Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்............

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனநாளா கதை கதையாம் பகுதிக்குள் வராததால் முழுமையாகப் படிக்கவில்லை படித்து முடித்ததும் கருத்திடுகிறேன்.

 

தொடருங்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி விசுகண்ணா, ஜீவா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் இதைப் பார்த்தேன் , கதையை ஆரம்பத்திலிருந்து படித்ததும்  கருத்து வைக்கின்றேன் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 18

வசந்தனுக்குக் கொஞ்ச நாட்களாகவே ஒரு கடை எடுத்து நடத்தினால் என்ன என்ற எண்ணம் எழுந்திருந்தது. சும்மா மற்றவனிடம் போய் கை ஏந்துவதிலும் நாமே எம்மிடம் வேலை செய்வது சுதந்திரமானது என எண்ணி வசந்திக்கும் அதைச் சொன்னான். வசந்திக்கும் அதைக் கேட்டதும் ஆசை தோன்றிவிட்டது. இங்கு தமிழர்கள் ஒருசிலர் தான் கடை நடத்துகிறார்கள். நாங்களும் நடத்தினால் நல்ல காசு வரும் என நினைத்துக்கொண்டு கணவன் கடை எடுப்பதற்கு உதவினாள். கடை என்றால் சும்மாவா?? முதலும் வேண்டும்தானே. நானும் கொஞ்சம் மாறிறன் நீயும் உனக்குத் தெரிஞ்சவையிட்டைக் கேட்டுப் பார் என்றான் வசந்தன். கணிசமான முதலை வைத்துக்கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கவேண்டும் என்னும் அடிப்படை அறிவுகூட இல்லாது வசந்தியும் தனக்குத் தெரிந்த சிலரிடம் விசாரித்தாள். யாரும் பணம் கொடுப்பதாக இல்லை. வேறு வழியின்றி நித்தியாவிடம் கொஞ்சம் கேட்டபோது நித்தியா தருவதற்கு ஒப்புக்கொண்டாள்.  வசந்தனும் தான் கொஞ்சம் மாறியதாகக் கூறியபோதிலும் யார் எவரிடம் என வசந்தியும் கேட்கவில்லை. கடை திறந்துவிட்டனர். கடைக்கு மேலேயே வீடும் இருந்ததால் வசந்தியும் கடையில் நிக்க வசதியானது. வசந்தனைப் பார்த்து எல்லோரும் பொஸ் என்று கூப்பிடுவது அவனுக்குப் போதையைத் தந்தது. அப்படிச் சொல்லியே பலர் அவனிடம் கடன்வாங்கினார்கள். அதைத் திரும்பக் கொடுக்காமலும் விட்டனர். அதனால் பலர் கடைக்கு வராமல் வேறு கடைக்குச் சென்றனர்.

முதல் மாதம் எல்லாம் குழப்பமாக இருந்தது. இரண்டாம் மாதம் கடை பெரிதாக லாபம் பார்க்கவில்லை என்று புரிந்தது. மூன்றாம் மாதம்தான் தான் யாரிடமோ வட்டிக்குத்தான் பணம் வாங்கினேன் என்ற விடயத்தை வசந்திக்குக் கூறினான் அவன். வட்டிக்கு வாங்கி யாராவது கடை நடத்த முடியுமோ என்று ஏங்கிப் போனாள் வசந்தி. மேற்கொண்டு கணக்குப் பார்த்ததில் கடை நட்டத்தில் ஓடுவது புரிய கடையை இழுத்து மூடிவிட்டு மீண்டும் வசந்தன் வேலைக்குப் போனான். வசந்தி நித்தியாவிடம் எடுத்துப் புலம்ப, வட்டிக்குக் காசு வாங்கிக் கடை போடுகிறீர்கள் என்றால் நான் வேண்டாம் என்றுதான் கூறியிருப்பேன். அப்படிக் கூறியிருந்தாலும் நான் எரிச்சலில் கூறுவதாகவே நீங்கள் எண்ணியிருப்பீர்கள் என்று சொல்லி நிறுத்தினாள் நித்தியா. என்ன நித்தியா நான் உங்களை அப்பிடி நினைப்பேனா? நீங்கள் என்ன புத்திமதி என்றாலும் சொல்லலாம் என்று கூறினாள்.

பிள்ளைகள் வளர்ந்து பாடசாலைக்குச் செல்லத் தொடங்கியதும் வசந்தியும் வீட்டிலிருக்காது முழுநேர வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து நித்தியாவின் பணத்தைத் திரும்பக் கொடுத்தனர். வட்டிப்பணம் எல்லாம் அடைத்தாயிற்று. கொஞ்சம் கையில் பணம் சேரத் தொடங்கியது. வசந்தனும் தன் தம்பி தங்கையைக் கூப்பிடவேணும் என்று கூற, வசந்தியும் சம்மதித்தாள். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குப் பணம் போகிறது. தம்பியார் வந்தாலாவது இவர்கள் பணம் அனுப்புவதை நிப்பாட்டலாம் என்ற எண்ணம் அவளுக்கு. இதற்குள் தமக்கை தொலைபேசி எடுத்து தம்பி அம்மா அப்பா ஆட்களையும் ஒரேயடியாகக் கூப்பிடுவம் நானும் காசு தாறன் என்றதில் வசந்தன் நான்கு போரையும் ஒன்றாகக் கூப்பிட ஒழுங்குகள் செய்தான். ரஸ்சியாவில் இங்கு வருவதற்கு வந்து அவர்கள் நின்றபோது வசந்தனின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட வசந்தன் மனைவி பிள்ளைகளுடன் அங்கு சென்று தந்தையின் இறுதிச் சடங்கை நடத்தும் அலுவலைப் பார்த்தான். வசந்தன் குடும்பத்துடன் சென்றதைக் கேள்விப்பட்டு தமக்கையும் கணவன் பிள்ளைகளுடன் போய் இறங்கினாள். அப்பாவின் இறுதி நிகழ்வை நல்லபடியா நடத்த வேணும் என்று தமக்கை வசந்தியிடம் கூறியதை, வசந்தி என்னிடம் இப்படிக் கூறுகிறாரே இன்னும் வடிவா நடத்திக் காட்ட வேணும் என்று, எல்லோரும் ஒருவாரம் தங்க வசதியான வீடு, சமையல் செய்ய ஆள், எல்லோருக்கும் ஒரே மாதிரி கறுப்பு ஆடைகள், காலணிகள், விலை கூடிய சவப்பெட்டி, குதிரையில் ஊர்வலம் என காசை தண்ணீராக இறைத்தனர். ஆனால் குதிரை வண்டிக்குப் பின் போனது இந்த இரு குடும்பமும் மட்டும்தான். வசந்தனோ வசந்தியே இப்படி முன்னின்று எல்லாம் செய்வாள் என எதிர்பார்க்காததால் திணறித்தான் போனான். போதாதற்கு தமக்கையும் தங்கையும் அண்ணி அண்ணி என்று எல்லாவற்றிற்கும் வசந்தியை அழைத்ததில் வசந்திக்கு போதை கண்ணை மறைத்தது. தமக்கை கொடுப்புக்குள் சிரிப்பதை இருவருமே கவனிக்காது எல்லாமே தங்கள் கடமை என எண்ணி அங்கு நின்றே எல்லோரையும் அனுப்பிவிட்டு வந்து சேர்ந்தனர்.

ஒரு வாரத்தின் பின் வங்கியிலிருந்து மேலதிகமாகப் பணம் எடுத்ததற்கான வட்டியுடன் கடிதம் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் தான் போதை தெளிந்தது இருவருக்கும். வசந்தன் தமக்கையிடம் நீங்கள் அம்மா அப்பாவைக் கூப்பிடத் தாறன் எண்டு சொன்ன காசைத் தாங்கோ அக்கா. வங்கிக்குப் பணம் கட்டவேண்டும் என்று கேட்க, இரண்டுபேரையும் எங்க கூப்பிட்டனி. அம்மா மட்டும்தானே வந்தவ. அப்பாவின்ர செத்தவீட்டுக்கு நாங்கள் வந்த சிலவே எனக்குக் கடன். உன்ர கடமைதானே பெத்தவையைக் கூப்பிடுறது என்று கூசாமல் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாள் தமக்கை. வசந்தன் வேறு ஒன்றும் செய்ய முடியாது அழுவார் போல் மீண்டும் வசந்தியிடம் வந்து நின்றான். வசந்தி ஒன்றும் செய்ய முடியாது தன்னிடம் இருந்த நகைகளை மீண்டும் இழக்கவேண்டியதாயிற்று. சரி வசந்தி நான் இரண்டு மடங்காச் செய்து தாறன் அடுத்த வருஷம் என்று வசந்தன் கூறியது போலவே செய்தும் கொடுத்ததில் வசந்திக்கு வசந்தன்மேல் அன்பு பெருகியது.

வசந்தியின் ராசியோ என்னவோ ஒரு வேலை விட்டால் நான்கு வேலை வாசலில் வந்து நிற்கும். எங்கு சென்றாலும் என்ன கடினமான காரியமென்றாலும் செய்துகொண்டு வந்துவிடுவாள். வசந்தன் எது செய்ய ஆரம்பித்தாலும் சாண் ஏற முழம் சறுக்கும். இம்முறை ஒழுங்காக ஒன்று செய்து என்னாலும் செய்ய முடியும் என்று காட்டவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். இப்போது வசந்தன் ஒரு தங்கு விடுதியில் நைட் ஓடிற்றர் வேலை. நல்ல வெட்டுக்கொத்து. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது. இம்முறை வசந்தியை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டும் என முடிவுகட்டினான். வசந்திக்குத் தெரியாமலே எல்லா அலுவலையும் முடித்துவிட்டான். இன்னும் ஒன்றுதான் மிச்சம். அவள் செய்து முடிக்கும் வேலைகள் எல்லாம் நான் செய்ததில் அடிபட்டுப்போய்விடும் என கனவுகண்டுகொண்டு  நாலாம் நாள் வசந்தியை ஓரிடத்துக்குப் போகவேண்டும் வா என்றான். அவள் எங்கே என்று கேட்டதற்கு, நீர் நினைத்துப் பார்க்க முடியாத பரிசு ஒன்று உமக்குத் தரப்போறன். பேசாமல் வா என்றதும் எதோ நகையோ உடையோ வாங்கித் தரப் போகிறான் என்றுதான் அவள் நினைத்தாள். வக்கீலிடம் கூட்டிக்கொண்டு சென்றபோது என்ன இங்க வந்திருக்கிறம் என்றாள் அவள் யோசனையுடன். வந்ததுதான் வந்தீர் கொஞ்சம் பொருமன் என்றதும் அவளும் சரி தானாத் தெரிய வரும் தானே என பேசாதிருந்தாள்.

சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்படப்  போனால் வசந்தன் இவர்கள் பெயரில் ஒரு வீடு வாங்க ஒழுங்கு செய்திருந்தான். இன்றுதான் ஒப்பமிட்டு தமதாக்கிக் கொள்ளப் போகின்றனர். வசந்தி வாயைப் பிளக்காத குறைதான். தன் கணவன் இத்தனை கெட்டிக்காரனா. மூச்சுவிடாது இத்தனை பெரிய வேலையைச் செய்து முடித்திருக்கிறானே என எண்ணியதில் ஏற்பட்ட மகிழ்வில் மூச்சுத் திணறியது. வெளியே வந்ததும் வாய்விட்டே அவனிடம் அதைக் கூறினாள். அவளின் புகழாரத்தைக் கேட்டதும் வசந்தனுக்கும் தலைகால் புரியவில்லை. இருவரும் புதிய காதலர்கள் போல் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கையோடு ஒரு சிறந்த உணவகத்துக்கும் அவளை அழைத்துச் சென்று அந்த சந்தோசத்தைக் கொண்டாடிவிட்டுப் புதிய வீட்டைக் காட்ட வசந்தன் அவளை அழைத்துப் போனான்.

வீட்டைப் பார்த்ததும் வசந்திக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். இவன் புதுவீடு தான் வாங்கிவிட்டான் என்று கட்டிய கோட்டையில் மண் விழுந்ததில் சோர்வு ஏற்பட்டது. சரி இதையாவது வாங்கினானே என ஒருவாறு மனதைத் தேற்றிவிட்டு நித்தியாவுக்கு தொலைபேசியில் விபரம் கூறி வரும்படி அழைத்தாள். நித்தியாவும் கணவனும் வந்தனர். வீட்டின் விபரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு அவசரப்பட்டுவிட்டீர்கள் வசந்தன். இப்பிடிப் பெரிய சொத்தை வாங்கும்போது நாலு பேரிட்டைக் கேட்கவெல்லோ வேணும். பழைய வீடுகள் யேர்மனியில் போகப்போக விலை குறைந்துகொண்டு போகுமே. புதுவீடாக வாங்கியிருக்கலாமே. அதற்கு அரசாங்கமும் பணம் கொடுக்கிறதே என்று நித்தியாவின் கணவன் கூறியதைக் கேட்டதும் வசந்திக்கு தலை சுற்றியது. இப்ப என்ன கொஞ்ச நாள் போக இதை வித்துப்போட்டு புதிதாய் ஒன்றை வாங்கலாம் என்று வசந்தன் கூறிய மழுப்பல் கதைக்குப் பின் நித்தியாவும் கணவனும் வீடு பற்றிக் கதைக்கவே இல்லை.

கணவன் வேலைக்குப் போனபின் வசந்தி பத்திரிகை வாங்கி வீடுகள் பற்றி எல்லாம் ஆராய்ந்ததுடன் மட்டுமல்லாது, தெரிந்த சிலரிடம் தாம் வீடு வாங்கிய விடயத்தைக் கூறாது விசாரித்ததில் வசந்தன் பார்த்திருக்கும் மடை வேலை புரிந்தது. அவனால் ஏற்பட்டிருந்த பூரிப்பும், அவன்மேல் இருந்த மதிப்பும் இறங்க அடுத்து வந்த நாட்கள் ஒரே வாய்த்தர்க்கத்தில் கழிந்தது. முன்புபோல் இல்லாமல் வசந்தனிடம் குடிப்பழக்கமும் புகைப்பிடிக்கும் பழக்கமும் அதிகரித்தது. இவள் அதற்கும் சண்டை போட்டாள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் புகை பிடிக்கவே கூடாது என அங்கு பிடிப்பதைத் தடை செய்தாள்.

கையில் காசு புழங்கியதால் இவர்களை அடிக்கடி விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் இடங்கள் சுற்றிப் பார்க்க என்றும் விதவித ஆடைகள் விளையாட்டுப் பொருட்கள் என்றும் வாங்கிக் குவித்தான். வசந்தியும் எவ்வளவோ சொல்லிப் பறத்தும் அவன் கேட்பதாக இல்லை.
நித்தியாவிடம் புலம்பியபோது மாதா மாதம் நம்பிக்கையானவர்களிடம் சீட்டுப் போடும்படியும் அவனைச் சொல்லி அந்தக் காசைக் கட்டும்படியும்  யோசனை கூறினாள். அது பலிக்கவே செய்தது.

அதற்கிடையில் வசந்தியின் தாய் அவளின் தம்பியார் அங்கிருக்கப் பயம் ஆமி பிடிச்சுப்போடுவான் எனக் கூறியதில், வசந்தி தனக்கு அந்தக் கடமை இருக்கு என்று தம்பியாரைக் கூப்பிட்டு விட்டு நிமிர தங்கை வந்து கொழும்பில் நின்றாள். வசந்தன் எதுவுமே கதைக்காதது வசந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் சகோதரர்களையும் கூப்பிட்டதுதானே அவர் என்ன சொல்வது என எண்ணிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்  வசந்தி.


தொடரும்........

 

 

நன்றி சுவி அண்ணா

 

 

Link to comment
Share on other sites

வசந்தனும் தான் கொஞ்சம் மாறியதாகக் கூறியபோதிலும் யார் எவரிடம் என வசந்தியும் கேட்கவில்லை. கடை திறந்துவிட்டனர்.

 

இவ்வளவு அப்பாவித்தனமாக இருப்பார்களா ?

 

சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்படப்  போனால் வசந்தன் இவர்கள் பெயரில் ஒரு வீடு வாங்க ஒழுங்கு செய்திருந்தான். இன்றுதான் ஒப்பமிட்டு தமதாக்கிக் கொள்ளப் போகின்றனர். வசந்தி வாயைப் பிளக்காத குறைதான்.

 

நடைமுறையில் ஐரோப்பிய நாட்டில் இது சாத்தியமற்றது. கார் வாங்குவதுபோல் அல்ல வீடு வாங்குவது. தான் பார்க்காமல் ஒரு வீட்டை வாங்குவதை எந்த மனைவியும் விரும்ப மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் செய்த விசர் வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் அல்லது வசந்தி பொய் கூறுவதாக இருக்கலாம். இருவரையும் இருத்திவைத்துக் கேட்டாலன்றி யார் கூறுவது சரி என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை? 

பெண் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்த சமாளித்து போனபோது பலராலும் கருத்து வைக்கப்பட்டது முக்கியமாக எமது ஆண் குலத்தால்.

தற்பொழுது ஆணின் வேடம் அக்கு வேறு ஆணி வேறாக நாறிக்கிடைக்கையில் எல்லா ஆண்களுமே ஓடி ஒழிந்து கொண்டு விட்டது தெரிகிறது.  இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால்  மாப்பிள்ளை  ஆனாலும் பிணம் ஆனாலும  எமக்குத்தான் மாலை. :D

 

வாழ்வில் இதெல்லாம் சகசமப்பா.   வாங்கோ.  வந்து ஆண்குலத்தை நிமிர்த்து வழியைப்பார்ப்போம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் கூறியது போன்று கதையின்  சில இடங்களில் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கின்றது. வாழப் போகின்ற வீட்டை முன்கூட்டியே பார்க்காமல் எந்தப் பெண்ணும் வாங்க அனுமதிக்க மாட்டார்.

 

ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கியும் கதாநாயகி இன்னும் திருந்தவில்லை.

 

அல்லது ஆண்குலத்தை தாழ்த்துவதற்காகவே அப்படியான கதாநாயகி படைக்கப்படுகின்றாரா? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை? 

பெண் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்த சமாளித்து போனபோது பலராலும் கருத்து வைக்கப்பட்டது முக்கியமாக எமது ஆண் குலத்தால்.

தற்பொழுது ஆணின் வேடம் அக்கு வேறு ஆணி வேறாக நாறிக்கிடைக்கையில் எல்லா ஆண்களுமே ஓடி ஒழிந்து கொண்டு விட்டது தெரிகிறது.  இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால்  மாப்பிள்ளை  ஆனாலும் பிணம் ஆனாலும  எமக்குத்தான் மாலை. :D

 

வாழ்வில் இதெல்லாம் சகசமப்பா.   வாங்கோ.  வந்து ஆண்குலத்தை நிமிர்த்து வழியைப்பார்ப்போம்.  :D

 

நீங்கள் அழைத்தது வாத்தியாருக்குக் கேட்டுவிட்டது விசுகண்ணா. கை கொடுக்க ஓடி வந்துவிட்டார்.

 

 

இணையவன் கூறியது போன்று கதையின்  சில இடங்களில் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கின்றது. வாழப் போகின்ற வீட்டை முன்கூட்டியே பார்க்காமல் எந்தப் பெண்ணும் வாங்க அனுமதிக்க மாட்டார்.

 

ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கியும் கதாநாயகி இன்னும் திருந்தவில்லை.

 

அல்லது ஆண்குலத்தை தாழ்த்துவதற்காகவே அப்படியான கதாநாயகி படைக்கப்படுகின்றாரா? :D

 

நாம் நம்பமுடியாத, எதிர்பாராத விடயங்கள் உலகில் நடப்பதுதானே வாத்தியார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

நாம் நம்பமுடியாத, எதிர்பாராத விடயங்கள் உலகில் நடப்பதுதானே வாத்தியார்.

நம்ப முடியாத விடயங்கள் உலகில் நடப்பது வழமை.

 

இந்தக் கதையிலேயே பல விடயங்கள் நம்ப முடியாதபடி நடந்திருக்கே :D  :lol:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் சரியான பாவங்கள் விட்டுவிடுவம்..அந்த அக்காவுக்கு வேணும் என்றால் போச்சி போத்தல்(feeding bottle) ஒன்று வாங்கி அனுப்பி விடுறன். முகவரியை தனிமடலிடுங்கள் சுமோ அக்கா..

 

 

Feeding-Bottle.jpg

 

Link to comment
Share on other sites

சிலர் பாடசாலையில் கற்றும் உலகத்தை அனுபவத்தால் கற்றும் திருந்துவதில்லை என தெரிகிறது. தவறுகளில் இருந்து கற்றது போலவும் தெரியவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் சரியான பாவங்கள் விட்டுவிடுவம்..அந்த அக்காவுக்கு வேணும் என்றால் போச்சி போத்தல்(feeding bottle) ஒன்று வாங்கி அனுப்பி விடுறன். முகவரியை தனிமடலிடுங்கள் சுமோ அக்கா..

 

 

இதில கடைசிக்கு முதல் இருக்கிற போத்தலை அனுப்பிவிடுங்கோ யாயினி. :D

 

 

சிலர் பாடசாலையில் கற்றும் உலகத்தை அனுபவத்தால் கற்றும் திருந்துவதில்லை என தெரிகிறது. தவறுகளில் இருந்து கற்றது போலவும் தெரியவில்லை.

 

சிலர் அனுபவத்திலோ அல்லது தவறுகளிளிருந்தோ திருந்தாமல் இருப்பது அவர்களின் குறைபாடு அல்லது ஒருவகை மன நோயாகக் கூட இருக்கலாம்

 

 

நித்யாவின் கணவர் நல்லவரா ? இல்லை ஆண்களை (உங்கள் கதைகளில் வரும்) போல கெட்டவரா ?

:D

 

சரி உங்களுக்காகவே ஒரு நல்ல ஆணின் கதை எழுதுகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பச்சை இன்று போட்டேன் ..தொடருங்கோ....

அவர் மற்றவர் முன்னாள் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்னவும் செய்வார் என்றாள்
இந்த தொப்பி எனக்கு அளவு போலகிடக்கு..... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பச்சை இன்று போட்டேன் ..தொடருங்கோ....

 

இந்த தொப்பி எனக்கு அளவு போலகிடக்கு..... :D

 

 

எங்களுக்கு முன்னால ஒத்துக்கொள்ளுறியளே. அதே பெரியவிசயம். :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, இருந்தாபோல 'எக்ஸ்பிரஸ்' ரோட்டில ஏறிட்டீங்க போல கிடக்கு! :D

 

வசந்தன், வசந்தி இரண்டு பேருமே, மாறி, மாறிக் கோவிக்கிறதையும், திரும்பச் சேருறதையும் பார்க்க, நல்ல ஒரு ரென்னிஸ் விளையாட்டுப் பார்த்தது மாதிரிக் கிடக்கு! :o

 

என்ன இருந்தாலும், கடைசியில வசந்தன்ர தலையில தான், எல்லாம் வந்து விடியும் போல கிடக்கு!

 

ஆம்பிளையள் எண்டா, இப்பிடித்தான் இருப்பினம்! :icon_idea:

 

நீங்க, தொடருங்கோ, சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பிளையள் எண்டா, இப்பிடித்தான் இருப்பினம்! :icon_idea:

நீங்க, தொடருங்கோ, சுமே!

 

நல்ல அனிமேஷன் நன்றி

 

 

Link to comment
Share on other sites

இரண்டும் கெட்டான் கதைக்கு இவ்வளவு நீளமா? இது வசந்தம் தொலைத்த வாழ்வு அல்ல, உறவுகள் தொலைத்த நேரம்தான் அதிகமாக இருக்கு.

 

சுமே கதை சொல்ல வந்து எப்படி முடிப்பது என முழிக்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 19

சகோதரர்களை அழைத்தவுடன் வசந்திக்கு கடன் மீண்டும் ஏறியது. இம்முறை வசந்தியே வட்டிக்குப் பணம் மாறி வட்டி கட்டியே கடன் கூடியது. மீண்டும் நித்தியாவிடமே பணம் வாங்கிக் கொஞ்சக் கடனை அடைத்தாயிற்று. சகோதரர்கள் வெளிநாடு வரும் வரைதான் அக்கா அக்கா என்றார்கள். நாடு பிடிபட்டவுடன் நாங்கள் யாரோ நீ யாரோ என வசநதியின் கடன் அடைக்க உதவி செய்யக் கூட வரவில்லை. தம்பாட்டிலேயே தம் வாழ்வையும் அமைத்துக்கொண்டு மூன்றாம் மனிதருக்கு கூறுவதுபோல் கூறியது வசந்தியை சொல்லொணாத் துன்பத்தில் ஆழ்த்தியது. என்ன மனிதர்கள் இவர்கள். கூடிப் பிறக்க கோடிதவம் செய்யவேண்டும் என்று கூறுவதெல்லாம் பொய்தான். பணத்தைக் கண்டதும் எல்லாமே மறக்குமோ என எண்ணிக்கொண்டாள்.

வசந்தனுக்கு இப்ப வேலை செய்யுமிடத்தில் புதிதாய் ஒரு நட்புக் கிடைத்திருந்தது. இப்ப அந்த இரு குடும்பமும் மிக நெருக்கமாகிவிட்டனர். வசந்திக்கும் பொழுது போவதற்கு இப்படி ஒன்று தேவையாகவும் இருந்தது. வசந்தி வீட்டுக்கு ஒருமுறை நித்தியா சென்றிருந்தபோது அந்தக் குடும்பமும் வந்திருந்தது. அளவுக்கு மீறிக் குழைவுடன் அவர்கள் பழகியது நித்தியாவுக்கு யோசனையைத் தந்தது. மீண்டும் குசினுக்குள் சென்று இருவரும் கதைத்தபோது, எதுக்கும் கவனமா இருங்கோ. எனக்கெண்டால் நல்லவர்கள் போல் தெரியவில்லை என்று நித்தியா கூறியதை ஒரு சிரிப்புடனேயே தட்டிக்கழித்தாள் வசந்தி. ராஜன் அக்கா அக்கா என்று என்னில சரியான அன்பு. உங்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான் என்று கூற, எனக்கு ஒன்றும் இல்லை. பிறகு பிரச்சனை என்று எனக்கு போன் செய்யக் கூடாது என்று நித்தியாவும் பகிடிபோல் கூறியதில் பேச்சு நின்றது.

இரு மாதங்கள் செல்ல மீண்டும் வசந்தி ராஜனுடன் சேர்ந்து கடை போடப் போவதாகவும் பண உதவி செய்யும்படியும் நித்தியாவிடம் வந்து நின்றாள். எனக்கு ராஜனில் நம்பிக்கை இல்லை வசந்தி அக்கா. எனக்கு உங்களில் எந்த எரிச்சல் பொறாமையும் இல்லை. வடிவா யோசிச்சுச் செய்யுங்கோ என்று கூறிப் பணத்தையும் கொடுத்தாள். நித்தியாவின் கணவரோ ஒரே ஏச்சுத்தான். உப்பிடி ஆக்களிட்டைக் கடன்வாங்கி என்ன செய்யப் போயினம். ஒழுங்கா வேலை செய்தாலே வடிவாக் காசை மிச்சம் பிடிக்கலாம் என்றார். எல்லாருக்கும் எல்லா நேரமும் புத்தி சொல்ல ஏலாதப்பா என்றதும் இனிமேல் உன் நண்பி கடன் கேட்டால் இல்லை என்று சொல்லிவிடு. இல்லை என்றால் ஒரு கோபம் தான். பிறகு கடனால் உங்களிடையே நிரந்தரப் பிரிவு வந்துவிடும் என்றார். நித்தியாவுக்கே கணவன் கூறுவது சரி என்றுதான் பட்டது.

வசந்தியின் கடை நான்றாகப் போனது. கடை வைத்தவுடன் பல புதிய நட்புக்கள் கிடைத்தது. இவர்களைக் கடைக்காரர் என்று அழைத்ததில் வசந்திக்கும் உச்சி குளிர்ந்து  போனது. பிள்ளைகளுக்கும் வயது பத்தும் பன்னிரண்டும் ஆனதால் வசந்திக்கு பிள்ளைகளை இந்த நாட்டில் வைத்து வளர்ப்பது சரியாகப் படவில்லை. அத்தோடு கடைக்கு அடிக்கடி வரும் நிரஞ்சனின் மனைவியும் பிள்ளைகளும் கூட இந்தியாவில்தான். வசந்திக்கும் இந்தியாவில் போய் இருக்கும் ஆசை பிடித்தது. வழமைபோல் நித்தியாவிடம் தான். ஏன் அக்கா இந்த வசதியை விட்டுப் போட்டு யாராவது அங்க போவினமா?? இங்கேயும் இவ்வளவு பிள்ளையள்  வளருதுதானே என்று சொல்லிப் பார்த்ததாள். வசந்தி கேட்பதாக இல்லை. அக்கா நீங்கள் போக முதல் என்ர காசையும் தந்திட்டுப் போங்கோ என்றாள். போக முதல் எல்லாப் பிரச்சனையளும் முடிச்சிட்டுத்தான் போவேன் என்று கூறிய வசந்தி கூசாமல் வசந்தன் உங்கட காசைத்தருவார் என்றுவிட்டு போயேவிட்டள். இங்கு நித்தியாவின் கணவரிடம் நித்தியா கேட்ட குத்தல் கதைகளை சொல்லி முடியாது. ஒரு மாதம்  செல்ல வசந்தி தாங்கள் வசதியாக இந்தியாவில் குடிகொண்டாயிற்று என்றும் நித்தியாவையும் வரும்படியும் அழைத்தாள். ஒரு நிமிடம் நித்தியாவுக்கும் அந்த ஆசை வந்துதான் போனது. இருந்தும் கணவனை விட்டுப் போய் அங்கிருப்பதை அவள் மனது ஒப்பாததால் அதன் பின் அவள் அதுபற்றி ஆசை கொள்ளவில்லை.

வசந்தி போய் நான்கு ஆறு என மாதங்கள் ஓடியதே அன்றி நித்தியாவின் பணம் கொடுக்கவே இல்லை. மறுபடியும் நித்தியாவே தொலைபேசி எடுத்து எனக்கு அவசரம் பணம் உடனடியாகத் தேவை என்றவுடன் தான் வசந்தனுக்குச் சொல்வதாகவும் வசந்தி கூறியதை நம்பி நித்தியாவும் நாட்களைக் கடத்தியதுதான் மிச்சம்.பணம் வரவில்லை. கணவனின் திட்டு ஒருபுறம் நம்பி உதவியதற்கு இப்படிச் செய்கிறார்களே என எண்ணியதில் கோவம் வந்து நித்தியா வசந்தியுடன் தொடர்புகொண்டு கொஞ்சம் காரசாரமாகவே எசிவிட்டாள். அதன்பின் ஒரு வாரத்தில் பணம் வந்ததுதான் ஆயினும்  கொண்டுவந்த வசந்தன் எதோ இவர்கள் கேட்கக் கூடாததை அவர்களிடம் கெட்டது போல் நடந்ததுதான் மனவருத்தத்தை உண்டாக்கியது. கணவர் கறாராகவே கூறினார் இனிமேல் ஒருவருக்கும் கடன் கொடுப்பதில்லை என்று. இப்ப உங்கட காசைத் தராமல் விட்டவையே என இவளும் வக்காலத்து வாங்கினாள். அதன்பின் பெரிதாக வசந்தியோ வசந்தனோ இவர்களுடன் கதைப்பதில்லை. இவளுக்கு மனதில் ஏமாற்றம் இருந்தாலும் வலிந்து ஒருவரிடம் சென்று கதைக்க மனம் இடம் தராததால் அமைதியாகவே இருந்தாள்.

வருடம் ஒன்று ஓடிப்போனது வசந்தி இந்தியா சென்று. நித்தியா இருக்கும் இடத்தில் தாயக உணவுப் பொருட்கள் இல்லாததால், இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் எம்மவர் கடைக்கு மாதத்தில் ஒருமுறை சென்று பொருட்களை வாங்கி வருவர் கணவனும் மனைவியும். ஒரு நாள் அப்படிப் போனபோது கணவன் கிட்ட வந்து உடனே திரும்பிப் பார்க்காதே. உனது நண்பி தன் சகோதரியுடன் நிக்கிறார் என்றதும் உடனே திரும்பிப் பார்த்தாள் நித்தியா.


தொடரும்..........

Link to comment
Share on other sites

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

 

எழுதுவார் தானே

அதற்குள் என்ன அவசரம் .....???

அவசரக்குடுக்கை..............

அவசரக்குடுக்கை.............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

நீங்களும் கடன் கேட்கப் போறியளோ ??? :D

 

எழுதுவார் தானே

அதற்குள் என்ன அவசரம் .....???

அவசரக்குடுக்கை..............

அவசரக்குடுக்கை.............. :D  :D

 

அதுதானே என்ன அவசரம்

 

Link to comment
Share on other sites

ம்ம்....... தொடருங்கள் சுமே  :)


நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

 

:lol:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.