Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

முதல் நண்பி பிள்ளை பிறந்த து வீடு வாங்கினது சொல்லவில்லை என்று எழுதினீர்கள், இப்ப இவ, அடுத்தது யார்? நல்ல ஏமாளி போல

 

இப்ப யார் தொலைத்த வாழ்வாக முடியப் போகின்றது கதை

 

வசந்தி ராஐனுடனா இப்ப?

 

 

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அலை, வந்தி.

நீங்களே கதையை முடிச்சா எப்பிடி.பொறுமை வந்தி பொறுமை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அலை, வந்தி.

நீங்களே கதையை முடிச்சா எப்பிடி.பொறுமை வந்தி பொறுமை. :D

 

பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் எழுதி முடிக்கத்தான் ஆசை புத்தன். ஆனா.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 20

திரும்பிப் பார்த்த வசந்திக்கு விழிகள் ஆச்சரியத்தோடு விரிய கோபம் எட்டிப் பார்த்தது. வசந்தி தன் தங்கையுடன் நின்றிருந்தார். அவர்கள் இவர்களைக் காணவில்லை. என்னப்பா வசந்தியக்கா எப்ப இங்க வந்தவ. எனக்குச் சொல்லவில்லையே என்று கணவரைப் பார்த்துக் கேட்க, கணவர் உனக்கே தெரியாத விஷயம் எப்பிடி எனக்குத் தெரியும் என்றார். அவ தங்கையுடன் கதைக்காமல் எல்லோ இருந்தவ. லீவுக்கு வந்திருக்கிறா போல என ஆதங்கத்துடன் கணவனுக்குக் கூற கணவன் தொலை ஆட்டி தெரியாது என்றுவிட்டு நின்றுவிட்டார்.

இப்ப நித்தியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொருட்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறிய பின்னும் படபடப்பு அடங்கவில்லை. இருந்தாலும் வசந்தியுடன் கதைக்காமல் செல்லவும் மனம் இடங்கொடுக்கவில்லை. என்னப்பா செய்வது என்று கணவனைக் கேட்டாள். நீயே முடிவெடுத்துக் கொள். பிறகு நீதான் சொன்னது எண்டு பழியை என்னில போடுவாய் என்றுவிட்டு ஒதுங்க, காணாமல் விடுவது வேறு. கண்டுவிட்டு கதைக்காது சென்றால் என் மனச்சாட்சியே என்னை விடாது என எண்ணியவளாக நித்தியா இறங்கி வசந்தியிடம் சென்றாள்.

நித்தியாவை அங்கு எதிர்பார்க்காததால் வசந்திக்கு சிறு அதிர்ச்சி முகத்தில் தெரிந்ததுதான்.ஆனால் உடனே சமாளித்துக்கொண்டு எப்பிடி இருக்கிறியள் என்று கேட்டாள். எப்ப வந்தனீங்கள். தங்கையுடன் இப்ப கதைக்கிறநீங்களா? ஏன் எனக்கு போனே பண்ணவில்லை என்று கேள்விகளைத் தொடுத்தாள். உங்களுக்கு எந்த மூஞ்சியை வச்சுக்கொண்டு போன் செய்யிறது எண்டுதான் எடுக்கேல்லை. என்னத்தைச் சொல்லுறது நித்தியா நான் இந்தியாவில இருந்து பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இங்கேயே வந்திட்டன். இங்க எல்லாம் தலைகீழாப் போச்சு. கடையும் இப்ப இல்லை. நீங்கள் சொன்னீங்களே நித்தியா ராஜன் நல்லவன் இல்லை எண்டு. நான் நம்பவே இல்லை. அவன் இவருக்குக் குடிக்கக் கொடுத்து கடையிலயும் காசைச் சுருட்டி வீட்டுக் காசும் கட்டாமல் வீடும் இப்ப எங்களிட்டை இல்லை. வசந்தன் குடிச்சிட்டு எங்களுக்கும் போன் செய்யாமல் இருக்க நான்தான் தங்கச்சியை போய் பாக்கச் சொன்னனான். அவள் சொல்லித்தான் நாங்கள் உடன இங்க வந்தது. கொஞ்சம் எண்டால் இவர் குடிச்சே செத்திருப்பார். இப்ப தங்கச்சி வீட்டிலதான் இருக்கிறம் அதுதான் உங்களுக்கு அடிக்கவில்லை என்று முடித்தாள். நித்தியாவுக்கு வசந்தியின் நிலையைக் கேட்டதும் பரிதாபமாகி கோபம்கூட அடங்கிவிட்டது.

மீண்டும் வசந்தி முதலிலிருந்து எல்லாம் தொடங்கவேண்டியதாகிவிட்டது. வசந்தன் இன்னும் மீளவில்லை ஆதலால் வசந்தி உடனடியாக ஒரு வேலை தேடிகொண்டாள். வசந்தனை வெறுத்து ஒரேயடியாக ஒதுக்கவும்  முடியவில்லை. உதவிப்பணத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. பதியாமல் வேலை செய்தபடியால் கொஞ்சம் கடனுகளை அடைக்கக் கூடியதாக இருந்தது. வசந்தன் குடிப்பதும் சிகரெட்டுக்களை ஊதித் தள்ளுவதுமாக நாட்களைக் கழித்தான். அவனை அப்படி ஆக்கியதில் மூத்த தமக்கையின் பங்கும் இருந்ததை வசந்தன் ஒருநாள் குடித்துவிட்டு உளறும்போது வசந்தியால் அறிய முடிந்தது. தமக்கையின் எண்ணம் வசந்தியைப் பழிவாங்கிவிட்டதாக. வசந்தனிடம் காசும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு தன் கணவனைக் கொண்டே குடிப்பதற்கும் வாங்கிக் கொடுத்து ... என்ன மனிதர்கள் இவர்கள் என வசந்தியின் மனதில் வெறுப்புடன் வைராக்கியமும் எழுந்தது.

ஒருவாறு எட்டு மாதங்களில் வசந்தன் வேலை செய்ய ஆயத்தமானான். திரும்பவும் ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்தது. வசந்தி  மீண்டும் நிமிர்ந்துவிட்டாள். ஆனால் வசந்தன் மீண்டும் வசந்தியை வேலையை விட்டுவிடும்படி கூறியதை வசந்தி தன்னில் இரக்கத்தில் கூறுகிறான் என்றுதான் எண்ணினாள். அனால் அவனோ எப்பொழுதும் வசந்தி தனக்குக் கீழேயே இருக்கவேண்டும் என எண்ணியதும், மீண்டும் சகோதரர்களுடன் கதைப்பதும் பிடிக்காது, நான் எல்லோரையும் விட்டிவிட்டுத்தானே இருக்கிறன். எங்களுக்கு ஒருத்தரும் வேண்டாம். நீரும் விட்டுவிட்டு இரும் என கேட்டுக்கொன்டதன் பின் வசந்தி திரும்ப ஒன்றுமில்லாமல் வந்தபோது தங்கையின் வீட்டில் தங்கியதையும் மறந்து இனி ஒருத்தரும் என்னோட கதைக்காதேங்கோ. மனிசன் ஒருதரோடும் கதைப்பதில்லை. அதனால் நானும் உங்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இருக்கப் போகிறேன் என்று கூறியபோது வசந்தி பகிடியாகத்தான் சொல்கிறாள் என சரி இரன் என விட்டுவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல வசந்தி அவர்களுடன் உண்மையிலேயே கதைக்காது விட்டவுடன் வசந்திக்குத் திமிர் என எண்ணி அவர்களும் தம்பாட்டில் இருந்து விட்டனர்.

ஒரு ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மற்றவர்களுடன் கதைக்காது விட்டதனால் மற்றவர்களும் இவர்களை கண்டு கொள்லாமல் வீதியில் கண்டால்கூட முகத்தை திருப்பிக் கொண்டு போக வசந்திக்கு அது பெரிய அவமானமாக இருந்தது. இதற்குள் வசந்தன் இரவு வேலையில் எதோ செய்ததில் வேலையும் போய்விட மற்றவர்கள் தம்மைப் பார்த்துச் சிரிப்பதாய் எண்ணியதில் வசந்தி மனநிலை பாதிக்கப்பட்டு சிறிதுகாலம் வைத்திய சாலையில் இருந்தாள். வசந்தன் மீண்டும் குடியும் புகையும் வீடு சூழ பிள்ளைகள் பற்றிக்கூட்ட எண்ணாமல் காலம் கழித்தான். நித்தியாவுக்கு பிள்ளைகளைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது. வைத்திய சாலையில் வசந்தியைப் பார்க்கச் சென்றபோது நீங்கள் இந்த இடத்தை வி ட்டு வேறு எங்காவது மாறிப் போய் இருங்கோ. சில நேரம் அது உங்களுக்கு நல்லதாக இருக்கும் என என்றதை உடனே பிடித்துக்கொண்டு லண்டனுக்குப் போக வெளிக்கிட்டனர்  இருவரும். நித்தியாவுக்கு அதைக் கூறியதும் அங்குள்ள நிலவரங்களை தனக்குத் தெரிந்தவர் மூலம் அறிந்து, நீங்கள் அங்கு செல்வதாயின் கடைசி மூன்று மாதங்களுக்கு வீட்டுவாடகை உணவு மற்றும் இதர செலவுகளுக்கு கையில் கொஞ்சம் பணம் கொண்டு போக வேண்டும் என்றாள்.

அவர்களிடம் ஒரு வாரத்துக்குத் தேவையான பணம் கூட கையில் இல்லை. நித்தியாவிடம் கேட்டபோது நித்தியா இம்முறை மறுத்துவிட்டாள். வசந்திக்கு நித்தியாவில் மனஸ்தாபம் தான். ஆனாலும் வெளியே காட்ட முடியவில்லை. எப்பிடியாவது மறவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்னும் ஆசை மட்டுமே கண்முன் விரிந்தது. ஆசை மட்டும் இருந்தால் போதாது. விடாமுயற்சியும் சரியான திட்டமிடலும் வேண்டும் என்பது வசந்திக்கு மறந்து போனது.

தொடரும்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ.........

 

Link to comment
Share on other sites

வசந்திக்கு மற்றவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் இருக்கு.. நிலைமைகளை திறனாய்வு செய்யும் பக்குவம் குறைவாக உள்ளது.. :unsure: வசந்தன் போன்றவர்களுக்கு குதூகலம்தான்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுமோவிடம் யாராவது வந்து எங்கே கதையைக் காணோம்,தொடருங்கள் என்று சொன்னால் தான் தொடர்வாரோ :unsure:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த அலை, விசுகுஅண்ணா, இசை,ரதி ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 21

லண்டன் போக முடியாததால் வசந்தி எங்கேயாவது போயே தீருவது என முடிவெடுத்து மற்றைய ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தெரிந்தவரிடம் விசாரித்தாள். அதில் அவர்கள் இலகுவாகச் சென்று வசிக்கக் கூடியதாக டென்மார்க்கே இருந்தது. பிள்ளைகளும் வளர்ந்துவிட்டபடியால் அவர்களும் வேறு இடம் செல்வதற்கே ஆசை கொண்டனர். அல்லது தாயின் ஆசைக்கு அவர்களும் உடன்பட்டனர்.

ஒன்பதாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டு இருந்த பிள்ளைகள் டென்மார்க்கின் எல்லையில் உள்ள யேர்மன் பாடசாலையில் கல்விகற்க முடிவெடுக்கப்பட்டு எல்லா ஒழுங்குகளும் செய்யப்பட்டு நித்தியாவிடம் வசந்தி தாங்கள் போவது பற்றிக் கூறினாள். நித்தியாவுக்கு ஒருவகையில் நின்மதிதான். அங்கு சென்று சென்று சேர்ந்ததும் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டாள்.

அவர்கள் அங்கு செல்ல சூழ்நிலை காரணமாக நித்தியாவும் லண்டனுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. வசந்தி சென்று ஒருவருடம் கழிந்திருக்கும். எல்லாம் வாழ்வு மகிழ்வாகப் போவதாகவும், பிள்ளைகளை இன்டர்நேஷனல் பள்ளியொன்றில் சேர்த்திருப்பதாகவும் வசந்தி கூறியபோது பள்ளிக்கு எப்படிக் காசு கட்டுவீர்கள் என நித்தியா கேட்டாள். பிள்ளைகள் கெட்டிக்காரர்களாக இருப்பதால் எல்லாக் காசும் நாம் கட்டத் தேவை இல்லை. நானும் இவரும் வேலை செய்வதால் கட்ட முடிகிறது. நீங்களும் இங்கேயே வந்திருக்கலாம் என கூறிய வசந்திக்கு சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தாள் நித்தியா.

ஒரு இரண்டு மாதங்கள் சென்றிருக்கும். அங்கு ஒரு பெரிய வீடு விற்பனைக்கு இருப்பதாகவும் தாம் ஏற்கனவே வாடகைக்காகக் கொடுக்கும் காசின் அளவு மாதாமாதம் கட்டினால் போதும். வீடு பத்து வருடங்களில் தமக்குச் சொந்தமாகிவிடும் என்றும் இரண்டாயிரம் பவுன்ஸ் நித்தியா தந்தால் தான் தன்னிடமுள்ள நகைகளை விற்று தம்பியாரிடமும் கேட்டுள்ளேன். அதை வைத்துக்கொண்டு வீட்டை வாங்கிவிடலாம் என்றும் வசந்தி கேட்டபோது,நானும் இங்கு வந்ததில் எனக்குக் காசுத் தட்டுப்பாடு என நித்தியா கூறியதை வசந்தி கேட்காமல் மீண்டும் மீண்டும் நச்சரித்தாள். நீங்கள் எப்படி கடன் காசை திருப்பித் தர முடியும் என்று நித்தியா கேட்டதற்கு தான் அங்கு ஒரு சீட்டுப் போடுவதாகவும் ஒரு வருடத்தில் கட்டாயம் அந்தக் காசைத் திருப்பித் தருவதாகவும் எட்டபின் நித்தியாவாலும் மறுக்க முடியவில்லை. சரி பாவம் வசந்தி கடைசி கடைசியாக இந்த உதவியைச் செய்துவிடுவம் என எண்ணிக் கணவனுடன் கதைத்தபோது, கணவனிடம் வாங்கிய திட்டுக்கு அளவில்லை. இருந்தாலும் ஒருவாறு வசந்திக்கு காசை அனுப்பிய பின்தான் நித்தியாவுக்கு நின்மதியாக இருந்தது.

ஆறு மாதங்கள் செல்ல தங்கையின் மகளின் வீட்டு விசேடத்துக்கு வசந்தியும் மகளும் வந்திருந்தபோது நித்தியாவிடமும் சென்றிருந்தனர். வசந்தியின் முகமே வசந்தி நன்றாக வாழ்வதாகக் காட்டியதில் நித்தியா நின்மதியானாள். அவர்கள் வசிக்கும் வீட்டையும் வீடியோ எடுத்துக்கொண்டு வந்து காட்டினாள் வசந்தி. வீட்டின் பிரமாண்டத்தைப் பார்த்து நித்தியா வாய் பிளந்ததோடு, நாம் என்ன தான் கஸ்ரப்பட்டாலும் வசந்திபோல் எமக்கு வாய்க்குதில்லையே  என நித்தியாவுக்கு வசந்திமேல் ஒருசிறு பொறாமை எட்டிப் பார்த்தது உண்மை.

சொன்னதுபோலவே ஒரு வருடத்தில் நித்தியாவின் பணத்தை வசந்தி திரும்பக் கொடுத்தபோது நித்தியாவுக்கு நின்மதி ஏற்ப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் வசந்தி ஒரு கடை ஒன்றை எடுத்து நடத்த ஆரம்பித்திருப்பதாக கூறியபோது நித்தியாவுக்கு மீண்டும் வசந்தியின்பால் சலிப்பே ஏற்பட்டது. ஏன் வசந்தி அக்கா, நின்மதியாகத்தானே உங்கள் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கு பிறகு ஏன் உப்பிடி ரிஸ்க் எடுக்கிரியள் என்றபோது இங்கு கடை நடத்திக்கொண்டு இருக்கும் ஒருவர் எங்களைச் சரியாகப் பிடித்துப் போனதால் தான் நடத்திக்கொண்டு இருந்த கடையை தருகிறார். அவருக்கு மாதாமாதம் வரும் பணத்தில் கொடுத்து முடிக்கலாம் என்றதன் பின் நித்தியா ஒன்றும் கூறவில்லை. தன்னிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யாததே பெரிய விடயம் என்று விட்டுவிட்டாள். தொலைபேசியில் கதைக்கும் நேரங்களில் வசந்தி வியாபாரத்தையும் லாபத்தையும் பற்றித தற்பெருமை பேசியே நித்தியாவைக் கடுப்பாக்கினாள்.

சிறிது சிறிதாக தொலைப்பேசி அழைப்புக் குறைய வசந்தி பிசியாகிவிட்டதாக நித்தியா எண்ணிக்கொண்டிருக்க வசந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் வந்த செய்தி நித்தியாவுக்கு தலை வலியைத்தான் தந்தது.

இன்னும் ஒரு பகுதியுடன் நிறையும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்-----> வசந்தி----->நித்தியா-----> ஜெர்மனி-----> லண்டன்----> கடை----->?????

 

எங்கேயோ நல்லாப் பரிச்சயமானவை மாதிரிக்குக் கிடக்கு, சுமே! :icon_idea:

 

சரி, போன பிறவி நினைவுகளாய் இருக்கும்! :o

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்! :D

 

 

Link to comment
Share on other sites

வசந்திக்கு ரிஸ்க் எடுப்பது றஸ்க் சாப்பிடுவது போலை இருக்கு.. :D தொடருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்-----> வசந்தி----->நித்தியா-----> ஜெர்மனி-----> லண்டன்----> கடை----->?????

 

எங்கேயோ நல்லாப் பரிச்சயமானவை மாதிரிக்குக் கிடக்கு, சுமே! :icon_idea:

 

சரி, போன பிறவி நினைவுகளாய் இருக்கும்! :o

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்! :D

 

சத்தியமா நானில்ல. என் ஆக்கங்களை வாசித்தபோதே என்னைப் பற்றிப் புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு ஆட்களை எடைபோடத் தெரியவில்லை என்று நன்றாகத் தெரிகிறது புங்கை. :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசை,நன்றி ரதி.
.

நான் இத்தொடரை அடுத்த பாகத்துடன் முடிக்க வேண்டிய கட்டாயத்துள் உள்ளேன். ஏனெனில் வசந்தியின் சம்பவங்களில் சிலதில் எனக்குச் சந்தேகங்கள் உள்ளன. நானாகக் கற்பனை செய்து அதை எழுத விரும்பவில்லை. ஏனெனில் வீடு மாறுவதாகக் கூறிய வசந்தி ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்பு கொள்ளவில்லை. அனைவரின் தொலைபேசிக்கும் முயன்றும் அவை வேலை செய்யவில்லை. இனி வசந்தியாக என்னுடன் தொடர்பு கொண்டாலொழிய நான் எதுவுமே செய்ய முடியாது. அதனால் எத்தனைநாள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியாது நான் எழுதாது விட முடியாது. தயவுசெய்து வாசகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்...அச்சாப் பிள்ளை அங்காலை போணுலில கதைச்சு,கதைச்சு இங்கை கதை எழுதினனீங்களா...ம்ம்ம்...நல்ல விசயம்.. :lol: வசந்தி போல் பெண்களும் நாட்டுக்கு,வீட்டுக்கு தேவை தான்..

 

முற்றும் வெரி சூன்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  பதினைந்து வருடங்களாகக் கேட்ட கதை முழுவதும் வயதுபோன ஆட்களுக்கு நினைவில் நிக்காதுதானே யாயினி.  வருகைக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நானில்ல. என் ஆக்கங்களை வாசித்தபோதே என்னைப் பற்றிப் புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு ஆட்களை எடைபோடத் தெரியவில்லை என்று நன்றாகத் தெரிகிறது புங்கை. :icon_idea:

 

கதாநாயகி நீங்கள் என்று சொல்லவரவில்லை, சுமே!

 

அந்தப் பிள்ளை, நித்தியாவைச் சொன்னேன்! கோபிக்காதீர்கள், சுமே! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகி நீங்கள் என்று சொல்லவரவில்லை, சுமே!

 

அந்தப் பிள்ளை, நித்தியாவைச் சொன்னேன்! கோபிக்காதீர்கள், சுமே! :icon_idea:

 

என்னை இல்லையா??? அப்ப சரி :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி லியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம்-----> வசந்தி----->நித்தியா-----> ஜெர்மனி-----> லண்டன்----> கடை----->?????

 

எங்கேயோ நல்லாப் பரிச்சயமானவை மாதிரிக்குக் கிடக்கு, சுமே! :icon_idea:

 

சரி, போன பிறவி நினைவுகளாய் இருக்கும்! :o

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்! :D

 

அதே தான்.. :D:lol:

இத்தால் எல்லாரும் சுமோ அக்காவின் சொந்தக்கதையைத் தெரிந்துகொண்டீர்கள்.

                      சுபம். :icon_idea:

        நன்றி வணக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேலை வைக்காமல் என் கதையை முடித்தமைக்கு நன்றி ஜீவா :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 22

வசந்தி வசந்தனை விட்டுவிட்டு பிரித்தானியாவுக்குப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வரப்போவதாகக் கூறியதில் நித்தியாவுக்கு உடனே என்ன சொல்வது என்று புரியவில்லை. என்ன நடந்தது என்றாள். கடையை நடத்தத் தெரியாமல் வசந்தன் நடத்தியதில் நட்டத்தில் போய் திரும்ப ஒன்றும் இல்லாமல் நடுத்தெருவில் நிக்கிறோம் என்றவளை இடைமறித்து ஏன் நீங்கள் அதில் தலையிடாது ஒதுங்கி இருந்தீர்களா. முதலே வசந்தனைப் பற்றித் தெரிந்த நீங்கள் எப்படி அவரை மட்டும் நம்பிக் கடையை ஒப்படைத்தீர்கள் என்றதற்கு, கடை கொஞ்சம் ஓடத் தொடங்க நீங்கள் ஓய்வெடுங்கோ வசந்தி. நான் கடையைப் பாக்கிறன் எண்டு சொன்னதால நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் எண்டு வீட்டில இருக்க வெளிக்கிட்டன். கையில காசு புரள கடை நல்லா ஓடுது என்று பேசாமல் இருந்திட்டன். மூன்று பேரை வேலைக்கு வைத்திருந்தனாங்கள். மூன்றுபேரையும் பதிஞ்சுதான் வச்சிருக்கிறன் என்று இவர் சொன்னதை நம்பி நானும் விட்டிட்டன். கவுன்சிலால் வந்து பிடிச்சிட்டாங்கள். எக்கச்சக்கமா பைன் அடிச்சிட்டாங்கள். இப்ப கடை நடத்த முடியாமல் கடையைக் குடுத்துத்தான் அந்தக் காசு கட்டினது. திரும்ப வேலைக்குப் போங்கோ எண்டாலும் போறார் இல்லை. வீட்டில ஒவ்வொரு நாளும் பிரச்சனை. என்னால தொடர்ந்து இங்க இருக்க முடியாது. நீங்கள் உங்க எனக்கு ஒரு வீடு பாருங்கோ என்று கூறி முடித்தவள் நித்தியாவின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

வீடு பாக்கிறது பிரச்சனை இல்லை வசந்தி அக்கா. வந்த உடன அட்வான்ஸ் குடுத்து வாடகையும் குடுக்க காசு இருக்கோ உங்களிட்டை என்றதற்கு நீங்கள் தரமாட்டியளோ என்றாள். நீங்கள் கேட்கும்போதெல்லாம்  காசுதர நான் என்ன உங்கள் வங்கியோ என்று நித்தியா கொஞ்சம் கோபமாகவே கேட்டாலும், கேட்டபின் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதோ என வருந்தத்தான் செய்தாள். வசந்திக்குச் சுட்டிருக்க வேண்டும். நீங்கள் எத்தனையோ தரம் தந்தநீங்கள் தானே என்று கூற நித்தியாவுக்குப் பாவமாகப் போய்விட்டது. குறை நினைக்காதேங்கோ இவர் சம்மதிக்க மாட்டார் என்று கூறிவிட்டு, பிரச்சனை இல்லை வீடு பாக்கிறன். ஆனால் நீங்கள் ஒரு ஐயாயிரம் பவுண்ஸ் ஆவது கொண்டுவந்தால் ஒழிய இங்க வாறதைப்பற்றி  யோசிச்சுப் பயனில்லை. எப்படியும் வசந்தனை வேலைக்கு அனுப்பப் பாருங்கள். இங்கு வந்தால் மீண்டும் பிள்ளைகளின் படிப்புப் பாதிக்குமே என்றாள்.

பிள்ளைகள் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்ததனால் ஆங்கிலம் நன்றாகக் கதைப்பார்கள். உடனேயே பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற வசந்திக்கு, இப்ப வெளிநாட்டினர் இங்கு வந்தால் மூன்று வருடங்களின் பின்னர்தான் படிப்பதற்கான உதவித்தொகை கிடைக்கும். அதனால வடிவா யோசியுங்கோ. நீங்கள் அவசரப்பட்டு திரும்பத் திரும்ப ஒரே பிழையை விடுறீங்கள். என்னில கோவிக்காதைங்கோ. உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன் என்று முடித்தாள் நித்தியா.

நித்தியா கணவனிடம் வசந்தி பற்றிக் கூறுயபோது நீ வசந்தியை இங்கே கூப்பிடாதை. அது எமக்குக் கரைச்சல். இத்தனை வருடங்கள் பட்டும் வசந்தியும் திருந்தவில்லை. வசந்திவிடயத்தில் நீயும் திருந்தவில்லை. இம்முறையாவது நான் சொல்வதைக் கேள். வெளியில் போகும் ஓணானைப் பிடித்து வீட்டுக்குள் விட்ட கதையாகிவிடும். எத்தனைபேருக்கு எவ்வளவு நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். உனக்கு வாய்ப்பதெல்லாம் இப்பிடியாக இருக்கிறது. இவ்வளவு நாளும் நீயும் பட்டு என்னையும் படுத்தினது போதும். பேசாமல் இரு என்றார். கணவன் கூறுவதும் சரிபோல் நித்தியாவுக்கு இருந்தாலும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் வசந்திக்கு தானாகத் தொலைபேசி எடுக்காது தவிர்த்தாள் நித்தியா.

இரு மாதங்களில் வசந்தியிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது லண்டனிலிருந்து. வசந்தனுக்கு ஒரு வேலை ஒழுங்குசெய்து கொடுத்துவிட்டு தானும் பிள்ளைகளும் வந்துவிட்டதாகக் கூறியதும் அடுத்து என்ன கேட்கப் போகிறாவோ எண்டு நெஞ்சு தடதடத்தது. எங்கே இருக்கிறீர்கள் எனச் சுரத்தில்லாது கேட்டாள் நித்தியா. இவள் இருக்கும் இடத்திலிருந்து இருபத்தி ஐந்து  மைல்கள் தள்ளி இருப்பதாகக் கூறியதும் ஒரு நின்மதி ஏற்பட்டது நித்தியாவுக்கு. எப்ப வாறீங்கள் என்னிடம் என வசந்தியே கேட்க விரைவில் வருவதாகக் கூறி தொலைபேசி எண்ணையும் விலாசத்தையும் வாங்கிக்கொண்டு கதையை நீட்டாது முடித்தாள் நித்தியா.

ஒரு மாதம் சென்ற பிறகே வசந்தியிடம் போவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது நித்தியாவுக்கு. அவள்  வருவதற்கு உதவவில்லையே என்னும் குற்ற உணர்வுடனே அங்கு சென்ற நித்தியாவுக்கு அவர்களின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் குற்ற உணர்வே இல்லாது போய் எரிச்சல் தான் வந்தது. வீடு மிகவும் பெரிதாக இருந்தது. நான்கு படுக்கை அறைகள், குசினி ,உணவு அறை பிறிதாக,  conservatory என பிரமாண்டமாக இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டதற்கு 1500 பவுன்ஸ் என்று சாதாரணமாகக் கூறினாள் வசந்தி.

அதனினும் மேலாக ஒரு பெரிய நாய். அங்கு வளர்த்தார்களாம். அதை விட மனமின்றி இங்கும் கொண்டுவந்தார்களாம் என்றபோது நித்தியா கொஞ்சம் கோபத்துடனேயே கேட்டாள். வசந்தி அக்கா நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?? நான் வசந்தனில்தான் முழுப் பிழையும் என எண்ணியிருந்தேன். ஆனால் இப்பதான் தவறுக்கு நீங்களும் காரணம் என்று தெரியுது. மாதம் இவ்வளவு வாடகைக்கு இந்த வீடு உங்களுக்குத் தேவை தானா?? அதுகும் புதிதாக இந்த நாட்டிற்கு வந்துள்ளீர்கள். பணப் பிரச்சனை பெரிதாக இருக்கும். ஒவ்வொரு சதத்தையும் கணக்குப் பார்க்க வேண்டுமே தவிர இப்படி ஊதாரித்தனம் செய்வதா??உங்களுக்கு உடனே உதவித் தொகையும் கிடைக்காது. இப்ப வசந்தனும் இல்லாதபடியால் இரு படுக்கை அறை கொண்ட வீட்டை எடுத்துக் காசை மிச்சம் பிடித்திருக்கலாம் என்றுவிட்டு வசந்தியைப் பார்த்தபோது வசந்தியின் முகத்தில் சிரிப்புத் தொலைந்திருந்தது.

மூன்று நான்கு வீடு பார்த்தது நித்தியா. எனக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்கவில்லை அதுதான் என்று இழுத்தார். நீங்கள் சொந்த வீடா வாங்கினீர்கள் பிடிப்பதற்கு. வசதியாக மட்டும் இருக்கவேணும் என்று பார்த்தநீர்கள் உந்த வீட்டுக்கு தொடர்ந்து எப்படி வாடகை கட்டப்போகிறீர்கள் என்று யோசித்தீர்களா ??என்றுவிட்டு நிறுத்தினாள். நீங்கள் சொல்லுறதும் சரிதான். ஆனால் இங்க வாற குழப்பத்தில நான் உது  ஒண்டையும் யோசிக்கவில்லை. இவர் அங்கே இருந்து காசு அனுப்புவார் தானே என்றாள். உங்களுக்குக் கடவுள் எத்தனையோ வழிகளைத் திறந்துவிட்டும் நீங்கள் அதைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. முதலில இந்த வீட்டை விட்டுவிட்டு சிறிய வீடாப் பார்த்து மாறுங்கோ. செட்டில் பண்ணிய பிறகு பிறகு நல்ல வீடாப் பார்த்து மாறலாம் என்றாள். ஏற்கனவே ஆறு மாத அக்ரிமெண்ட் எழுதியாச்சு. ஒண்டும் செய்ய முடியாது நித்தியா. ஆறு மாதம் முடியப் பாப்பம் எப்ன்று வசந்தி விட்டேந்தியாகப் பதில் கூறியதும் நித்தியா அதன் பின் எதுவும் கதைக்கவில்லை.

அதன்பின் வசந்தி பலதடவை நித்தியாவுடன் போனில் கதைத்தாளாயினும் தன் வாழ்க்கை நிலையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மகள் மூத்தவளானபடியால்  அவளை  மட்டும் படிக்க அனுப்பிவிட்டு மகனை வேலைக்கனுப்பினாள் வசந்தி.  ஏனெனில் இருவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டியது. பணத் தட்டுப்பாட்டால் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஒருவரையாவது கற்பிக்கவேண்டும் என்று எடுத்த முடிவு அது. வசந்தியின் பிள்ளைகள் இருவருமே மிகவும் கெட்டிக்காரர்கள். அதுக்கும் மகன் எள்  என்றால் எண்ணையாக  நிற்பவன். நித்தியாவுக்கு அவனை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. ஆனாலும் என்ன தான் செய்வது.

வசந்திக்கு கரண்ட் பில், கவுன்சில் டக்ஸ், மகளின் படிப்பு என்று காசு கரையக் கரைய இருந்த நகைகள் ஒவ்வொன்றும் பவுண் புரோக்கர்களிடம் சென்றன. இதை வசந்தி நித்தியாவிடம் கூறியபோது நீங்கள் நகைகளை அடைவு வைக்காது விற்பதே சிறந்தது. ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு வட்டி கட்டும் காசு பிறகு உங்களுக்கு சுமையாகிவிடும் என்று நித்தியா கூற நான் ஆசையாகச் சேர்த்த நகைகள் அதை விட முடியாது என்றுவிட்டாள்  வசந்தி. சரி உங்கட பிரச்சனை எனக்குத் தெரிஞ்சதை நான் சொன்னேன் அவ்வளவுதான் என்றுவிட்டு அதன்பின் எப்போதும் வசந்திக்குப் புத்திசொல்ல முயலவில்லை.

ஒரு எட்டு மாதங்கள் சென்றிருக்கும் வசந்தனும் இங்கேயே வந்துவிட்டதாகவும் தங்களுக்கு இருபதாவது திருமண நாள் என்றும் கொஞ்ச உறவுகளுக்குச் சொல்லிச் செய்வதாகவும்   வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அங்கு சென்று பார்த்தால் ஒரு பத்துக் குடும்பம் வந்திருந்தது. எல்லோரும் இவர்களின் வீட்டையும் தளபாடங்களையும் பற்றியே பேசிக் கிலாகித்துக்கொண்டிருந்தனர். நித்தியாவுக்குச்  சந்தேகம். வசந்தியை கேள்விக்குறியுடன் பார்த்தாள். உள்ளே வருமாறு நித்தியாவுக்கு கண் யாடை செய்ததில் நித்தியா எழுந்து வசந்தியின் பின்னால் குசினிக்குள் சென்றாள். என்ன என்று கேட்டவளுக்கு, நித்தியா வந்திருக்கிறவை எங்கட சொந்தக்காரர். எல்லாரும் நல்ல வசதியாக இருக்கினம். நான் இது எமது சொந்த வீடு என்று கூறியுள்ளேன். அல்லது எங்களை மதிக்கவே மாட்டினம். இவை நெடுக வரப்போவதில்லை. உங்கட மனிசனுக்கும் ஒருக்கா வாடகை வீடு என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுங்கோ என்றதும் நித்தியாவுக்கு எரிச்சல்தான் வந்தது. ஒன்றுமே கதைக்காது கணவனைக் கூப்பிட்டு வசந்தி கூறியதைச் சொன்னதும் கணவன் பார்த்த பார்வையில் நித்தியா கூசிப்போனாள். நித்தியாவுக்குமே வசந்தியில் இருந்த கொன்சனஞ்ச மதிப்பும் ஒரேயடியாய் இறங்கிப் போயிற்று. அதன்பின் முள்ளில் இருப்பதுபோல் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வந்தவள் இரு மாதங்கள் வசந்தியுடன் கதைக்கவே இல்லை.

வசந்தனும் அங்குவந்து மீண்டும் கொட்டேல் ஒன்றில் வேலைபார்த்தும் அவர்களின் கடன் கூடியதே அன்றிக் குறையவில்லை. ஒருநாள் நித்தியாவின் வீட்டுக்கு வரப்போவதாகக் கூறி வசந்தியும் மகளும் வந்தார்கள். நித்தியாவுக்கு யோசனையாகவே இருந்தது. ஆனாலும் வரவேண்டாம் என்று எப்படிச் சொல்வது. காத்திருந்தாள். வந்தவர்கள் பலதையும் கதைத்துவிட்டு மகளின் படிப்புப் பற்றிக் கதை தொடங்கியது. அன்ரி உங்களை நம்பித்தான் வந்தனான். எனக்கு யூனிக்குக் காசு கட்டவேணும். யாரிட்டைக் கேட்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு இரண்டாயிரம் தாங்கோ. அல்லது நான் தொடர்ந்து படிக்காமல் விடவேணும் என்று வசந்தியின் மகள் கெஞ்சுவதுபோல் கேட்டவுடன் நித்தியாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படிக் கூடத் தந்திரசாலிகள் இருப்பார்களா?? தொலைபேசியில் கேட்டால் மறுத்துவிடுவோம் என எண்ணி மகளைக் கொண்டு நேரடித் தாக்குதல் தொடுத்ததில் கோவம் வந்து, என்ன வசந்தி அக்கா நீங்கள் என்னிடம் காசு தந்தா வச்சிருக்கிறியள். இரண்டாயிரம் என்றால் சும்மாவா. என் கணவர் கடைசிவரை தரச் சம்மதிக்க மாட்டார். எத்தினை தரம் உங்களுக்கு காசு தந்திருப்பன். உப்பிடி மற்றவர்களை தொல்லைப் படுத்துவதே தவறு. உங்கள் நகைகளை விற்று மகளைப் படிப்பியுங்கோ என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினாள். நகைகள் எல்லாம் வட்டி கட்ட முடியாததால அப்பிடியே போட்டுது. நீங்கள் தான் உதவ வேணும் என்று அழத் தொடங்கினாள் வசந்தி. நித்தியாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொஞ்சநேரம் ஒருவரும் ஒன்றும் பேசவே இல்லை. வென்றது வசந்தியின் உணர்வுத் தாக்குதல்தான்.

நித்தியா ஒருவாறு கணவனிடம் கெஞ்சி மண்டாடியும் கணவன் ஆயிரம் பவுண்டுகளுக்குமேல் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. நித்தியாவுக்கு வேறு வழியே தெரியவில்லை. மகளின் பெயரில் போட்டிருந்த பணத்திலிருந்து ஆயிரம் பவுண்டுகளை எடுத்து இரண்டாயிரமாக வசந்திக்கு அனுப்பிவிட்டாள். நித்தியாவுக்கு கணவனைக் காணும் போதெல்லாம் மனது குறுகுறுத்தது. சொல்லிவிடலாமா என எத்தனையோ தடவை எண்ணியும் சொல்லும் துணிவு வரவில்லை. பிறகு கணவர் இப்படி எனக்குத் தெரியாமல் எத்தனை செய்தாயோ என்று கூறிவிடுவார் என்ற பயம். எப்படியும் வசந்தி காசு தந்ததும் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கை. சீட்டு ஒன்று போட்டிருக்கிறேன். ஒக்டோபர் மாதம் முடியுது. அப்ப உங்கடை காசைத் தருவேன் என்ற வசந்தி நவம்பர் மாதம் சென்றும் போனை எடுக்கவுமில்லை, காசைக் கொடுக்கவுமில்லை. நித்தியாவின் நிலைதான் இருதலைக்கொள்ளி எறும்பானது. திரும்பத் திரும்ப வசந்திக்கு போன் செய்தும்  வசந்தியிடமிருந்து பதில் இல்லை. இன்னும் இரு மாதம் செல்ல வசந்தி ஒருநாள் போன் செய்து நித்தியாவுக்குத் தரவேண்டிய காசில் ஆயிரத்தைத் தருவதாகவும் மிகுதியை ஆறு மாதத்தில் தருவதாகவும் கூறியபோது சரி இதாவது வருகிறதே என்று நித்தியா நின்மதியானாள். ஆனாலும் வசந்தி தரும் காசைப்பற்றிக் கணவரிடம் கூறுவதா அல்லது மகளின் சேமிப்புக் கணக்கில் போடுவதா? என நாள் முழுதும் யோசித்து, கணவனிடம் திட்டு வாங்குவதிலும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதே மேலென எண்ணி பணத்தை மகளின்  கணக்கிலேயே போட்டாள். அப்பப்ப கணவனின் கதைகளைக் கேட்டு அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டாள் நித்தியா.

ஒன்பது மாதங்களில் தருவதாகக் கூறிய வசந்தி இரண்டு வருடங்களாகியும் பணத்தைக் கொடுக்கவில்லை. வசந்தியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராமலே விட்டுவிட்டது. ஆனால் நித்தியா அப்பப்ப போன் செய்து பார்ப்பாள். பலமுறை போனை யாருமே எடுக்க மாட்டார்கள். மெசேச் பாக்ஸ் புல் என்னும் செய்திதான் வரும். சரி காசுதான் தரவேண்டாம் ஒரு போன்செய்து கதைத்தால் என்ன என மனம் கேட்கும். ஆனாலும் மறந்து போய்க்கூட  கணவனிடம் வாய் திறப்பதில்லை. ஒருநாள் நித்தியா போன் செய்தபோது வசந்தியின் மகள் தான் கதைத்தாள். அம்மா வைத்தியசாலையில் இருக்கிறார் என்றதும் வசந்திக்குப் பதைப்பாக இருந்தது. அடுத்தநாளே வசந்தியைப் பார்க்கப் போய் நின்றவள் வசந்தியின் சிரித்த முகத்தைக் கண்டதும் சிறிது ஆறுதல் கொண்டாள். வசந்திக்கும் நித்தியாவைக் கண்டதும் சந்தோசமாகவே இருந்தது என பலதடவைகள் கூறியதில் வசந்தியின்மேல் இருந்த கொஞ்சனஞ்சக் கோபமும் நித்தியாவுக்கு இல்லாது போய்விட்டது.

வசந்தி தேறி வந்து மூன்று மாதங்களின் பின் வசந்தியிடமிருந்து தொலைபேசி. சரி காசுதான் தரப்போகிறா என்று நித்தியா நினைக்க தானும் வசந்தனும் மூன்று மாதங்களாக ஒரே வீட்டுக்குள் இருந்தும் கதைப்பதில்லை. வசந்தன் எட்டு மணித்தியால வேலைக்கு மட்டும்தான் போகிறார். வீட்டு வாடகை மட்டும் அவர் கட்டுகிறார். ஜொப் சென்டர் தரும் தொகையும் மகனின் சம்பளமும்தான் மர்ற்றச் செலவுகளுக்கு. என் வீடும் விடச்சொல்லிப் போட்டார்கள். ஒரு மாதத்தில் வீடு மாறவேணும்.என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள் தான் ஏதும் செய்யவேணும் என்று கொஞ்சம்கூட மனச்சாட்சி அற்றுக் கேட்பவளை என்ன செய்யலாம் என்று ஒருவினாடி யோசித்த நித்தியா, நீங்கள் குறை நினைத்தாலும் பரவாயில்லை. இனிமேல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பாக்காதேங்கோ. உங்களிடம் நட்புடன் இருந்த காலங்கள் முழுவதும் நான் நின்மதியாக இருந்ததில்லை. நீங்கள் கவுன்சிலுக்கு அல்லது சிட்டிசென் அட்வைஸ் பீரோவுக்குப் போய் உங்கள் பிரச்சனையைச் சொல்லுங்கோ. தயவுசெய்து மற்றவர்களிடமும் கேட்டு அவர்களைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதேங்கோ. உங்களால் ஆயிரம் பவுன்சையே இரண்டு வருடங்களாகத் தர முடியாதபோது நீங்கள் என்ன துணிவில் என்னிடம் கேட்டீர்கள். தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என்னிடம் கேட்கவே வேண்டாம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இப்போது ஆறு மாதங்களாகிறது வசந்தி என்ன ஆனாள் என்றே நித்தியாவுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒருவரின் கைத்தொலைபேசி கூட ஒன்றும் வேலை செய்யவில்லை. கணவர்கூட வேலைப் பளுவில் வசந்தியையும் கொடுத்த காசையும் மறந்து இவளிடமும் முன்போல் அது பற்றிக் கதைப்பதில்லை. அது இவளுக்கு நின்மதியைத் தந்தாலும், எங்கே வசந்தி பற்றிக் கதைத்து கணவன் மறந்திருப்பதை நினைவுபடுத்த கணவன் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடலாம் என்னும் அச்சத்தில் எல்லாவற்றையும் தானே அனுபவிக்கிறாள். நான் வசந்திக்குச் செய்தது சரியா தவறா என அவள் மனச்சாட்சி அப்பப்ப உறுத்தினாலும் வேறொன்றும் செய்யவே முடியாது எனத் தனக்குத் தானே சாமாதானமும் செய்தபடி வசந்தியின் தொலைபேசிக்காகக் காத்திருக்கிறாள் நித்தியா..............


கடைசியில் முடிந்தே விட்டதா கதை அப்பாடா.

 

Link to comment
Share on other sites

ம்ம்... வசந்தி குடும்பத்தைப் பற்றி எனனத்தைச் சொல்ல!

 

எப்ப அடுத்த கதை தொடங்கப் போகின்றீர்கள் சுமே? வாசிக்க மிக ஆவல்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.