Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

 

ம்ம்ம்!

 

அனுபவங்களின் 'தொகுப்புரை' தானே வாழ்க்கை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

 

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

 

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

மன்னிக்கவும். இதுக்குபோய் என்னோட  தனியப்  பேசி h24069.gif

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை எழுதிய பின்னர் திரியில் இவ்விடயம் தொடர்பாக கதைப்போம் என்றேனே தவிர உங்களுடன் தனிப்பட இல்லை. நல்ல ஆள்தான் போங்கள் :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 16

வசந்தி கண்விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் கற்பம் கலைந்துவிட்டது. அதிர்ச்சி ஏற்படாவிட்டாலும் கலைந்துதான் இருக்கும். அவள் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. கணவனின் துரோகம் நினைவில் வர அழுகை ஒருபுறம்,கோபம் ஒருபுறம் வாய்விட்டு அழுதாள். வேறு என்ன தான் செய்வது. பக்கத்துக் கட்டிலில்  இருந்த ஒரு பெண் இவள் அழுவதைப் பார்த்து தாதியரை அழைக்கும் அழுத்தியை அழுத்தியவுடன் தாதி வந்து இவளை சமாதானப் படுத்தினாள். உன்கணவருக்கு அறிவித்துள்ளோம் இப்போது வருவார் என்று கூறும்போதே வசந்தன் தமக்கையுடன் உள்ளே வந்தான்.

 

வசந்திக்கு அவனைக் கண்டதும் ஆவேசம் வந்தது. இரண்டுபேரும் வெளியில போங்கோ. எனக்கு உங்களைப் பாக்க விருப்பமில்லை என்று கத்தினாள். தாதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன பிரச்சனை இப்பிடி நீ கத்துவது கூடாது என்று கூறிவிட்டு, நீங்கள் யார் என்று வசந்தனைப் பார்த்துக் கேட்டாள். நான் கணவன், இவ என் அக்கா என்றுவிட்டு வசந்தியைப் பார்த்தான். இவர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்று ஜேர்மன் மொழியில் தாதியிடம் கூறியவுடன் தாதி அவர்களை வெளியே போகும்படி கூறிவிட்டு, நீ உப்பிடிக் கத்தக்கூடாது என்று இவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள். தாதி சென்று ஐந்து நிமிடங்கள் செல்ல வசந்தன் மட்டும் தனியே உள்ளே வந்தான்.

 

அவனும் ஜேர்மன் மொழியில் நன்றாகக் கதைப்பானாகையால் தாதியிடம் என்ன கூறினானோ மீண்டும் தாதி அவனை அனுமதித்துவிட்டாள். என்னத்துக்கு வந்தனீங்கள் நான் செத்திட்டனோ  எண்டு பாக்கவோ. நான் உங்கட ஆசைக்கெல்லாம் சாகமாட்டன். வெக்கம் இல்லையே இங்க வர எண்டு பொரிந்து தள்ளினாள். வசந்தி நான் சொல்லுறதைக் கேளும். நான் வேணுமெண்டு செய்யேல்ல. அந்தச் சப்பட்டைதான் மாறி விளங்கிக் கொண்டு தந்திட்டாள். நான் வேணுமெண்டால் சத்தியம் செய்யிறன் என்று கூறி அழுவாரைப்போல் நின்றான்.

 

உங்களுக்கு என்னெண்டு தெரியும் நான் சொல்லாமல். இப்பதான் வாறீங்கள் என்று இவள் சந்தேகத்துடன் கேட்க,  உம்மை அம்புலன்சில் இங்க அனுப்பிப்போட்டு உமது வைத்தியர் எனக்கு அடிச்சுச் சொன்னவர் என்றான். இப்ப வசந்திக்கு சந்தேகம் வந்துவிட்டது. கணவன் கூறுவது சிலநேரம் உண்மையாக இருக்குமோ என. அதனால் ஒன்றும் கூறாது படுத்திருந்தாள். எனக்கு உம்மில எவ்வளவு அன்பு இருக்கு என்று உமக்குத் தெரியாது என்று கூறியவாறு கிட்ட வந்து வசந்தியின் தலையைத் தடவினான். அவனின் அருகாமை அவளின் கோபத்தைத் தணிக்க ஒன்றும் கூறாவிட்டாலும் முகம் இயல்பு நிலைக்கு வர வசந்தனுக்கு விளங்கிவிட்டது வசந்தியின் நிலை.

 

வசந்தியின் மனதில் வேறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாள் இருக்க வேணுமாம் என்று அவன் சொல்ல, நீங்கள் உடன எங்கையாவது ஒரு வீடு பாருங்கோ. நான் திரும்ப உங்கட அக்காவீட்ட வரமாட்டன். எனக்கு தனிய நின்மதியா இருக்க வேணும். அவவுக்கு நான் என்ன அடிமையே அவவின்ர விருப்பத்துக்கு இருக்கவும் சமைச்சுச் சாப்பிடவும் என  வசந்தி கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தன் இடைமறித்து அக்காக்கள் என்ன நினைப்பினம் என்றான். உங்கட அக்கா என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை.உங்களுக்கு அக்காவோடை இருக்க விருப்பம் எண்டால் போய் இருங்கோ. நான் தடுக்கவில்லை. ஆனால் நான் நீங்கள் மருந்து தந்த விஷயத்தை இங்க சொன்னன் எண்டால் நீங்கள் ஜெயில்லையும் போய் இருக்கலாம் என்றாள். வசந்தனின் முகம் இருண்டு போவதை ஒருவித சந்தோசத்துடன் பார்த்தவள், போங்கோ இங்க நிக்கிற நேரம் வீடு பாக்கிற அலுவலைப் பாருங்கோ என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துவிட்டாள். சிறிது நேரம் வசந்தன் அங்கேயே நின்றுவிட்டு போவது தெரிந்தது. மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. ஆனாலும் என்ன செய்வது. இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் வராது என எண்ணி அமைதியடைந்தாள்.

வசந்தன் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்ற பயத்திலோ என்னவோ உடனேயே வீடு தேடி எடுத்துவிட்டான். தங்கள் இருவரின் பொருட்களை எல்லாம் புதிய வீட்டுக்கு மாறிவிட்டே வசந்தியை மருத்துவமனையிலிருந்து அங்கு கூட்டிக்கொண்டு போனான். ஒரு படுக்கை அறை கொண்ட வீடுதான் என்றாலும் தானும் கணவனும் மட்டும் இருக்கப் போகிறோம் என்னும் நினைப்பே வசந்திக்கு புத்துணர்வைத் தந்தது. அதுவே அவளை மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டும் வந்தது.

வசந்தன் மறந்துபோய் தன்னும் தமக்கை ஆட்களைப் பற்றிக் கதைக்கவில்லை. கொஞ்சநாள் போக வசந்தியும் வேலைக்குப் போக வேண்டும் என எண்ணி வேலை தேடியபோது, பக்கத்து நகரில் ஒரு பெரிய நிறுவனத்தில் நிறையப்பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு விண்ணப்பித்தாள். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்ததும் வசந்தன் இவ்வளவு தூரத்துக்கு வேலைக்குப் போகப் போறீரோ என்றான். பக்கத்தில ரெயின் ஏறினால் அங்கயும் பக்கத்தில வேலை. இதில உங்களுக்கு என்ன கஸ்ரம் என்று சிரித்துவிட்டு வசந்தி கிளம்பினாள்.

அங்கு சென்றவுடன் பார்த்தால் ஒரு முப்பது நாற்பது பேராவது இருக்கும். கடவுளே எனக்கு வேலை கிடைச்சிடவேணும் என கடவுளை வேண்டியபடி காத்திருக்க உள்ளே அழைத்து அதிக கேள்விகேட்டு பதட்டப்பட வைக்காமல் ஐந்து மாதங்கள் வேலைக்கு பதிந்தனர். நன்றாக வேலை செய்பவர்களைப்பார்த்து நிரந்தரமாக்குவார்கள். அது ஒரு பிஸ்கட் மற்றும் சொக்ளற்  செய்யும் தொழிற்சாலை. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வேலை செய்கின்றனர். இரண்டு நாட்கள் செல்ல முதல் நாளாக வேலைக்குச் சென்றவளுக்கு, அங்கு இன்னும் இரண்டு தமிழ் பெண்களைக் கண்டதும் மகிழ்ச்சி பெருகியது. அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துச் சிரிக்க இவளும் சிரித்தாள். கிட்டப் போய் கதைக்கவேண்டும் போல் இருந்தாலும் இதனை பேர் நிற்கையில் போய் கதைப்பதற்க்கு ஒருமாதிரி இருந்தது.

ஆனால் அந்த இருவரில் ஒருபெண் துணிவாக இவள் அருகே வந்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நான் இங்கு ஒருநாளும் உங்களைக் காணவில்லையே என்றாள். நான் இங்கு இருப்பதில்லை பக்கத்து நகரில் இருக்கிறேன் என்றுகூறிவிட்டு நட்பாகச் சிரித்தாள். வசந்திக்கு அவளை நன்கு பிடித்துவிட்டது. தன் பெயர் நித்தியா எனக் கூறி வசந்தியின் பெயரையும் அறிந்துகொண்டாள் அவள். உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா என வசந்தி கேட்க ஏன் கேட்கிறீர்கள் வந்ததும் வராததுமா. கலியாணத் தரகர் வேலை பார்க்கிறீர்களோ எனச் சிறித்தபடியே கேட்க இல்லை எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். உங்களுக்குத திருமணம் ஆகவில்லை என்றால் அவனுக்கு உங்களைக் கட்டி வைக்கலாம் என்று உங்களைப் பார்த்தவுடனேயே என் மனதில் ஆசை தோன்றியது. அதுதான் கேட்டேன் என்று கூறிவிட்டு நித்தியாவைப் பார்த்தாள். எனக்கு இரண்டு வருடங்களின் முன்பே  திருமணம் ஆகிவிட்டது என நித்தியா கூற, இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
இப்படியாக ஆரம்பித்த அவர்கள் உறவு வசந்தி தன உள்ளக்கிடக்கையை எல்லாம் நித்தியாவுக்குக் கொட்டித்த் தீர்க்கும் அளவு நெருக்கமானது. அதற்கு இன்னொரு காரணம் அவர்கள் இருவரும் ஒரே பகுதியில் ஒருவருக்கு முன் ஒருவர் இருந்து கதைக்கக் கூடியதாக இருந்ததும் காரணம்.

நித்தியாவைச் சந்தித்ததன் பின்னர், வசந்தியின் மனச்சுமைகள் குறைந்துபோயின. வசந்தனிடம் கூட மாற்றம் தெரிவதாகப் பட்டது வசந்திக்கு. எப்படி ஐந்து மாதங்கள் ஓடிப்போனது என்று தெரியவில்லை. வசந்திக்கு ஏனோ தெரியவில்லை வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. நித்தியாவுடனான நட்பின் நெருக்கம் இப்போது அதிகரித்துவிட்டதால் வேலையை விட்டு நிற்பதிலும் நித்தியாவுடனான அந்த நேரம் இல்லாமற் போகிறதே என்ற வருத்தம் தான் வசந்திக்கு. ஆனாலும் என்ன தொலைபேசியில் கதைக்கலாம் தானே என மனதைத் தேற்றிக் கொண்டாள்  வசந்தி.

அடுத்தடுத்த வாரங்களில் நித்தியா வசந்தியின் வீட்டுக்கு வருவதாகக் கூறியதில் மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. நித்தியாவுக்கும் வசந்தி வசந்தனைப் பற்றிக் கூறியதில் இருந்து வசந்தனை ஒருமுறை பார்த்துப் பேசவேண்டும் போல் இருந்தது. தன்  கணவனையும் கூட்டிக்கொண்டு வசந்தியின் வீட்டுக்குச் சென்றால், திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.


தொடரும்................

 

Link to comment
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

Link to comment
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!



கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:



ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் இசை, நிலா அக்கா,காளான், தமிழினி, அலை ஆகிய உறவுகளே நன்றி.

 



கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 



இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

 

இந்தக் கதை என்னுடையது இல்லை என்று கூறியும் நீங்கள் நம்பவில்லை. என் குடும்பம், பெற்றோர் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் இப்படிக் கூற மாட்டீர்கள் அண்ணா.

 

 

Link to comment
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:

ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

 

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

Link to comment
Share on other sites

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 

சும்மா பகிடிக்கு சொன்னேன். வசந்தி மாதிரி பாதிக்கபட்ட  பெண்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

 
கதை நன்றாக போகிறது. தொடருங்கள் சுமே.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

 

ஆண் ஆணாக இருக்கும்வரை பெண்ணும் பெண்ணாகவே இருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். விதிவிலக்குகளும் இருக்கும்தான். விதியை மாற்ற முடியாதுதானே.

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

எத்தனையோ கதைகள் உலகில் ஒரேமாதிரி நடப்பதுதானே வாத்தியார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

 

அவ தான் சுமோ :lol:
 

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

Link to comment
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

 

Link to comment
Share on other sites

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

 

 

உங்களால பச்சை போச்சு :lol:

 

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

சாந்தியே இப்ப பொறுமையா இருக்கு. மற்றவைக்கு என்ன அவசரம் என்று கேட்கிறன். :lol:

 

 

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 

 

 

நான் ஏமாளி இல்லை வந்தி :D

 

 

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

 

ஓடாமல் இருக்கிறது  தான் பிரச்சனையே :huh:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

 

தாற லிங்கை ஒழுங்காத் தாறேல்லையோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 17

வசந்தியிலும் பார்க்க வசந்தனே ஓடியோடி உபசரித்தான். நித்தியா கொஞ்சநேரம் திக்குமுக்காடித்தான் போனாள். இதில் வசந்தி கூறுவது உண்மையா அல்லது வசந்தனுக்குப் பல முகங்கள் இருக்கா என ஒருவிதக் குழப்பம் மனதை ஆட்கொள்ள குழப்பத்துடன் அவள் கணவரும் வசந்தனும் சுவாரசியமாக உரையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வசந்தி எல்லோருக்கும் தேநீரைப் பரிமாறிவிட்டு, வாங்கோ நித்தியா நாங்கள் சமைத்துச் சமைத்துக் கதைப்போம் எனக் கூப்பிட்டதில் நின்மதியாகி எழுந்து அவளுடன் சென்றாள். குசினிக்குள் சென்றதுமே என்ன வசந்தி அக்கா நீங்கள் கூறியதுக்கும் உங்கள் கணவருக்கும் சம்மந்தமே இல்லைபோல் இருக்கே என தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டாள். உண்மைதான் நித்தியா. அவர் மற்றவர் முன்னாள் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்னவும் செய்வார் என்றாள்.

வசந்தியிலும் நித்தியா நான்கு வயது இளையவளாதளால் என்னதான் நட்பாக இருந்தாலும் அக்கா என்னும் பதத்தைப் பாவிக்கத் தவறுவதில்லை. நித்தியா இத்தனை நாட்களாக நான் யாரிடமும் எதையும் சொல்லி மனதை அற்ற முடியாமல் இருந்தேன். இப்ப உங்களைச் சந்தித்தபிறகு எனக்கு எவ்வளவு நின்மதியாக இருக்குத் தெரியுமா என்றாள். சரி எனக்குப் பிரச்சனை இல்லை. நீங்கள் எது என்றாலும் என்னிடம் கதைக்கலாம் என்று கூறி அதன்பின் பொதுவான விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.

வசந்தியின் பிரச்சனைக்கள் எதனையும் நித்தியா கணவனிடம் ஒழிக்காது கூறியிருந்தபடியால், வீட்டுக்குப் போகும்போது அவள் கணவன், என்ன நீர் சொன்னதுக்கும் வசந்தனுக்கும் தொடர்பே இல்லைப்போல் இருக்கே என்று தன் சந்தேகத்தைக் கூறினான். நானும் வசந்தி அக்காவிடம் அதைத்தான் கேட்டேன். அவர் மற்றவர் முன்னாள் இப்படித்தான் வேடம் போடுவார் என்று அவ கூறினா என்றதற்கு, சரி போகப் போக எங்களுக்கே விளங்கும்தானே என்று அத்தோடு அவர்கள் கதையை விட்டனர் இருவரும்.

மூன்றாவது தடவை வசந்தி கர்ப்பமானாள். இம்முறை மகிழ்வை உடனே கணவனிடம் பகிர்ந்துகொள்ளாது நித்தியாவிடம் மட்டும் கூறினாள் வசந்தி. மூன்று மாதம் முடியும் வரை வசந்தனுக்குக் கூறவேண்டாம் என்ற அறிவுரையை வசந்தி கேட்டாளாயினும் மனம் வசந்தனிடம் இன்னும் கூறவில்லையே என குறுகுறுக்கத்தான் செய்தது. ஆனாலும் இம்முறை குழந்தையை நல்லபடியாகப் பெற்றே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

வசந்தனும் அதற்கிடையில் நல்ல வேலை ஒன்றை எடுத்துவிட்டதனால் அந்த வேலைப் புலாதியில் இவளைக் கவனிக்கவில்லை. இவளுக்கு அது வசதியாகப் போயிற்று. மூன்று மாதங்கள் கழிந்தபின் வைத்தியரிடம் சென்று நிட்சயம் செய்தபின் வசந்தனிடம் கூறினாள். அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை. எதிர்மறையாக எதுவும் கூறவும் இல்லை. சாதாரண செய்தி ஒன்றைக் கேட்பதுபோல் கேட்டுவிட்டு இருந்தான். அதன்பின் அவன் கொஞ்சம் மாறியதுபோல் இருந்தது. உமக்கு என்ன விருப்பம் சொல்லும் வாங்கிக் கொண்டு வாறன் என்பான். வாரும் வெளியே நடந்துபோட்டு வருவோம் என்பான். சில நேரம் தானே சமைக்கிறேன் என்பான். வசந்திக்குச் சந்தேகம் உடனே வரும். ஏன் மருந்து ஏதும் சாப்பாட்டுடன் போட்டுத் தரப்போறீங்களோ என் நேரடியாகவே தாக்குதல் தொடுத்தாள்.

நீர் என்னை இன்னும் நம்புகிறீர் இல்லை முந்தி அக்காவின்ர  சொல்லைக் கேட்டு நான் உம்மோட அப்பிடி நடந்திட்டன். இப்ப நான் அக்காக்களோட கதைக்கிறதே இல்லையே. பிறகும் ஏன் சந்தேகப் படுறீர் என்று கேட்டதன் பின் வசந்தி அவனைக் காயப்படுத்துவதில்லை. குழந்தை வயிற்றில் வளர வளர வசந்தியும் பூரித்து வசந்தனுடன் ஒன்றி வாழப் பழகிக் கொண்டாள். பத்து மாதத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டாம் நாள் வசந்தன் வந்தபோது, வசந்தி கோவிக்காதையும் அக்கா பிள்ளையைப் பார்க்க வரப்போகிறாவாம். நான் உம்மட்டைக் கேட்டுப்போட்டுச் சொல்லுறன் எண்டனான். வரச் சொல்லட்டோ என்றான். அவவை என்னத்துக்கு. அதுதான் வேண்டாம் என்று விட்டாச்சே. பிறகென்ன. இல்லை வசந்தி அவ எனக்கு அக்கா. என்னதான் கோபதாபம் என்றாலும் இப்பிடியான நேரத்தில தான் ஒன்று சேருறது. என்னில சின்னனிலை இருந்தே சரியான அன்பு. பிள்ளையைப் பாக்கப்போறன் எண்டு சொல்லேக்கை எப்பிடி வேண்டாம் என்று சொல்லுறது என்றதற்கு  சரி உங்களுக்காக அவவை வர விடுறன். ஆனால் அதுக்காக வீட்டை வந்து சொந்தம் கொண்டாட விடமாட்டன் என்று கறாராகக் கூறினாள்.

வசந்தனும் சம்மதிக்க அடுத்தநாள் தமக்கையும் கணவனும் வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்டதும் இவளை அறியாமல் வாங்கோ என்று வரவேற்றுவிட்டாள்  என்றாலும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. குழந்தை எங்கே என்று தமக்கைதான் கேட்டார். பொறுங்கோ எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறித் தாதிமாரிடம் சென்று குழந்தையை வாங்கிவந்து அவர்களிடம் காட்டினாள். தமக்கையை வரச் சொல்லிவிட்டு இந்தாள் எங்கே போய்த் தொலைந்தார் என்று எரிச்சல் ஏற்பட்டது. நல்ல காலம் அவர்களுக்கும் இவளுடன் என்ன பேசுவது என்று தெரியாததால் என்ன பெயர் வச்சிட்டியளோ? எத்தினை கிலோ ? இப்பிடிப் பொதுவாகக் கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். இவள் முருகனைத்தான் தினமும் வணங்கி தனக்கு பிள்ளை ஒரு குறையும் இன்றிப் பிறக்கவேண்டும் என்று கும்பிட்டதால் அவனின் பெயரையே பிள்ளைக்கும் வைத்தாயிற்று.

குழந்தை பிறந்தபின் வசந்தனும் வேலை நேரம்போக மிகுதி எல்லாம் மகனுடனும் மனைவியுடனுமே கழித்ததால், கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார் என்று வசந்தி கடவுளுக்கு நன்றி சொல்வதும் தீபம் காட்டி வழிபடுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இரண்டு வருடங்கள் வசந்திக்கு வசந்தகாலமானது. இன்னொரு பெண் குழந்தையும் பிறந்து நித்தியாவுடனான நட்பும் நெருக்கமாகி, இவள் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்கு  வைத்தியசாலைக்குச் சென்றபோது நித்தியாவே கணவனுடன் இவள் வீட்டில் வந்து நின்று இவள் முதல் மகனை ஒரு வாரங்கள் பார்க்குமளவு வளர்ந்தது.

வசந்தன் வேலை ஒன்று மாறிய படியால் லீவு எடுக்கும் பிரச்சனை இருந்தது. சரி முன்பு வசந்தன் எப்படியோ. இப்போது நல்லா மாறிவிட்டான். வீடு வாசல் கூட முன்பு இருந்ததைவிட வசதியாக, நன்றாகத்தான் வசந்தியை வைத்திருக்கிறான். உண்மையில் திருந்தித்தான் விட்டான். ஒருவன் தவறுசெய்தால் அவனை எப்போதும் குற்றவாளியாகவே பார்ப்பதும் தவறு என எண்ணிக்கொண்டு நித்தியாகூட அவனை மதித்து இயல்பாய்க் கதைக்கத் தொடங்கினாள்.

தொடரும்........

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.