Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

 

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

 

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

 

நீங்கள் தொடருங்கோ, சுமே!

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

தொடருங்கள் சுமே, மற்றவர்களுக்கு அறிவுரை செல்லும் நீங்களே நீண்ட இடைவெளிவிடலாமா? விரைவில் தொடரை முடித்துவிடுங்கள், நிம்மதியா திட்டிப்போட்டு போகலாம். முடிக்கும்வரை திட்ட முடியாமலிருக்கு

:lol:  

Link to comment
Share on other sites

இதென்ன கருமம் உதட்டில முத்தத்துக்கே குலப்பன் காச்சல் எண்டா போக போக மலேரியா வாந்தி பேதி எல்லாம் வர போது போல....

அது சரி இப்பிடி முத்தம் வாங்கிட்டு வந்து காச்சலால படுத்திருக்கிற பொண்ணுங்களையே பேய் பிடிச்சிட்டுது என்று வேப்பிலையால அடிக்கிறவை? :(:D

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

நீங்கள் தொடருங்கோ, சுமே!

அண்ணே ஸ்டில் it's நாட் டூ லேட் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

 

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

 

நீங்கள் தொடருங்கோ, சுமே!

 

நீங்கள் எல்லாம் வேஸ்ட் புங்கை. இனி ஒண்டும் செய்ய ஏலாது.

தொடருங்கள் சுமே, மற்றவர்களுக்கு அறிவுரை செல்லும் நீங்களே நீண்ட இடைவெளிவிடலாமா? விரைவில் தொடரை முடித்துவிடுங்கள், நிம்மதியா திட்டிப்போட்டு போகலாம். முடிக்கும்வரை திட்ட முடியாமலிருக்கு

:lol:  

 

திட்டுவது என்ற முடிவோடதான் இருக்கிறியள். :D

 

 

இதென்ன கருமம் உதட்டில முத்தத்துக்கே குலப்பன் காச்சல் எண்டா போக போக மலேரியா வாந்தி பேதி எல்லாம் வர போது போல....

அது சரி இப்பிடி முத்தம் வாங்கிட்டு வந்து காச்சலால படுத்திருக்கிற பொண்ணுங்களையே பேய் பிடிச்சிட்டுது என்று வேப்பிலையால அடிக்கிறவை? :(:D

அண்ணே ஸ்டில் it's நாட் டூ லேட் :D

 

எல்லாரும் உங்களை மாதிரி இருக்க முடியுமே சுண்டல்.

 

 

Link to comment
Share on other sites

படம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்

சரி படம் வேண்டாம் கதை மிச்சத்தையும் தாங்கோ. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                     பகுதி 3

 

 

நினைக்க நினைக்க வசந்திக்கு எதோ செய்தது. இப்பிடிச் செய்து போட்டாரே. ஐயோ ஏதும் நடந்தால் நான் என்ன செய்வது. வெளியில தலை காட்ட முடியுமோ. அம்மாக்குத் தெரிஞ்சால் கொண்டே போட்டுடுவா. இதை ஆரிட்டைக் கேக்கிறது. என்ன செய்யிறது எண்டே தெரியேல்லையே எனத் தனக்குள் குழம்பித் தவித்துக்கொண்டு இருக்கும் போது, நாலாம் வீட்டு சாந்தா மூன்று மாதம் கர்ப்பிணியாய் இருந்தபோது படியால விழுந்து கர்ப்பம் கலைந்தது நினைவுக்கு வந்தது.

உடனே இவள் கிணற்றுக் கட்டில் ஏறி நின்று பலமுறை கீழே குதித்தாள். பலமுறை இருந்து எழும்பி அப்பியாசம் செய்தாள். இன்னும் நாலு நாட்கள் தான் இருக்கு. அது தாண்டினால்த்தான் நின்மதி என இவள் மனம் எண்ணியது. அந்த நான்கு நாட்களும் இவள் வசந்தனைப் பார்க்கவில்லை. ஒரு நாள் பார்க்காது இருக்க முடியாதவள் அவனைப் பார்க்கும் எண்ணமே அற்றவளாக நாட்களைக் கழித்தாள்.

வசந்தனோ ஒவ்வொரு நாளும் இவள் வருவாள் வருவாள் என தாம் சந்திக்கும் இடங்களிலெல்லாம் போய் வந்ததுதான் மிச்சம்.  அவளைக் காண முடியவில்லை. என்ன இவள், ஒரு முத்தம் இதுக்குப் போய் இப்பிடிக் கோவிச்சுக் கொண்டு  நிக்கிறாளே என எண்ணி, நான் பேசாமல் இருந்தால் இப்பிடியே விட்டுவிடுவாளோ என்னும் பயமும் சேர்ந்துகொள்ள, அவள் வீட்டுக்கே போய்ப் பார்ப்பது என்று முடிவெடுத்தான்.

அவன் ஏற்கனவே படிப்பிக்கச் சென்றதால் அவள் வீட்டினர் மட்டுமல்ல யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று எண்ணியபடி  வசந்தியின் வீட்டை நோக்கி சென்றான். பூட்டியிருந்த படலையைத் திறந்துகொண்டு முற்றத்துக்குச் சென்றவன் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு வசந்தியின் பெயர் சொல்லி அழைத்தான். அவன் சென்றிருந்தபோது அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள். அவனின்
அழைப்புக் கேட்டதும் எப்படி விரைவாக வெளியே வந்தாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை.

தன்னைத் தேடி அவன் வந்திருப்பதே பரவசத்தைத் தர வாய் ஏன் வந்தீங்கள் என்று கேட்டது. என்ன நீர் ஒரு முத்தத்துக்கு இப்படிப் பயந்து ஒழிந்சால் நான் என்ன செய்யிறது. உம்மைக் காணாமல் நாலு நாளும் நான் என்ன பாடுபட்டன் எண்டு உமக்கு விளங்காது என்று பொரிந்து தள்ளினான்.

எனக்கு பீரியட் என்னும் வரேல்லை. வந்தால்த்தான் நின்மதி. உங்களுக்கென்ன என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அதை வரவேண்டாம் எண்டு நான் சொன்னனானோ என்றான் இவன் எரிச்சலுடன். தப்பித் தவறி நான் ப்ரெக்னெண்டா வந்தால் பிறகு தற்கொலைதான் செய்யவேணும் என்னும் அவளை இவளுக்கு தட்டிக்கிட்டிப் போட்டுதோ என்ற சந்தேகத்தில் பார்த்தவன், ஏன் உம்மை யாரும் கெடுத்துப் போட்டாங்களோ என்று இவன் கேட்க , செய்யிறதையும் செய்துபோட்டு தெரியாதமாதிரிக் கேட்காதைங்கோ. நீங்கள் தானே அண்டைக்கு வாயில கொஞ்சினனீங்கள், பிறகு ஒண்டும் நடக்காதமாதிரிக் கதைக்கிறீங்கள் என்று சொன்னவள் அழத்தொடங்க, அப்பத்தான் அவனுக்குப் பொறி தட்டியது. எடி விசரி கொஞ்சினால் பிள்ளை பிறக்காதடி. ஐயோ உன்னைக் கட்டிப்போட்டு நான் என்ன செய்யப்போறனோ தெரியாது எனத் தலையில் அடித்துச் சிரித்தவனை  இவள் ஒன்றும் விளங்காமல் பார்த்தாள். இதுக்கே நாலு நாளா  ஒளிச்சிருந்தனீர். பட்டிக்காடு, யாழ்ப்பாணம் போய்ப் படிச்சு என்ன புண்ணியம் என்றவனைப் பார்த்து அப்ப ஒண்டும் நடக்காதே எனக் கேட்டவளுக்கும் சிரிப்பு எட்டிப் பாத்தது.

பின்னேரம் கோயிலடிக்கு வாரும். உமக்கு உதைப்பற்றி வகுப்பெடுத்துப் போட்டுத்தான் மிச்ச வேலை என்றவன் நாலு நாளுக்கும் சேர்த்து இண்டைக்கு தரவேணும் என்றபடி சைக்கிளைத் தள்ளியபடி சென்றுவிட்டான். இவளுக்கு நினைக்கக் கூச்சமாகவும் இருந்தது. நல்ல காலம் இவர் இப்ப வந்தது. அல்லது யோசிச்சு யோசிச்சே எனக்கு வருத்தம் வந்திருக்கும் என எண்ணியபடி அவனை மாலை சந்திக்கும் நினைப்புடனே வீட்டுக்குள் போனாள்.

மலை அவன் குழந்தை பிறப்பது எப்படி என்று ஆரம்பிக்கவே, இப்ப ஒண்டும் வேண்டாம் கலியாணம் கட்டினபிறகு சொல்லுங்கோ என்று கறாராகச் சொல்பவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு கிழமையில ரிசல்ட் வந்திடும். பிறகு என்னையும் மறந்து யூனிவேசிற்றிக்குப் போவிடுவீர் என்ன என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.
எனக்கு நம்பிக்கை இல்லை. நான் வடிவாப் படிக்கேல்லை. நான் உங்களைக் கலியாணம் கட்டிக் கொண்டு இருந்தாக் காணும் என்றாள். நாங்கள் கலியாணம் கட்டுறதுதான். அதுக்காகப் படிக்கிறேல்லையே. வேலைவெட்டி இல்லாமல் நானும் இருக்கிறன். நீர் படிச்சு முடியும். நானும் ஏதும் வேலை எடுத்துவிடுவன். அதுக்குப் பிறகு கலியாணம் கட்டுவம். அதுதான் நல்லது என்றவன் கூற்றை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தாள்.

அடுத்தநாள் சந்திப்பைப் பற்றி இருவரும் திட்டமிட்டுவிட்டு வீட்டுக்குப் போனார்கள். அன்றுடன் அவர்கள் சந்தோசம் பறிபோகப் போவதை அவர்கள் உணரவில்லை.

தொடரும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யாழிலை ரமணி சந்திரனின்ரை ஸ்ரைல் கதையள் கூடவாய் இருக்கு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, அலை,

மைத்திரேயி, எனக்கு ரமணிச்சந்திரன் கதைபோல் எழுத ஆசை இல்லை. இப்பிடியும் நடந்தது என்று காட்டவே எழுதினேன். பயம் வேண்டாம்.

 

Link to comment
Share on other sites

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

 

புங்கை  அண்ணா சுவத்துக்கு மற்ற பக்கம் வந்து பாருங்க நானும் இப்படித்தான் முட்டிக்கொண்டு நிக்கிறன். :D

எங்கே போய் முட்டுறது என்பதுக்கு அவசியமில்லாமல் பக்கத்திலேயே சுவர் இருந்தது எவ்வளவு வசதியாகபோயிட்டு  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எடி விசரி கொஞ்சினால் பிள்ளை பிறக்காதடி
அட இப்படி சனமும் அந்த காலத்தில இருந்திருக்கு.....காய் ...பேய்காய் இல்லை....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை  அண்ணா சுவத்துக்கு மற்ற பக்கம் வந்து பாருங்க நானும் இப்படித்தான் முட்டிக்கொண்டு நிக்கிறன். :D

எங்கே போய் முட்டுறது என்பதுக்கு அவசியமில்லாமல் பக்கத்திலேயே சுவர் இருந்தது எவ்வளவு வசதியாகபோயிட்டு  :lol:  :lol:

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

 

அப்ப இரண்டு பேருமே சாமி கும்பிடவில்லையோ??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

நீங்களாவது  நெஞ்சில பாலை வார்த்தீர்கள் இசை நன்றி. :D :D

 

 

நன்றி புத்தன் வரவுக்கு.

 

Link to comment
Share on other sites

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

 

என்ன புங்கை அண்ணா... நான் சுவரிலே முட்டுற படத்தை போடச்சொல்லி அனுப்பினால்,நான் பெண்கள் ஓய்வறையை எட்டிப்பார்க்கும் படத்தை போட்டுவிட்டீங்கள்.  :lol:  :lol:

 

 

 

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

 

ரொட்டி சுட்டுக்கொண்டிருந்த இசை எப்போ பீரங்கி சுட தொடங்கினீங்க.? :icon_idea:

இசை கட்டுறது தான் உங்க வேலை இடிக்கிறது எங்கட வேலை.  :D

எதையும் பேசி தீர்க்கலாம் எதுக்கு வன்முறை  :lol:

Link to comment
Share on other sites

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

சரி சரி காணும் தலையை எடுங்கோ வீணா உடைபடப்போறீங்கள். :lol:

 

 

Link to comment
Share on other sites

என்ன புங்கை அண்ணா... நான் சுவரிலே முட்டுற படத்தை போடச்சொல்லி அனுப்பினால்,நான் பெண்கள் ஓய்வறையை எட்டிப்பார்க்கும் படத்தை போட்டுவிட்டீங்கள்.  :lol:  :lol:

 

எட்டிப்பாக்கிற கண்ணுக்கு இதுதான் பரிசு.

gun.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

 

 

அடுத்து மூன்று நாட்கள் வசந்தி அவர்கள் சந்திக்கும் இடத்துக்குப் போய் காவலிருந்ததுதான் மிச்சம். வசந்தன் வரவில்லை. நான் வராமல் இருந்ததுக்கு எனக்குத் திரும்பச் செய்கிறாரோ என்று எண்ணியவள் நாலாம் நாளும் கடந்ததும் தான் எதோ பிரச்சனை என்ன நடந்துதோ அவருக்கு என எண்ணியவள். என்ன செய்யிறது எனத்தெரியாது தவித்தாள். வேறு வழியில்லை. தன் கடைசித் தங்கையிடம் கடிதம் ஒன்று எழுதி வசந்தனுக்குக் கொடுத்து விட வேண்டியதுதான் என எண்ணி தாமதிக்காது எழுதி முடித்து, அதை ஒரு கொப்பியின் கவருக்குள் வைத்து ஒட்டி, தங்கையைக் கூப்பிட்டு வசந்தன் மாஸ்ரரிட்டைக் கொண்டுபோய் குடுத்துட்டு வாங்கோ என்றதுமல்லாமல் ஆரிட்டையும் சொல்லக் கூடாது என்று சொல்லி ஒரு ரூபாவும் கொடுத்தவுடன் தங்கையும் மகிழ்வுடன் இவள் கொடுத்த கொப்பியுடன் ஓடிப் போனாள்.

தங்கை போட்டு வர எப்பிடியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதுவரை பொறுமையிழந்து வாசலுக்கும் வீட்டுக்குமாக இவள் நடந்ததை தாய் கவனித்துவிட்டார். என்ன வசந்தி அங்கயும் இஞ்சையும் ஓடித்திரியிறாய் ஏதும் பிரச்சனையோ என்றதும் ஒன்றுமில்லை அம்மா என்றுவிட்டு உள்ளே சென்று அமைதியாய் இருக்க முனைந்தாள். முடியவில்லை. கடவுளே அவருக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது என்றுவிட்டு எதுக்கும்  சிவாய நாம என்று கொப்பியில் ஆயிரம் முறை எழுதுவம் என முடிவெடுத்து எழுதவும் தொடங்கினாள்.

நூறு, இருநூறு, முந்நூறு என்று நானூறை நெருங்கும் நேரம் படலை வேகமாகத் திறக்கப்பட்டு முருகேசு முருகேசு என யாரோ இவள் தந்தையை உறுக்கும் சத்தம் கேட்டது. இவள் தந்தைக்கு ஊரிலுள்ளவர்களிடம் மதிப்பு இருந்தது. அவரை முருகேசர் என ஒரு அன்போடுதான் கூப்பிடுவார்களே தவிர இதுவரை அவரை இப்படிக் கோபமாக ஒருவரும் அழைத்ததில்லை. யாரென எட்டிப் பார்த்தவளுக்கு நெஞ்சு ஒருகணம் நின்று பின் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. வசந்தனின் தந்தை இவளின் தங்கையைக் கையில் பிடித்தபடி கோபத்தோடு நின்றுகொண்டிருந்தார். இவள் உடனே தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அவரின் சத்தம் கேட்டு குசினிக்குள் இருந்த தாய் யோசனையோடு வெளியே வந்தார். பிள்ளையளைப் பெத்தா ஒழுங்கா வழக்கத் தெரியவேணும். ஓசியில மாப்பிளை பிடிக்க நீங்களே சொல்லிக் குடுத்துத் தான் வளக்கிறியளாக்கும். அதுக்கு என்ர மகன் தானோ கிடைச்சுது. வேறை ஆற்றையன் பிள்ளையைப் பாருங்கோ என அவர் போட்ட சத்தத்தில் தாய் கூனிக் குறுகி நின்றார். மெதுவாக் கதையுங்கோ அயலட்டை ஆட்களுக்குக் கேட்கப் போகுது என தாய் மெதுவாகக் கெஞ்சுவதுபோல் சொல்வது இவளுக்குக் கேட்டது. உன்ர மேள் என்ர மகனுக்கு இந்தச் சின்னனிட்டை கடிதம் குடுத்து விட்டிருக்கிறாள். நாலு நாளுக்கு முந்தி ரண்டுபேரும்  கோவிலடியில கதைத்துக்கொண்டு நிண்டதைக் கண்டு நான் அவனுக்குப் புத்திசொல்லி வச்சிருக்கிறன். என்ர மகன்ர பக்கம் உன்ர பிள்ளையைத் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று சொல்லு என்றுவிட்டு மீண்டும் படலையை அடித்துச் சாற்றுவதன் மூலம் தன கோபத்தை வெளிப்படுத்தியதாக எண்ணி அவர் சென்றுவிட்டார். ஸ்தம்பித்துப் போய் நின்ற தாய் அவர் சென்றதும் தங்கையிடம் கடிதத்தை வாங்கிப் பார்த்தவர் கோபத்துடன் உள்ளே வந்தார்.

என்ன இதெல்லாம். படிக்கிற பிள்ளை என்று உன்னை நாங்கள் தலையில தூக்கி வச்சுக் கொண்டாட நீ  என்ன வேலை செய்திருக்கிறாய். இத்தனை நாளா மானத்தோட இருந்தனாங்கள்  இனி எப்பிடி ரோட்டால போறது. நீ கேட்டதும் இல்லாமல் அந்தாஹ் சின்னனைத் தூது விடுறியோ??அந்த மனிசன் கத்தின கத்தில இப்ப அயலட்டைச் சனங்களுக்கு விளங்கியிருக்கும். ஐயோ நான் என்ன செய்யிறது என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழ வசந்தி, அம்மா என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என வசந்தியும் சேர்ந்து அழ, பார்த்துக் கொண்டு நின்ற தங்கை தந்தையைக் கூப்பிட ஓடுகிறாள்.

தாய் அடித்திருந்தாலாவது பரவாயில்லை. இவளை மேற்கொண்டு எதுவுமே கேட்காமல் இவள் கிட்டப் போனபோது என்னைத் தொடாதை போ அங்காலை என்றது,  தீ சுட்டதுபோல் வலி தந்தது. அவள் ஒன்றும் சொல்லாது அழுதபடி தன் அறைக்குள் சென்று முடங்கினாள். அம்மா எழுந்து செல்லும் சத்தம் கேட்டது. இரண்டு திட்டுத் திட்டிவிட்டால் எல்லாம் சரியாகியிருக்கும். ஆனால் எதுவும் கூறாது இருப்பது அவளின் மூளையை மரக்கச் செய்தது. அப்பா ஒரு நாளும் அவளைத் திட்டியது கூட இல்லை. இன்று வந்து என்ன சொல்வாரோ என யோசனை ஓடியது. வசந்தன் வீட்டில் அவருக்கு என்ன சொன்னார்களோ என்ற யோசனையினூடு வசந்தனாக இன்னும் இவளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதும் கேவலை உண்டாக்க சத்தம் வெளியே வராது சிறிதுநேரம் அழுதாள். வசந்தனை எப்பிடியாவது சந்திக்கவே வேணும். என்ன செய்வது யாரின் உதவியை நாடுவது என எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

படலை மீண்டும் திறக்கப்பட வருவது தந்தை தான் என ஊகித்தவள் நெஞ்சத் துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்து நெஞ்சில் கைவைத்து அழுத்திப் பிடித்தாள். வீட்டுக்குள் அப்பா வந்துவிட்டார் என என்னும்போதே வசந்தி என்ற கண்டிப்பான குரலும் உங்கட அருமை மேளைச் செல்லம் குடுத்து குட்டிச் சுவராக்கினதுதான் மிச்சம். கண்டவன் வந்து வாசல்லில கத்த வச்சிட்டாள் என்ற அம்மாவின் சொல்லம்பு தைக்க இவள் மெதுவாக வந்து கதவோடு ஒண்டியபடி நின்றாள்.

தாய் வசந்தனின் தந்தை வந்து கூறிவிட்டுப் போனவற்றை எல்லாம் சொல்லி ஐயோ இனி என்னெண்டு நான் ரோட்டால போறது. குடும்ப மானமே போச்சு என்றதும்  நீ பேசாமல் இரு என்று தாயை அடக்கிவிட்டு, இஞ்ச பாரம்மா வசந்தி நான் மற்றவை மாதிரி உன்னைத் திட்ட மாட்டன். எதோ எங்கட கெட்ட காலம் இப்பிடிக் கேட்கவேண்டியதாப் போச்சு. இண்டையோட எல்லாத்தையும் மறந்துபோட்டு படிப்பில கவனத்தை வையம்மா. கல்வி எனக்குத்தான் இல்லை. என்ர பிள்ளைக்கு ஆண்டவன் குடுத்திருக்கிறார் எண்டு சந்தோசப்பட்டன். அந்த சந்தோசம் நீடிக்கிறது உன்ர கையில்தான் இருக்கு. இதுக்கு மிஞ்சி நான் ஒண்டும் சொல்ல ஏலாது என்று விட்டுப் போய்விட்டார். நான் நினைத்த அளவு ஒன்றும் இல்லை என்று இவள் மனம் நின்மதியானது மட்டுமன்றி மீண்டும் மனம் வசந்தனை எப்படித் தொடர்பு கொள்ளலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியது.


தொடரும்...............

 

Link to comment
Share on other sites

ம்ம்.... தொடருங்க.  மிச்சம் 2 கிழமையால் தானே எழுதுவியள், நாங்களும் வாசிக்க ஆவலாக்கும் :D பிறகு வந்து பச்சை குத்திறன்.

Link to comment
Share on other sites

நியாயமான தந்தை.. இனிமேலாவது மடத்தனத்தைக் கைவிடுவாரா வசந்தி? :D

Link to comment
Share on other sites

இந்த பக்கம் நாங்களும் வரலாமா? அடல்ஸ் ஒன்லி படம் மாதிரி கதை ஓடிட்டு இருக்கு..... இபிடியான கில்மா க்களையும் உங்க கதையில சேர்ப்பது தான் உங்கள் தனித்துவம் சுமே ஆன்டி ....ஆனாலும் கொஞ்சம் விரிவா எழுதிநிங்கள் எண்டா இன்னும் நல்லம்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள் திருந்துவாள் எண்டு, தன்ர கௌரவத்தையும் பற்றிக் கவலைப்படாமல், ஆறுதல் படுத்திவிட்டுத் தகப்பன் வெளிய போக முந்தியே, வசந்தனைப் பார்க்கிறதுக்குத் திட்டம் போடுற மகளை நினைக்கப், பாவம், தகப்பன் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

தொடருங்கள், சுமே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்கு வயித்தில வசந்தனின்ட பிள்ளையை வேண்டின பிறகு தான் அறிவு வரும் :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.