்வாள்.  வேலை முடித்து வரும்போதும் தூரத்தில் ஒருவர் வண்டியைக் கை காட்டி மறிப்பது தெரிந்தது. கிட்ட வரும்போது பார்த்தால் வசந்தன். அவளுக்கு உடனே பதற்றம் ஏற்பட்டது. இவன் என்ன இப்படி வீதியில் மறிக்கிறான் என்று கோபமும் ஏற்பட்டது. ஏற்கனவே என் பெயர் இவனால் கெட்டு இப்பதான் எல்லோரும் அதை மறந்திருக்கிறார்கள். மீண்டும் ஏன் வருகிறான் என எண்ணிக்கொண்டு நிக்க வேண்டாம் என சாரதிக்குக் கூறமுதலே சாரதி வண்டியை நிறுத்திவிட்டார். அவன் பின்னால் வந்து வசந்தி உம்முடன் கதைக்க வேண்டும் கொஞ்ச நேரம் நிக்கிறீரோ என்றான்.

தொடரும் ..............   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும் இருக்கு! தொடருங்கோ, சுமே! :icon_idea:

Link to comment
Share on other sites

தொடருங்கள் சுமே....வசந்தனிற்கு ஏன் இந்த வேலை? கிடைத்த விடுதலையை சந்தோஷமாக கொண்டாடுவதைவிட்டுவிட்டு

 

 

Link to comment
Share on other sites

அடுத்து வசந்தன் கதைத்தவுடன் வசந்தி ஐஸ்கிரீமாக உருகிவிடுவார்.. பிறகு பழைய காதல் தூசு தட்டப்படும்.. அதன்பிறகு தப்புத்தண்டா நடந்து.... இன்னும் எவ்வளவு இருக்கு..!!!? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும் இருக்கு! தொடருங்கோ, சுமே! :icon_idea:

 

பெண்களை படிக்கும் காலத்தில் கிட்டப் போய் சயிட் அடிக்கவில்லையா??? இளமைக்காலமே வீண் புங்கை.

 

 

தொடருங்கள் சுமே....வசந்தனிற்கு ஏன் இந்த வேலை? கிடைத்த விடுதலையை சந்தோஷமாக கொண்டாடுவதைவிட்டுவிட்டு

 

ஆருக்கு விடுதலை ??

 

 

அடுத்து வசந்தன் கதைத்தவுடன் வசந்தி ஐஸ்கிரீமாக உருகிவிடுவார்.. பிறகு பழைய காதல் தூசு தட்டப்படும்.. அதன்பிறகு தப்புத்தண்டா நடந்து.... இன்னும் எவ்வளவு இருக்கு..!!!? :D

மிச்சக் கதையை உங்களை எழுத விடலாம் போல கிடக்கு இசை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை படிக்கும் காலத்தில் கிட்டப் போய் சயிட் அடிக்கவில்லையா??? இளமைக்காலமே வீண் புங்கை.

 

 

 

ஆருக்கு விடுதலை ??

 

 

மிச்சக் கதையை உங்களை எழுத விடலாம் போல கிடக்கு இசை. :D

இங்கை நின்டு புறுபுறுக்காமல் போய் கதையை முடிக்கிற அலுவலைப்பாருங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை ஒரு நீண்ட தொடராக எழுதுவதாக எண்ணியே ஆரம்பித்தேன். ஆனால் தொடர்ந்து எழுதுவதா அல்லது கதையை சுருக்கி முடிப்பதா என்னும் குழப்பத்தில் இருக்கிறேன். வாசிக்கும் நீங்கள் தான் எனக்குக் கூற வேண்டும் தொடருவதா அல்லது இன்னும் சில பகுதிகளுடன் முடிவுக்குக் கொண்டுவருவதா என்று.

 

Link to comment
Share on other sites

 ஆண் சமுதாயமே ஒரு பொறுக்கிக் கூட்டம்  ( சில பேர் விதிவிலக்கு) . யார் என்று தெரியாது எண்டவர் வசந்திக்கு வேலை கிடைத்ததும் வந்திட்டார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, 

 

தொடருங்கோ, சுமே!

 

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

இதை நாங்க  நம்புறம்

 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும்

இருக்கு!

 

விண்ணாணம் கேட்பதற்கு தமிழனுக்கு சொல்லிக்கொடுக்கணுமா?

 

தொடருங்கோ, சுமே! :icon_idea:

 

 

ஏதோ நம்மால் முடிந்தது :D



 ஆண் சமுதாயமே ஒரு பொறுக்கிக் கூட்டம்  ( சில பேர் விதிவிலக்கு) . யார் என்று தெரியாது எண்டவர் வசந்திக்கு வேலை கிடைத்ததும் வந்திட்டார்

 

இந்த கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்

அப்படி இல்லையென்றால்தான் கவலை தப்பு. :lol:

 

இந்தவிதிவிலக்கு என்று போட்டவர்களால்தான் ஆண் குலத்துக்கே அவமானம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை ஒரு நீண்ட தொடராக எழுதுவதாக எண்ணியே ஆரம்பித்தேன். ஆனால் தொடர்ந்து எழுதுவதா அல்லது கதையை சுருக்கி முடிப்பதா என்னும் குழப்பத்தில் இருக்கிறேன். வாசிக்கும் நீங்கள் தான் எனக்குக் கூற வேண்டும் தொடருவதா அல்லது இன்னும் சில பகுதிகளுடன் முடிவுக்குக் கொண்டுவருவதா என்று.

 

 

அவ்வப்போது நானும் உங்களது ஆக்கங்களை எட்டிப் பார்ப்பேன்..கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில்லையே தவிர,யார் என்ன பகிர்ந்து இருக்கிறார்கள் என்பதை ஒரு கிழமைக்கு ஒருக்காவவது வந்து பார்த்து செல்வேன்..

 எழுதிக்கொண்டு இருந்துட்டு திடீர் என்று பிறேக் போட்டு நிறுத்தி விட்டு போவதால் மேலும் வாசிக்க தோன்றாது..உங்களுக்காக மட்டும் சொல்ல இல்லை அக்கா..எழுதி இடையில் விட்டு சென்று இருக்கும் அனைவருக்காகவும் சொல்கிறேன்...அல்லது விடுப்பு பார்க்கும் நிலையில் இருந்தும் சொல்ல இல்லை.

மேலும் தொடர்களை குறைப்பதும், விடுவதும் உங்களைப் பொறுத்தது..சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு சொல்லிட்டன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்கு என்ன நடந்தது என்டு எழுதாட்டில் இனி மேல் வேறு கதை எழுதினாலும் வாசிக்க மாட்டோம் :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி உறவுகளே கோவிக்க வேண்டாம் நான் தொடர்ந்து இதை எழுதி முடிக்கிறேன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 9

ஒரு வினாடி இறங்க எத்தனித்த வசந்தி, அடுத்த வினாடியே தன்னை சுதாகரித்துக் கொண்டு, இனிமேல் நானும் நீங்களும் கதைக்க ஒன்றும் இல்லை. என்ன கதைக்கிறதெண்டாலும் அப்பாட்டைக் கதையுங்கோ. என்னை வழி மறிக்கிற வேலை வேண்டாம். றைவர் நீங்கள் காரை எடுங்கோ என்றாள். வசந்தன் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகம் போன போக்கிலிருந்து தெரிந்தது. அவள் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. வீட்டுக்குச் சென்று எதுவும் நடக்காததுபோல் இருக்க முனைந்தாள். தான் வசந்தனைப் பழிவாங்கிவிட்ட அற்ப மகிழ்வும் ஏற்பட்டது.

ஒரு வாரம் செல்ல அவள் வேலையால் வந்தபோது அப்பா வீட்டில் இருந்தார். அவள் முகம் கழுவி வந்தபின் வசந்தனின் தாயும் தகப்பனும் இப்பதான்  போனவை என்றார். ஏன் வந்தவை எனத் தெரியாததுபோல் கேட்டாள். வசந்தனுக்கு உன்னைச் செய்யிறதுக்கு தங்களுக்குச் சம்மதமாம். வசந்தன் கட்டினால் உன்னைத்தான் கட்டுவன் என்று ஒற்றைக்காலில நிக்கிறானாம். தான் முதல் அவசரப்பட்டு ஏசிப்போட்டன் என்று மன்னிப்பும் கேட்டவர் என்று அம்மா முடித்தாள். நான் கலியாணமே கட்டுறதில்லை எண்டு சொல்லிப்போட்டனே அப்பா என்றாள். எனக்கும் நீங்கள் எங்களோடையே இருக்கிறதில சந்தோசம்தான். ஆனா காலாகாலத்தில நீங்கள் கலியாணம் முடிச்சாத்தானே தங்கச்சிமாரையும் கட்டிக் குடுக்கலாம். அதோட நாங்களும் எவ்வளவு நாளைக்கு உங்களோட இருக்க முடியும். அதுக்குப் பிறகு நீங்கள் தனிச்சுப் போவியளே. காலா காலத்தில அததைச் செய்தால்த்தான் நாங்களும் நின்மதியா இருக்கலாம் என்றார். அவளுக்கு உடனே சம்மதம் என்று கூறத்தான் ஆசை ஆனாலும் அடக்கிக் கொண்டு எதுக்கும் யோசிச்சுச் சொல்லுறன் என்றாள்.

மீண்டும்  மனதில் வசந்தன் கிளைபரப்பினான். அவருக்கு என்னில அன்பிருந்த படியால்த்தானே திரும்பவும் தானா வந்து என்னோட கதைக்க முயற்சி செய்தவர். நான் கதைக்க மாட்டன் என்று சொன்ன பிறகும் தாய் தகப்பனை அனுப்பினவர். கொழும்பில தான் வேலை செய்கிறாரோ. அல்லது வேறு எங்கினையோ. என்னதான் அவரில கோபம் இருந்தாலும் அவரில எனக்கிருக்கிற காதல் மாறவில்லையே. அதனால கோபத்தை மறந்து அவரைக் கலியாணம் கட்டுறதுதான் புத்திசாலித்தனம் என முடிவெடுத்துவிட்டுக் காத்திருந்தாள். ஒரு வாரமாகத் தந்தை எதையும் கேட்காதது யோசனையைத் தந்தது. தவிப்பும் கூடியது. அப்பா அப்பிடியே விட்டால் என்ன செய்வது. எதற்கும் நான் அப்பாவிடம் சொல்லுவம் என்றுவிட்டு தந்தையின் வரவுக்குக் காத்திருந்தாள்.

அவளை முந்திக்கொண்டு தந்தையே என்னம்மா முடிவெடுத்தாச்சோ என்று கேட்டது அவளுக்கு நின்மதியைத் தந்தது. இருந்தும் தன் முகத்தை வைத்துத் தந்தை கண்டுபிடித்திருப்பாரோ என்ற கூச்சமும் ஏற்பட்டது. சரி அப்பா நான் கலியாணத்துக்குச் சம்மதிக்கிறன் என்றுவிட்டு அப்பாவைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். சந்தோசம் அம்மா மேற்கொண்டு அலுவலை நான் பாக்கிறன் என்றார் அவர்.

தந்தையும் தாயும் ஒரு நல்ல நாள் பார்த்து வசந்தனின் வீட்டுக்குப் போனார்கள். கையோட நாளும் குறிக்கச் சொல்லுவம் என்று அம்மா அப்பாவிடம் கூறுவது கேட்டது. அவர்கள் போய் வரும் மட்டும் இவளால் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. மனம் அலை பாய்ந்துகொண்டே இருந்தது. வசந்தனின் தந்தை படித்தவர். இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறார். சொந்தமாக வாகனமும் கொடுத்திருக்கின்றனர்.

வசந்தனுக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அவர்கள் இவர்கள் போல் இல்லை. செருக்குப் பிடிச்ச குடும்பம் என்று பெயரெடுத்தவர்கள். தாய் கூட பெரிதாக சிரித்துப் பேசமாட்டார். சகோதரர்களும் அப்படித்தான். சிலநேரம் வீட்டில் நல்ல கலகலப்பாக இருப்பார்கள் ஆக்கும் என இவள் நினைத்து முன்பு ஒருமுறை வசந்தனிடமும் இதுபற்றிக் கேட்டிருக்கிறாள். நாங்கள் சந்தோசமான குடும்பம் தான் வந்து பாருமன் என்று கூறிக் கதையை நிறுத்திவிட்டான். அப்பாவையும் அம்மாவையும் எப்படி நடத்துவினமோ தெரியாது என்று உள்ளே ஒரு கவலையும் ஓடியது.

இவளின் தவிப்பு அதிக நேரம் நீடிக்க விடாது அவர்களும் வந்து சேர்ந்தனர். தந்தையின் முகத்திலிருந்து எதையும் அறிய முடியவில்லை. தாயின் முகம் கொஞ்சம் மகிழ்வு குன்றிக் காணப்பட்டது. இவள் ஒன்றுமே கேட்காது தந்தை சொல்லும் வரையும் நின்றாள். இன்னும் இரண்டு மாதத்தில நாள் வைச்சிட்டுச் சொல்லி அனுப்புவினமாம். எங்களையும் பாக்கச் சொன்னவை. நான் ஒருக்காக் கையோடை சாத்திரியின் வீட்டை போட்டு வாறன் என்றுவிட்டு அப்பா சென்றுவிட, அம்மாவிடம் எப்பிடி அம்மா எல்லாரும் கதைச்சவையே என்றுவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அது உணர்ச்சியற்று இருந்தது. மேனுக்கு வேலை வெட்டி ஒண்டும் இன்னும் இல்லை. அதுக்குள்ளே  அளவுக்கு மிஞ்சின ஆசை என்றுவிட்டு மீண்டும் அம்மா மௌனமானாள். இவளுக்கு என்ன நடந்தது என்று அறியவேண்டும் என்று ஆசை. ஆனாலும் தாய் கூறும் வரை பொறுமை காத்தாள்.

வீடு வளவு சீதணமாத் தரச் சொல்லிக் கேக்கினம். இருக்கிறது ஒரு வீடு தந்துபோட்டு நாங்கள் நடுத்தெருவுக்குப் போகவேண்டியதுதான் என்று அம்மா பெருமூச்சு விட்டாள். நீங்கள் என்ன சொன்னனீங்கள் என்று தாயைத் திரும்பக் கேட்டாள். கொப்பா வயல்க் காணி மூண்டு ஏக்கர் தந்து காசும் ஒரு லட்சம் தாறம் எண்டவர். யோசிச்சுச் சொல்லுறம் எண்டு சொன்னவை. அம்மாவின் வார்த்தைகளில் வெறுப்புத் தெரிந்தது.

இவள் ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள். உள்ளுக்குள் கோபம் ஏற்பட்டதுதான். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். பெண் என்ன தான் திறமை உள்ளவளாக இருந்தாலும், ஆண்  ஒன்றும் இல்லாமல்  இருந்தாலும், ஆணின் கையே கலியாணச் சந்தையில் உயர்கிறது. வசந்தன் பாவம் என்ன செய்வார். பெற்றவை சொல்லுறதைக் கேட்கிறார். வசந்தனை விட வேறு யார் என்றாலும் சீதனம் கொடுக்கத்தான் வேணும். இல்லை ஒன்றும் தர மாட்டம் என்றால் விட்டுவிட்டு வேறு பெண்ணைப் பார்க்கப் போய் விடுவார்கள். இதுவே வேறு ஒருவன் என்றால் கலியாணம் வேண்டாம் என்று அடித்துச் சொல்லியிருப்பாள். வசந்தன் என்றதால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சரி நான் வேலை செய்யிறன் தானே என்ர சம்பளத்தில இருந்து அப்பாவுக்குக்  குடுப்பம் என எண்ணிக்கொண்டாள். வசந்தன் நல்லவர் தானே. கலியாணம் கட்டின பிறகு அவரோட கதைப்பம் என எண்ணி தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள். மூன்று நாட்களின் பின் அப்பா வரட்டாம் என வசந்தனின் தம்பி கூறிச் சென்றான். அப்பா போட்டு வந்து மூண்டு ஏக்கர் காணியும் ஒருலட்சம் காசுக்கும் ஒமெண்டுவிட்டினை என்று மகிழ்வாகக் கூறினார். நாள் வைச்சிட்டினமோ என அம்மா கேட்க நாளைக்கு அதைச் சொல்லி விடீனமாம் என்று விட்டு அப்பா கால் கழுவக் கிணற்றடிக்குச் சென்றார்.

தொடரும் ......... .... ...

 

Link to comment
Share on other sites

  • வசந்தனின் அப்பா படித்தவர் என்றாலும் ஒரு படித்தவர் போல் நடந்துகொள்ளவில்லை..
  • வசந்திக்கு மானரோசம் கொஞ்சம் கம்மி.. :D

இது யாரையாவது புண்படுத்துமாக இருந்தால் வருந்துகிறேன்.. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.