Jump to content

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்களுக்கு...


Recommended Posts

541565_10201003696758152_327566111_n.jpg

 


புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்கள் இந்த பேட்டியை படிக்கவும்.

இதே கருத்தினை கடந்த மாதம் ஒரு டாக்சி ஓட்டுனர் என்னிடம் சொன்னார். செல்பேசியில் தமிழீழம் தொடர்பாக பேசி வருவதைக்கண்ட அவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்தார். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அவர், அரிசி ஆலைக்காக தமிழீழ அரசிற்கு 2005 ஆம் ஆண்டில் மெக்கானிக்காக சென்றார். அவரது மாமா அவரை அழைத்துச் சென்றார் என்றார். மிக நேர்த்தியான அரசாக அது இருந்தது என்று தனது பாமர மொழியில் என்னிடம் சொன்னார். ‘சாதியை சொல்லி திட்டக்கூடாது , சார். சொன்னா, அடிவிழும். தண்டனை தருவாங்க. சாதிப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றார்”.. இறுதியாக அவர் சொன்னது, ‘ நான் அங்கேயே இருந்துருவேன்னு பயந்து என் மாமா என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார். ரொம்ப நல்ல ஊரு சார் அது. ரொம்ப சுத்தமா, ப்யூர் தமிழ்ல பேசுவாங்க... மரியாதையா நடந்துக்குவாங்க.. இப்ப எப்படி சார், அந்த ரைஸ் மில் இருக்குமான்னு தெரியலை.. நிறைய அரிசியை சேர்த்து வைக்க தான் அந்த மில்ல அங்க கட்டுனோம்... நிறைய பிரச்சனைன்னு சொன்னாங்க , எல்லாம் எப்பசார் சரியாகும்..” என்றார்...
இதே அனுபவத்தினை ஒரு ஆய்வாக இங்கே பதிந்திருக்கிறார், கேரளாவினை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர்.. மிக முக்கியமான கட்டுரையாக இதைப் பார்க்கிறேன்..

தலித்துக்களுக்கு எதிரானவர்கள், அவர்களை புறந்தள்ளினார்கள் .. என்றெல்லாம் முன்வைக்கப்படும் வாதம். வெள்ளாள உயர்சாதியை உயர்த்திப் பிடித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வரலாற்றினை தொகுத்தால் உடைந்து நொறுங்குவதை பார்க்க முடிகிறது. அங்கிருந்த வெள்ளாள உயர் சாதிகளின் துரோகத்தினை , சிங்கள பாசத்தினை ஆய்விற்கு உட்படுத்தி ஆவணப்படுத்தினால் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும்.

தேசியப் போராட்டங்களுடன் ஊடாகவே உள்முரண்களை எதிர்கொண்டு அழிக்க இயலும். சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு என்பது தனித்த அரசியல் செயலன்று. உயர்ச்சாதி வெள்ளாள சாதியத்தினை மறுத்து செயல்பட்டக் காரனத்தினாலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாகவும், மூர்க்கமான இயக்கமாகவும் சித்தரிக்கப்பட்டது.

பார்ப்பனியக் கூறுகளுடன் சிங்கள அரசு வர்க்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் மிக லாவகமாக ஒரு வர்க்க சுய நல சூழ்ச்சியுடன் செயல்பட்டத்தன்மையை இன்றும் காண முடிகிறது. இது போன்ற சித்தரிப்பு பாலஸ்தீனத்தின் பி.எல்.ஓவிற்கோ, அல்லது இன்று இருக்கும் ஹமாஸிற்கோ, லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கோ இந்திய அறிவுசீவிகளோ, புரட்சியாளார்களோ கொடுக்கவில்லை..சகோதரச் சண்டை என்று ஹ்மாஸிற்கும், ஃபதா அமைப்பிற்கும், தாலிபான்களுக்கும் வட-மேற்கு போராளி குழுக்களுக்கோ இதர ராணுவ குழுக்களுக்கோ தரவில்லை.. தேசிய இனப்போராட்டம் ராணுவ்வாதமாகவே உலகெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. இது போராடும் தேசிய இனக் குழுக்களின் தேர்வல்ல.. குருதிஸ்தான், பாலஸ்தீனம், கச்சின்ஸ், கரேன்ஸ், காசுமீர், பலுசிஸ்தான், வசிரிஸ்தான் உள்ளிட்ட போராட்டங்களுக்கு இது பொருந்தும்..

சமகால உலக போராட்ட வரலாற்றினை, குறிப்பாக உலகமயமாக்களுக்கு பின்பான அரசியல் கட்டமைப்பில் பார்க்காமல் பேசுவது முழுமையாகாது. இது போலவே 9/11 சம்பவத்திற்கு பிறகு புலிகளுக்கு உலக அரசியல் தெரியவில்லை என்பவர்கள் முழுமையான தரவு-தகவல்களோடு பேசுவதில்லை.. இதை 2010 டிசம்பரில் மதுரைக் கூட்ட்த்தில் மே17 இயக்கம் தெளிவாக முன்வைத்தது. இதற்கான விவாத்த்திற்கும் வெளிப்படையாகவே தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தோம். யாரேனும் இன்றும் அவ்வாறான குற்றச்சாட்டினை முன் வைக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்..

இவையனைத்திற்கும் காரணம் 2009க்கு பின்பான அரசியல் என்பது சிங்களப் பேரினவாத்த்தினை ஆய்விற்குட்படுத்திய அரசியல் நகர்வாகவே முழுமையாக அமைகிறது. அதை மறுத்து புலிகளில் அரசியல் தவறுகள் என்று மட்டுமே பார்ப்பவர்கள் சமகால அரசியல் நியாயங்களை மறுப்பதும், தமிழீழ விடுதலைக்கான வேலை திட்ட்த்தினை முன்வைக்க மறுப்பதுமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

பாலஸ்தீன மக்களிடம் 1993 அமைதி ஒப்பந்த பி.எல்.ஓவின் தோல்விக்குப் பிறகு, ” நீங்கள் இசுரேலின் அரசு ஒரு சன நாயக முற்போக்கு அரசாக மாறுவதற்கு இசுரேலிய மக்களிடம், முற்போக்காளர்களிடன் இணைந்து வேலை செய்து பின்னரே விடுதலை கோரிக்கையை முன்னெடுக்க முடியும்” என்று சொல்வது, பாலஸ்தீன விடுதலையை மறுப்பதும் அந்தப் போராட்டத்திற்கு துரோகம் இழைப்பதாகவே பார்க்கப்படும். தமிழீழப் போராட்டம் தேசிய இனவிடுதலைக்கான மாபெரும் பாடம். அதை முழுமையாக பார்க்கப்படல் , ஆய்வு செய்யப்படுதல் அவசியம். சர்வதேச ஆற்றல்களின் முழுமையான பங்கேற்புடனும், பங்களிப்புடனும், பிராந்திய நலனுடனும் சேர்த்து இந்திய-தமிழகத்தின் வர்க்க-சாதிய-இனப் பகையை முன்வைத்து தமிழீழப் போராட்டம் எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

இந்திய துணைக்கண்ட்த்தில் வேறெந்த இனத்தினை காட்டிலும் தமிழ்ச் சமூகமே இந்திய-சர்வதேச எதிரிகளையும், ஏகாதிபத்திய வர்க்க –இன எதிரிகளையும் கொண்ட இனமாக அமைகிறது. இதுவே இந்தியாவின் ஆகச்சிறந்த மிக ஆழமாக ஒடுக்கப்படும் ”ஒரே இனம்” என்கிற பெருமை கொண்டதாகிறது.

தமிழகத்தமிழர்கள் குற்றம் குறை கூறி, சாதிய-கட்சி பேதம் பேசி நாம் இன்னும் மிகச் சிறப்பாக பலகூறுகளாக உடைபடலாம். திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகளாக மிகச்சிறப்பாக வளர்க்கப்பட்டுவிட்டோம். யாருடைய கொம்பு நீளமானது, வலிமையானது, கூர்மையானது என்று போட்டி போடுவோம். இந்த கொம்பு, நம்மை வெட்ட வெகு வேகமாக இறங்கும் வெட்டுக்கத்தியை ஏதும் செய்து விடாது என்பது நம்மை பலியிடுபவர்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆகவே ஆடுகளாக நாம் கொம்பு வளர்ப்போம்.

- திருமுருகன் காந்தி -

 

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர்கள் பலர் தலித்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர்கள் பலர் தலித்துக்கள் .

 

தலித்துக்கள் என்றால் யார்?

லெப்டினன் கேணல் களா???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கண்டுபிடிப்பு கல்யாணீ....இது சொல்லுறதுக்குத்தன்..அனுப்பியிருக்கினம் போலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில கள உறவுகள்.. வைத்துள்ள கருத்துக்கள்.. மோசமான தமிழ் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி பலவீனங்களை விதைக்கக் கூடிய.. சிந்தனைகளை இன்றும் எம்மில் உள்ளவர்கள் காவத் துடிக்கின்றனர் என்பதை இனம்காட்டுகிறது.

 

சாதி.. மத.. பிரதேச.. வர்க்க அடையாளங்கள் எல்லாம் கடந்து தேசம்.. மக்கள்.. விடுதலை.. உரிமை என்று உயிரை துச்சமென மதித்துப் போராடிய தமிழ் மக்களின் பிள்ளைகளை இப்படி அடையாளம் காட்டும் எமது சமூக இழிநிலையை யாழ் வரவேற்கிறதா..???!

போராட்ட ஆரம்ப காலத்தில் மக்கள் சாதி அடிப்படையில் போராளி அமைப்புக்களை இனங்காண சில அமைப்புக்கள் சாதியை முன்னிலையில் வைத்து இயங்க நின்ற போது அதனை எல்லாம் மாற்றி அமைத்த விடுதலைப்புலிகள் மீதே இன்று இப்படியான கருத்துக்களா..???!

 

குறிப்பாக இன்று இல்லாத தலித்தியத்தை (தலித்தியம் என்பது வெறும் சாதி அடையாளமல்ல.. அது நிர்வாக அடையாளமாகவும் உள்ள ஒரு படிநிலை. அது இந்தியாவில் தான் உள்ளது. ஈழத்தில் தலித்தியம் கிடையாது.) எம்முள் திணிப்பவர்களில் பலர் முன்னாள் சாதி அடிப்படையில் இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு வித்திட்டு தமிழ் மக்களின் போராட்ட ஒற்றுமையை சிதைக்க நின்றவர்களின் பெறுதிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் இருக்கும் வரைக்கும் சாதிபற்றி நான் உட்பட கதைக்கிறோம் அது புலம்பெயர்ந்தும் தொடருது. ஆனால்  "தலித்" என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதே இல்லை.

இங்கு வந்த பின்னர் தான் தமக்குத் தாமே இலக்கியவாதிகள் என்று பட்டம் சூட்டிய ஈழத்து எழுத்தாளர்கள் சிலரும், நீயா நானா போன்ற விவாதங்களிலும் தான் தலித் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன்.

மருதங்கேணி அண்ணா கேட்ட அதே கேள்வி? தலித்துக்கள் என்றால் என்ன? யாரும் விளங்கப்படுத்துங்கோப்பா??

அதுக்குப் பிறகு ஆட்டுக்குள்ளை மாட்டை விடுங்கோ. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்கும் வரைக்கும் சாதிபற்றி நான் உட்பட கதைக்கிறோம் அது புலம்பெயர்ந்தும் தொடருது. ஆனால்  "தலித்" என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதே இல்லை.

இங்கு வந்த பின்னர் தான் தமக்குத் தாமே இலக்கியவாதிகள் என்று பட்டம் சூட்டிய ஈழத்து எழுத்தாளர்கள் சிலரும், நீயா நானா போன்ற விவாதங்களிலும் தான் தலித் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன்.

மருதங்கேணி அண்ணா கேட்ட அதே கேள்வி? தலித்துக்கள் என்றால் என்ன? யாரும் விளங்கப்படுத்துங்கோப்பா??

அதுக்குப் பிறகு ஆட்டுக்குள்ளை மாட்டை விடுங்கோ. :icon_idea:

நானும் தேடாத இடமில்லை, ஜீவா!

 

தனியாக ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அழைப்பதற்குப் பதிலாக, எல்லோரையும் சேர்த்துப் பொதுவார்த்தை ஒன்றால் 'தலித்; என்று அழைக்கிறார்கள் போல உள்ளது! 

 

இதே நோக்கத்தில் தான் மகாத்மா காந்தியும், 'ஹரிஜன்' (கடவுளின் குழந்தைகள்) என ஒரு புது வார்த்தையை அறிமுகப் படுத்தி அழைத்தார்!

இலங்கையில் இருக்கும் வரை, இந்த வார்த்தையை நான் கேள்விப்படவேயில்லை. ஆனால், சோபா சக்தி, தனது கதையொன்றின், இலங்கையில் ஒரு 'தலித் கிராமம்' ஒரு ஒரு கிராமத்தை அழைக்கிறார்!

 

இந்த வார்த்தை, எழுத்தாளர்களினதும், அரசியல்வாதிகளினதும் உருவாக்கமே, அன்றிப் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப் படவில்லை போல உள்ளது! :o

Link to comment
Share on other sites

இந்த கூட்டத்திற்கு ஓர் விடுதலை வேண்டும் என்று எந்த நேரத்திலும் கழுத்தில மரணத்தைக் கொழுவிக் கொண்டு ஓடித் திரிந்தவனிட்ட, இவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக சுமந்து திரியும் அழுக்கு மூட்டைகளையும்  கழுவி  இவர்களைப் புனிதப்படுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால்? இந்த இனத்திற்கு சுயபுத்தி எங்கே போனது?

 

அது என்ன தலித்? இந்திய சமூகப் பிரச்சனையில் உள்ள சொல்லாடலை கொணர்ந்து ஈழத்து பிரச்சனையில் பொதுமைப்படுத்துவது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தேடாத இடமில்லை, ஜீவா!

 

தனியாக ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அழைப்பதற்குப் பதிலாக, எல்லோரையும் சேர்த்துப் பொதுவார்த்தை ஒன்றால் 'தலித்; என்று அழைக்கிறார்கள் போல உள்ளது! 

 

இதே நோக்கத்தில் தான் மகாத்மா காந்தியும், 'ஹரிஜன்' (கடவுளின் குழந்தைகள்) என ஒரு புது வார்த்தையை அறிமுகப் படுத்தி அழைத்தார்!

இலங்கையில் இருக்கும் வரை, இந்த வார்த்தையை நான் கேள்விப்படவேயில்லை. ஆனால், சோபா சக்தி, தனது கதையொன்றின், இலங்கையில் ஒரு 'தலித் கிராமம்' ஒரு ஒரு கிராமத்தை அழைக்கிறார்!

 

இந்த வார்த்தை, எழுத்தாளர்களினதும், அரசியல்வாதிகளினதும் உருவாக்கமே, அன்றிப் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப் படவில்லை போல உள்ளது! :o

 

கொஞ்சநாளாக எனக்குச் சனி உச்சத்திலை இருக்கிறதாலை பெயர்கள் குறிப்பிட முடியவில்லை.

நன்றி புங்கை அண்ணா.

இந்தியாவின் சாதி அமைப்புக்கள் மிகச்சிக்கலானவை தலித்துக்கள் என்கிறார்கள் அதிலும் தாழ்த்தப்பட்டோர் என்று அவர்களின் சாதிக்கட்டமைப்பு என்பது எம் புரிதலுக்கு அப்பால் என்று ஒரு விவாதத்தை ரீவியில் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன்.

 

அதை விட  குட்டிரேவதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார், ஈழத்தில் மேட்டுக்குடியினர் குடும்பப் பிரச்ச்னைகளின் போது தமது மனைவியரை ப* பு***, ந****, தோ***, வே*** சை போன்ற தலித்துக்களைச் சொல்லித்தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

 

எங்கள் இலக்கியச் செம்மல்கள் யாரும் இதற்குரிய பதில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. :(

Link to comment
Share on other sites

தலித்தியமும் தமிழ் தேசியமும் (2007 ல் எழுதிய கட்டுரை- மீள்பதிப்பு )

 

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும். ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

 

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்துக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண்பாட்டை கட்டிக்காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது.இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது. இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவுபட்டுப் போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.

கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக் காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக் கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டு விடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக் கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை. இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை. சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்தவர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை. சிறீலங்கா அரசினதும் அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதிகளினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை வலுப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள். தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள். தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர் ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்கக்த்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது. அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடவும் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். தீண்டாமையின் வீச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை. அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை. ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை. இந்தியவில் தலித் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடககு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார். சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல. அவ்வாறே தமிழுர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும் ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் புதிய நிலங்களை வாங்குவதற்கும் 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் 1910 ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் நடத்திய கல்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்பப் போராட்டங்களே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும். ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல் விதியாகும். இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை கலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும். புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். ............

சிவா சின்னப்பொடி

(04.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதியது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நவம் அண்ணா, இணைப்புக்கு.. :)

Link to comment
Share on other sites

தலித் என்பது தாழ்த்தப்பட்டவரைக் குறிக்கும் இந்திச் சொல்.. அதை கூகிள் ஆண்டவரிடம் விட்டுப் பார்த்தபோது Depressed என்று வருகிறது. அப்படியானால் சரிதான்.



சரிதான் என்று சொன்னது பாவனைக்கு சரி என்கிற அர்த்தத்தில் அல்ல.. தலித் என்றால் தாழ்த்தப்பட்டவர் என்கிற பொருளை மட்டுமே சொன்னேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் கட்டுரையில் ஈழத்துள் தலித்தியம் என்ற பதம் திணிக்கப்படுவதில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும்..  ஆறுமுகநாவலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

 

காரணம்.. நாவலர்.. பல பிந்தங்கிய கிராமங்களில் கூட தமிழ் பள்ளிகளைத் திறந்து.. தமிழ்மொழிக் கல்வி வழங்க மிகவும்.. உறுதுணையாக இருந்தவர். பல சைவ மற்றும் இந்துக் கல்லூரிகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தவர்.

 

நகர்ப்புற.. மக்கள் காலனித்துவ கிறிஸ்தவப் பள்ளிகளின் "நாகரிகத்தால்" விழுங்குப்பட்டுக் கொண்டிருக்க.. நாவலர் அதற்கு எதிராக அறிவு கொண்டு போராடிய ஒருவர். அவரை ஒரு சாதி வெறியராக இனங்காட்ட விளைவது ஏதுவான ஒரு நிலையல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் கட்டுரையில் ஈழத்துள் தலித்தியம் என்ற பதம் திணிக்கப்படுவதில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும்..  ஆறுமுகநாவலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

 

காரணம்.. நாவலர்.. பல பிந்தங்கிய கிராமங்களில் கூட தமிழ் பள்ளிகளைத் திறந்து.. தமிழ்மொழிக் கல்வி வழங்க மிகவும்.. உறுதுணையாக இருந்தவர். பல சைவ மற்றும் இந்துக் கல்லூரிகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தவர்.

 

நகர்ப்புற.. மக்கள் காலனித்துவ கிறிஸ்தவப் பள்ளிகளின் "நாகரிகத்தால்" விழுங்குப்பட்டுக் கொண்டிருக்க.. நாவலர் அதற்கு எதிராக அறிவு கொண்டு போராடிய ஒருவர். அவரை ஒரு சாதி வெறியராக இனங்காட்ட விளைவது ஏதுவான ஒரு நிலையல்ல..! :icon_idea:

நானும், தவறான கண்ணோடு தான், ஆறுமுகநாவலரைப் பார்த்துள்ளேன், நெடுக்ஸ்!

 

பின்பு, சைவப் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக, தனது சம்பளத்தைத் தியாகம் செய்ததுடன், வீடு, வீடாகச் சென்று, 'பிடியரிசி' சேர்த்தார் என்று படித்தபோது, அவரது சாதி சம்பந்தமான கருத்துக்களைக் கூட, மன்னித்துவிடும் பக்குவநிலையை அடைந்தேன்! இவர் நினைத்திருந்தால், மிசனரியில் சேர்ந்து, நிரம்ப பணத்தைச் சேர்த்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் கட்டுரையில் ஈழத்துள் தலித்தியம் என்ற பதம் திணிக்கப்படுவதில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும்..  ஆறுமுகநாவலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

 

காரணம்.. நாவலர்.. பல பிந்தங்கிய கிராமங்களில் கூட தமிழ் பள்ளிகளைத் திறந்து.. தமிழ்மொழிக் கல்வி வழங்க மிகவும்.. உறுதுணையாக இருந்தவர். பல சைவ மற்றும் இந்துக் கல்லூரிகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தவர்.

 

நகர்ப்புற.. மக்கள் காலனித்துவ கிறிஸ்தவப் பள்ளிகளின் "நாகரிகத்தால்" விழுங்குப்பட்டுக் கொண்டிருக்க.. நாவலர் அதற்கு எதிராக அறிவு கொண்டு போராடிய ஒருவர். அவரை ஒரு சாதி வெறியராக இனங்காட்ட விளைவது ஏதுவான ஒரு நிலையல்ல..! :icon_idea:

சிவா சின்னப்பொடி  அண்ணா

இது சம்பந்தமாக பல கட்டுரைகளை  அவர் எழுதியதிலிருந்து

தான் நேரடியாகப்பாதிக்கப்பட்ட ஆத்திரத்தின் விளைவாக 

 

அந்த சமூகத்தை பழிவாங்கணும் என்ற  வெறியில் 

தான் சார்ந்த சமூகத்தின்  பக்கம் சார்பாக எழுதுபவர். :(

 

 

எனவே நியாயத்ததை நீங்கள்தான்  பரிசீலிக்கணும்

Link to comment
Share on other sites

சிவா சின்னப்பொடி  அண்ணா

இது சம்பந்தமாக பல கட்டுரைகளை  அவர் எழுதியதிலிருந்து

தான் நேரடியாகப்பாதிக்கப்பட்ட ஆத்திரத்தின் விளைவாக 

 

அந்த சமூகத்தை பழிவாங்கணும் என்ற  வெறியில் 

தான் சார்ந்த சமூகத்தின்  பக்கம் சார்பாக எழுதுபவர். :(

 

 

எனவே நியாயத்ததை நீங்கள்தான்  பரிசீலிக்கணும்

 

அன்புள்ள விசுகு ஐயா 
பாதிக்கப்பட்டவர்களின் குரலும் வாக்குமுலமும் பாதிப்பை உண்டாக்கிய தரப்புக்கு பக்கசார்பானதாகவும் ஆத்திரத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்.பாதிக்கப்படவர்கள் சொல்வதை நம்பவேண்டாம் அதெல்லாம் பொய் என்று பாதிப்பை உண்டாக்கிய தரப்பு செல்வது வழமைதான்  இதைத்தான்

 

 முள்ளிவாய்க்காலிலே இவ்வளவு கொடுமைகளையும் செய்த சிங்களத் தரப்பும் தழிழர் தரப்பை பார்த்து சொல்கிறது. இதற்கும் நீங்கள் எழுதிய இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்.
என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.ஏனென்றால் நான் நீண்டகாலமாக உங்களை அறிவேன் தனி;ப்பட்ட முறையில் நீங்கள் நல்ல மனிதர் என்பதையும் நான் அறிவேன்.
பாதிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதையும் போராடுபவதையும் பயங்கரவாதம் என்று சொல்லும் பார்வையின் சாயல் உங்கள் கூற்றில் இல்லையா என்பதை தயவு செய்து மனச்சாட்சியோடு கேட்டுப்பாருங்கள்.
நீங்கள் சொல்வதை மாற்றுக்கருத்து மாமணிகள் இவர் புலிவால் Gலிக்கு சார்பானவர்.இவர் எழுதுவதெல்லாம் புலிக்கு சார்பனது என்கிறார்கள்
கீழே உள்ளது ஒரு சாதிவெறியர் எனக்கு அனுப்பிய செய்தி....
'ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?'
0000
ஆறுமுகநாவலரை பற்றி நிறையவே எழுத்துக்கள் வெளிவந்துவிட்டன. நான் எழுதிய என்னுடைய தரப்பு கருத்து. அதை எற்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.அதை நான் எற்றுக்கொள்கிறேன்.ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
அன்புடன்
என்றும்உங்களுக்கு தெரிந்த 
சிவா சின்னப்பொடி
Link to comment
Share on other sites

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

Link to comment
Share on other sites

 

தலித்தியமும் தமிழ் தேசியமும் (2007 ல் எழுதிய கட்டுரை- மீள்பதிப்பு )

 

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும். ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

 

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்துக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண்பாட்டை கட்டிக்காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது.இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது. இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவுபட்டுப் போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.

கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக் காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக் கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டு விடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக் கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை. இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை. சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்தவர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை. சிறீலங்கா அரசினதும் அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதிகளினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை வலுப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள். தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள். தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர் ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்கக்த்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது. அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடவும் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். தீண்டாமையின் வீச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை. அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை. ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை. இந்தியவில் தலித் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடககு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார். சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல. அவ்வாறே தமிழுர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும் ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் புதிய நிலங்களை வாங்குவதற்கும் 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் 1910 ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் நடத்திய கல்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்பப் போராட்டங்களே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும். ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல் விதியாகும். இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை கலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும். புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். ............

சிவா சின்னப்பொடி

(04.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதியது)

 

 

 

நல்லதொரு கட்டுரை, நன்றி

Link to comment
Share on other sites

 

அன்புள்ள விசுகு ஐயா 
பாதிக்கப்பட்டவர்களின் குரலும் வாக்குமுலமும் பாதிப்பை உண்டாக்கிய தரப்புக்கு பக்கசார்பானதாகவும் ஆத்திரத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்.பாதிக்கப்படவர்கள் சொல்வதை நம்பவேண்டாம் அதெல்லாம் பொய் என்று பாதிப்பை உண்டாக்கிய தரப்பு செல்வது வழமைதான்  இதைத்தான்

 

 முள்ளிவாய்க்காலிலே இவ்வளவு கொடுமைகளையும் செய்த சிங்களத் தரப்பும் தழிழர் தரப்பை பார்த்து சொல்கிறது. இதற்கும் நீங்கள் எழுதிய இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்.
என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.ஏனென்றால் நான் நீண்டகாலமாக உங்களை அறிவேன் தனி;ப்பட்ட முறையில் நீங்கள் நல்ல மனிதர் என்பதையும் நான் அறிவேன்.
பாதிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதையும் போராடுபவதையும் பயங்கரவாதம் என்று சொல்லும் பார்வையின் சாயல் உங்கள் கூற்றில் இல்லையா என்பதை தயவு செய்து மனச்சாட்சியோடு கேட்டுப்பாருங்கள்.
நீங்கள் சொல்வதை மாற்றுக்கருத்து மாமணிகள் இவர் புலிவால் Gலிக்கு சார்பானவர்.இவர் எழுதுவதெல்லாம் புலிக்கு சார்பனது என்கிறார்கள்
கீழே உள்ளது ஒரு சாதிவெறியர் எனக்கு அனுப்பிய செய்தி....
'ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?'
0000
ஆறுமுகநாவலரை பற்றி நிறையவே எழுத்துக்கள் வெளிவந்துவிட்டன. நான் எழுதிய என்னுடைய தரப்பு கருத்து. அதை எற்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.அதை நான் எற்றுக்கொள்கிறேன்.ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
அன்புடன்
என்றும்உங்களுக்கு தெரிந்த 
சிவா சின்னப்பொடி

 

பண்பட்ட ஒருவரின் எழுத்துக்கும் ஆழுமைக்கும் உங்கள் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு. பொதுவாக உணர்ச்சித்தளத்தில் நின்று தங்கள் சாதி உயர்வையும் திமிரையும் காவிக்கொண்டு திரிகிறவர்களுக்கு இது கசக்கும்.

எனினும் உங்கள் எழுத்தும் ஊடக வரத்தையும் சரியாகப்பயன்படுத்துங்கள்.

 

 

Link to comment
Share on other sites

பண்பட்ட ஒருவரின் எழுத்துக்கும் ஆழுமைக்கும் உங்கள் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு. பொதுவாக உணர்ச்சித்தளத்தில் நின்று தங்கள் சாதி உயர்வையும் திமிரையும் காவிக்கொண்டு திரிகிறவர்களுக்கு இது கசக்கும்.

எனினும் உங்கள் எழுத்தும் ஊடக வரத்தையும் சரியாகப்பயன்படுத்துங்கள்.

 

நன்றி சாந்தி

 

 

Link to comment
Share on other sites

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

 

இந்தக் கருத்துக்கு ஆயிரம் பச்சைப்புள்ளி தர வேணும் Arjun.

 

 

Link to comment
Share on other sites

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

 

நிதர்சனமான உண்மை அர்ஜுன். 

Link to comment
Share on other sites

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார் .

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாவின் பெற்றோர் பலருக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது..!

Link to comment
Share on other sites

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார் .

 

உங்கள் ஊர் நல்ல ஊர் போலக் கிடக்கு...  என் ஊரில் கடந்த வருடம் நடந்த வைரவர் கோவில் திருவிழாவில் சிறுபான்மை தமிழர்கள் (இந்தப் பதம் சரி என நினைக்கவில்லை) இனைச் சார்ந்த ஒரு அன்பர் வைத்த திருவிழாவில் (15 நாள் திருவிழாவில் அவரதும் ஒரு நாள்) அவர் சமூகத்தினைச் சார்ந்த மற்றும் அவரது சமூகத்தினைப் போன்றவர்கள் மட்டும் கலந்து கொண்டு பொங்கல், வடை என்பன சாப்பிட சாதித் திமிர் கூடியவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதனை அவர்கள் அனைவரும் தமக்குள் பேசி, நிறுவன மயப்பட்டு செய்துள்ளார்கள். இதனை முன்னின்று செய்தவர்களில் என் மாமன் தான் முக்கியமானவர் (தன் தங்கையை இதே சமூகத்தினைச் சார்ந்தவர் மணம் முடித்தமைக்காக காரால் அடித்து கொல்ல வைத்தவர்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.