Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்??என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.

அப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்? அவள்மட்டும் விதிவிலக்கா என்ன?

 

படிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.

அன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

முதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.

 

எந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.

பெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.

அவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா?? என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப்  பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.

எப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ?? என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.

தொடரும் .......



 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

இப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........

 

Link to comment
Share on other sites

(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

Link to comment
Share on other sites

நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

Link to comment
Share on other sites

நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D
Link to comment
Share on other sites

இவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும். :lol:

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 



தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

 

ஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை ? ஏதும்  ?? :D

 

 



நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

 

நீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை ?

:lol:

 



 

நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D

 

 

மாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.

ஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை. :lol:

 

 



சுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....
வசந்தம் பாடி வர வைகையோடிவர....

 

 

https://www.youtube.com/watch?v=JtBHFadipg8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.
என்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா. :)

 

(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே! நன்றி.

 



இப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........

 

காதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.



தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

 

ஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.
`



நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

 

வாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D :D



 

நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D

 


நிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.



இவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும். :lol:

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 

வசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.???நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ?? விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும்  பெண்டுகளுக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்

 

பொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D :D

Link to comment
Share on other sites

படிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.

 

ஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும  நிறுத்தப்பட்டது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.

 

ஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும  நிறுத்தப்பட்டது.  

 

உங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது.  :D :D

Link to comment
Share on other sites

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.

 

சுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும்  வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா   :D​  ) பற்றியும் எழுதுங்கோ.

 

நாங்களும் விடுப்பு கேட்போமில்ல  :lol:

 

 

  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.

 

சுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும்  வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா   :D​  ) பற்றியும் எழுதுங்கோ.

 

நாங்களும் விடுப்பு கேட்போமில்ல  :lol:

 

 

கட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். :D  நன்றி பகலவன் வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா வரவுக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.
 அவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.

வசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி.  எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.

அதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும்,  ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.

அன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ? சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.

 

அவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது  தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.

 

அவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

 


தொடரும் .......

 





  













  








 

 

Link to comment
Share on other sites

கட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். :D  நன்றி பகலவன் வரவுக்கு.

 

 

இந்த அலை இல்லைத் தானே  :lol:

தொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்? :D  :D

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 

இது என்ன கேள்வி? ஓமோம் அவரே தான்  :lol: 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அலை இல்லைத் தானே  :lol:

 

 

உந்த அலையேதான். :lol: :lol:

 

 

Link to comment
Share on other sites

.

வசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.???நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ?? விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும்  பெண்டுகளுக்கு. :lol:

 

எனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது. :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.  

 

Link to comment
Share on other sites

எனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.  

 

வீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது. :D

 

 

படம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.