Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே தெரியாத எனக்கே விளங்குது, வசந்தன் ஒரு நச்சுப் பாம்பு எண்டு! :o

 

சகலவிதமான எச்சரிக்கைகளையும்  உணரும் திறன்களனைத்தும் இயற்கையாகவே கைவரப்பெற்ற, அதுவும் முன்பொருமுறை சூடுகண்ட, ஒரு யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண்ணின் முடிவு, 

மிகவும் ஆச்சரியமளிக்கின்றது!

 

இது ஒரு தெய்வீகக் காதலாக இருக்கவேண்டும், சுமே! :D

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

நல்லது....தொடருங்கள். வசந்தியென்ன பல பெண்கள் மயங்குவதும் வெளித்தோற்றத்தில்தான், உடல்தான் முக்கியம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அலை

 



 

  • வசந்தனின் அப்பா படித்தவர் என்றாலும் ஒரு படித்தவர் போல் நடந்துகொள்ளவில்லை..
  • வசந்திக்கு மானரோசம் கொஞ்சம் கம்மி.. :D

இது யாரையாவது புண்படுத்துமாக இருந்தால் வருந்துகிறேன்.. :icon_idea:

 

 

இசை, நீங்கள் என்ர கதை என்று நினைத்துக்கொண்டு கருத்தெழுதுகிறீர்கள் என நினைக்கிறன். :D

 

 




இது ஒரு தெய்வீகக் காதலாக இருக்கவேண்டும், சுமே! :D

 

இது தெய்வீகக் காதல் இல்லை விசர்க்காதல்

 

 



நல்லது....தொடருங்கள். வசந்தியென்ன பல பெண்கள் மயங்குவதும் வெளித்தோற்றத்தில்தான், உடல்தான் முக்கியம்

 

சில பெண்கள் உணர்வுமயமானவர்கள் ஆதலால் எதையும் நம்பியும் விடுவர்.

 

 

Link to comment
Share on other sites

 

இசை, நீங்கள் என்ர கதை என்று நினைத்துக்கொண்டு கருத்தெழுதுகிறீர்கள் என நினைக்கிறன். :D

 

 

உங்கள் கதையென்று இன்னும் (உறுதியாக :D ) சொல்ல முடியவில்லை.. ஆனால் குறைந்தபட்சம்  உங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தானே இருக்க வேண்டும்..  :huh:  அதனால்தான் முன்னெச்சரிக்கை முனுசாமி ஆகிவிட்டேன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில வாற பிரதான ஆண்மகன் தனக்கு என்று வாற ஒரு பெண்ணை வைச்சு காப்பத்த தெரியாத அளவுக்கு என்ன கன்டிகப்டா(handicapped).. :lol: வேலை வெட்டி இல்ல,இதில  சீதணம் வேறை 3 ஏக்கர் காணி,1 லட்சம் பணம்...ம்ம்ம் வேறை என்ன எல்லாம் வேணும்மாம்..பறவா இல்ல நீங்க தொடருங்க அக்கா..அப்ப,அப்ப யாயினி இப்படித் தான் ஏதாச்சும் கேக்கும்  கோவிக்காதீங்கோ.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக் கொள்ளுங்கோ யாயினி. நான் உங்களை தவறவிட்டுவிட்டேன். நன்றி வரவுக்கும் கருத்துக்களுக்கும். உங்களைப் போல உற்சாகம் தருபவர்களால்தான் தொடர்ந்து எழுத முடிகிறது. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையென்று இன்னும் (உறுதியாக :D ) சொல்ல முடியவில்லை.. ஆனால் குறைந்தபட்சம்  உங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தானே இருக்க வேண்டும்..  :huh:  அதனால்தான் முன்னெச்சரிக்கை முனுசாமி ஆகிவிட்டேன்.. :rolleyes:

 

இது எனது 20 வருட நண்பியின் கதை. அவரின் சம்மதத்துடனேயே எழுதுகிறேன். பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்வதால், அத்தனை வருடங்களாக நானும் அவர் வேதனையில் பங்குகொள்ளும்படி ஆகிவிட்டது. இதனால் கணவரிடம் திட்டும் அடிக்கடி வாங்கிக் கொள்வேன். ஏனெனில் என் இட்டுமுட்டை கணவரிடம் தானே கூற முடியும். :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 10

திருமணம் முழுக்க முழுக்க இவர்களின் செலவில் நடந்தது. கூறைக்கும் தாலிக்கும் மட்டும் அவர்கள் செலவழித்தனர். வசந்தனின் கையால் தாலி ஏறியதும், தன் காதல் உண்மையானதாக இருந்ததால் கடவுள் தன்னில் இரக்கப்பட்டு தனக்கு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கிறார் என்று வசந்தி கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டாள்.

திருமணம் முடிந்து ஒரு வாரமாகியும் வசந்தனைத் தவிர அவர்கள் யாரும் இவளுடன் ஒட்டவில்லை. மாமியாரின் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் ஒரு சிரிப்பின்றி பார்த்த இவளுக்கு சந்தேகமாக இருக்க, என்னைக் கட்டினத்தில உங்கட அம்மாவுக்கு விருப்பம் இல்லையோ என்று வசந்தனைக் கேட்டாள். ஏன் அப்படிக் கேட்கிறீர். இப்ப தானே இங்க வந்திருக்கிறீர். போகப் போகப் பழகினால் கதைப்பினம் என்றுவிட்டு அவன் தன் பாட்டில் இருந்தான்.

ஒரு வாரம் கழிய எப்ப வேலைக்குப் போப்போறீர் என்று வசந்தன் கேட்டான். இப்பதானே ஒரு கிழமை முடிஞ்சிருக்கு. இன்னும் மூண்டு கிழமை இருக்கு என்றவளைப் பார்த்து, நெடுக அறைக்குள்ளே இருக்காமல் அம்மாவுக்கும் போய் குசினிக்குள்ள உதவி செய்யும். அப்பத்தான் அவையும் உம்மோட பழகுவினம் என்றான் வசந்தன். அவளுக்கும் அது சரி என்றே பட்டது. வசந்தனின் தமக்கை ஏற்கனவே திருமணமாகி கணவனுடன் அவர்களுடனேயே இருந்தனர். தமக்கை கூடப் பெரிதாக வசந்தியுடன் கதைப்பதில்லை. தம்பியார் மட்டும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுப் போவான்.

தமக்கையின் கணவனும் வேலை இல்லாமல்த்தான் இருக்கிறாரோ? ஒரு வாரமா வெளியே சென்ற சிலமனே இல்லையே. அவரும் அறைக்குள்ளையே அடைந்து கிடக்கிறார் என எண்ணிக் கொண்டு வசந்தனிடம் அதுபற்றிக் கேட்டாள். ஓம் அத்தானுக்கும் வேலை இல்லை அப்பாக்கும் வேலை போட்டுது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்திருந்தான் வசந்தன். வசந்திக்கு தன் காதுகளை நம்பமுடியாமல் இருந்ததால் மீண்டும் என்ன என்று கேட்டாள். இங்க இருக்கிற மூண்டு ஆம்பிளையளுக்கும் வேலை வெட்டி ஒண்டும் இல்லை என நக்கலாகக் கூறிவிட்டு தன் அலுவல் பார்த்தான். அவன் கூறியதை வசந்தி கிரகிக்கக் கொஞ்ச நேரம் எடுத்தது. அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. எங்கு தொடங்குவது எப்படிக் கேட்பது என்று ஒன்றுமே விளங்கவில்லை.

அப்பா வேறை வேலை ஒன்றும் தேடவில்லையோ என்று கேட்டாள். அப்பாவின்ர வயதுக்கு எங்க உப்பிடி நல்ல வேலை எடுக்கிறது. அப்பா இவ்வளவு நாளும் வேலை செய்தவர் தானே. இனி நான் தான் வேலை தேடவேணும். உமக்கு ஆரையும் தெரிஞ்சா 
பிடிச்சு ஒரு நல்ல வேலை எனக்கு எடுத்துத் தாருமன் என்று சுரணை கெட்டுச் சொல்லிவிட்டு சுரணையற்று அவளையும் பார்த்தான். நீங்கள் கொழும்பில வேலை செய்யவில்லையோ? என்றதற்கு. அங்க திரும்பப் போக எனக்கு விருப்பமில்லை. அம்மாவுக்கும் என்னை விட்டுவிட்டு இருக்க விருப்பம் இல்லை என்றான். உன்னை விட்டிட்டு இருக்க முடியாது என்று கூறியிருந்தானானால்  அவளுக்கு இறகு முளைத்திருக்கும். அவன் கூறியதைக் கேட்டு அவளுக்கு அவன்மேல் கோவமும் வந்தது. ஆனாலும் வெளிக்காட்டாது, நான் எங்கட அலுவலகரிட்டைச் சொல்லிவைக்கிறன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் நிற்க விருப்பமின்றி அங்கால் சென்றுவிட்டாள்.

அடுத்தநாள் முதல் வேலையாக  மேலாளர் வந்தவுடன் தன் கணவனுக்கு வேலை இல்லை. அவருக்குத் தெரிந்தவர்களிடம் இருந்தால் கூறும்படி கேட்டாள். அதற்கென்ன இங்கேயே ஒரு உதவிக் கிளாக் தேவைதான். நாளைக்கு கணவரை வரச் சொல்லுங்கோ என்று கூறி நட்புடன் சிரித்தவரைப் பார்த்து நன்றி கூறினாள். இவ்வளவு விரைவில் என் கணவனுக்கு வேலையா என மனம் மகிழ்ந்தது. சரி இரண்டு பேரும் வேலை செய்து குடும்பத்தைப் பார்ப்பம். இது இப்ப என் குடும்பம் தானே. வேற என்ன செய்யிறது எனத் தனக்குள் நினைத்தவள் வசந்தனிடம் அந்த சந்தோசமான விடயத்தைக் கூறுவோம் என்று  வீட்டுக்கு விரைந்தாள்.

எல்லோரும் வெளி விறாந்தையில் இருந்து மகிழ்வாகக் கதைத்துக்கொண்டு இருந்தனர். இவளைக் கண்டதும் சொல்லி வைத்ததுபோல் எல்லோருடைய பேச்சும் நின்றது. இவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதில் அவர்களோடு நிற்கலாமா அல்லது உள்ளே செல்வதா என ஒரு வினாடி யோசித்தவள், உங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே ஒரு வேலை ஒழுங்கு செய்திருக்கிறன். நாளைக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவர் AGA என்றாள் வசந்தனைப் பார்த்து. என்ன வேலை என்றதற்கு உதவிக் கிளாக் என்றுவிட்டு அவன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்துக்கொண்டு நின்றாள். எனக்கு உம்மட இடத்தில வேலை செய்யப் பிடிக்கேல்லை என்று கூறிவிட்டு நிலம் பார்த்தான். நீங்கள் பெரிய பதவியில இருக்க அண்ணா உங்களுக்குக் கீழ வேலை செய்யிறதோ என்று இவளைக் குற்றம் சாட்டும் தொனியில் தமக்கை கேட்க, வேலை இல்லாமல் இருக்கிறார் என்று நான்தான் கேட்டனான். இந்த வேலை தான் தற்சமயம் இருக்கு. நல்லா வேலை செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் தானே என்று எல்லோரையும் பார்த்துக் கூறினாள். இதுவரை வாயே திறக்காத தாய், வசந்தனை இந்தியாவுக்கு அனுப்புறதுதான் நல்லது. கொழும்பில நிக்கேக்க ஒருக்கா பிடிச்சுக்கொண்டு போய் வெலிக்கடையில வச்சிருந்தவங்கள். காசுகட்டிப் பிணையிலதான் வெளியில கொண்டு வந்தது. நீ ஒண்டும் உவவுக்குச் சொல்லேல்லையே என்று முடித்தார். வசந்தன் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். வசந்தி வேறொன்றும் கதைக்காது அப்ப சரி என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

தொடரும்...........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 11

திருமணம் நடந்து இரண்டே இரண்டு மாதங்கள்தான். வசந்தனை கள்ளத்தோணியில் இந்தியாவுக்கு அனுப்பியாச்சு. வசந்தன் போக முதலே தாயும் சகோதரிகளும் இவள் காது படவே குசுகுசுக்கத் தொடங்கிவிட்டார்கள். இவன் வெளிநாடு போனால் எங்களை எல்லாம் மறந்திடுவான். காசும் அவவுக்குத் தான் அனுப்புவான் என்று. தமக்குத் தானே அவர்கள் கதைப்பதைக் கேட்ட  வசந்திக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். ஒரு விதத்தில் அவர்களின் பயமும் நியாயமானதுதானே என அவர்கள் மேல் இரக்கமும் வந்தது. வசந்தன் போனதன் பின் வசந்தியின் தாய் வசந்தியை தங்களோடு வந்து இருக்கும்படி கேட்டபோது இவள் மறுத்துவிட்டாள். கலியாணம் கட்டின பிறகு அவையளோட இருக்கிறதுதான் சரி அம்மா. அதோட இப்ப அவைக்கு எந்த வருமானங்களும் இல்லை. என்னை நம்பித்தான் இருக்கினம். அவையைப் பாக்கிறது என்ர கடமைதானே என மறுத்துவிட்டாள். இரண்டு நாட்கள் இரு குடும்பமும் வசந்தி என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று வாக்குவாதப் பட்டார்கள். உதுகள் உன்னை வறுகிப்போட்டுத் துரத்தாட்டிப் பார் என்று அம்மா கூறியதுக்கு, இவர்களை நான் திருத்தி எடுக்கிறன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தாள். இவளுக்கு, தமக்கு உழைத்துப் போடுவதற்குக் கடமை இருப்பதுபோல் அனைவரும் நடந்துகொண்ட விதம் கொஞ்ச நாட்கள் செல்ல வசந்திக்கே வெறுப்பை வரவழைத்தது. மனம்விட்டுப் பேசிச் சிரிக்காது இயந்திரம் போல் எத்தனை நாட்களுக்கு பலருடன் ஒருவீட்டில் இருப்பது என்று வசந்தி யோசித்தாள்.

வசந்தன் போய் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. மூன்று முறை மட்டும் இவளுடன் கதைத்தான். இவளுக்குக் கடிதம் எதுவும் வருவதில்லை. வசந்தன் கடிதம் போட்டது என சிலநேரம் இவள் காதுபடக் கூறிப் பின் இவள் தூண்டித் துருவிக் கேட்டும் பெரிதாக ஒன்றும் கூறாது விடும்போது, இவள் ஒவ்வொரு தடவையும் இவர்களிடம் ஒன்றுமே கேட்பதில்லை என்று தான் எண்ணுவாள். ஆனாலும் கணவனைப் பற்றி அறியும் ஆவல் கிளர்ந்தெழ மீண்டும் கேட்பாள். வசந்தனின் மேல் தான் இவளுக்குக் கோபமெல்லாம். எனக்குத் தனிய ஒரு கடிதம் போட எண்ணவில்லையே என்று. பிறகும் கடிதம் வந்து இவர்கள் தான் தரவில்லையோ என தனக்குள் நினைத்துக் கொண்டாளேயன்றிக் கேட்கவில்லை. இப்படிப் பட்டவர்களுக்கு இரக்கம் காட்டிக்கொண்டு ஏன் இங்கிருப்பான் அம்மா வீட்டுக்கே போகலாமோ என இவள் யோசித்துக்கொண்டு இருந்தபோது கடவுளாகப் பாத்துக் கண் திறந்தார். வசந்தநிடமிருந்து இவளின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது என்று தாய் கொண்டு வந்தார். வசந்தனுக்கு இத்தனை துணிவு எப்படி வந்தது என வியந்துகொண்டு கடிதத்தை உடைத்தவள், அதில் இரு வரிகள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டு மனம் சோர்ந்தாலும், அடுத்த நிமிடமே அதில் எழுதியிருந்த விடயத்தால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

வசந்தன் இவளை உடனே வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வரும்படி கூப்பிட்டிருந்தான். வசந்தி எல்லோருக்கும் முன்னால் அதை வாய்விட்டு வாசித்தாள். அவளையும் தாயையும் தவிர மற்றவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. தாய் நின்றபடியால் அவர்கள் எதுவும் பேசாது நின்றுவிட்டு போனபின் வசந்தியின் மேல் பாய்ந்தார்கள். நல்லா எங்கட பிள்ளையை மருட்டிப் போட்டாய் என்று ஆளாளுக்கு வாயில் வந்தபடி அர்ச்சனை நடந்தது. நல்ல காலம் வசந்தி வசந்தன் தன்னுடன் தொர்டர்பு கொள்ளும்படி கூறியிருந்த தொலைபேசி  இலக்கம் பற்றி அவர்களுக்குக் கூறவில்லை.

வசந்தியின் பெற்றோரே வசந்தியை அங்கிருந்து அனுப்புவதில் முன்னின்றனர். வசந்தன் வீடு என்ன எண்ணியதோ தெரியவில்லை. வசந்தனின் சகோதரியின் கணவனையும்  வசந்தியுடன் இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறினார். வசந்திக்கு எரிச்சல் வந்தாலும்  அடக்கிக்கொண்டு தன்  தந்தையிடம் ஆலோசனை கேட்டாள். தந்தை வசந்தியின் பதினாறு வயதுச் சகோதரனை வசந்தியோடு அனுப்பி அவனை இந்தியாவில் தொடர்ந்து படிக்கவைக்கப் போவதாகக் கூறியது வசந்திக்கு மலையளவு துணிவைத் தந்தது. சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா கூறினார்கள். தந்தையே வசந்திக்கும் சேர்த்து கடவுச் சீட்டுக்கும் ஒழுங்கு செய்தார். வசந்தனிடம் செல்வதனால் அவளுக்கு பிரிவுத்துயர் ஒன்றும் தெரியவில்லை.

இரண்டு நாள் கொழும்பில் நிறுத்தான் செல்ல வேண்டும். தந்தையே எல்லாத்துக்கும் பணம் குடுத்தார். பெண்களைப் பெற்றால் திருமணம் ஆனால் என்ன ஆகாவிடால் என்ன செலவு பெற்றோருக்குத்தான் செலவு பாவம் என மனதுக்குள் வருத்தமாகவும் இருந்தது.

பேருந்தில் ஏற யாழ்ப்பாணம் போய் நின்றபோதுதான் பார்த்தால் வசந்தனின் அத்தான் ராமின் தந்தையும் அவர்களோடு கொழும்பு வருவதற்கு தயாராக நிற்கிறார். கொழும்புபோய் மாலை சேர்ந்தாச்சு.பக்கத்தில் ஒரு தங்கு விடுதியில் தங்கலாம் என்று கூட்டிக்கொண்டு போனால் ஒரு அறை மட்டும் எடுத்துவிட்டு எல்லோரும் அங்கேயே தங்கலாம். இரண்டு நாட்கள் தானே என்றான் ராம். எனக்கும் தம்பிக்கும் வேறு அரை எடுங்கோ என்று வசந்தி கொஞ்சம் பிடிவாதமாகக் கூறியபிறகே வசந்திக்கு இன்னொரு அறை எடுத்துக் கொடுத்தான் ராம். அதுக்கும் வசந்தியே பணம் கொடுத்தாள்.

ராம் கொஞ்சம் அப்பிடி இப்பிடியான ஆள் என்று முன்பு கேள்விப்பட்டிருந்தாள். அப்படி இல்லாவிட்டால் கூட அவன் தன்னை பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணி இருந்தால் ஒரே அறையில் இருக்கலாம் என்று கேட்பான். இன்னும் இரண்டு நாள் தானே. கணவனிடம் சென்றுவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.அங்கு சென்ற பின்தான் அவளுக்குத் தெரிந்தது, வசந்தன் தன்னை ஆசையிலோ அல்லது அக்கறையிலோ அழைக்கவில்லை என்பது. தன்னால் ஒன்றுமே அங்கு செய்ய முடியவில்லை. வசந்தி வந்தாவது ஏதும் செய்வாள் என எண்ணியே இவளை வரவழைத்திருந்தான். அவளுக்குத் தன் நிலையை எண்ணி பரிதாபமே ஏற்பட்டது.


தொடரும் ....................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி

காதால் கேட்ட கதை போல் தெரியவில்லை

நிஐமாகத்தெரிகிறது

Link to comment
Share on other sites

வசந்தி போன்றவர்கள் எதைக்கொண்டு சிந்திப்பார்கள்? :blink: கிட்னி என நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

சில ஆண்களால் ஆணினத்துகே அவமானம். வசந்தன் ஒரு அலி. உங்கள் நண்பிக்கு என் அனுதாபங்கள். விசாரித்தாக சொல்லுங்கள். இதில் வசந்தனின் தாயும் தமக்கையும் தங்களும் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டார்கள். பெண்களை அழவிட்டு வேடிக்கை பார்ப்பவன் இருப்பதிலும் பார்க்க துக்கில் தொங்குவதே மேல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகளுக்கும் கருத்தைப் பகிர்ந்த உறவுகள் விசுகு அண்ணா, இசை, அலை, வந்தி,புங்கை ஆகியோருக்கும் நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 12

 

 

பயணக் களைப்புப் போக நன்றாகக் குளித்துவிட்டு வந்தவள், அறைக்கு வெளியே இரண்டு மூன்று பேர் இன்னும் எழும்பாது படுத்துக் கிடப்பதைக் கண்டாள். இவை ஏன் இங்க படுத்திருக்கினம். ஏன் இன்னும் எழும்பவில்லை என வசந்தனிடம் கேட்டாள். உவங்கள் கஞ்சாக் கோஷ்டி. உப்பிடித்தான் பகலில் படுத்துக் கிடப்பாங்கள் என்றுவிட்டு வசந்தன் எழுந்தான். இது உங்கட அத்தான் ஆட்களின் வீடு என்று சொல்லித்தானே என்னை  இங்க கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்றாள்  குற்றம் சாட்டும் குரலில். வேறை என்ன செய்யிறது. நான் ஆறு மாதமா இங்க தானே இருக்கிறன். நீ வந்த உடன விட்டுட்டுப் போக ஏலுமே என்று கூறி இவள் என்ன சொல்வாளோ என்று பார்த்தான்.

உங்களை நம்பி என்ர தம்பியையும் இங்க கூட்டிக்கொண்டு வந்தாச்சு என்று இவள் கொஞ்சம் குரலை உயர்த்தினாள் . நானும் கஞ்சா அடிச்சு உன்னையும் அடிக்கச் சொன்ன மாதிரி எல்லோ கதைக்கிறாய் என்றுகொண்டே குளியலறையில் புகுந்துகொண்டான். வசந்திக்கு அவன் கூறியது சரி என்றும் படுத்து. அவர் நல்லவர் என்றதாலை தானே இந்த நரகத்துக்குள்ளை  இருந்தும் உதுகளைப் பழகாமல் இருந்திருக்கிறார். அவர்மட்டும் உதுக்குள்ள மாட்டுப்பட்டிருந்தால் என்ர கதி என்ன ஆகியிருக்கும். எப்பிடியாவது இவரை இங்கை இருந்து கூட்டிக்கொண்டு போவிடவேணும் என மனதுள் முடிவெடுத்தாள்.

அடுத்து வந்த நாட்களில் தம்பியாரை கொலிச்சில் சேர்த்துவிட்டு, வேறு இடத்தில் போய் இருப்போம் என்றால் வசந்தன் மறுத்துவிட்டான். தம்பியாரின் பாஸ்போட்டையும் வசந்தியே பாதுகாப்பாய் வைத்துக்கொண்டாள். கொண்டுவந்த காசும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வசந்தியின் அண்ணன் துபாயில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறான். இதுவரை அவன் எந்தப் பணமும் வீட்டுக்கோ இவளுக்கோ அனுப்பவில்லை. வேறு வழியில்லை கடைசியாக அவனிடம் கேட்பதென முடிவு செய்து அவனுக்கு கடிதம் ஒன்று எழுதிப் போட்டாள் வசந்தி.

என்ன நல்ல காலமோ அவன் 1000 அமெரிக்கன் டொலர்களை அனுப்புவதாக எழுதியிருந்தான். வசந்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. வசந்தனிடம் கூற வசந்தனும்  வசந்தனின் அத்தானின் தங்கையின் அக்கவுண்டுக்கு போடச்சொல்லி வங்கிக் கணக்கிலக்கங்களை வாக்கிக் கொடுத்தான். இருவாரங்களானது பணம் வரவில்லை

மூன்றாவது வாரம் வேறு வழியின்றி தனது தமயனுக்கு பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று எழுதிப் போட்டாள். அடுத்த வாரங்களில் தமையனிடமிருந்து ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்னர் பணம் பனுப்பிய பற்றுச்சீட்டின் கொப்பியுடன் கடிதம் வந்திருந்தது. நல்ல காலம் அவர்கள் வெளியே செல்வதற்கு தயாராகிக் கீழே வந்தபோதே கடிதமும் வந்தது. அவர் திருமதி வசந்தன் என்றவுடனேயே அவளுக்குக் கேட்டுவிட்டது.வசந்தனின் அத்தான் கடிதத்தை வாங்க முதலே அவள் ஓடிப்போய் கையை நீட்டி அதை வாங்கிவிட்டாள். அவள் அதையும் கொண்டு கணவனுடன் வங்கி எங்கே இருக்கிறது என்ற விபரங்களைக் கேட்டுவிட்டு அங்கு சென்றாள். அங்கு சென்று விசாரித்தால் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்னர் அப்பணம் எடுக்கப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த இடத்திலேயே அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அழுவதை நிறுத்திவிட்டு மனேஜரிடம் யார் பணம் பெற்றது என்று கூற முடியுமா என்று கேட்டாள். அவரும் இவள்மேல் இரக்கப்பட்டுப் பார்த்துவிட்டு ராம் என்றவர் தான் எடுத்திருக்கிறார். என்றார். சரி நன்றி என்றுவிட்டு விடுவிடு என முன்னாள் நடந்தாள்.

வீடு வரும் வரை அவளோ அவனோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் உங்கள் அத்தானைக் கூப்பிடுங்கள் என்றவுடன் தலை குனிந்தபடி வசந்தன் வெளியே போனவன், சிறிது நேரத்தில் தனியாகத் திரும்பி வந்தான். எங்க அந்த ஆள் என இவள் கேட்டதற்கு அவர் வரமாட்டாராம். காசும் தர முடியாதாம் எனக் கூறிவிட்டு பேசாமல் இருந்தான்.உங்களுக்கு வெக்கம் இல்லையே ஒண்டும் சொல்லாமல் பேசாமல் வந்தனீங்களே என கேட்க என்னண்டு அதானிட்டைச் சண்டைப் பிடிக்கிறது என்றுவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் இருந்தான். இவள் கடகடவென கீழே இறங்கி கூடத்துக்குள் சென்று நின்றாள். ராம், சகோதரி, கணவன் எல்லோரும் இருந்தார்கள். என்ர காசை  மரியாதையாக வைக்கவேணும். வெக்கமில்லாமல் என்ர காசை எடுத்ததுமில்லாமல் சொல்லாமலும் மறைச்சிருக்கிறியள் என்று விட்டு பார்க்க ராம், இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்லிறாய். என்றான் ஒருமையில். வசந்திக்கு கையும் காலும் கோவத்தில் பதற வெளிக்கிட்டுது. உப்பிடி ஆற்றையன் காசுக்கு ஆசைப்படுற நேரம் ரோட்டில பிச்சை எடுக்கலாம் என்றுவிட்டு மீண்டும் மேலே வந்தாள். கணவனைப் பாக்க கோபம் தான் வந்தது. இப்பிடி கையால் ஆகாதவனாக இருக்கிறானே என்று. போய் கேட்டு காசு தந்தவையோ என தந்தவையோ என அவன்கேட்டத்தில் நக்கல் இருந்ததா என்று தெரியாத அளவு கோபம் அடங்காமல் இருந்தது. நான் உவனுக்குச் செய்யிறன் வேலை என்று கருவினால். நீர் ஒண்டும் செய்ய ஏலாது. ஏனென்டால் காசு அவையின்ர பேர்ல தான் வந்தது. அதுகும் அத்தானின்ர தங்கச்சியாக்கள் இங்க காண காலமா இருக்கினம். நாங்கள் இப்ப வந்துபோட்டு என்ன செய்யிறது. அதுக்கும் எல்லாரையும் பாக்க ரவுடிக் கும்பல் போல கிடக்கு என்று சேங்குத்தனமாகக் கூறுபவனை கன்னத்தில் அறியவேண்டும் போல் கோபம் எழுந்தது. போயும்போயும் இப்படிப் பட்டவனையா விழுந்துவிழுந்து காதலித்தேன் என தன்மேலேயே வெறுப்பும் வந்தது.

இனியும் இங்கிருப்பது ஆபத்து என எண்ணியவள் அடுத்தநாள் காலை எழுந்து வசந்தனையும் கூட்டிக்கொண்டு ஏஜென்சி ஒன்றிடம் போனாள். அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்ப நாற்பதாயிரம் இந்தியன் காசு கேட்டார்கள். அடுத்தநாள் பாஸ்போட்டையும் காசையும் கொண்டுவரும்படி கூறியதால் மனதுக்கு ஒரு நின்மதி ஏற்பட்டது. அவளிடம் இருந்தது போட்டுக்கொண்டு வந்த நகைகள். அதைவிடக் கொஞ்ச நகைகள். எலாவற்றையும் விற்று வெளிநாடு போக வேண்டியதுதான். வேறு வழி இல்லை  என மனதுள் நினைத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து கொண்டுவந்த சூட்கேசை எடுத்தால் அவள் பூட்டியிருந்த பூட்டைக் காணவில்லை. ஐயோ சூட்கேஸ் உடைச்சுக் கிடக்கு என்று திகிலோடு கத்தியபடி திறந்து பார்த்தாள்.அவளின் பொருட்கள் எல்லாம் இருந்தன.ஒரு நிமிடம் அற்ப மகிழ்வு கொண்டவள், இன்னும் அடியில் கையை விட்டுத் தேடியதும் அதிர்ந்தாள்.


தொடரும் ..............

 

Link to comment
Share on other sites

சும்மா அதிருதில்ல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருமில்ல.. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நியாயமில்லாத கணவன் ஒருவனின் செயல்களை, மீண்டும் மீண்டும் மன்னித்து விடுபவளை அவளது கணவன் கூட மன்னிக்கக் கூடாது!

 

வசந்தி ஒரு படித்த முட்டாளாகத் தான் எனக்குத் தெரிகிறாள்! அவள் 'கையறு; நிலையில் உள்ளாள் என்பதைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், தன் தமையன் அனுப்பும் பணத்தைத் தனது பெயருக்கு அனுப்பச் சொல்ல முடியாதவள், எப்படி அரசாங்க உத்தியோகம் ஒன்றைப் பார்த்து, அதில் நல்ல பெயர் வாங்கினாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை!

 

இனிவரப்போகும் தொடர்கள் இதைத் தெளிவு படுத்தும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், இசை,விசுகு அண்ணா,புங்கை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில அதிருறதுக்கு ஒண்டும் இல்ல.....திருமணம் சுத்த வேஸ்ட் என்று மட்டும் புரியுது...வசந்தி இன்னும் திருந்தின மாதிரி தெரிய இல்லயே..தன்னையே,தன் மனத்தையே ஏமாற்றிக் கொண்டு காலத்தை நகர்த்துவது போல் தான் இருக்கிறது....முதல் பாகத்தில் இருந்து தொடங்கிய ஏமாற்றம் இன்னும் முடிந்த பாடாய்க் காணம். :unsure:  :rolleyes: 
 

 

 

 

Link to comment
Share on other sites

இதில அதிருறதுக்கு ஒண்டும் இல்ல.....திருமணம் சுத்த வேஸ்ட் என்று மட்டும் புரியுது...வசந்தி இன்னும் திருந்தின மாதிரி தெரிய இல்லயே..தன்னையே,தன் மனத்தையே ஏமாற்றிக் கொண்டு காலத்தை நகர்த்துவது போல் தான் இருக்கிறது....முதல் பாகத்தில் இருந்து தொடங்கிய ஏமாற்றம் இன்னும் முடிந்த பாடாய்க் காணம். :unsure:  :rolleyes: 

 

 

அந்த தொடர் ஏமாற்றம்தான் அதிருது என்கிறோம்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தொடர் ஏமாற்றம்தான் அதிருது என்கிறோம்.. :wub::D

 

 

ம்ம்ம்.....புரிய வைச்சதிற்கு நன்றியண்ணா..

 

muthal puriya ella...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 13

பெட்டியைத் திறந்து அடியில் கைவிட்டுப் பார்த்தால், அவளதும் தம்பியாரதும் கடவுச் சீட்டுக்களைக் காணவில்லை. நிலத்தில் பெட்டிக்குள் இருந்த அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஒவ்வொன்றாக உதறி உதறித் தேடியும் கடவுச் சீட்டுக்கள் இல்லை. உங்கட அத்தான் தான் எடுத்திருப்பார். மரியாதையாப் போய் வாங்கிக்கொண்டு வாங்கோ பாஸ்போட் இல்லாமல் திரும்ப வராதிங்கோ. இந்த அறைக்குள்ள வெளி ஆட்கள் யாரும் வரமாட்டினம். நிக்காதைங்கோ போங்கோ எனக் கணவனை விரட்டினாள்.

அப்பிடி அவள் ஒருநாளும் கத்தியதே கிடையாது. பெண் என்டதாலை என்னவும் செய்யலாம் எண்டு ராம் நினைச்சிட்டான் போல என மனதுள் கறுவியபடி கணவனுக்காகக் காத்திருந்தாள். அவனோ தலையைக் குனிந்துகொண்டு அத்தானிடம் இல்லையாம் என்று வந்து நின்றான். இவர்கள் இருந்த குடியிருப்பு மூன்று மாடிகள் கொண்டது. மேலே மொட்டை மாடி. இவள் வாசலில் நின்ற கணவனைத் தள்ளிவிட்டு வெளியே வந்து கடகடவென மொட்டை மாடிக்குச் சென்று வீதியில் போவோர் வருவோரை அழைத்தாள். அவர்களும் என்ன எதோ என வந்து  நின்றனர். என்ர பாஸ்போட்டையும் தம்பியின்ர பாஸ்போட்டையும் ராம் எண்டவர் எடுத்து ஒழிச்சுப் போட்டார். இப்ப எனக்கு அது இரண்டும் வேணும். இல்லை எண்டால் நான் கீழை குதிப்பன் என்றாள்.
வசந்தன் உடன கீழே சென்று அத்தானின் வீட்டுக் கதவைத் தட்ட ராமும் வலு கூலா வெளியே வந்தவர், வீட்டுக்கு முன்னால் இத்தனை பேரை எதிர்பார்க்காது என்ன செய்வது,உள்ளே திரும்பப் போவோமா அல்லது நிற்பதா என யோசிக்க முதலே வசந்தன் எல்லோருக்கும் முன்னால், அத்தான் வசந்தியின்ர பாஸ்போட்டைக் குடுங்கோ வசந்தி குதிக்கப் போறன் என்று மொட்டை மாடியில் ஏறி நிக்கிறாள் என்று அழுவார்போல் கூறினான்.

என்ன தம்பி என்ன பிரச்சனை என ஆளாளுக்குக் கேள்வி கேட்கவும் ராமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் மேலிருந்து வசந்தியின் குரல் குளறலாக வந்தது. இன்னும் 5 நிமிசத்துக்குள்ள பாஸ்போட் வரவேணும். உவன்தான் எடுத்து வச்சிருக்கிறான். வராட்டில் குதிச்சிடுவன் என்று கூறினாள். சனமும் ஆளாளுக்கு ஏன் தம்பி எடுத்தனி குடுத்திடு என்று கூற ராமும் வேற வழியில்லாமல் வசந்தனிடம் பாஸ்போட்டைக் கொண்டுவந்து கொடுத்தான். வசந்தனும் அதைக் காட்டி கீழே வா பாச்போட்டைத் தந்திட்டார் என்று கத்த, வசந்தி உங்களை நம்பமாட்டன். அதைக் கொண்டு நீங்கள் மேல வாங்கோ என்றாள் . வசந்தனும் அதைக் கொண்டு மேலே போக ராம் பின்னால் வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்து பாஸ்போட் இரண்டையும் வாங்கினாள். வாங்கியதுடன் நில்லாமல் கணவனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே தாம் தங்கியிருந்த அறைக்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு, நான் இனியும் இங்க இருக்க மாட்டன். நீங்களும் என்னோட வாறதெண்டால் வாங்கோ அல்லது இங்கே கிடந்தது சாகுங்கோ என்றுவிட்டு, தனது பொருட்களை எல்லாம் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டு தயாராகி வருகிறாயா இல்லையா என்பதுபோல் கணவனைப் பார்த்தாள்.வசந்தனுக்கு அங்கு தான் தனிய இருந்து பயனில்லை என்று தெரிந்தது. தன பொருட்களையும் எடுத்துக்கொண்டு வசந்தியுடன் கிளம்பினான்.


தொடரும்......

 

Link to comment
Share on other sites

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 13 இல் இருந்து உத்வேகம் தருகிறது தொடருங்கோ படிக்கும் ஆவலில்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.