Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

 

ம்ம்ம்!

 

அனுபவங்களின் 'தொகுப்புரை' தானே வாழ்க்கை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

 

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

 

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

மன்னிக்கவும். இதுக்குபோய் என்னோட  தனியப்  பேசி h24069.gif

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை எழுதிய பின்னர் திரியில் இவ்விடயம் தொடர்பாக கதைப்போம் என்றேனே தவிர உங்களுடன் தனிப்பட இல்லை. நல்ல ஆள்தான் போங்கள் :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 16

வசந்தி கண்விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் கற்பம் கலைந்துவிட்டது. அதிர்ச்சி ஏற்படாவிட்டாலும் கலைந்துதான் இருக்கும். அவள் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. கணவனின் துரோகம் நினைவில் வர அழுகை ஒருபுறம்,கோபம் ஒருபுறம் வாய்விட்டு அழுதாள். வேறு என்ன தான் செய்வது. பக்கத்துக் கட்டிலில்  இருந்த ஒரு பெண் இவள் அழுவதைப் பார்த்து தாதியரை அழைக்கும் அழுத்தியை அழுத்தியவுடன் தாதி வந்து இவளை சமாதானப் படுத்தினாள். உன்கணவருக்கு அறிவித்துள்ளோம் இப்போது வருவார் என்று கூறும்போதே வசந்தன் தமக்கையுடன் உள்ளே வந்தான்.

 

வசந்திக்கு அவனைக் கண்டதும் ஆவேசம் வந்தது. இரண்டுபேரும் வெளியில போங்கோ. எனக்கு உங்களைப் பாக்க விருப்பமில்லை என்று கத்தினாள். தாதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன பிரச்சனை இப்பிடி நீ கத்துவது கூடாது என்று கூறிவிட்டு, நீங்கள் யார் என்று வசந்தனைப் பார்த்துக் கேட்டாள். நான் கணவன், இவ என் அக்கா என்றுவிட்டு வசந்தியைப் பார்த்தான். இவர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்று ஜேர்மன் மொழியில் தாதியிடம் கூறியவுடன் தாதி அவர்களை வெளியே போகும்படி கூறிவிட்டு, நீ உப்பிடிக் கத்தக்கூடாது என்று இவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள். தாதி சென்று ஐந்து நிமிடங்கள் செல்ல வசந்தன் மட்டும் தனியே உள்ளே வந்தான்.

 

அவனும் ஜேர்மன் மொழியில் நன்றாகக் கதைப்பானாகையால் தாதியிடம் என்ன கூறினானோ மீண்டும் தாதி அவனை அனுமதித்துவிட்டாள். என்னத்துக்கு வந்தனீங்கள் நான் செத்திட்டனோ  எண்டு பாக்கவோ. நான் உங்கட ஆசைக்கெல்லாம் சாகமாட்டன். வெக்கம் இல்லையே இங்க வர எண்டு பொரிந்து தள்ளினாள். வசந்தி நான் சொல்லுறதைக் கேளும். நான் வேணுமெண்டு செய்யேல்ல. அந்தச் சப்பட்டைதான் மாறி விளங்கிக் கொண்டு தந்திட்டாள். நான் வேணுமெண்டால் சத்தியம் செய்யிறன் என்று கூறி அழுவாரைப்போல் நின்றான்.

 

உங்களுக்கு என்னெண்டு தெரியும் நான் சொல்லாமல். இப்பதான் வாறீங்கள் என்று இவள் சந்தேகத்துடன் கேட்க,  உம்மை அம்புலன்சில் இங்க அனுப்பிப்போட்டு உமது வைத்தியர் எனக்கு அடிச்சுச் சொன்னவர் என்றான். இப்ப வசந்திக்கு சந்தேகம் வந்துவிட்டது. கணவன் கூறுவது சிலநேரம் உண்மையாக இருக்குமோ என. அதனால் ஒன்றும் கூறாது படுத்திருந்தாள். எனக்கு உம்மில எவ்வளவு அன்பு இருக்கு என்று உமக்குத் தெரியாது என்று கூறியவாறு கிட்ட வந்து வசந்தியின் தலையைத் தடவினான். அவனின் அருகாமை அவளின் கோபத்தைத் தணிக்க ஒன்றும் கூறாவிட்டாலும் முகம் இயல்பு நிலைக்கு வர வசந்தனுக்கு விளங்கிவிட்டது வசந்தியின் நிலை.

 

வசந்தியின் மனதில் வேறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாள் இருக்க வேணுமாம் என்று அவன் சொல்ல, நீங்கள் உடன எங்கையாவது ஒரு வீடு பாருங்கோ. நான் திரும்ப உங்கட அக்காவீட்ட வரமாட்டன். எனக்கு தனிய நின்மதியா இருக்க வேணும். அவவுக்கு நான் என்ன அடிமையே அவவின்ர விருப்பத்துக்கு இருக்கவும் சமைச்சுச் சாப்பிடவும் என  வசந்தி கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தன் இடைமறித்து அக்காக்கள் என்ன நினைப்பினம் என்றான். உங்கட அக்கா என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை.உங்களுக்கு அக்காவோடை இருக்க விருப்பம் எண்டால் போய் இருங்கோ. நான் தடுக்கவில்லை. ஆனால் நான் நீங்கள் மருந்து தந்த விஷயத்தை இங்க சொன்னன் எண்டால் நீங்கள் ஜெயில்லையும் போய் இருக்கலாம் என்றாள். வசந்தனின் முகம் இருண்டு போவதை ஒருவித சந்தோசத்துடன் பார்த்தவள், போங்கோ இங்க நிக்கிற நேரம் வீடு பாக்கிற அலுவலைப் பாருங்கோ என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துவிட்டாள். சிறிது நேரம் வசந்தன் அங்கேயே நின்றுவிட்டு போவது தெரிந்தது. மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. ஆனாலும் என்ன செய்வது. இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் வராது என எண்ணி அமைதியடைந்தாள்.

வசந்தன் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்ற பயத்திலோ என்னவோ உடனேயே வீடு தேடி எடுத்துவிட்டான். தங்கள் இருவரின் பொருட்களை எல்லாம் புதிய வீட்டுக்கு மாறிவிட்டே வசந்தியை மருத்துவமனையிலிருந்து அங்கு கூட்டிக்கொண்டு போனான். ஒரு படுக்கை அறை கொண்ட வீடுதான் என்றாலும் தானும் கணவனும் மட்டும் இருக்கப் போகிறோம் என்னும் நினைப்பே வசந்திக்கு புத்துணர்வைத் தந்தது. அதுவே அவளை மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டும் வந்தது.

வசந்தன் மறந்துபோய் தன்னும் தமக்கை ஆட்களைப் பற்றிக் கதைக்கவில்லை. கொஞ்சநாள் போக வசந்தியும் வேலைக்குப் போக வேண்டும் என எண்ணி வேலை தேடியபோது, பக்கத்து நகரில் ஒரு பெரிய நிறுவனத்தில் நிறையப்பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு விண்ணப்பித்தாள். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்ததும் வசந்தன் இவ்வளவு தூரத்துக்கு வேலைக்குப் போகப் போறீரோ என்றான். பக்கத்தில ரெயின் ஏறினால் அங்கயும் பக்கத்தில வேலை. இதில உங்களுக்கு என்ன கஸ்ரம் என்று சிரித்துவிட்டு வசந்தி கிளம்பினாள்.

அங்கு சென்றவுடன் பார்த்தால் ஒரு முப்பது நாற்பது பேராவது இருக்கும். கடவுளே எனக்கு வேலை கிடைச்சிடவேணும் என கடவுளை வேண்டியபடி காத்திருக்க உள்ளே அழைத்து அதிக கேள்விகேட்டு பதட்டப்பட வைக்காமல் ஐந்து மாதங்கள் வேலைக்கு பதிந்தனர். நன்றாக வேலை செய்பவர்களைப்பார்த்து நிரந்தரமாக்குவார்கள். அது ஒரு பிஸ்கட் மற்றும் சொக்ளற்  செய்யும் தொழிற்சாலை. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வேலை செய்கின்றனர். இரண்டு நாட்கள் செல்ல முதல் நாளாக வேலைக்குச் சென்றவளுக்கு, அங்கு இன்னும் இரண்டு தமிழ் பெண்களைக் கண்டதும் மகிழ்ச்சி பெருகியது. அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துச் சிரிக்க இவளும் சிரித்தாள். கிட்டப் போய் கதைக்கவேண்டும் போல் இருந்தாலும் இதனை பேர் நிற்கையில் போய் கதைப்பதற்க்கு ஒருமாதிரி இருந்தது.

ஆனால் அந்த இருவரில் ஒருபெண் துணிவாக இவள் அருகே வந்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நான் இங்கு ஒருநாளும் உங்களைக் காணவில்லையே என்றாள். நான் இங்கு இருப்பதில்லை பக்கத்து நகரில் இருக்கிறேன் என்றுகூறிவிட்டு நட்பாகச் சிரித்தாள். வசந்திக்கு அவளை நன்கு பிடித்துவிட்டது. தன் பெயர் நித்தியா எனக் கூறி வசந்தியின் பெயரையும் அறிந்துகொண்டாள் அவள். உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா என வசந்தி கேட்க ஏன் கேட்கிறீர்கள் வந்ததும் வராததுமா. கலியாணத் தரகர் வேலை பார்க்கிறீர்களோ எனச் சிறித்தபடியே கேட்க இல்லை எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். உங்களுக்குத திருமணம் ஆகவில்லை என்றால் அவனுக்கு உங்களைக் கட்டி வைக்கலாம் என்று உங்களைப் பார்த்தவுடனேயே என் மனதில் ஆசை தோன்றியது. அதுதான் கேட்டேன் என்று கூறிவிட்டு நித்தியாவைப் பார்த்தாள். எனக்கு இரண்டு வருடங்களின் முன்பே  திருமணம் ஆகிவிட்டது என நித்தியா கூற, இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
இப்படியாக ஆரம்பித்த அவர்கள் உறவு வசந்தி தன உள்ளக்கிடக்கையை எல்லாம் நித்தியாவுக்குக் கொட்டித்த் தீர்க்கும் அளவு நெருக்கமானது. அதற்கு இன்னொரு காரணம் அவர்கள் இருவரும் ஒரே பகுதியில் ஒருவருக்கு முன் ஒருவர் இருந்து கதைக்கக் கூடியதாக இருந்ததும் காரணம்.

நித்தியாவைச் சந்தித்ததன் பின்னர், வசந்தியின் மனச்சுமைகள் குறைந்துபோயின. வசந்தனிடம் கூட மாற்றம் தெரிவதாகப் பட்டது வசந்திக்கு. எப்படி ஐந்து மாதங்கள் ஓடிப்போனது என்று தெரியவில்லை. வசந்திக்கு ஏனோ தெரியவில்லை வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. நித்தியாவுடனான நட்பின் நெருக்கம் இப்போது அதிகரித்துவிட்டதால் வேலையை விட்டு நிற்பதிலும் நித்தியாவுடனான அந்த நேரம் இல்லாமற் போகிறதே என்ற வருத்தம் தான் வசந்திக்கு. ஆனாலும் என்ன தொலைபேசியில் கதைக்கலாம் தானே என மனதைத் தேற்றிக் கொண்டாள்  வசந்தி.

அடுத்தடுத்த வாரங்களில் நித்தியா வசந்தியின் வீட்டுக்கு வருவதாகக் கூறியதில் மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. நித்தியாவுக்கும் வசந்தி வசந்தனைப் பற்றிக் கூறியதில் இருந்து வசந்தனை ஒருமுறை பார்த்துப் பேசவேண்டும் போல் இருந்தது. தன்  கணவனையும் கூட்டிக்கொண்டு வசந்தியின் வீட்டுக்குச் சென்றால், திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.


தொடரும்................

 

Link to comment
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

Link to comment
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!



கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:



ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் இசை, நிலா அக்கா,காளான், தமிழினி, அலை ஆகிய உறவுகளே நன்றி.

 



கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 



இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

 

இந்தக் கதை என்னுடையது இல்லை என்று கூறியும் நீங்கள் நம்பவில்லை. என் குடும்பம், பெற்றோர் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் இப்படிக் கூற மாட்டீர்கள் அண்ணா.

 

 

Link to comment
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:

ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

 

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

Link to comment
Share on other sites

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 

சும்மா பகிடிக்கு சொன்னேன். வசந்தி மாதிரி பாதிக்கபட்ட  பெண்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

 
கதை நன்றாக போகிறது. தொடருங்கள் சுமே.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

 

ஆண் ஆணாக இருக்கும்வரை பெண்ணும் பெண்ணாகவே இருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். விதிவிலக்குகளும் இருக்கும்தான். விதியை மாற்ற முடியாதுதானே.

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

எத்தனையோ கதைகள் உலகில் ஒரேமாதிரி நடப்பதுதானே வாத்தியார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

 

அவ தான் சுமோ :lol:
 

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

Link to comment
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

 

Link to comment
Share on other sites

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

 

 

உங்களால பச்சை போச்சு :lol:

 

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

சாந்தியே இப்ப பொறுமையா இருக்கு. மற்றவைக்கு என்ன அவசரம் என்று கேட்கிறன். :lol:

 

 

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 

 

 

நான் ஏமாளி இல்லை வந்தி :D

 

 

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

 

ஓடாமல் இருக்கிறது  தான் பிரச்சனையே :huh:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

 

தாற லிங்கை ஒழுங்காத் தாறேல்லையோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 17

வசந்தியிலும் பார்க்க வசந்தனே ஓடியோடி உபசரித்தான். நித்தியா கொஞ்சநேரம் திக்குமுக்காடித்தான் போனாள். இதில் வசந்தி கூறுவது உண்மையா அல்லது வசந்தனுக்குப் பல முகங்கள் இருக்கா என ஒருவிதக் குழப்பம் மனதை ஆட்கொள்ள குழப்பத்துடன் அவள் கணவரும் வசந்தனும் சுவாரசியமாக உரையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வசந்தி எல்லோருக்கும் தேநீரைப் பரிமாறிவிட்டு, வாங்கோ நித்தியா நாங்கள் சமைத்துச் சமைத்துக் கதைப்போம் எனக் கூப்பிட்டதில் நின்மதியாகி எழுந்து அவளுடன் சென்றாள். குசினிக்குள் சென்றதுமே என்ன வசந்தி அக்கா நீங்கள் கூறியதுக்கும் உங்கள் கணவருக்கும் சம்மந்தமே இல்லைபோல் இருக்கே என தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டாள். உண்மைதான் நித்தியா. அவர் மற்றவர் முன்னாள் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்னவும் செய்வார் என்றாள்.

வசந்தியிலும் நித்தியா நான்கு வயது இளையவளாதளால் என்னதான் நட்பாக இருந்தாலும் அக்கா என்னும் பதத்தைப் பாவிக்கத் தவறுவதில்லை. நித்தியா இத்தனை நாட்களாக நான் யாரிடமும் எதையும் சொல்லி மனதை அற்ற முடியாமல் இருந்தேன். இப்ப உங்களைச் சந்தித்தபிறகு எனக்கு எவ்வளவு நின்மதியாக இருக்குத் தெரியுமா என்றாள். சரி எனக்குப் பிரச்சனை இல்லை. நீங்கள் எது என்றாலும் என்னிடம் கதைக்கலாம் என்று கூறி அதன்பின் பொதுவான விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.

வசந்தியின் பிரச்சனைக்கள் எதனையும் நித்தியா கணவனிடம் ஒழிக்காது கூறியிருந்தபடியால், வீட்டுக்குப் போகும்போது அவள் கணவன், என்ன நீர் சொன்னதுக்கும் வசந்தனுக்கும் தொடர்பே இல்லைப்போல் இருக்கே என்று தன் சந்தேகத்தைக் கூறினான். நானும் வசந்தி அக்காவிடம் அதைத்தான் கேட்டேன். அவர் மற்றவர் முன்னாள் இப்படித்தான் வேடம் போடுவார் என்று அவ கூறினா என்றதற்கு, சரி போகப் போக எங்களுக்கே விளங்கும்தானே என்று அத்தோடு அவர்கள் கதையை விட்டனர் இருவரும்.

மூன்றாவது தடவை வசந்தி கர்ப்பமானாள். இம்முறை மகிழ்வை உடனே கணவனிடம் பகிர்ந்துகொள்ளாது நித்தியாவிடம் மட்டும் கூறினாள் வசந்தி. மூன்று மாதம் முடியும் வரை வசந்தனுக்குக் கூறவேண்டாம் என்ற அறிவுரையை வசந்தி கேட்டாளாயினும் மனம் வசந்தனிடம் இன்னும் கூறவில்லையே என குறுகுறுக்கத்தான் செய்தது. ஆனாலும் இம்முறை குழந்தையை நல்லபடியாகப் பெற்றே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

வசந்தனும் அதற்கிடையில் நல்ல வேலை ஒன்றை எடுத்துவிட்டதனால் அந்த வேலைப் புலாதியில் இவளைக் கவனிக்கவில்லை. இவளுக்கு அது வசதியாகப் போயிற்று. மூன்று மாதங்கள் கழிந்தபின் வைத்தியரிடம் சென்று நிட்சயம் செய்தபின் வசந்தனிடம் கூறினாள். அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை. எதிர்மறையாக எதுவும் கூறவும் இல்லை. சாதாரண செய்தி ஒன்றைக் கேட்பதுபோல் கேட்டுவிட்டு இருந்தான். அதன்பின் அவன் கொஞ்சம் மாறியதுபோல் இருந்தது. உமக்கு என்ன விருப்பம் சொல்லும் வாங்கிக் கொண்டு வாறன் என்பான். வாரும் வெளியே நடந்துபோட்டு வருவோம் என்பான். சில நேரம் தானே சமைக்கிறேன் என்பான். வசந்திக்குச் சந்தேகம் உடனே வரும். ஏன் மருந்து ஏதும் சாப்பாட்டுடன் போட்டுத் தரப்போறீங்களோ என் நேரடியாகவே தாக்குதல் தொடுத்தாள்.

நீர் என்னை இன்னும் நம்புகிறீர் இல்லை முந்தி அக்காவின்ர  சொல்லைக் கேட்டு நான் உம்மோட அப்பிடி நடந்திட்டன். இப்ப நான் அக்காக்களோட கதைக்கிறதே இல்லையே. பிறகும் ஏன் சந்தேகப் படுறீர் என்று கேட்டதன் பின் வசந்தி அவனைக் காயப்படுத்துவதில்லை. குழந்தை வயிற்றில் வளர வளர வசந்தியும் பூரித்து வசந்தனுடன் ஒன்றி வாழப் பழகிக் கொண்டாள். பத்து மாதத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டாம் நாள் வசந்தன் வந்தபோது, வசந்தி கோவிக்காதையும் அக்கா பிள்ளையைப் பார்க்க வரப்போகிறாவாம். நான் உம்மட்டைக் கேட்டுப்போட்டுச் சொல்லுறன் எண்டனான். வரச் சொல்லட்டோ என்றான். அவவை என்னத்துக்கு. அதுதான் வேண்டாம் என்று விட்டாச்சே. பிறகென்ன. இல்லை வசந்தி அவ எனக்கு அக்கா. என்னதான் கோபதாபம் என்றாலும் இப்பிடியான நேரத்தில தான் ஒன்று சேருறது. என்னில சின்னனிலை இருந்தே சரியான அன்பு. பிள்ளையைப் பாக்கப்போறன் எண்டு சொல்லேக்கை எப்பிடி வேண்டாம் என்று சொல்லுறது என்றதற்கு  சரி உங்களுக்காக அவவை வர விடுறன். ஆனால் அதுக்காக வீட்டை வந்து சொந்தம் கொண்டாட விடமாட்டன் என்று கறாராகக் கூறினாள்.

வசந்தனும் சம்மதிக்க அடுத்தநாள் தமக்கையும் கணவனும் வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்டதும் இவளை அறியாமல் வாங்கோ என்று வரவேற்றுவிட்டாள்  என்றாலும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. குழந்தை எங்கே என்று தமக்கைதான் கேட்டார். பொறுங்கோ எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறித் தாதிமாரிடம் சென்று குழந்தையை வாங்கிவந்து அவர்களிடம் காட்டினாள். தமக்கையை வரச் சொல்லிவிட்டு இந்தாள் எங்கே போய்த் தொலைந்தார் என்று எரிச்சல் ஏற்பட்டது. நல்ல காலம் அவர்களுக்கும் இவளுடன் என்ன பேசுவது என்று தெரியாததால் என்ன பெயர் வச்சிட்டியளோ? எத்தினை கிலோ ? இப்பிடிப் பொதுவாகக் கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். இவள் முருகனைத்தான் தினமும் வணங்கி தனக்கு பிள்ளை ஒரு குறையும் இன்றிப் பிறக்கவேண்டும் என்று கும்பிட்டதால் அவனின் பெயரையே பிள்ளைக்கும் வைத்தாயிற்று.

குழந்தை பிறந்தபின் வசந்தனும் வேலை நேரம்போக மிகுதி எல்லாம் மகனுடனும் மனைவியுடனுமே கழித்ததால், கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார் என்று வசந்தி கடவுளுக்கு நன்றி சொல்வதும் தீபம் காட்டி வழிபடுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இரண்டு வருடங்கள் வசந்திக்கு வசந்தகாலமானது. இன்னொரு பெண் குழந்தையும் பிறந்து நித்தியாவுடனான நட்பும் நெருக்கமாகி, இவள் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்கு  வைத்தியசாலைக்குச் சென்றபோது நித்தியாவே கணவனுடன் இவள் வீட்டில் வந்து நின்று இவள் முதல் மகனை ஒரு வாரங்கள் பார்க்குமளவு வளர்ந்தது.

வசந்தன் வேலை ஒன்று மாறிய படியால் லீவு எடுக்கும் பிரச்சனை இருந்தது. சரி முன்பு வசந்தன் எப்படியோ. இப்போது நல்லா மாறிவிட்டான். வீடு வாசல் கூட முன்பு இருந்ததைவிட வசதியாக, நன்றாகத்தான் வசந்தியை வைத்திருக்கிறான். உண்மையில் திருந்தித்தான் விட்டான். ஒருவன் தவறுசெய்தால் அவனை எப்போதும் குற்றவாளியாகவே பார்ப்பதும் தவறு என எண்ணிக்கொண்டு நித்தியாகூட அவனை மதித்து இயல்பாய்க் கதைக்கத் தொடங்கினாள்.

தொடரும்........

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.