Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

 

என்ன

மாடியிலிருந்து பாய்வதற்கான ஊக்குவிப்பா....... :( .

நடக்கட்டும்

நடக்கட்டும்

இணையவனும் பச்சை  போட்டுள்ளார்

திகைத்துப்போனேன் :(

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் உறவுகள் யாயினி, இசை, நிலா அக்கா, விசுகு அண்ணா, இணையவன், அலை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 14

வசந்தி ஒரு ஓட்டோ பிடித்து கணவனுடன் மிகச் சாதாரண தங்குவிடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கள் பொருட்களை அங்கு வைத்துவிட்டு, தன் நகைகள் கடவுச் சீட்டு என்பவற்றை கைப்பையில் வைத்துக்கொண்டு வசந்தனைப் பார்த்து வாங்கோ என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே செல்ல வசந்தனும் ஒன்றுமே கூறாமல் பின்னால் சென்றான். நல்ல காலம் நகைகளை தன்னுடனேயே கொண்டு திரிந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அல்லது அதையும் ராம் எடுத்திருப்பான். வசந்தி கணவனையும் கூட்டிக்கொண்டு  நகைக் கடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவளிடமிருந்த நகைகளை விற்றாள். எல்லாமாக இருபத்தையாயிரம் தான் வந்தது. கொடியை மட்டும் கழற்றவில்லை. இங்கிருந்தால் ராம் யாரையும் விட்டு ஏதும் செய்யப் பார்ப்பான். அதனால் கணவனைக் கூட்டிக்கொண்டு பம்பாய் போவதே அவளது திட்டம். ஏனெனில் அவள் ஏஜெசியுடன் கதைத்தபோது அவர்களும் பம்பாயில் இருந்தே ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் எனக் கூறியிருந்தது நினைவில் நின்றது. மீண்டும் அவர்களிடம் சென்று தன் நிலைமையைச் சொல்லி பம்பாயில போய் யாரைச் சந்திக்க வேணும் என்று சொன்னால் நாங்கள் சந்திக்கிறம் என்றவளை மறுக்க மனமின்றி  விலாசத்தை எழுதிக் குடுத்தார் அவர்.

வெளியே வந்ததும் நீ என்ன உன்ர பாட்டுக்கு முடிவெடுக்கிறாய் என்னை ஒன்றும் கேட்காமல் என்ற வசந்தனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஆம்பிளையைக் கலியாணம் கட்டுறது அவன் தன்னை வச்சு வடிவாப் பாப்பான் என்றுதான். நான் நீங்கள் ஆண்  என்று நம்பித்தான் உங்களைக் காதலிச்சு ஏமாந்து போனன். படுக்கையில மனைவியைத் திருப்திப்படுத்தினால் மட்டும் ஒருத்தன் ஆண் ஆகமாட்டான். பெண்சாதிக்கு மற்றவையால கஷ்டம் வரேக்க, ஆபத்து வரேக்க எதிரித்து நிக்கிறவன், காப்பாத்திறவன்தான்  உண்மையான ஆம்பிளை. நான் நல்ல அம்மா அப்பாவாலை வளர்க்கப்பட்டதால என்னால இப்பவும் உங்களை விட்டுவிட்டுப் போக முடியேல்லை. எனக்குப் பிறகு இரண்டு தங்கச்சியள் இருக்கினம். உங்கடை ஆட்களே என்னைப்பற்றி கூடாமல் கதைச்சு அவையளின்ர வாழ்வையும் நாசமாக்கிப் போடுவினம். அதாலைதான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறன் என்றாள். வசந்தன் மூச்சுக் காட்டவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனைப் பார்த்தவள், வசந்த் எனக்கு இப்பவும் உங்களில நிறைய அன்பு இருக்கு. நீங்கள் நான் சொல்லுறதை கேட்டீங்கள் எண்டால் காணும். எனக்கு உங்களில இல்லாத அக்கறையோ மற்றவைக்கு வரப்போகுது. உங்கட அத்தானாக  இருக்கலாம். அதுக்காக அவருக்கு ஏன் நீங்களோ நானோ பயப்பிடவேணும். பாக்கப்போனால் அவர்தான் எனக்குச் செய்ததுக்குப் பயப்பிட்டிருக்க வேணும் என்று கூறி அவனருகில் சென்று நெருங்கி அமர்ந்து கொண்டாள். சரி வசந்தி நான் இனிமேல் நீர் சொல்லுறபடியே கேட்கிறன். இப்பவே வெளிக்கிடுறமோ பம்பாய்க்கு என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.  

வசந்திக்கு மனம் நின்மதியாகிப் போனது. இவன் அடிப்படையில் நல்லவன்தான். என்ன செய்வது பெற்றோரும் சகோதரிகளும் இவனை வெருட்டி வைத்தபடியால் அவன் அவர்கள் சொல்கேட்டு ஆடுகிறான். நான் இவனைத் திருத்திவிடுவன் என மனதில் நினைத்துக்கொண்டு வெளிக்கிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள். அத்தோடு மனதில் தன் துணிவைத் தனக்குள் மெச்சியபடி ஒன்றும் தெரியாத இடத்தில் வந்து நானும் பயந்தவளாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என எண்ணிக்கொண்டாள்.மூன்றாம்நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். ஏஜென்சி கொடுத்த விலாசத்தை வைத்துக்கொண்டு அங்கு சென்றால் பலர் வெளிநாடு போக காவல் இருந்தனர். மிகக் குறுகிய ஒரு அறையில் எந்த அடிப்படை வசதிகளுமற்று அறை இருந்தது. என்ன செய்வது காசும் மட்டுமட்டாக இருக்கு, எல்லாம் சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணிகொண்டு காலம் கழித்தாள்.

இங்கும் ஏஜென்சி நாற்பதாயிரம் இருந்தால் இருவரையும் அனுப்பலாம் என்றார். தேவன் என்ற பெயர் கொண்ட அவர் இவளுடன் வாஞ்சையுடன் கதைத்தார். உங்களுக்கு பணக் கஸ்ரம் என்றால் நான் ஒரு சூட்கேஸ் தருவன். அதை நீங்கள் நான் சொல்லுற இடத்தில குடுத்தால் நான் உங்களுக்கும் டிக்கட் போட்டு அனுப்பிவிடுறன் என்றுவிட்டு இவள் என்ன கூறுவாளோ என்று இவளைப் பார்த்தார். இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன சூட்கேஸ் அண்ணை  என்றாள். அதொன்றும் நீங்கள் கேட்கக் கூடாது சொல்லுற இடத்தில குடுத்தால் சரி என்றார். வசந்தன் இவள் காதில் உது கடத்தல் சாமான் என்றதும் இவள் அதிர்ந்துபோய், அண்ணை நான் உப்பிடியான வேலை செய்ய மாட்டன். உப்பிடிச் செய்யிறதிலும் பாக்க இங்க கிடந்தது சாவேனே தவிர என்னால முடியாதண்ணை என்று கூறிக்கொண்டு எழுந்தாள். அவர் உடனே தங்கச்சி கொஞ்சம் பொறுங்கோ. வெளிநாடு போறதுக்கு என்னண்டாலும் செய்வினம். நீங்கள் செத்தாலும் சாவேனே தவிர உப்பிடிச் செய்ய மாட்டன் என்று சொன்னது என்ர நெஞ்சைத் தொட்டுவிட்டுது. நான் உங்கட நேர்மையை மதிக்கிறன். உங்களிட்டைக் கிடக்கிற காசைத் தாங்கோ. உங்களை யேர்மனிக்கு அனுப்புறன். அங்க போய் செட்டிலான உடன என்ர காசைத் தந்தால்  சரி என்றார். வசந்திக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இப்பிடிக் கூட ஆட்கள் இருக்கினமா?? நான் கும்பிடுற முருகன்தான் எனக்கு இந்த வழியைக் காட்டிக்கிடக்கு என்று மனதுள் முருகனுக்கும் நன்றி சொன்னாள். பின் தேவன் அண்ணை உங்கடை உதவியை நான் வாழ்க்கை பூரா மறக்க மாட்டன் என்று மனமாரக் கூறிவிட்டு, நெஞ்சு நிறைந்த மகிழ்வோடு அறைக்குச் சென்றனர். வசந்தனுக்குக் கூட நம்ப முடியாமல்த்தான் இருந்தது. தன் மனைவியில் அவனுக்கு மரியாதை கூடியது. நானெண்டா என்ன செய்திருப்பன் என யோசித்தவன், மேற்கொண்டு எதையும் எண்ணாமல் அவளுடன் நடந்தான்.

தொடரும்......... 



     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் சுடு பிடிக்கத் தொடங்கி இருக்குது :lol:  தொடருங்கள் சுமோ

 

Link to comment
Share on other sites

இந்த வசந்தனை எப்படித் தான் உங்கள் நண்பி காதலித்தாவோ தெரியாது, தொடருங்கள் வாசிக்க ஆவல் சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே! 

 

இறுதிப் பாகங்களை, வாசித்தபிறகு எல்லாமே தெளிவாகப் புரிகின்றது!

 

உங்கள் தோழி ஒரு ' Split Personality'.

 

வசந்தன் ஒரு நரி!

 

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த ரதி, அலைமகள், புங்கை, வந்தி, இசை ஆகியோருக்கு நன்றி.

 



ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

 

உங்கள் அற்ப ஆசையை ஏன் கெடுப்பான். நீங்கள் அப்பிடியே நினைச்சுக்கொண்டு இருங்கோ இசை :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 15

தேவன் அண்ணை சொன்னபடியே இருவருக்கும் டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டார். இவர்கள் போய் பேர்லினில் இறங்கிய உடனேயே அங்கும் இவர்களுக்கு உதவ ஒருவரை ஒழுங்குசெய்திருந்தார். அந்தப் பையன் விமான நிலையத்தில் இவர்களுக்காகக் காத்திருந்தான். இவர்களைப் புகையிரத நிலையத்துக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து மேற்கு யேர்மனிக்குச் செல்லும் புகைவண்டியில் ஏற்றி கையில் 100 ஜேர்மன் மாக்குகளும் கொடுத்துவிட்டார். வசந்தி மீண்டும் அந்த முருகனுக்கே நன்றி கூறினாள். கடவுள் தான் எனக்கு தேவன் அண்ணையைக் காட்டியிருக்கு என்று.

ஒருவாறு யேர்மனியுடன் பொருந்தியாயிற்று. இரண்டு மாதங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு அகதியாகியும் விட்டனர். உதவித்தொகையும் வரத் தொடங்க மனம் கொஞ்சம் நின்மதியானது. இத்தனை நாளும் அகதி முகாமில் ஒரு அறை. அவர்கள் தரும் உணவு. சிறைச்சாலை போல் நேரத்துக்கு மணியடித்தால் உணவு. வேறு எங்கும் செல்லவும் முடியாது. மற்றவர்களுடன் அரட்டை இப்படியே போன பொழுது, இப்ப மாறி இவர்கள் எங்கும் சென்று இருக்கலாம் என கூறியபடியால், அகதிமுகாமில் பழக்கமான இன்னுமொரு குடும்பத்துடன் சேர்ந்து தனியே வசிக்க முடிந்தது.

வசந்தன் ஒருவாறு வேலை தேடி ஒரு சீன உணவகத்தில் தட்டுக்கள் கழுவும் வேலை எடுத்துவிட்டான். எக்கவுண்ட்ஸ் படித்துவிட்டு இந்தவேலை செய்வது அவமானமாக உணர்ந்தாலும், யேர்மனியில் துவேசம் காரணமாக அதுகும் கருப்பு நிறத்தவற்கு நல்ல வேலை கிடைப்பது கடினம். எனவே கிடைத்ததை விடாது பகுதிநேரத்தில் யேர்மன் மொழியையும் இருவரும் கற்று, வசந்தியும் ஒரு தொழிற்சாலையில் வேலை எடுத்துவிட்டாள். முதல் சம்பளம் வந்த உடனேயே ஒரு கணிசமான தொகையை இவளிடம் சொல்லாமல் தன் வீட்டுக்கு அனுப்பினான் வசந்தன். ஒரு வாரம் கழிய பணம் அனுப்பிய விபரம் வசந்திக்குத் தெரியவர நீங்கள் திருந்திவிட்டியள் என்று நினைத்தேன் என்றால் மனத்தாக்கலுடன் வசந்தனைப் பார்த்து. என்ர அம்மா அப்பாக்கு நான் ஒரு ஆண்பிள்ளைதான் காசு அனுப்புறது என்ற கடமை என்றான் அவன். உங்கட கடமைதான் அதுக்காக எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். சரி அப்பா விடும். இதுகும் உம்மட குடும்பம் தானே என்று சடைந்துவிட்டு அவன் போய் விட்டான்.

இன்னும் ஒரு மாதத்தில் வசந்தனின் தமக்கையும் கணவரும் வெளிநாடு வந்து இவர்கள் இருக்கும் நகரத்திற்கே வந்தார்கள். வசந்தன் தான் இங்கு வரச் சொல்லி இருப்பான் என்று இவளுக்குப் புரிந்தது. இவள் நினைத்ததுபோலவே இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தவனை கோபப் பார்வை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாது வசந்தி எதுவும் நடக்காததுபோல் வாங்கோ என வரவேற்றாள். எங்கு வந்தாலும் சிலர் மாற மாட்டார்கள். அவர்கள் இருவரும் வசந்தனிடம் விழுந்துவிழுந்து காதைத்துவிட்டு  இவளிடம் ஏனோ தானோ எனக் கதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களுக்கு இரு சிறிய பிள்ளைகள் இருந்ததால் அரசாங்கம் அவர்களுக்கு இரு படுக்கை அறையுடன் கூடிய வீட்டு வசதிசெய்து கொடுத்தது. ஒரு வாரத்தின் பின் நாங்கள் அக்கா ஆட்களுடன் போய் இருப்பம் என்றான் வசந்தன். பாம்புப் புற்றுக்குள் கையை விட வசந்தி தயாராக இல்லை. நான் வரமாட்டன் அங்கே என வசந்தி மறுத்தும், அவனோ விடாப்பிடியாக நின்றதனால் வேறு வழியின்றி அவனின் பின்னே வசந்தி போகும்படியாயிற்று. அங்கு சென்றபின் வசந்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான். எதோ மூன்றாம் ஆள்போல் வசந்தியை அவர்கள் நடத்தியதை பார்வையானனாய் பார்த்துக்கொண்டிருந்தானே அன்றி மனைவி என்று அவள்மேல் இரக்கப்படவில்லை. காலையில் பல்விளக்குவது கூடப் பச்சைத் தண்ணீரில்தான். சுடுநீர் கொதிக்கும் தாங்கியை தமக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தான் போடுவாள். அதற்குமுன் யார் தண்ணீரைப் பயன்படுத்தினாலும் குளிர் நீர்தான். வசந்திக்கு வரும் கோபத்தில் கணவனிடம் கத்தியும் எதுகும் அவன் காதில் ஏறவே இல்லை. சமையல் விடயம் கூட அவர்களின் விருப்பப்படிதான். இவள் இன்று நாங்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து சமைப்பமோ என்றாலும் அக்காவுக்குப் பிடிக்காது என்பான். இவளுடன் வெளியே போவதோ சந்தோசமாக இருந்து கதைப்பதோ கூட தமக்கையின்அனுமதியோடுதான். வசந்திக்கு அவனை அங்கிருந்து எப்பிடியாவது கிளப்பிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று எழும்பவே அவளுக்கு தலை சுற்றுவது போல இருக்க வேலைக்குப் போகாது படுத்தே கிடந்தாள். மாலை முழுவதும் கூட எழும்ப முடியவில்லை. அடுத்தநாள் வசந்தனே இவளை வைத்தியரிடம் அழைத்துக்கொண்டு போனான். இவள் கற்பமாக உள்ளதாகவும் இன்னும் நான்கு வாரத்தில் மறுபடியும் வரும்படியும் கூறி இவள் வீக்காக இருப்பதால் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். இவளுக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வசந்தனின் முகத்தில் பெரிதாக மலர்வைக் காணவில்லை. இவள் இனி வேலையை விடட்டோ  என்றதற்கு பொறு அக்காவைக் கேட்பம் என்றான். நான் வேலையை விடுறதுக்கு எதுக்கு உங்கள் அக்காவைக் கேட்க வேண்டும் என கேட்டவள் எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுது. இனி எண்டாலும் திருந்துங்கோ என்றால் அழுகையுடன். நான் என்ன திருந்தக் கிடக்கு. அக்கா இரண்டு குழந்தை பெத்தவ. அதனாலதான் சொன்னேன் என்று இவள் வாயை அடைத்தான்.

தமக்கையிடம் கூறியபோதும் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாது அப்பிடியே என்றுவிட்டு எழு மாதம் வரையும் வேலை செய்யலாம். அதுக்குப் பிறகு லீவு தருவாங்கள். வேலை செய்தால்தான் சுகமாக குழந்தை பிறக்கும் என்றாள் தமக்கை. வசந்திக்கு குழந்தை சுகமாகப் பிறந்தால் சரி என்ற எண்ணம். அவளுக்கு முடியாமல் இருக்கும்.ஆனாலும் குழந்தைக் கனவுடனே வேலைக்குப் போனதால் கனவு பொய்யாகி கரு பன்னிரண்டாவது  வாரமே கலைந்தது. இரு வாரங்கள் வைத்திய சாலையில் இருந்தவள், வீட்டுக்கு வந்தும் கவனிப்பாரற்று கணவனின் கருணை இல்லாது ஆறுதல் வார்த்தை இல்லாது, தாய்க்கு தன் உள்ளக் கிடக்கையை எல்லாம் மடலாக வடித்துப் போட்டாள். தாய் வழமைபோல் உவர்களோடு இருக்காதை. உவர்கள் உன்னைச் சாக்காட்டிப் போடுவினம் என்று எழுத இவளுக்கு தாயின்மேல் வெறுப்புத்தான் வந்தது. வீட்டில் இருந்தால் உதை  நினைத்து நினைத்து நோய்தான் எற்படும் என எண்ணியவளாய் மீண்டும் வேலைக்குப் போக ஆயத்தமானாள். சும்மா ஒரு பேச்சுக்குத் தன்னும் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போ என வசந்தன் கூறவே இல்லை.

சரி இத்தனை நாளில் அவரின் குணம் தெரிந்ததுதான். என்ன எண்ணியும் பயனில்லை என எண்ணிக்கொண்டு தன்பாட்டில் இருந்தாள். வசந்தன் இப்பவெல்லாம் இவளிடம் வரும்போது பாதுகாப்பு உறையுடனே வந்தான். ஏன் எனக் காரணம் கேட்டதுக்கு திரும்ப உடன பிள்ளை உண்டாகிவிட்டால் உமக்குத்தான் கூடாது என  அவன் கூறியதை நம்பி நான்கு மாதங்கள் அவளும் பேசாமல் இருந்தாள். அதன் பின் அவனின் சொல்லைக் கேட்காது வசந்தி பிடிவாதம் பிடித்ததில் மீண்டும் வசந்தி கருத்தரித்தாள். இம்முறை இவர்களைக் கேட்காமல் அவளே வேலையை விட்டு நின்றது வசந்தனுக்கும் தமக்கைக்கும் கடுப்பாகியது.

இவள் தாயிடம் பொதுத் தொலைபேசி இருக்கும் இடத்துக்கு வரும்படி கூறி தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். எதுக்கும் கவனமா இரு என்றுவிட்டு தாய் போனை வைத்தார். இம்முறை வசந்தன் இவளுடன் கற்பம் பற்றி அக்கறையாகக் கேட்டது இவளை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. பத்தாததுக்கு பிள்ளைக்கு நல்லது என்று கூறி ஒரு கப்சுலும் கொண்டுவந்து கொடுத்தான். ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுக்கிறதாம். எனது உணவு விடுதியில் வேலை செய்யும் ஒரு சப்பட்டை கொண்டுவந்தது என்றான். இவளுக்கு தன்  கணவனுக்கு தன்மேல் அக்கறை இருக்கிறது.  நான்தான் எப்போதும் அவரைப்பற்றி தவறாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என எண்ணிணாள்.
 
ஒரு வாரம் செல்ல அவளுக்கு அடி வயிறு சுண்டி இழுப்பதுபோல் இருக்க,  வீட்டில் இருந்தவள் தனியாக வைத்தியரிடம் சென்று தன நிலைமையை எடுத்துக் கூறினாள். வேலை செய்கிறாயா இப்பொழுதும் என்று கேட்டவர் அவள் இல்லை என்றதும் இவளைப் பரிசோதித்துவிட்டு நான் தந்த மருந்துகளை ஒழுங்காக உண்கிறாயா என்று கேட்டார். அவள் மருந்துகளை தன் கைப்பையுள் வைத்திருப்பதால் இந்த மருந்துகள் தானே என எடுத்துக் காட்டினாள். அவள் எடுத்து வைத்த மருந்துகளோடு வசந்தன் கொடுத்த மருந்தும் இருந்தது. இது நான் தரவில்லையே என்று கூறியவர், இதுவும் உண்கிறாயா என கேட்க இவள் ஆம் எனத் தலையாட்டினாள். அதை எடுத்து வடிவாக வாசித்துவிட்டு கணனியில் தட்டி அதன் விபரம் பார்த்தார். என்னைக் கேட்காமல் கண்ட மருந்துகளையும் உன்னை யார் உண்ணச் சொன்னது. இது கற்பம் கலைக்கும் மருந்து என்று கூறி இவளை உறைய வைத்தார். இவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. காதுகள் இரண்டும் அடைத்து மண்டை பிளந்துவிடுவதுபோல் வந்து கதிரையிலே மயங்கிச் சரிந்தாள்.


தொடரும்...........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

Link to comment
Share on other sites

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், ரதி, விசுகு அண்ணா, இசை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

தூ.................. வசந்தனும் ஒரு ஆளா. கேடு கெட்ட மனிதப் பிறவி! தொடருங்கள் சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

நீங்களும் சிலை வைக்க மாட்டியள். யாரும் வச்சாலும் விட மாட்டியள். அப்ப நாங்கள் என்னதான் செய்யிறது ரதி. :D  ஏற்கனவே செத்த பாம்பை நீங்கள் அடித்து என்ன பயன்.

 

 

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

 

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

கதையில் ஒரு பக்கம் அதி வேகத்தில்  சாய்வது தெரிகிறது

இது கள கண்மணிகளின் எதிர்பார்ப்புக்காகவா என்று கேட்டேன் :D

 

(தேவன் எனது ஊரைச்சேர்ந்தவர்..??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிய கதையை விரைவில் முடித்து விடவேண்டும் என்று ஓடுறீங்கள் புரிகிறது..ஏற்கவே குறுகியகதையாக முடிக்க விட்டு இருக்கலாம் போல இருக்கு....ச்சே... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையில்

 

ஆண்கள்(வசந்தன்) பற்றி  ஒரு முகம் காட்டப்டபடுகிறது.

அது எம்மில் பலருக்கு ஒருவித எரிச்சலையும் ஆத்திரத்ததையும் தருகிறது.

ஆனால் உண்மையில் பல ஆண்கள்  ஏறக்குறைய முழு ஆண்களுமே  அவரது குடும்பத்துக்கும் மனைவியின் குடும்பத்துக்கும்  தனது குடும்பத்துக்கும் இடையே ஆன பிணைப்பை உருவாக்க அந்த பாலத்தைப் போட பல தியாகங்களைச்செய்யவேண்டியுள்ளது.  பெரும் பொறுமையைக்கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஊரில் சொல்வார்கள்

எதையும் உடைப்பது சில செக்கன் வேலை

ஆனால் மீண்டும் ஒட்டுவது....................??? :(

Link to comment
Share on other sites

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

உங்கள் நட்பு வட்டாரங்கள் எனக்குப் பரீட்சயம் ஆகாதவரை சேதாரம் குறைவாகத்தான் இருக்கும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தியின் கதை, நெஞ்சை உருக்குகின்றது!

 

வசந்தன் போன்றவர்கள் பிறக்கும் போதே, பொறுப்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட படியே பிறக்கின்றார்கள் என்பது உண்மையே எனினும், வசந்தனின் அக்காவினது நிலைக்கும், வசந்தனின் நிலைக்கும் பொருளாதார ரீதியில் அதிக வேறுபாடுகள் இல்லை. சொல்லப் போனால், அக்கா வசதியாக இருக்கின்றார். ஆனால் பொறுப்பு  என்று வரும்போது, அக்காவும், வசந்தனுடன் சேர்ந்து அதைப் பகிர்ந்து கொள்ளவதில்லை. முழுப் பொறுப்புக்களும், நேரடியாக வசந்தன் மீதும், மறைமுகமாக வசந்தியின் மீதும் சுமத்தப்படுவதே, எமது கேடுகெட்ட சமுதாய அமைப்பாகும். அதற்குப் பலியாவது வசந்தி என்னும், எதிலும் நல்லதையே காணத் துடிக்கும் ஒரு அப்பாவி!

 

சுமே, கதையை நகர்த்தும் விதம், வாசகர்களை 'எரிபற்று நிலைக்குக்' கொண்டு செல்கின்றது! :D

Link to comment
Share on other sites

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

 

அதனால்தான் நான் இப்போ

திரவநிலைக்குள் உள்ளேன்  ஐயா........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

யாயினி, கொஞ்சம் இழுத்துப் பிடித்து நன்றாக எழுத முயல்கிறேன்.

அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :rolleyes:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.