Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

 

என்ன

மாடியிலிருந்து பாய்வதற்கான ஊக்குவிப்பா....... :( .

நடக்கட்டும்

நடக்கட்டும்

இணையவனும் பச்சை  போட்டுள்ளார்

திகைத்துப்போனேன் :(

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் உறவுகள் யாயினி, இசை, நிலா அக்கா, விசுகு அண்ணா, இணையவன், அலை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 14

வசந்தி ஒரு ஓட்டோ பிடித்து கணவனுடன் மிகச் சாதாரண தங்குவிடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கள் பொருட்களை அங்கு வைத்துவிட்டு, தன் நகைகள் கடவுச் சீட்டு என்பவற்றை கைப்பையில் வைத்துக்கொண்டு வசந்தனைப் பார்த்து வாங்கோ என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே செல்ல வசந்தனும் ஒன்றுமே கூறாமல் பின்னால் சென்றான். நல்ல காலம் நகைகளை தன்னுடனேயே கொண்டு திரிந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அல்லது அதையும் ராம் எடுத்திருப்பான். வசந்தி கணவனையும் கூட்டிக்கொண்டு  நகைக் கடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவளிடமிருந்த நகைகளை விற்றாள். எல்லாமாக இருபத்தையாயிரம் தான் வந்தது. கொடியை மட்டும் கழற்றவில்லை. இங்கிருந்தால் ராம் யாரையும் விட்டு ஏதும் செய்யப் பார்ப்பான். அதனால் கணவனைக் கூட்டிக்கொண்டு பம்பாய் போவதே அவளது திட்டம். ஏனெனில் அவள் ஏஜெசியுடன் கதைத்தபோது அவர்களும் பம்பாயில் இருந்தே ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் எனக் கூறியிருந்தது நினைவில் நின்றது. மீண்டும் அவர்களிடம் சென்று தன் நிலைமையைச் சொல்லி பம்பாயில போய் யாரைச் சந்திக்க வேணும் என்று சொன்னால் நாங்கள் சந்திக்கிறம் என்றவளை மறுக்க மனமின்றி  விலாசத்தை எழுதிக் குடுத்தார் அவர்.

வெளியே வந்ததும் நீ என்ன உன்ர பாட்டுக்கு முடிவெடுக்கிறாய் என்னை ஒன்றும் கேட்காமல் என்ற வசந்தனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஆம்பிளையைக் கலியாணம் கட்டுறது அவன் தன்னை வச்சு வடிவாப் பாப்பான் என்றுதான். நான் நீங்கள் ஆண்  என்று நம்பித்தான் உங்களைக் காதலிச்சு ஏமாந்து போனன். படுக்கையில மனைவியைத் திருப்திப்படுத்தினால் மட்டும் ஒருத்தன் ஆண் ஆகமாட்டான். பெண்சாதிக்கு மற்றவையால கஷ்டம் வரேக்க, ஆபத்து வரேக்க எதிரித்து நிக்கிறவன், காப்பாத்திறவன்தான்  உண்மையான ஆம்பிளை. நான் நல்ல அம்மா அப்பாவாலை வளர்க்கப்பட்டதால என்னால இப்பவும் உங்களை விட்டுவிட்டுப் போக முடியேல்லை. எனக்குப் பிறகு இரண்டு தங்கச்சியள் இருக்கினம். உங்கடை ஆட்களே என்னைப்பற்றி கூடாமல் கதைச்சு அவையளின்ர வாழ்வையும் நாசமாக்கிப் போடுவினம். அதாலைதான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறன் என்றாள். வசந்தன் மூச்சுக் காட்டவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனைப் பார்த்தவள், வசந்த் எனக்கு இப்பவும் உங்களில நிறைய அன்பு இருக்கு. நீங்கள் நான் சொல்லுறதை கேட்டீங்கள் எண்டால் காணும். எனக்கு உங்களில இல்லாத அக்கறையோ மற்றவைக்கு வரப்போகுது. உங்கட அத்தானாக  இருக்கலாம். அதுக்காக அவருக்கு ஏன் நீங்களோ நானோ பயப்பிடவேணும். பாக்கப்போனால் அவர்தான் எனக்குச் செய்ததுக்குப் பயப்பிட்டிருக்க வேணும் என்று கூறி அவனருகில் சென்று நெருங்கி அமர்ந்து கொண்டாள். சரி வசந்தி நான் இனிமேல் நீர் சொல்லுறபடியே கேட்கிறன். இப்பவே வெளிக்கிடுறமோ பம்பாய்க்கு என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.  

வசந்திக்கு மனம் நின்மதியாகிப் போனது. இவன் அடிப்படையில் நல்லவன்தான். என்ன செய்வது பெற்றோரும் சகோதரிகளும் இவனை வெருட்டி வைத்தபடியால் அவன் அவர்கள் சொல்கேட்டு ஆடுகிறான். நான் இவனைத் திருத்திவிடுவன் என மனதில் நினைத்துக்கொண்டு வெளிக்கிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள். அத்தோடு மனதில் தன் துணிவைத் தனக்குள் மெச்சியபடி ஒன்றும் தெரியாத இடத்தில் வந்து நானும் பயந்தவளாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என எண்ணிக்கொண்டாள்.மூன்றாம்நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். ஏஜென்சி கொடுத்த விலாசத்தை வைத்துக்கொண்டு அங்கு சென்றால் பலர் வெளிநாடு போக காவல் இருந்தனர். மிகக் குறுகிய ஒரு அறையில் எந்த அடிப்படை வசதிகளுமற்று அறை இருந்தது. என்ன செய்வது காசும் மட்டுமட்டாக இருக்கு, எல்லாம் சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணிகொண்டு காலம் கழித்தாள்.

இங்கும் ஏஜென்சி நாற்பதாயிரம் இருந்தால் இருவரையும் அனுப்பலாம் என்றார். தேவன் என்ற பெயர் கொண்ட அவர் இவளுடன் வாஞ்சையுடன் கதைத்தார். உங்களுக்கு பணக் கஸ்ரம் என்றால் நான் ஒரு சூட்கேஸ் தருவன். அதை நீங்கள் நான் சொல்லுற இடத்தில குடுத்தால் நான் உங்களுக்கும் டிக்கட் போட்டு அனுப்பிவிடுறன் என்றுவிட்டு இவள் என்ன கூறுவாளோ என்று இவளைப் பார்த்தார். இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன சூட்கேஸ் அண்ணை  என்றாள். அதொன்றும் நீங்கள் கேட்கக் கூடாது சொல்லுற இடத்தில குடுத்தால் சரி என்றார். வசந்தன் இவள் காதில் உது கடத்தல் சாமான் என்றதும் இவள் அதிர்ந்துபோய், அண்ணை நான் உப்பிடியான வேலை செய்ய மாட்டன். உப்பிடிச் செய்யிறதிலும் பாக்க இங்க கிடந்தது சாவேனே தவிர என்னால முடியாதண்ணை என்று கூறிக்கொண்டு எழுந்தாள். அவர் உடனே தங்கச்சி கொஞ்சம் பொறுங்கோ. வெளிநாடு போறதுக்கு என்னண்டாலும் செய்வினம். நீங்கள் செத்தாலும் சாவேனே தவிர உப்பிடிச் செய்ய மாட்டன் என்று சொன்னது என்ர நெஞ்சைத் தொட்டுவிட்டுது. நான் உங்கட நேர்மையை மதிக்கிறன். உங்களிட்டைக் கிடக்கிற காசைத் தாங்கோ. உங்களை யேர்மனிக்கு அனுப்புறன். அங்க போய் செட்டிலான உடன என்ர காசைத் தந்தால்  சரி என்றார். வசந்திக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இப்பிடிக் கூட ஆட்கள் இருக்கினமா?? நான் கும்பிடுற முருகன்தான் எனக்கு இந்த வழியைக் காட்டிக்கிடக்கு என்று மனதுள் முருகனுக்கும் நன்றி சொன்னாள். பின் தேவன் அண்ணை உங்கடை உதவியை நான் வாழ்க்கை பூரா மறக்க மாட்டன் என்று மனமாரக் கூறிவிட்டு, நெஞ்சு நிறைந்த மகிழ்வோடு அறைக்குச் சென்றனர். வசந்தனுக்குக் கூட நம்ப முடியாமல்த்தான் இருந்தது. தன் மனைவியில் அவனுக்கு மரியாதை கூடியது. நானெண்டா என்ன செய்திருப்பன் என யோசித்தவன், மேற்கொண்டு எதையும் எண்ணாமல் அவளுடன் நடந்தான்.

தொடரும்......... 



     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் சுடு பிடிக்கத் தொடங்கி இருக்குது :lol:  தொடருங்கள் சுமோ

 

Link to comment
Share on other sites

இந்த வசந்தனை எப்படித் தான் உங்கள் நண்பி காதலித்தாவோ தெரியாது, தொடருங்கள் வாசிக்க ஆவல் சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே! 

 

இறுதிப் பாகங்களை, வாசித்தபிறகு எல்லாமே தெளிவாகப் புரிகின்றது!

 

உங்கள் தோழி ஒரு ' Split Personality'.

 

வசந்தன் ஒரு நரி!

 

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த ரதி, அலைமகள், புங்கை, வந்தி, இசை ஆகியோருக்கு நன்றி.

 



ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

 

உங்கள் அற்ப ஆசையை ஏன் கெடுப்பான். நீங்கள் அப்பிடியே நினைச்சுக்கொண்டு இருங்கோ இசை :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 15

தேவன் அண்ணை சொன்னபடியே இருவருக்கும் டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டார். இவர்கள் போய் பேர்லினில் இறங்கிய உடனேயே அங்கும் இவர்களுக்கு உதவ ஒருவரை ஒழுங்குசெய்திருந்தார். அந்தப் பையன் விமான நிலையத்தில் இவர்களுக்காகக் காத்திருந்தான். இவர்களைப் புகையிரத நிலையத்துக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து மேற்கு யேர்மனிக்குச் செல்லும் புகைவண்டியில் ஏற்றி கையில் 100 ஜேர்மன் மாக்குகளும் கொடுத்துவிட்டார். வசந்தி மீண்டும் அந்த முருகனுக்கே நன்றி கூறினாள். கடவுள் தான் எனக்கு தேவன் அண்ணையைக் காட்டியிருக்கு என்று.

ஒருவாறு யேர்மனியுடன் பொருந்தியாயிற்று. இரண்டு மாதங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு அகதியாகியும் விட்டனர். உதவித்தொகையும் வரத் தொடங்க மனம் கொஞ்சம் நின்மதியானது. இத்தனை நாளும் அகதி முகாமில் ஒரு அறை. அவர்கள் தரும் உணவு. சிறைச்சாலை போல் நேரத்துக்கு மணியடித்தால் உணவு. வேறு எங்கும் செல்லவும் முடியாது. மற்றவர்களுடன் அரட்டை இப்படியே போன பொழுது, இப்ப மாறி இவர்கள் எங்கும் சென்று இருக்கலாம் என கூறியபடியால், அகதிமுகாமில் பழக்கமான இன்னுமொரு குடும்பத்துடன் சேர்ந்து தனியே வசிக்க முடிந்தது.

வசந்தன் ஒருவாறு வேலை தேடி ஒரு சீன உணவகத்தில் தட்டுக்கள் கழுவும் வேலை எடுத்துவிட்டான். எக்கவுண்ட்ஸ் படித்துவிட்டு இந்தவேலை செய்வது அவமானமாக உணர்ந்தாலும், யேர்மனியில் துவேசம் காரணமாக அதுகும் கருப்பு நிறத்தவற்கு நல்ல வேலை கிடைப்பது கடினம். எனவே கிடைத்ததை விடாது பகுதிநேரத்தில் யேர்மன் மொழியையும் இருவரும் கற்று, வசந்தியும் ஒரு தொழிற்சாலையில் வேலை எடுத்துவிட்டாள். முதல் சம்பளம் வந்த உடனேயே ஒரு கணிசமான தொகையை இவளிடம் சொல்லாமல் தன் வீட்டுக்கு அனுப்பினான் வசந்தன். ஒரு வாரம் கழிய பணம் அனுப்பிய விபரம் வசந்திக்குத் தெரியவர நீங்கள் திருந்திவிட்டியள் என்று நினைத்தேன் என்றால் மனத்தாக்கலுடன் வசந்தனைப் பார்த்து. என்ர அம்மா அப்பாக்கு நான் ஒரு ஆண்பிள்ளைதான் காசு அனுப்புறது என்ற கடமை என்றான் அவன். உங்கட கடமைதான் அதுக்காக எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். சரி அப்பா விடும். இதுகும் உம்மட குடும்பம் தானே என்று சடைந்துவிட்டு அவன் போய் விட்டான்.

இன்னும் ஒரு மாதத்தில் வசந்தனின் தமக்கையும் கணவரும் வெளிநாடு வந்து இவர்கள் இருக்கும் நகரத்திற்கே வந்தார்கள். வசந்தன் தான் இங்கு வரச் சொல்லி இருப்பான் என்று இவளுக்குப் புரிந்தது. இவள் நினைத்ததுபோலவே இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தவனை கோபப் பார்வை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாது வசந்தி எதுவும் நடக்காததுபோல் வாங்கோ என வரவேற்றாள். எங்கு வந்தாலும் சிலர் மாற மாட்டார்கள். அவர்கள் இருவரும் வசந்தனிடம் விழுந்துவிழுந்து காதைத்துவிட்டு  இவளிடம் ஏனோ தானோ எனக் கதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களுக்கு இரு சிறிய பிள்ளைகள் இருந்ததால் அரசாங்கம் அவர்களுக்கு இரு படுக்கை அறையுடன் கூடிய வீட்டு வசதிசெய்து கொடுத்தது. ஒரு வாரத்தின் பின் நாங்கள் அக்கா ஆட்களுடன் போய் இருப்பம் என்றான் வசந்தன். பாம்புப் புற்றுக்குள் கையை விட வசந்தி தயாராக இல்லை. நான் வரமாட்டன் அங்கே என வசந்தி மறுத்தும், அவனோ விடாப்பிடியாக நின்றதனால் வேறு வழியின்றி அவனின் பின்னே வசந்தி போகும்படியாயிற்று. அங்கு சென்றபின் வசந்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான். எதோ மூன்றாம் ஆள்போல் வசந்தியை அவர்கள் நடத்தியதை பார்வையானனாய் பார்த்துக்கொண்டிருந்தானே அன்றி மனைவி என்று அவள்மேல் இரக்கப்படவில்லை. காலையில் பல்விளக்குவது கூடப் பச்சைத் தண்ணீரில்தான். சுடுநீர் கொதிக்கும் தாங்கியை தமக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தான் போடுவாள். அதற்குமுன் யார் தண்ணீரைப் பயன்படுத்தினாலும் குளிர் நீர்தான். வசந்திக்கு வரும் கோபத்தில் கணவனிடம் கத்தியும் எதுகும் அவன் காதில் ஏறவே இல்லை. சமையல் விடயம் கூட அவர்களின் விருப்பப்படிதான். இவள் இன்று நாங்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து சமைப்பமோ என்றாலும் அக்காவுக்குப் பிடிக்காது என்பான். இவளுடன் வெளியே போவதோ சந்தோசமாக இருந்து கதைப்பதோ கூட தமக்கையின்அனுமதியோடுதான். வசந்திக்கு அவனை அங்கிருந்து எப்பிடியாவது கிளப்பிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று எழும்பவே அவளுக்கு தலை சுற்றுவது போல இருக்க வேலைக்குப் போகாது படுத்தே கிடந்தாள். மாலை முழுவதும் கூட எழும்ப முடியவில்லை. அடுத்தநாள் வசந்தனே இவளை வைத்தியரிடம் அழைத்துக்கொண்டு போனான். இவள் கற்பமாக உள்ளதாகவும் இன்னும் நான்கு வாரத்தில் மறுபடியும் வரும்படியும் கூறி இவள் வீக்காக இருப்பதால் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். இவளுக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வசந்தனின் முகத்தில் பெரிதாக மலர்வைக் காணவில்லை. இவள் இனி வேலையை விடட்டோ  என்றதற்கு பொறு அக்காவைக் கேட்பம் என்றான். நான் வேலையை விடுறதுக்கு எதுக்கு உங்கள் அக்காவைக் கேட்க வேண்டும் என கேட்டவள் எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுது. இனி எண்டாலும் திருந்துங்கோ என்றால் அழுகையுடன். நான் என்ன திருந்தக் கிடக்கு. அக்கா இரண்டு குழந்தை பெத்தவ. அதனாலதான் சொன்னேன் என்று இவள் வாயை அடைத்தான்.

தமக்கையிடம் கூறியபோதும் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாது அப்பிடியே என்றுவிட்டு எழு மாதம் வரையும் வேலை செய்யலாம். அதுக்குப் பிறகு லீவு தருவாங்கள். வேலை செய்தால்தான் சுகமாக குழந்தை பிறக்கும் என்றாள் தமக்கை. வசந்திக்கு குழந்தை சுகமாகப் பிறந்தால் சரி என்ற எண்ணம். அவளுக்கு முடியாமல் இருக்கும்.ஆனாலும் குழந்தைக் கனவுடனே வேலைக்குப் போனதால் கனவு பொய்யாகி கரு பன்னிரண்டாவது  வாரமே கலைந்தது. இரு வாரங்கள் வைத்திய சாலையில் இருந்தவள், வீட்டுக்கு வந்தும் கவனிப்பாரற்று கணவனின் கருணை இல்லாது ஆறுதல் வார்த்தை இல்லாது, தாய்க்கு தன் உள்ளக் கிடக்கையை எல்லாம் மடலாக வடித்துப் போட்டாள். தாய் வழமைபோல் உவர்களோடு இருக்காதை. உவர்கள் உன்னைச் சாக்காட்டிப் போடுவினம் என்று எழுத இவளுக்கு தாயின்மேல் வெறுப்புத்தான் வந்தது. வீட்டில் இருந்தால் உதை  நினைத்து நினைத்து நோய்தான் எற்படும் என எண்ணியவளாய் மீண்டும் வேலைக்குப் போக ஆயத்தமானாள். சும்மா ஒரு பேச்சுக்குத் தன்னும் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போ என வசந்தன் கூறவே இல்லை.

சரி இத்தனை நாளில் அவரின் குணம் தெரிந்ததுதான். என்ன எண்ணியும் பயனில்லை என எண்ணிக்கொண்டு தன்பாட்டில் இருந்தாள். வசந்தன் இப்பவெல்லாம் இவளிடம் வரும்போது பாதுகாப்பு உறையுடனே வந்தான். ஏன் எனக் காரணம் கேட்டதுக்கு திரும்ப உடன பிள்ளை உண்டாகிவிட்டால் உமக்குத்தான் கூடாது என  அவன் கூறியதை நம்பி நான்கு மாதங்கள் அவளும் பேசாமல் இருந்தாள். அதன் பின் அவனின் சொல்லைக் கேட்காது வசந்தி பிடிவாதம் பிடித்ததில் மீண்டும் வசந்தி கருத்தரித்தாள். இம்முறை இவர்களைக் கேட்காமல் அவளே வேலையை விட்டு நின்றது வசந்தனுக்கும் தமக்கைக்கும் கடுப்பாகியது.

இவள் தாயிடம் பொதுத் தொலைபேசி இருக்கும் இடத்துக்கு வரும்படி கூறி தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். எதுக்கும் கவனமா இரு என்றுவிட்டு தாய் போனை வைத்தார். இம்முறை வசந்தன் இவளுடன் கற்பம் பற்றி அக்கறையாகக் கேட்டது இவளை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. பத்தாததுக்கு பிள்ளைக்கு நல்லது என்று கூறி ஒரு கப்சுலும் கொண்டுவந்து கொடுத்தான். ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுக்கிறதாம். எனது உணவு விடுதியில் வேலை செய்யும் ஒரு சப்பட்டை கொண்டுவந்தது என்றான். இவளுக்கு தன்  கணவனுக்கு தன்மேல் அக்கறை இருக்கிறது.  நான்தான் எப்போதும் அவரைப்பற்றி தவறாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என எண்ணிணாள்.
 
ஒரு வாரம் செல்ல அவளுக்கு அடி வயிறு சுண்டி இழுப்பதுபோல் இருக்க,  வீட்டில் இருந்தவள் தனியாக வைத்தியரிடம் சென்று தன நிலைமையை எடுத்துக் கூறினாள். வேலை செய்கிறாயா இப்பொழுதும் என்று கேட்டவர் அவள் இல்லை என்றதும் இவளைப் பரிசோதித்துவிட்டு நான் தந்த மருந்துகளை ஒழுங்காக உண்கிறாயா என்று கேட்டார். அவள் மருந்துகளை தன் கைப்பையுள் வைத்திருப்பதால் இந்த மருந்துகள் தானே என எடுத்துக் காட்டினாள். அவள் எடுத்து வைத்த மருந்துகளோடு வசந்தன் கொடுத்த மருந்தும் இருந்தது. இது நான் தரவில்லையே என்று கூறியவர், இதுவும் உண்கிறாயா என கேட்க இவள் ஆம் எனத் தலையாட்டினாள். அதை எடுத்து வடிவாக வாசித்துவிட்டு கணனியில் தட்டி அதன் விபரம் பார்த்தார். என்னைக் கேட்காமல் கண்ட மருந்துகளையும் உன்னை யார் உண்ணச் சொன்னது. இது கற்பம் கலைக்கும் மருந்து என்று கூறி இவளை உறைய வைத்தார். இவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. காதுகள் இரண்டும் அடைத்து மண்டை பிளந்துவிடுவதுபோல் வந்து கதிரையிலே மயங்கிச் சரிந்தாள்.


தொடரும்...........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

Link to comment
Share on other sites

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், ரதி, விசுகு அண்ணா, இசை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

தூ.................. வசந்தனும் ஒரு ஆளா. கேடு கெட்ட மனிதப் பிறவி! தொடருங்கள் சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

நீங்களும் சிலை வைக்க மாட்டியள். யாரும் வச்சாலும் விட மாட்டியள். அப்ப நாங்கள் என்னதான் செய்யிறது ரதி. :D  ஏற்கனவே செத்த பாம்பை நீங்கள் அடித்து என்ன பயன்.

 

 

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

 

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

கதையில் ஒரு பக்கம் அதி வேகத்தில்  சாய்வது தெரிகிறது

இது கள கண்மணிகளின் எதிர்பார்ப்புக்காகவா என்று கேட்டேன் :D

 

(தேவன் எனது ஊரைச்சேர்ந்தவர்..??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிய கதையை விரைவில் முடித்து விடவேண்டும் என்று ஓடுறீங்கள் புரிகிறது..ஏற்கவே குறுகியகதையாக முடிக்க விட்டு இருக்கலாம் போல இருக்கு....ச்சே... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையில்

 

ஆண்கள்(வசந்தன்) பற்றி  ஒரு முகம் காட்டப்டபடுகிறது.

அது எம்மில் பலருக்கு ஒருவித எரிச்சலையும் ஆத்திரத்ததையும் தருகிறது.

ஆனால் உண்மையில் பல ஆண்கள்  ஏறக்குறைய முழு ஆண்களுமே  அவரது குடும்பத்துக்கும் மனைவியின் குடும்பத்துக்கும்  தனது குடும்பத்துக்கும் இடையே ஆன பிணைப்பை உருவாக்க அந்த பாலத்தைப் போட பல தியாகங்களைச்செய்யவேண்டியுள்ளது.  பெரும் பொறுமையைக்கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஊரில் சொல்வார்கள்

எதையும் உடைப்பது சில செக்கன் வேலை

ஆனால் மீண்டும் ஒட்டுவது....................??? :(

Link to comment
Share on other sites

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

உங்கள் நட்பு வட்டாரங்கள் எனக்குப் பரீட்சயம் ஆகாதவரை சேதாரம் குறைவாகத்தான் இருக்கும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தியின் கதை, நெஞ்சை உருக்குகின்றது!

 

வசந்தன் போன்றவர்கள் பிறக்கும் போதே, பொறுப்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட படியே பிறக்கின்றார்கள் என்பது உண்மையே எனினும், வசந்தனின் அக்காவினது நிலைக்கும், வசந்தனின் நிலைக்கும் பொருளாதார ரீதியில் அதிக வேறுபாடுகள் இல்லை. சொல்லப் போனால், அக்கா வசதியாக இருக்கின்றார். ஆனால் பொறுப்பு  என்று வரும்போது, அக்காவும், வசந்தனுடன் சேர்ந்து அதைப் பகிர்ந்து கொள்ளவதில்லை. முழுப் பொறுப்புக்களும், நேரடியாக வசந்தன் மீதும், மறைமுகமாக வசந்தியின் மீதும் சுமத்தப்படுவதே, எமது கேடுகெட்ட சமுதாய அமைப்பாகும். அதற்குப் பலியாவது வசந்தி என்னும், எதிலும் நல்லதையே காணத் துடிக்கும் ஒரு அப்பாவி!

 

சுமே, கதையை நகர்த்தும் விதம், வாசகர்களை 'எரிபற்று நிலைக்குக்' கொண்டு செல்கின்றது! :D

Link to comment
Share on other sites

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

 

அதனால்தான் நான் இப்போ

திரவநிலைக்குள் உள்ளேன்  ஐயா........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

யாயினி, கொஞ்சம் இழுத்துப் பிடித்து நன்றாக எழுத முயல்கிறேன்.

அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :rolleyes:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.